அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
மகிழ்மதி
அத்தியாயம் – 25
அன்று வீடு வந்தவர்கள் மனநிலை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. தங்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஏதும் செய் முடியாத நிலையில் இருந்தனர். கனேசன் மனதில் தான் மட்டும் அன்று தன் பெண் பக்கம் நின்று இருந்தால் இன்று அவளுக்கு இந்த நிலை வந்து இருக்காதோ என்று வருந்தினா்.
ரத்தினமோ எல்லாவற்றையும் கேட்டு தன்னால், தான் இந்த நிலையோ என்று வருந்தினார். நந்தினிக்கு நடக்கும் எல்லாம் எங்கு சென்று முடியுமோ என்று இருந்தது. எப்போது இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து ஒரு நிம்மதியான வாழ்வு தனக்கு கிடைக்கும் என்று மனதில் ஏங்கி இருந்தாள்.
………………
இங்கு கதிர்வேலன் கோவத்தின் உச்சத்தில் இருந்தான். அதுவும் அன்புவின்மேல் கொலை வெறி தான் அவனுக்கு……………….. என்ன செய்ய பரிதியும், கண்ணனும் அத்தனை முறை சொல்லி இருக்கிறார்கள் நீ கோவபட்டு ஏதும் செய்தால் அது அழகிக்கு தான் பாதகமாக முடியும் என்று, அதனால் தன் கோவத்தை கட்டுபடுத்திக்கொண்டு இருந்தான்.
என்றாவது ஒரு நாள் கையில் மாட்டுவான் அன்று இருக்கிறது அவனுக்கு, வட்டியும் முதலும் சேர்த்து தருகிறேன்……………… என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தான்.
கதிரழகி முற்றிலும் உடைந்து போய் இருந்தால், தான் என்ன தவறு செய்தோம் என்று இப்படி ஒரு நிலை தனக்கு, எதும் வேண்டாம் என்று இத்தனை வருடமாக தனித்து நின்று தனக்கான ஒரு கூட்டை உருவாக்கி, அதில் தான்னும் தன் மகளும் என்று இருக்க, இப்போது மகள் கையைவிட்டு போய் விடுவாளோ என்ற பயம் அவளை பிடித்து ஆட்டியது, வந்ததில் இருந்து மகளை மடியில் அமரவைத்து சேர்த்து அனைத்தபடி இருந்தாள்.
மனதில் பெரும் சூராவளியே சுழன்றாலும், வெளியில் மகளுக்கு ஏதும் காட்டிக்கொள்ளாமல் அமர்ந்து இருந்தாள். அவள் நிலை அங்கு அமர்ந்து இருந்த அனைவருக்கும் புரிந்து இருந்தது. ஆனாலும் ஏதும் செய்ய முடியவில்லை.
மணிமேகலை பரிதிக்கு அழைத்தவள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். கதிரழகியின் நிலையை சொல்லி அவளிடம் பேச சொல்ல, எல்லாவற்றையும் கேட்ட பரிதி, அழகியிடம் பேசுவதற்க்கு தன்னை தயார் படுத்திக்கொண்டான். கண்ணன் அவனிடம் ஏற்கனவே நடந்த எல்லாற்றையும் சொல்லி இருந்தாலும். அடுத்து என்ன என்று இருவரும் பேசி முடிவு செய்து இருந்தனர்.
ஆனால் ஒருவேளை கதிரழகி இந்த பிரச்சனையால் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டாள், என்ன செய்வது, திருமணத்தை நிறுத்துவதை பிரச்சனைக்கு தீர்வாக அவள் நினைத்துவிட்டாள். அவள் மனதை எப்படி மாற்றுவது என்றும் அவனுக்கு கலக்கமாக இருந்தது. அதனால் தான் மணிமேகலை பேசிய உடன், அவளுக்கு அழைத்து என்ன பேசுவது என்று மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் எதிர் பாரவன்னம் இன்று அவளே அனுக்கு அழைத்து இருந்தாள்.
பார்த்தவனுக்கு ஆச்சரியம் தான். ஊருக்கு வந்து இத்தனை நாட்களில், அவளாக அவனுக்கு அழைத்தது இல்லை. அவன் எப்போது அழைத்தாலும் பேசுவாள். இன்று அவள் அழைத்து இருப்பது அவனது இதய துடிப்பை அதிகரிக்கவே செய்தது. அழைப்பை ஏற்றவன் அந்தபுரம் இருந்து கேட்டது என்னவோ கதிரழகியின் அழுகுரல் தான். அதிலேயே அவள் எவ்வளவு உடைந்து இருக்கிறாள் என்று தெரிந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தவன், அவள் அழுது முடிக்கும் வரை காத்து இருந்தான். அழுகை மெல்ல விசும்பலாக மாறி இருந்தது. இப்போது அவன் பேச ஆரம்பித்தான். அழகி………………….. என்ன ஆச்சு…………………….., இப்போ எதுக்கு இந்த அழுகை? மென்மையாக வருடியது அவன் குரல்……………. அதில் இத்தனை நேரம் மனதில் இருந்த அலைபுருதல்கள் எல்லாம் சமன்படுவது போல் உணர்ந்தாள் பெண்……………………..
இப்போது அமைதியாக இருந்தாள், விசும்பல் சத்தம் கூட இல்லை. இங்க பார் இது எல்லாம் ஒன்னும் இல்லை. எவ்வளவோ தாண்டி இந்த நிலையில் வந்து நின்னு இருக்க…………………. இதுவரைக்கும் நீ பார்க்காத பிரச்சனையா…………………… அப்போ எல்லாம் தைரியமா தனியா நீன்னு இருக்க, இன்னிக்கு நாங்க எல்லோரும் உன் கூட இருக்கோம், இப்போ போய் இப்படி நீ ஒடஞ்சிபோயட கூடாது……………………. எதுக்கு இந்த கண்ணீர்………………… அவன பார்த்து பயமா இருக்கா என்ன………………எங்க மேல எல்லாம் நம்பிக்கையில்லையா? என்றான் ………….. அவளிடம் மௌனம் மட்டுமே……………………
சிறிது இடைவெளிவிட்டவன். இங்க பார் மா….. நான் கண்ணாகிட்ட பேசினேன்…………… என்றவனை இடைமறித்தவள்…………. கேஸ் இப்பதான் பைல் பன்னான். 2 வாட்டி தான் கோட்டுக்கு போய் இருக்கோம், அதுக்குள்ள எப்படி அவங்க தீர்ப்பு பத்தி எல்லாம் பேசுறாங்க……………. என்றாள் அழுகையுடன்………………. குரல் சற்று பிசிறி இருந்தது, இத்தனை நேரம் அழுததின் வெளிப்பாடு……
இங்க பார் அழகி நான் சொல்லுறதை முதலில் காதில் வாங்கிக்க………. இந்த கேஸ் பெறுத்த வரைக்கும். இது ஒரு அப்பீல் தான். அதாவது, நீ ஏற்கனவே வாங்கின விவகரத்தை வைச்சு தான் அப்ளை பன்னி இருக்காங்க, அதாவது நாங்க விவாகரத்தப்ப, குழந்தை சிறியதாக இருந்தால் உரிமை கேரவில்லை அப்படினும், இப்போது சில காரணங்களுக்காக குழந்தைய அவங்கிட்ட ஒப்படைக்க கேட்டு இருக்காங்க.
அதனால் இதுல விசாரிக்க நிறைய விஷயம் இல்லை, ஆனால் அதே சமயம் அவங்க அதுக்கு சொன்ன காரணங்கள் எல்லாம் நிருபிக்க அவங்கிட்ட வலுவான சாட்சியங்கள் இருக்கு, துர்தஷ்டவசமா அது எல்லாம் அவங்களுக்கு சாதகமாக இருக்கு. நம்ம பக்கம் அவ்வளவு வலுவான எதிர்ப்பு இல்லை, சாட்சியமும் இல்லை. அதுவும் இல்லாம போ முறை குழந்தை கஸ்டடி பத்தி எதுவும் தெளிவா இல்லை, நீ ஜீவனாம்சம் ஏதும் வேண்டாம் சொல்லி இருக்க, இது எல்லாத்துக்கும் மேல உங்க அப்பவே அவன் பக்கம் சாட்சி கையொழுத்து போட்டு இருக்கார்….. அதனால் அவங்க அதை எல்லாம் காரணம் காட்டி கேசை முடிக்க பார்க்கறாங்க என்றான்…………….
அப்போ குழந்தை, மதி இல்லாமல் நாம! எப்படி என்று இருந்தாள்…………… அவள் அறியாமல் தான் அந்த வார்த்தை அவள் உச்சரித்தது. ஆனால் அது அவனுக்கு அத்தனை நிம்மதியை கொடுத்து இருந்தது. நம்ம குழந்தை. அப்படி என்றால் அவள் என்னையும் அவள் குடும்பமாக பார்க்கிறாள், குழந்தையை தன் குழந்தையாக மட்டும் பார்க்காமல் நம் குழந்தையாக பார்க்கிறாள்………… மனதில் இருந்த பெரிய பாரம் நீங்கி உணர்வு அவனுக்கு. இப்போது அவளுக்கு தேவை மனதளவில் அவளுக்கு பக்கபலமாக இருப்பது தான் என்று புரிந்தவன், அவளுடன் பேச ஆரம்பித்து இருந்தான்.
இங்க பார் அழகி அவங்க இந்த கேஸ்ல என்ன பன்னாலும், கடைசி வெற்றி நமக்கு தான், குழந்தை நம்மகிட்ட தான் இருப்பா……………. அதுக்காக நான் எந்ந எல்லைக்கும் போக தயங்கமாட்டேன்……….. சரியா கவலைபடமா இரு…………………. என்றவன் மேலும் அரைமணி நேரம் பேசிய பின் வைத்தான். வைத்தவன் உடனே அழைத்தது என்னவோ கண்ணனுக்கு தான். அதுவரை கதிரழகி பேசியது எல்லாம் சொல்லியவன். அவர்கள் எடுத்த முடிவை செயல்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்து இருந்தனர். அதே சமயம் தற்போது அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் முடிவு செய்துக்கொண்டனர்.
அதன் படி கண்ணன் அனைத்து ஆவனங்களையும் தயார் படுத்த ஆரம்பித்து இருந்தான்.
…………………….
அன்பழகனும், நல்லதம்பியும் அடுத்த முறை எப்படியும் கோர்டில் தீர்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தனர். எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க ஸார். எப்படியும் எல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்கும். அப்புறம் என்ன என்று இருந்தான். இல்லை அன்பு இப்ப வரைக்கும் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கலாம். அப்படி தான் எல்லாமும் இருக்கு………… ஆனா ஏதோ இருக்கு, நம்ம கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்னு,நமக்கு முன்னால் தான் நடக்குது…………….. அந்த கண்ண பையன் அவ்வளவு யேப்ப, சோப்பை இல்லை……………… இதுவரைக்கும் அவன் எடுத்த கேஸ் எல்லாத்துலையும் அவன் தோத்தது இல்லை, அது எல்லாத்தையும் விட அவன் இவ்வளவு இளகுவா இருக்க ஆளு இல்லை……………………..
என்று யோசனைக்குள் இருந்தார்…………………. ஸார் விடுங்க நீங்க தேவை இல்லாம பயப்படுறிங்க விடுங்க பாத்துகலாம். ஒரு வேல அப்பிடி அவங்க இந்த கேஸ்ல ஜெயிச்சாலும், அந்த கதிரை அவளை கல்யாணம் பன்ன விமாட்டேன்………… வேற ஏதாவது பன்னி அவனை உள்ள வைச்சிட வேண்டியது தான் என்றான் வன்மமாய்.
சரி நான் கிளம்புறேன். வீடுக்கு சரியா போய் 2 வாரம் ஆச்சு, இந்த கேஸ் பின்னால் போய் எதையும் கவணிக்கல………….. நந்தினி வேற முகத்தை தூக்கிவைத்து இருக்கிறாள் நான் வீட்டுக்கு போறேன் எது நாலும் இன்னும் 2 நாளில் தெரிஞ்சிடும், என்றாவன் கிளம்பி இருந்தான். போகும் அவனையே பார்த்து இருந்தார் நல்லதம்பி, அவருக்கு இன்னும் மனது தெளியவில்லை…. என்னவோ அவர் மனதுக்கு தவறாக பட்டது………………… கண்ணன் ஒரு சிறு புள்ளி கிடைத்தால் போதும் அதை முழு வரைபடமாகவே மாற்றிவிடுவான்………………………. இருவரும் அடிக்கடி கோட்டில் சந்தித்துக்கொண்டாலும், அவரின் முதல் தோல்வி அவனிடம் தான், அவனுக்கு எதிராக வாதாடிய ஒரு வழக்கில் தான், அதன் தாக்கம் தான் அவரை இப்போது வரை இந்த வழக்கில் பிடித்து வைத்து இருக்கிறது. அதிலும் அது அவனின் முதல் கேஸ்………….. அதற்கு இப்போது பழிதீர்க்க நினைத்தார்…………………. அதனால் தான் இந்த வழக்கில் அவர் எந்த எல்லைக்கு போக தயராக இருந்தார்.
ஆனால் அவருக்கு தெரியவில்லை அவனிடம் புள்ளி இல்லை, முழு கோலமே கிடைத்து இருக்கிறது என்று, அதை வைத்து அன்று அவன் அவர்களை கதறவிடுவான் என்றும்………..
அன்று இரவு வீட்டுக்கு வந்த அன்பழகன், அறைக்குள் நூழையும் போது மனைவி கட்டிலில் அமர்ந்து இருப்பதை பார்த்தான், இன்னும் தூங்கலையா? என்ற கேள்வியுடன், தன்னை சுத்தபடுத்த அங்கு இருந்த குளியல் அறைக்கு சென்றவன், திரும்ப வரும் போதும் அப்படியே அமர்ந்து இருந்த நந்தினியை பார்த்து என்ன என்றான். இன்னிக்கு தான் நீங்க நேரத்தோட வீடு வந்து இருக்கிங்க, இத்தனை நாள் நடுராத்தியில் வருவீங்க,அதான் நான் தூங்கி இருப்பேன் என்றாள். ஒ……….. என்றவன், சரி நான் வெளியில் சாப்பிடேன் நீ சாப்டாச்சா என்றான். ம்மம்ம…. என்றவள்.
நான் ஒன்னு கேட்கவா என்றாள்……………….. ம்மம்மம்மம்ம கேளு………… என்றான் படுக்கையில் அவள் அருகில் படுத்த படி, இந்த பிரச்சனை எல்லாம் எப்ப முடியும்………………… என்றாள்