இரண்டு தரப்பையும் கேட்டவர், இருவரும் உங்கள் வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரனைகள் தெடரும்……….

என்றவர் அடுத்த வழக்கை பார்க்க சென்றுவிட்டார்………….

காலையில் வரை தைரியமாக இருந்த கதிரழகிக்கு கூட இப்போது இந்த வழக்கு போகும் பாதை பயத்தை கொடுத்து இருந்தது. கனேசன் கூட பயந்து தான் போனார், கதிர் கோவத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தான். இவர்களுக்கு சற்று தள்ளி தான் பரிதி நின்று இருந்தான். வெளியில் வந்த கண்ணன் கதிரழகியிடம் செல்ல கதிரும் அவர்கள் அருகில் வந்து இருந்தான். என் மா பயந்துட்டியா……………………………… ஒன்னும் கவலை படதோ பார்த்துக்கலாம். என்ன கதிர் என்று அவன் தோளை தட்டியவன்…………………… கொஞ்சும் பொறுமை அவசியம்……………….. எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சிக்கலாம்……………………… என்றவன் பரிதியிடம் கண்ணை காட்டிவிட்டு அந்த இடம் விட்டு சென்று இருந்தான்…………………

கண்ணன் நீதிமன்றத்தில் இருக்கும் அவன் அலுவலகத்திற்க்கு செல்ல, எதிர்பட்டார் நல்லதம்பி அன்பழகனின் வழக்கறிஞ்சர்…………… என்ன கண்ணா எப்படி இருக்க? என்று அவர் கேட்க………………………

என்னம்மா கண்ணு சௌக்யமா?
ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்யமா?
ஆமம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா – துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் – உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான் அஹ

என்று கண்ணனின் அலைபேசி ஓலித்தது, நல்லதம்பி கடுப்பாக கண்ணனை பார்த்தார்………… ஒரு நிமிடம் என்று அவரிடம் கைகாட்டியவன். அழைப்பை ஏற்றான்………………….. என்ன மாப்பள, இங்க தான் ருமுக்கு வந்துடு….. என்று அவன் பேச ஆரம்பிக்க………. நல்லதம்பி இருக்கவா…. போகவா…….. என்று தெரியாமல் நின்று இருந்தார். இவனை பத்தி தெரிஞ்சும் இவன் கிட்ட வாய் கொடுத்து இருக்க கூடாது…….. என்று நின்று இருந்தார்.

அதற்குள் பேசி முடித்தவன் என்ன gb sir இப்படி சொல்லிடிங்க………….. என்றான்………..

டேய் என்னை அப்படி கூப்பிடாதோ, என்ன சார் இப்படி சொல்லிடிங்க உங்க பேர் good brother தானே அதை தான் அப்படி சுருக்கி அழகா கூப்பிட்டேன்………….. இதுக்கு போய் கோவிப்பிங்களா……………… 

டேய் என்று பல்லை கடித்தவர் நான் நான் என்ன என்ன சென்னேன்….. நான் ஒன்னும் சொல்லையே என்றார் அவர் பேச்சை மாற்றும் விதமாக …………………..

அது தான் இப்ப சொன்னிங்களே……………. இவன பத்தி  பத்தி தெரிஞ்சும் இவன் கிட்ட வாய் கொடுத்து இருக்க கூடாதுனு………………… என்ன ஒன்னு நீங்க மைன்டு வாய்ஸ்னு நினைச்சி சத்தமா சொல்லிடீங்க…………. சரி விடுங்க என்றவன்………….. அப்புறம் பழய கேசு, அதே பழைய கிளைண்டு, அதே பழைய அமௌண்டா……………. ச்சே இருக்காது, இந்த வாட்டி இன்னும் நிறைய அமௌண்டா………………….. ஒரே ஜாலி தான் போல………….. என்றான். இப்போது ஏன்டா இவனிடம் பேச ஆரம்பித்தோம் என்று நினைத்துவிட்டார் மனிதர். 

உண்ணை எல்லாம் திருத்தவே முடியாது என்றவர் அவனை தாண்டி சென்றார்…………..

சிரித்தபடி தன் அறைக்குள் நூழைந்தான் கண்ணன், பின்னாலே பரிதியும் வர, வாடா உட்கார் என்றவன்…………….. எப்படி இருந்தது இன்னிக்கு என்றான்.

என்னடா இப்படி எல்லாம் பேசுறாங்க, நடந்த தான் அவன் சொன்னான், ஆனா அதை எப்படி அவனுக்கு ஏத்த மாதிரி……………… எப்பா என்னடா இப்படி மனசாட்சி இல்லாம இருக்காங்க……. என்றான்.

இங்க பார் பரிதி நீ நாட்டு நடப்பு தெரியாம இருக்க, இதுக்கு தான் ஊருக்குள்ள அடிக்கடி வரனும்……………………… ஒரு 10 நாள் கோட்டுக்கு வந்து பார் நாட்டுல என்ன நடக்குதுனு தெரியும். எப்பவும் பாடர்லயே இருந்தா இப்படி தான்.

என்றவன் சரி ஜோக் அபாட், இன்னிக்கு  பார்த்த இல்ல, இப்படி தான் இருக்கும் அடுத்த இயரிங்கும். அதிலும் அந்த அன்புவோட வக்கீல், பனத்துக்காக ஏதுவும் செய்வான். இவங்களோட விவகரத்தை இவன் தான் வாங்கி கொடுத்து இருக்கான். அதனால் இவனுக்கு இந்த கேஸ் ஆரம்பத்தி் இருந்து தெரியும்………. அதுவும் இல்லாம நம்ம பக்கம் இன்னும் ஸ்டாங்கான ஒரு சாட்சி வேணும். என்னோட யுகம் சரினா அடுத்த இயரிங்கல, அந்த நல்ல தம்பி, கதிரழகி அப்பாவையும், ஊர்காரங்களையும் சாட்சியா நிறுத்துவான். அவங்களும் இன்னிக்கு நல்ல தம்பி சொன்ன மாதிரி தான் சொல்லுவாங்க………………..

இப்போ என்ன பன்றது கண்ணா……….ம்மம்மம்மம்மம்மம்மம்மம அடுத்த இயரிங்க பத்தி கவலை பட வேண்டாம், நாம அவங்க சாட்சியை குறுக்கு விசாரனை பன்னலாம்………………… ஆனா அதுக்கு அடுத்து நம்ம பக்கம் சாட்சிய கொண்டு நிறுத்த வேண்டி வரும்……………. கதிரையோ, அவன் நன்பர்களையோவிட, இன்னும் நம்ம பக்கம் கொஞ்சம் பலமான சாட்சி வேணும்………… என்றவன் பார்கலாம் என்று அவனை அனுப்பி வைத்தான்.

இங்கு நல்லதம்பியும், அன்புவுடன் அதை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தான். இந்த கேஸ்ல கண்ணன் எப்படி உள்ள வந்தான் என்றார் நல்லதம்பி அன்புவிடம்……… ஏன் எனக்கு தெரியாது……….. என்றான் அன்பு…….

கநிரழகிக்கு வக்கீல் ஏற்பாடு பன்னது யார்?  என்றார் நல்ல தம்பி, அந்த கதிரா இருக்கும். எனக்கு தெரிஞ்சி மாமாவா இருக்க வாய்ப்பு இல்லை,அவரை நான் பார்த்துட்டு தான் இருக்கேன்……. என்றான்……….

ம்மம்மம்மம்மம்மம்மம்ம இந்த கண்ணன் லேசுட்டவன் இல்ல அன்பு, நீதி, நியாயம்னு பேசுவான்………………. பனத்தை வைச்சி இவனை வளைக்க முடியாது.  எந்த நேரத்தில் எப்படி ஆட்டத்தை கலைப்பானு தெரியாது. இவன் கிட்ட ஊசார இருக்கனும். 

கண்டிப்பா இவன்கிட்ட ஒரு பலமான சாட்சி இருக்கனும். நான் முதலில் உங்க மாமாவையும் ஊர்காங்களையும் அடுத்த இயரிங்கல விசாரிக்கனும் நினைச்சேன் வேண்டாம், நம்ம அந்த டாக்டரையே முதல் சாட்சியா நம்ம பக்கம் நிறுத்தலாம், அதோட, அந்த பன்னையாள் அவனையும், அதுக்கு உண்டான ஏற்பாடு பன்னு என்றார். எனக்கு என்னவோ நீங்க ரொம்ப பயபடுற மாதிரி இருக்கு என்றான் அன்பு, இங்க பார் அன்பு முதலில் நடந்து போல் இல்ல இந்த கேஸ், அதுவும் இந்த கண்ணன், நான் சொல்லுறத செய், அப்படியே என்னோட பேமன்ட் என்றார் அவனிடம். சரி என்பதாய் தலையாட்டிவிட்டு கிளம்பினான் அன்பு.

………………..

குழந்தை நன்றாக உறங்கி இருந்தாள், கதிரழகிக்கு தான் உறக்கம் வரவில்லை, முன்பு விவாகரத்து வாங்கும் போதோ நாம் குழந்தையை பற்றி முடிவு எடுத்து இருக்க வேண்டுமோ………………. அப்போது தெரியாதே இவன் இப்படி குழந்தையை கேட்டு நிற்பான் என்று…….. ஏன் எனக்கு மட்டும் இப்படி, என்று நினைத்தபடி மொட்டை மாடியில் நின்று இருந்தாள்…………………..

என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு…………… என்றான் பரிதி பின் இருந்து………………… அவன் குரலில் திரும்பியவள் ஒன்றும் இல்லை, என்று தலையசைத்தாள். இருவரும் திருமணம் வரை யோசித்து இருந்தாலும், இன்று வரை தனியாக இப்படி பேசியது இல்லை. ஊரே தூங்கும் இந்த நடுராத்திரியில் இப்படி மொட்டை மாடியில் இருவரின் சந்திப்பும் முதல் முறை, ஆனால் சூழ்நிலை சுமுகமாக இருந்தால் என்ன பேசி இருப்பார்களோ………………. ஆனால் இன்று இருவர் நினைப்பும் மிதயை பற்றியதாக இருந்தது. கவலை படாதே அவனால் ஒன்றும் பன்ன முடியாது.போன முறை மாதிரி இல்ல இந்த வாட்டி , நாங்க எல்லோரும் இருக்கோம் பார்த்துக்கலாம் என்றான். ம்மம்மம்மம்மம்மம்மம என்றவள்.

நீங்க தூங்கல என்றாள்………….. தூக்கம் வரல, இந்த கொஞ்ச நாளில் என்னால் மதி குட்டியை இல்லாம நினைச்சு பார்க்க முடியல. உன்னால எப்படி முடியும்…………. தூங்கி இருக்க மாட்டேன் தெரியும் அதான் வந்தேன்…………… என்றான்……. இவரும் ஏதும் பேசவில்லை, அமைதியாக நின்று இருந்தனர். அந்த அமைதி ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் ஆரதவு……….. சிறிது நேரம் நின்றவள் தான் இங்கு இருக்கும் வரும் அவனும் இங்கு தான் இருப்பான் என்று நினைத்தவள்…………………. சரி தூங்க போலாம் என்றவள், தன் பகுதிக்கு வந்து இருந்தாள், அவள் பின்னாடியே இறங்கியவன் தன் வீட்டுக்கு சென்றுவிட்டான்……………………….

அடுத்த நாள் காலையில் கதிருக்கு அழைத்த கண்ணன், கதிரழகியிடம் திருமணத்திற்க்கு அடுத்த நாள் நடந்தவற்றை கேட்டு அறிந்தவன், அங்கு அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றி கேட்டு அறிந்தான்.

மேலும் திருமனத்திற்க்கு முன் கனேசனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி கேட்டு அறிந்தான்.

மேலும் கதிரழகி கர்பத்தை உறுதிபடுத்திய ரிப்போட்டுகள் மற்றும் அது சார்த்த ஆவணங்களை எல்லாம் சேகரித்தான். எல்லாவற்றையும் வைத்து பார்த்துக்கொண்டு இருந்தவன்.

அன்பு வேலை பார்க்கும் பேங்கின் பிய்யூனை சந்தித்து பேசி வந்து இருந்தான்……..

இரு தரப்பினரும் அடுத்த இயரிங்காக காத்து இருந்தனர்……………………

தொடரும்…………….