அத்தியாயம் – 23

அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, அன்புவும், பரிதியும் வழக்குக்கு  வேண்டியவைகளை செய்துக்கொண்டு இருந்தனர். இதில் அன்புக்கு இன்னும் பரிதி பற்றி தெரியவந்து இருக்கவில்லை. பரிதி கனேசன் மற்றும் கதிரிடம் தற்போது நான் திருமணத்திற்க்கு கேட்டது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான். அதனால் இப்போது வரை வழக்கு சம்பந்தமாக எல்லாவற்றையும் கதிர் தான் செய்துக்கொண்டு இருப்பதாக அன்பு நினைத்தான். 

அவனுக்கு பரிதி பற்றி தெரிந்து இருக்கவில்லை, அவன் தெரியவிடவில்லை. ஆனால் பரிதி அன்புவை பற்றி எல்லா தகவல்களையும் திரட்டி இருந்தான். அவனுக்கு யார் யார் உதவி செய்கிறார்கள், அவன் வழகறிஞசர் யார்? என்று எல்லாமே அவனை பற்றி விரல் நூனியில் வைத்து இருந்தான். அன்புவின் கவனம் முழுவதும் கதிர் மேல் இருந்தது. அதனால் அவனுக்கு இப்படி ஒருவன் தன்னை தெடந்துக்கொண்டு இருக்கிறான் என்று கூட தெரியவில்லை.

முதலில் கனேசன் கூட கோவத்தில் அவனை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட நினைத்தார், ஆனால் பரிதி அதை மறுத்துவிட்டான். ஏற்கனவே கண்ணனும், அவனும் கனேசன், கதிர்  மற்றும் கதிரழகியை அழைத்து இதை பற்றி தான் பேசி இருந்தனர். 

பரிதி தான் திரட்டிய எல்லா தகவல்களையும் வைத்து அவன் என்ன செய்ய நினைக்கிறான் என்று எல்லோருக்கும் விளக்கினான். இப்போதைக்கு அவனோட நோக்கம் இந்த கல்யாணம் நடக்காம நிறுத்துவது தான். நாம் எல்லோரும் இப்போது எப்படி இருக்கிறோமோ அப்படியே இருந்தால் தான் அவன் அவனோட திட்ட படி நடந்துப்பான். இல்லைனா மறுபடியும் அவன் என்ன பன்னுவானோ நம்மால யோசி்க்க முடியாது…………….

இல்லனா அவனுக்கு இருக்க கிரிமினல் மூளைக்கு மறுபடியும் வேற மாதிரி யோசிச்சா பிரச்சனை நமக்கு தான். நமக்குனா……கதிரழகிக்கும், மதி குட்டிக்கும்………… 

முக்கியமா அவன் குறி மதிகுட்டி தான், நமக்கு அவன் நேக்கம் தெரியும், நமக்கு எதாவது பிரச்சனை னா அவன எதிர்த்து நிக்கலாம். ஆனால் மதிகுட்டி அப்படி இல்லை, அவ குழந்தை இந்த வயசில் அவ மனசில் பதியற எந்த விஷயமும், அவ்வளவு சீக்கரம் அவ மனச விட்டு போகாது…………….. நாம அவனை ஜெய்ச்சா கூட அவன் குழந்தைக்கு ஏதாவது பன்னிட்டா கண்டிப்பா நம்ம யாராளையும் அதை தாங்க முடியாது.

அதனால தான் சொல்லுறேன், கதிர் முக்கியமா உனக்கு தான்  கோவத்தில் எதையும் பன்னி வைச்சுடாதே……………………. கனேசன் ஸார் நீங்களும் தான் எந்த எதிர்பையும் அவன் கிட்ட காட்டதீங்க………. இப்ப வரைக்கும் எல்லோரும் எப்படி இருக்கிங்களோ அப்படியே இருங்க பார்த்துக்கலாம் என்றான்.  அப்புறம் கதிரழகி உங்களை கோர்ட்ல எப்படி வேனா கேள்வி கேட்பாங்க, முக்கியமா உங்க கேரக்டர் பத்தி, ஒழுக்கம் பத்தி……………… உங்கள மனசளவில் பலவீன படுத்தான் பார்பாங்க………. அதை எல்லாம் நீங்க தான்டி வரனும்…….  நாங்க எல்லோரும் உங்க கூட இருக்கோம் என்றான் கண்ணன். எல்லோரும் ஒத்துக்கொண்டனர்.

இன்று நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கின் முதல் நாள் விசாரனை. காலையில் ஒரு பதடத்துடன் தான் கிளம்பி இருந்தாள் அழகி, என்ன தான் மனதில் தைரியம் இருந்தாலும், குழந்தைக்கு ஏதும் என்றால் அதை அவளால் நினைக்க கூட முடியவில்லை. இன்று மதியை அவள் பாக்கியாவிடம் விட்டு இருந்தாள். பள்ளியில் கூட அவளை வெளியாட்கள் யாரும் சந்திக்க முடியாதபடி செய்து இருந்தனர். எப்போதும் அவளுடன் யாரவது இருந்தனர். அதிகமாக பரிதி………………….. ஒருவேளை அவன் குழந்தையை நெருங்க முயன்றால் அதை தடுக்கவே இந்த ஏற்பாடு..

கனேசனை கூட நேராக நீதிமன்றத்துக்கு தான் வர சொல்லி இருந்தனர். கதிரழகியுடன், கதிர் மட்டும் தான் நீதி மன்றத்திற்க்கு வந்தான். பரிதி தனியா வந்து இருந்தான். அன்பு தன் வழக்கறிஞ்சருடன் வந்து இருந்தான். நிதிபதி வந்து அமர்ந்தும், வழக்கும் பற்றி கேட்டார். முதலில் அன்புவின் தரப்பில்………………..

கனம் நீதிபதி அவர்களே இங்கு மனு தாக்கல் செய்து இருக்கும் எனது கட்சிகாரர் அன்பழகன் தன் மாமாவின் மகள் அதாவது அவரது  அக்கா கணவரின் மூத்த தாரத்து பெண்ணை வருடத்திற்க்கு முன் திருமணம் முடித்தார், இந்த திருமணம் முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தினாலோ அவரது முன்னால் மனைவி கதிரழகிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. சில நாட்களே தொடந்த இவர்களின் திருமண வாழ்க்கை, அதன் பின் அவர் மனைவியின் விருப்பமின்னையால் முடவுக்கு வந்தது. இருவரும் அதே வீட்டில் தனிதனியாக அடுத்த  3 மாதம் தொடர்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் எந்த விதமான தொடப்பும் இல்லை. 

திருமணம் ஆன சில நாட்கள் தவிர, அதன் பின் வந்த நாட்களில் இவர்கள் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடவில்லை, இந்த நிலையில் திருமணம் முடிந்த 3ஆது மாதத்தில் கதிரழகி கர்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் முதிலில் அதிர்ந்தாலும், அதை தொடந்து சில பிரச்சனைகள் இருந்த போதிலும், அதன் பின் அவர் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்   கதிரழகி அந்த வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் குடியோறினார், இங்கு தான் குழந்தை பெற்றுக்கொண்டார். 

குழந்தை பிறந்த பின், அவர் விவாகரத்து கோர எனது கட்சிகாரர்  எவ்வளவு பேசி பார்த்தும், அவர் முடிவில் உறுதியாக இருந்து விட, இவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார்.

அப்போது குழந்தைக்கு 6 மாதம் முடிவடைந்த நிலையில்,குழந்தையை தாயிடம் இருந்து பிரிக்க விரும்பாதவர், அது பற்றி அப்போது ஏதும் நீதிமன்றத்தில் கோரவில்லை. ஆனால் தற்போது குழந்தைக்கு 3 வயது முடிவடைந்து உள்ள நிலையில், கதிரழகி மறுமணம் செய்ய அவள் வீட்டில் ஏற்பாடுகள் நடந்த வருகிறது. இந்த நிலையில் வர போகும் அந்த மனிதர் தன் குழந்தையை நல்ல முறையில் ஏற்பாரோ என்ற ஐயம் எனது கட்ணிகாரர்க்கு இருப்பதால், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறார்.

இந்த நிலையில் எனது கட்சிகாரர்க்கும் திருமணம் முடிந்து, அவர் மனைவியுடன், அவர் மாமா வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. அது மட்டும் அல்லாமல், அவர் மனைவியினால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ள நிலையில், தனக்கு வாரிசாக தன் குழந்தையே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

புதிய வாழ்க்கை தொடங்க இருக்கும் அவர் முன்னாள் மனைவிக்கு தன் குழந்தை எந்த விதத்திலும் தடையாக இருக்க வேண்டாம் என்று அவர் நினைக்கிறார். மேலும் அவரால் மீண்டும் தாய்மை அடைய முடியும் என்ற நிலையில், இந்த குழந்தையின் மேல் இருக்கும் கவணிப்புகள் குறையலாம். 

என்று அவர் சொல்லி முடிக்கவும், கேட்டு இருந்த அனைவருக்கும், இது என்ன மாதிரியான வாதம் என்று தான் இருந்தது. பரிதியே அசந்துவிட்டான். எப்படி எல்லாம் கம்பி கட்டாறான் பார்ரா!!!!!!!!!!!!!!!! என்று மனதில் நினைத்துக்கொண்டான். 

நிதிபதி இவர் சென்னவற்றை எல்லாம் கேட்டவர், எதிர் தரப்பு வக்கீலை பார்க்க, கண்ணன் எழுந்து நின்று இருந்தான். அவன் இந்த வழக்கு இப்படி தான் ஆரம்பிக்கும் என்று எண்ணி இருந்தான். அதனால் அதற்கும்  தயராகவே வந்து இருந்தான்.

நீதிபதிக்கு தன் வணக்கத்தை தெரிவித்தவன்.

எதிர் தரப்பு வக்கீல் சொல்வது போல் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடக்கவில்லை. அப்போது என் கட்சிகாரர் கதிரழகி கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார். அதனால் வீட்டில் திருமண பேச்சு வரவும், அதை எதிர்தார். ஆனாலும் அவர் முழு சம்மத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது.

மேலும் இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை சில நாட்கள் நீடித்தாலும். திரு அன்பழகன் அவர்கள் தன் மனைவி கதிரழகியை அவளின் இன்னோறு மாமா (அதாவது கனேசன் அவர்களின் முதல் மனைவியின் தம்பியுடன்) தெடர்ப்பு படுத்தி பேசி, சன்டையிட்டு இருக்கிறார். இதனால் தான் ஏற்பட்ட மன உளைச்சால் அவர் அந்த வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். மேலும் அந்த காலகட்டத்தில் அவருக்கு நந்தினி என்ற பெண்ணுடன் தொடர்ப்பு ஏற்பட்டு உள்ளது, அதை பற்றி கேட்க போய் அதில் இவரை கர்பமாக இருப்பதை பற்றி தவறாக பேசி கர்பத்தை கலைக்கும் படி சன்டையிட்டுள்ளார். அந்த நிலையில் தனக்கு யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து, வீட்டைவிட்டு வெளியேறினார் கதிரழகி.

அவர் அதன் பின் தன் தேவைக்காக சம்பாதித்து தன்னையும் குழந்தையும் பார்த்துக்கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அன்பழகனுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லாதால், முறையாக விவாகரத்து கோரி பெற்றார். அப்போதும் கூட திரு அன்பழகன் குழந்தையை பற்றி விவகரத்தின் போது ஏதும் கோரிக்கை வைக்கவில்லை. தற்போது என் கட்சிகாரர் தனக்காக மறு வாழ்வு பற்றி முடிவு எடுத்து இருக்கும் நிலையில் அவரை பழிவாங்கவும், அவர் மன அமைதியை குலைக்கும் விதமாகவும் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

எனவே நீதிபதி அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டுக்கொள்ளிகிறேன் என்றான்.