Advertisement

“பச்சக் குழந்தை மா….அம்மானு கூப்பிடுற எம் பிள்ளையவே அடையாளம் தெரியாம …. என்னை மன்னிச்சிருங்கமா…. ” என அழுதவள் , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றாள் .

அங்கு மகள் தொட்டிலில் உறங்க , மகனுக்கான சிறிய படுக்கையில் அழகிய பொம்மைகளுடன் பொம்மையாக மகனும் பாதுகாப்பாக உறங்க , மகனருகில் சென்றவள் , அவனை முத்தமிட்டும் தலைகோதியும் விட்டு ரசித்தவள் , கணவனைத் தேட , அவன் அங்கு இல்லையென்றதும் அவனிருக்கும் இடம் தேடிச் சென்றாள்.

மொட்டை மாடியின் கதவைத் திறந்துக் கொண்டு கணவனைத் தேட .., விளக்குகள் கூடப் போடாது இருளில் வானை வெறித்துக் கொண்டிருந்தான் .தனக்காக அவன் போராடியதை மற்றவர்களின் வாய்மொழியாக கேட்டவளுக்கு….உலகையே வென்று விட்ட உணர்வு ,பெருமையோடும் …. சொல்ல முடியாத அளவில் காதலோடும் புன்னகையோடு கணவனை நெருங்கி , அவன் பின்னிருந்து முன்புறம் கைக்கொண்டு அவன் முதுகில் தலை வைத்து இறுக்கியவளின்,கரத்தினை எடுத்து முத்தம் பதித்தவன்… அவளை முன்புறம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

” என்ன பையன விட்டு வர மனசு வரலையா….”

“ஆம்” என்பதாக அவன் நெஞ்சில் உரச தலையசைத்தாள்.

“பின்னே …. நான் கூப்பிடுறேன் என் கூட வரமாட்டனுட்ட , ஆனா உங்க பையன் வந்து , அம்மானு சொன்னதும் உடனே கிளம்புன ஆள்தானே மேடம் நீங்க….” என்றுப் புன்னகைக்க ….

தலையைத் தூக்கி அவனை கண்கள் கலங்கப் பார்த்தவள் ,

” எல்லோரும் சொல்றாங்க … உங்களுக்கு என்னவோ ஆகிருச்சுனு பயந்து அதிர்ச்சில போனது தான் என் நினைவுகள்னு ….அதுதான் உண்மையான லவ்…. நீங்க இல்லனா நானும் இல்லனு நிரூபிச்சதா ….. இல்ல பாஸ் ….அது உண்மையான காதல் இல்ல….. உண்மையான காதல் … எந்த நிலையிலும் உங்கள மறக்கவிடாம பண்ணியிருக்குமே … நான் உங்களயே மறந்து போனவ தானே…..”

புன்னகைத்தவன் , “எங்க …. நீங்க இல்லனா நான் இல்லனு சொல்லி சொல்லி நான் மேலே போய்ட்டதா நினைச்சு …. நீயும் அங்க போயிருக்க … அப்ப அந்த உலகத்துல என் கூட சேர்ந்து இருக்குறப்போ … இந்த உலகம் உனக்கு எப்படி ஞாபகம் வரும்….ம்”

“பாஸ்…. நான் சீரியஸா பேசுறேன்…”

“ம்ச்….. இந்த சீரியஸ்ங்கிற வார்த்தையே இனிக்கேக்க கூடாதுனு நினைக்கிறேன் டா… போதும் போதும்னு ஆகிருச்சுப் போ….”

” இருந்தாலும் … நான் உங்கள மற… “அவள் வாயைக் கரம் கொண்டு மூடியவன்.

“பாஸ்ட் இஸ் பாஸ்ட் …. எல்லாத்துலயும் ஒரு நல்லது இருக்குமே…. அப்படி அதுலயும் நிறைய நல்லது நடந்துச்சு….” எனப் புன்னகைக்க ,

‘என்னவாக இருக்கும்’ என புருவம் சுருக்கி அவள் யோசிக்க , அந்த நெற்றியில் இதமாக இதழ் பதித்தவன் ,

“இந்தப் பக்கம் அம்மா… தாயம்மா.. தங்கச்சி …. இவங்க மூணு பேரும் குழந்தைங்களையும் பார்த்து .. நம்மளையும் கவனிச்சு …. ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் …. ரமேஷ் ….ஒரு நண்பனா … உறவினனா …. மொத்தத்துல எங்கப்பாவோ …. இல்ல என் கூடப் பிறந்த தம்பியோ அண்ணனோ எப்படி என்னைப்  பார்த்துக்குவாங்களோ அப்படி என்னைய உடைஞ்சுப் போகாம பார்த்துக்கிட்டான் …… தனியாளா பிஸ்னஸையும் பார்த்துக்கிட்டு …..

அந்தப் பக்கம் மதர் வெனிஸ்தா…. ஆழ்ந்த உறக்கத்துல இருந்து எழும் போது உனக்கு இன்னொரு அம்மாவா கடவுளால அனுப்பி வைக்கப்பட்டவங்கனு சொல்லலாம்…. தன் நினைவு இல்லாத பொண்ணை இந்த உலகத்துல பாதுகாக்கிறது எவ்வளவு கஷ்டம் ….. என் கூட அனுப்பவே அவ்வளவு யோசிச்சு … எல்லாம் சரிபார்த்து …அவங்க இல்லனா நீ ….” என்றவனின் அணைப்பு இறுகியது.

“நான்சி ….அனன்யா எப்படியோ அப்படி தான் அவளும் உனக்கு ….அமுதா … உன்னைய என் கிட்ட மறுபடியும் கூட்டிட்டு வந்ததுல பெரும் பங்கு … உன்னோட நெருங்கிய தோழி இப்போ என் தம்பி சக்தியோட மனைவி… அப்புறம் நீ கொச்சினோ , ஊட்டியோ வந்துப் பாரு …. ஜெனிசேச்சி…. ஜெனி மோள்….. ஜெனியக்கா…. இப்படி உன்னையக் கூப்பிட நிறைய உறவுகள சம்பாதிச்சு வச்சிருக்கிறா என் தேவதை… ..எஸ் தேவதை தான்… நீ கிடைச்சுட்டனு நான் ஊட்டில உன்னைய பார்க்க வாறேன்… வொய்ட்  சுடிதார்ல அந்த பனிமூட்டத்துல இந்த தேவதை தரிசனம் தாறாங்க …. அப்படியே அசந்துட்டேன்.”

“பாஸ்….” என்று சிணுங்கியவளிடம்…..

 ” இப்படி கடவுள் நம்மள சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்கனு காட்டிக் கொடுத்துருக்கிறார்… நாம அதையெல்லாம் நினைச்சு சந்தோஷப்படனும் ….. அதையெல்லாம் விட …..நான் உன்னை லவ் பண்றேன் … புரிஞ்சுக்கோ …. ஐ லவ் யூ சொல்லுனு கேட்டு கேட்டு சுத்துவேன் …. அதுவும் உலகத்துல இருக்கிற மொழில எல்லாம் காதல் சொல்லுவேன்…. ம்ஹூம் மேடம் எப்பவாவது எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணி இருக்கீங்களா … இல்லயே …. ஆனா இந்த பீரியட்ல … முதல் முதலா காதல என்கிட்ட சொன்னது நீ தான் … அப்போ.… அப்போ…… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா….” என்றவன் , நின்ற வாக்கிலேயே அவளைத் தூக்க…

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவளிடம்…” இப்படி தான் இருந்துச்சு … காலே தரையில படாம வானத்துல பறக்குற ஃபீல் ….. ஐ லவ் யூ… ஐ லவ் யூனு….என்னைய சந்தோஷத்துல திணறடிச்சுட்டு இருந்த டியர் ….” அவளை கீழே இறக்கி விட்டு ….

“இப்படி நாம பேசிக்க …. ரசிக்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறப்போ நினைக்கவே கூடாதுனு இருக்கிற விஷயங்கள் எதுக்கு …. ஆனா ஒன்னு டா … நான் முதல் பிரசவத்துல இப்படி ஆகிடுச்சுனு பயந்து பயந்து பொண்டாட்டிக்கிட்ட ஆசையா வந்தா … என் மனைவி என்னனா … தொலைச்சத தொலைஞ்ச இடத்துல தேடுங்கனு சொல்லி ….” அவள் உடலில் கைகளை அலைய விட்டவன் , கண் சிமிட்டி ….

“என்னைய தேட விட்டு … என் குட்டி தேவதைய அழைச்சிட்டு வரும் போது தான் என் ரதியா வருவேன்னு வந்துட்டா…..”

அவன் கைகளைத் தடுத்தவள் , “பாஸ்….எனக்கு வெக்கமா இருக்கு …. நானா லவ் பண்றேன்னு சொன்னேன் … நானா இப்படி எல்லாம் இருந்தேன்னு ….இந்த தேடல திரும்ப துவங்க இன்னும்  ரெண்டு மூணு மாசம் ஆகலாம்… வாங்க இப்போ … நம்ம ஸ்ரீ அன்ட் ஸ்ரீ எழுந்து நம்மளத் தேடப் போறாங்க … “

அவளை நகர விடாது தடுத்தவன் , “நாம எங்க நிக்கிறோம் தெரியுதா … “”எங்க ” எனப் பார்த்தவள் , சரியாக அவர்கள் அறைக்கு மேலாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

“பசங்க முழிச்சா நமக்கு தெரியணும்னு தான் இங்க இருக்கிறேன்…”

கண்கள் விரிய … ” இப்படி ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்தா….. ஐ லவ் யூ பாஸ்…. ஐ லவ் லவ் யூ …. பாஸ் …. என்னைக் காதலிச்சதுக்கு … என்னையக் காதலிக்க வச்சதுக்கு ….. இந்த உலகமே காதலால அழகா தெரியுது … இந்த காதல் ரொம்ப ரொம்ப அழகானது பாஸ் … “

எப்போதும் போல் முதலில் காதல் பரிசை வாங்கிக் கொண்டன அவளது மயக்கும்…… அவனால் மயங்கும் …..அவனை மயக்கிய விழிகள் …அதன் பிறகு தான் இதழுக்கு பரிசை தந்தான். மனைவியை கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குச் சென்று படுக்கையில் விட்டவனின் நெஞ்சில் சாய்ந்து ,

“பாஸ் ப்ளீஸ் உங்க பாட்டுக் கேட்டு ரொம்ப நாளாச்சு… பாடுங்க….

வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

 

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

 

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

 

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

 

மேலும் கீழும் ஆடும் உந்தன்

மாய கண்ணாலே

மாறுவேடம் போடுது என் நாட்கள்

தன்னாலே

 

ஆயுள் ரேகை முழுவதுமாய்

தேயும் முன்னாலே

ஆளும் வரை வாழ்ந்திடலாம்

காதலின் உள்ளே

 

இந்த உலகம் தூளாய்

உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில்

உன்னை கரை சேர்ப்பேன்…

 

நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்

 

நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது

 

பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாடக்கூடாது

 

உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி

எதுவும் தெரியகூடாது

 

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே……..

                        காதல் …. அழகானது தான்…. அரவிந்தும் ராதிகாவும் இதே அன்போடும் காதலோடும் நீடுழி வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம் நண்பர்களே…..

Advertisement