Advertisement

அத்தியாயம் 16

 

அவள்  நினைவை  தாங்க முடியாமல்  தான், குளிராக இருந்தாலும்  பரவாயில்லை என்று நினைத்து போய்  குளித்து விட்டு வந்தான் நரேன். ஆனால்  கண்ணெதிரே மாடி படியில் இருந்து இறங்கி வரும்   அப்புவை பார்த்தவன் சாமியை பார்த்த மாதிரி ஆனந்த  பட்டான்.

 

ஆனால் அவனை ஒரு மார்ககமாக பார்த்து விட்டு பாத்‌ரூம் சென்றாள் அபர்ணா.

 

“எப்படி திமிரா கண்டுக்காமா  போறா பாரு. வரட்டும் இன்னைக்கு”, என்று அப்படியே அசையாமல் நின்றான்.

 

“வர வர இந்த நரேன் லூசு என்ன தான் செய்யுதுனு புரிய மாட்டிக்கு.  என்னை பாக்க வந்துட்டு என்கிட்ட சரியா பேச மாட்டிக்கான். அந்த பொண்ணுக்கு வேற  நூல் விடுறான். அவ காலை போய் பிராண்டிகிட்டு இருக்கான். இப்ப என்னடான்னா நடு ராத்திரில தலைல தண்ணியை ஊத்திட்டு நிக்குறான். இவனுக்கு என்ன தான் ஆச்சு?”, என்று குழம்பி கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

 

அவனோ அவளுக்காக தான் காத்திருந்தான்.

 

“லூசா டா நீ? இந்த நேரத்துக்கு குளிச்சிட்டு இருக்க?”, என்று கேட்க வந்தவள்  அவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு என்று பாட்டி கூறியதை நினைத்து விட்டு அவனை கண்டுக்காமல் செல்ல பார்த்தாள்.

 

அப்போது “அப்பு”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் நரேன்.

 

நின்று திரும்பி அவனை பார்த்தவள் “என்ன டா?”, என்று கேட்டாள்.

 

அவள் அருகில் சென்றவன் “என் மேல கோபமா இருக்கியா?”, என்று கேட்டான்.

 

“ஆமா, கோபமா தான் இருக்கேன். அதுக்கென்ன?”, என்று கேட்டு விட்டு மாடியில் ஏற போனவளை கையை பற்றி இழுத்தான். அவன் அப்படி இழுப்பான் என்று தெரியாததால் தடுமாறி விழ போனாள் அபர்ணா.

 

ஆனால் அவளை இடுப்பில் கை கொடுத்து நேராக நிற்க வைத்தான். வெகு அருகாமையில் தெரிந்த அவன் முகத்தில் பாட்டி சொன்னதை என்ன இந்த உலகத்தையே மறந்தாள் அபர்ணா. அவனையே காதலாக பார்த்தாள்

 

குளித்து முடித்து வந்ததில் தலையில் ஈரம் சொட்ட, முகம் முழுவதிலும் ஆங்காங்கே நீர் துளியுடன் இருந்தான் அவன். அதை பார்த்து சேலை முந்தானையை வைத்து அவன் தலையை துடைக்க ஆவல் கொண்டாள் அபர்ணா.

 

“பாவி பாவி, நான் எப்படி சைட் அடிச்சிட்டு இருக்கேன். அவன பாரு. பாத்துட்டே இருக்கான்”, என்று மனதுக்குள் திட்டி தீர்த்தவள் அவன் தலையை துடைக்க எழுந்த ஆவலை தூக்கி தூர போட்டாள்.

 

அவனும் அவள் அருகாமையை தான் ரசித்து கொண்டிருந்தான். அதுவும் அவளை நெருங்கவே முடியாது என்று நினைத்திருக்கும் போது இவன் கையணைப்பிலே அவள் மாட்டுவாள் என்று கனவா கண்டான்.

 

அதற்கு மேல் சும்மா இருந்தால் அவள் போய் விடுவாள் என்பதை அறிந்தவன் இடுப்பில் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்தான்.

 

“என்ன செய்ய போறான்?’, என்று வியப்பாய் பார்த்தாள் அப்பு.

 

கொண்டு வந்த கையை அவள் கன்னத்தில் வைத்தான் நரேன். ஆச்சர்யமாக கண்களை விரித்தாள். அவளுடைய வியப்பிலே அவளுக்கு  தான் தொடுவது விருப்பம் தான் என்று புரிந்தது.”நம்ம மேல கிழவி சொன்ன மாதிரி கோபம் எல்லாம் இல்லை”, என்று நினைத்து தைரியத்தை வர வழைத்து கொண்டு அவள் முகம் அருகே தன் முகத்தை கொண்டு போனான்.

 

“அட பாவி முத்தமா கொடுக்க போறான்? அதிசயமா இருக்கே? இன்னைக்கு தரைல இருந்து வானத்தை நோக்கி தான் மழை பெய்ய போகுது”, என்று நினைத்து கொண்டு அவனையே காதலாக பார்த்தாள். அவளுக்கு எதிர்பார்ப்புகள் வரிசையாக அணிவகுத்தன.

 

“எங்க முதல்ல முத்தம்  கொடுப்பான்?”, என்று எதிர்பார்த்து காத்திருந்தாள்.

 

முகம் அருகில் நெருங்கினவனோ முத்தத்தை கொடுக்காமல் அவளை இறுக்கி அணைத்து கொண்டான். “என்னெவெல்லாம் செய்யணும்னு யோசிச்சேன். ஆனா இவ்வளவு கிட்ட பாதப்ப திக்கு திக்குன்னு இருக்கே? எப்படி ஆரம்பிக்க?”, என்று தெரியாமல் அவள் நெருக்கத்தில் தடுமாறினான் நரேன்.

 

“பாவம் பயபுள்ளைக்கு எப்படி ரொமான்ஸ் பண்ணனும்னு  தெரியலை. பர்ஸ்ட் கிஸ் பண்ணிட்டு அப்புறம் கட்டி புடிக்காம முதல்லயே பிடிச்சிட்டான்”, என்று நினைத்து சிரித்து கொண்டே அவளும் அவனுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன் முதுகில் தன் கைகளை படர விட்டாள்.

 

இந்த அளவுக்கவாவது பையன் தேறிருக்கானே என்று நினைத்து சந்தோசமாக இருந்தது.

 

கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனோ தன் உதட்டை அவள் தோளில் பதித்தான். அதில் அவள் தேகம் முழுவதும் சிலிர்த்தது.  கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.

 

தோள்களில் பதிந்த இதழ் மெதுவாக அவள் கழுத்தில் பதிந்து பின் காது மடலில் பதிந்தது. அவனுடைய இந்த முத்த ஊர்வலத்தில் அவள் கை அவன் முதுகை இறுக்கி பிடித்தது. அவனுடைய வெற்று  மார்பில் முகம் புதைத்திருப்பதை ஆழ்ந்து அனுபவித்தாள்.

 

அவள் அமைதியை தாங்க முடியாமல்  அவள் காதில் பல் பட்ட படியே “அப்பு”, என்று அழைத்தான் நரேன்.

 

“ம்ம்”, என்று முணுமுணுத்தாள் அபர்ணா. அவள் அடிவயிற்றில் உணர்வுகள் கிளர்ந்தன. மோகத்தீ  அவளை பற்றி கொண்டது. “ஐ லவ் யு சொல்லு டா நரேன்”, என்று அவள் மனது தவித்தது.

 

அவனோ “சும்மா வாசமா இருக்க டி? டவ் ஷேம்புவா போடுற?”, என்று அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டான்.

 

வந்த எரிச்சலில் அவனிடம் இருந்து படக்கென்று விலகியவள் தன்னை பிடித்திருந்த அவனையும் உதறினாள்.

 

திடீரென்று அவளுடைய இந்த தாக்குதலை எதிர்பார்க்காத நரேன் அப்படியே கீழே விழுந்தான்.

 

“ச்சி, நாயா டா நீ? அது கூட இப்படி மோப்பம் பிடிச்சிருக்காது. நீ நாயை விட மோசம். இன்னொரு தடவை என் கிட்ட வந்த வெளக்கமாத்தாலே அடி பிச்சிருவேன். ஆளையும் மண்டையும் பாரு.  எருமை மாடு. கரி சட்டி மண்டையா?”, என்று கொந்தளித்து விட்டு மாடி படி ஏறி சென்று விட்டாள்.

 

“அட பாவி இப்ப எதுக்கு என்னை தள்ளி விட்டா? சூப்பரா ரொமான்ஸ் தான பண்ணிட்டு இருந்தேன்?”, என்று கடுப்பான நரேன் மெதுவாக எழுந்தான்.

 

எழுந்த பின்னர் தான் உணர்ந்தான் துண்டு அவிழ்ந்து கீழே கிடந்தது. “சே இது வேற?”, என்று எடுத்து கட்டியவன் “நல்ல  வேளை யாரும் பாக்கலை”, என்று நினைத்து கொண்டு அறைக்கு சென்றான்.

 

அறைக்கு சென்ற அபர்ணாவுக்கோ கோபம் தலைக்கேறியது. “எருமை மாடு ஷேம்பு வாசனையை கூட மோப்பம் பிடிக்கிறானே? இப்பவும் மோப்பம் பிடிக்க தான் கிட்ட வந்தானா?”, என்று கோபத்தில் பொங்கினாள்.

 

இருந்த கோபத்தில் அறிவை இழந்து போனாள் அபர்ணா. இது வரை அவன் இப்படி உதடு பதித்ததில்லை என்ற உண்மையை அவள் யோசித்திருந்தால் அனைத்தும் சரியாகி இருக்கும். அவனும் ஷேம்பு பேர் எல்லாம் சொல்லியா அவளை கடுப்பேத்தனும்.

 

நரேனும் அந்த நேரம் கடுப்புடன் தான் இருந்தான். “அவளை பொண்டாட்டியா நினைச்சு ரொமான்ஸ் பண்ணலைன்னு சண்டை போடுறா. இப்ப ரொமான்ஸ் பண்ணாலும் சண்டை போடுறா. இந்த எருமையை கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்க முடியுதா?”, என்று கடுப்புடன் நினைத்தவன் என்ன நேரம் என்றும் பாராமல் ராகுலை போனில் அழைத்தான். அதுவோ பிசி என்று வந்தது.

 

“பரதேசி நடு ராத்திரில கூட கடலை போடுது”, என்று எண்ணி கொண்டே மறுபடியும் அழைத்தான்.

 

அவன் ஆளுடன் பேசி கொண்டிருந்த ராகுலும் இவன் காலை பார்த்து விட்டு அவளை “போனை வை செல்லம். காலைல பேசுறேன். நரேன் பேசுறான்”, என்று சொல்லி வைத்து விட்டு இவன் போனை எடுத்தான்.

 

ராகுல் போனை எடுத்ததும் “டேய் என்கிட்ட பாலன்ஸ் இல்ல திருப்பி கூப்பிடு”, என்றான் நரேன்.

 

“இது வேறயா?”, என்று நினைத்து கொண்டு திருப்பி அழைத்த  ராகுல் “என்ன மச்சான் ஆச்சு? இந்நேரம் கூப்பிட்டுருக்க?”, என்று கேட்டான்.

 

“நான் கூப்பிடுறது இருக்கட்டும். நீ என்ன செஞ்சிட்டு இருக்க?”, என்று கேட்டான் நரேன்.

 

“நான் என் ஆள் கூட ரொமான்டிக்கா பேசிட்டு இருந்தேன் டா. சரி நீ ஏன் கூப்பிட்ட?”

 

“டேய் ராகுல் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திருக்கு டா. நீ தான் தீத்து வைக்கணும்”

 

“பன்னிரெண்டு மணிக்கு சந்தேகமா? சரி கேளு”

 

“ரொமான்ஸ் எப்படி பண்ணனும்?”

 

“என்னது????”

 

“காது கேக்கலையா டா எருமை? ரொமான்ஸ் எப்படி பண்ணனும்னு கேட்டேன்?”

 

“என்ன டா, பிரைட் ரைஸ் எப்படி பண்ணனும்னு கேக்குற மாதிரி கேக்குற?”

 

“நீ திங்குறதுலே இரு. எனக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரில. நீ இவ்வளவு நேரம் சிஸ்டர் கிட்ட ரொமான்ஸா பேசுனன்னு தான சொன்ன? எனக்கும் சொல்லி கொடு”

 

“டேய் படுத்தாத டா. நான் அவ கிட்ட செல்லம் என்ன டிரெஸ் போட்ருக்கன்னு கேப்பேன். அப்புறம் உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்குன்னு சொல்லுவேன். இப்ப கல்யாணம் முடிஞ்சா உன் கிட்ட இருப்பேன்லன்னு சொல்லுவேன் டா. இதை தான் பேசிட்டு இருப்போம். நீ கேக்குற மாதிரி நான் எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை டா. சரி திடிர்னு எதுக்கு எனக்கு இப்படி கேட்டு சாக் கொடுக்குற?”

 

“அதுவா? இந்த அப்புவை பாட்டி பாக்க விடலைல்ல? ஆனா அவ பாத்ரூம் போக வந்தா டா. நானும் அவ கிட்ட போனேன்னா? கிஸ் பண்ண தான் நினைச்சேன். ஆனா ஆரம்பிச்ச உடனே எப்படி பண்ணன்னு நினைச்சு கட்டி புடிச்சேன் மச்சான். அப்புறம் காதுல வாசமா இருக்க டின்னு சொன்னேன். என்னை தள்ளி விட்டுட்டு போய்ட்டா மச்சான்”

 

அப்படியா? இப்படி சொன்னா ரொமான்ஸ் தொடர்ந்துருக்கணுமே. எப்படி கட் ஆச்சு? எங்கயோ இடிக்குதே. சரி நீ அவ காதுல அது மட்டும் தான் சொன்னியா? இல்லை வேற எதுவும் சொன்னியா?”

 

“ஆன் சொன்னேன் டா. டவ் ஷேம்புவா போடுறேன்னு கேட்டேன்?”

 

“அட பாவி, உன் வாயில கொள்ளி கட்டையை வைக்க? அறிவு இருக்கா டா பரதேசி?”

 

“டேய் என்ன ராகுல் நீயும் அவளை மாதிரியே திட்ற?”, என்று பாவமாக கேட்டான் நரேன்.

 

“திட்டாம கொஞ்ச சொல்றியா? அவ உங்கிட்ட எதுக்கு கோப பட்டு ஊருக்கு போனா?”

 

“எதுக்கு போனா? அவளை மோப்பம் பிடிக்கிறேன்னு சொல்லி, பொண்டாட்டின்னு நினைக்கலைனு சொல்லி சண்டை போட்டுட்டு போனா”

 

“தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு டா ஷேம்பு வாசனை எல்லாம் மோப்பம் பிடிக்கிற?”

 

“அட ஆமா. அவ அதுக்கு தான் கோப பட்டாளா? ஐயையோ சொதப்பிட்டேனே. கிட்ட வராதேன்னு சொல்லிட்டு போய்ட்டா டா ராகுல்”

 

“நீ இப்படி பண்ணா அப்படி தானே டா சொல்லுவா”

 

“சே, சொதப்பிட்டேனே. சரி அவளை சரி செய்ய எதாவது ஐடியா சொல்லு”

 

“நீ அவளை மோப்பம் பிடிக்க வந்திருப்பனு நினைச்சு தான் டா அப்படி கோப பட்டு போயிருப்பா. நீ ரொமான்ஸ் பண்ண தான் அப்படி அவளை நெருங்குறேன்னு அவளுக்கு புரிய வை நரேன். சரியா போயிரும்”

 

“அது எப்படி புரிய வைக்க?”

 

“இதுக்கெல்லாமா டா கிளாஸ் எடுக்க முடியும்? சரி சொல்றேன்  கேளு. அவ உக்காந்திருந்தானு வை அவ கிட்ட உக்காந்து அவ கையை பிடிச்சுக்கோ”

 

“அப்படி செய்யலாம்னு நினைச்சேன் டா. ஆனா எங்க பாட்டி அவளை அது பக்கத்துல உக்கார வச்சிடுச்சு”

 

“ஓ, சரி உனக்கு எதிரா உக்காந்திருந்தாலும் மெதுவா காலை விட்டு அவ காலை தடவேன் டா”

 

“அதை ஏன் கேக்குற? அதை செய்ய தான் டா நினைச்சேன் என்று ஆரம்பித்து முன்பு நடந்த கதையை கூறினான் நரேன்.

 

“அதுலயும் சொதப்பிட்டியா? வேற என்ன டா செய்ய? சரி ஒன்னு செய் நாளைக்கு அவ தனியா மாட்டுனா லிப் டு லிப் கிஸ் அடிச்சிரு”

 

“ஏய் சூப்பர் ஐடியா டா. நாளைக்கே அதை செய்றேன் பாரு. சரி சரி எனக்கு தூக்கம் வருது போனை வை”, என்று சொல்லி வைத்து விட்டான் நரேன்.

 

“நடு ராத்திரில ரொமான்ஸ் பத்தி பேசி கடுப்பை கிளப்புது பாரு பாக்கி”, என்று நினைத்து கொண்டே படுத்தான் ராகுல்.

 

அடுத்த நாள் காலை எழுந்து பல்லை விளக்கி கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான் நரேன்.

 

அப்போது அவன் அருகில் நொண்டி கொண்டே வந்து அமர்ந்தார் சிவப்பிரகாசம்.

 

“குட் மார்னிங் பா”, என்றான் நரேன்.

 

அவரோ அவனை முறைத்தார். “நேத்து தான் திட்டி முடிச்சிட்டல்ல? அப்புறம் என்ன இப்பவும் முறைக்கிற?”, என்று கேட்டான் நரேன்.

 

“இல்லை, இது அதுக்கு எல்லாம் முறைக்கல. இது வேற விஷயம்”

 

“வேற விஷயமா? என்ன விஷயம் பா? நான் என்ன செஞ்சேன்?”

 

“என்ன செஞ்சியா? ஏண்டா, உனக்கு எதாவது பிராப்லமா மனசுல?”

 

“என்னது மனசுலயா? விட்டா நீயே என்னை லூசுன்னு சொல்லிருவ போலயே பா”

 

“எனக்கு அந்த சந்தேகம் தான் டா நரேன் வந்துருக்கு”

 

“என்ன பா சொல்ற?”

 

“இல்லை நடு ராத்திரில ஹால் தரைல விழுந்து கிடக்க. என்ன ஆச்சுன்னு பாத்துட்டு நின்னா டிரெஸ் இல்லாம நிக்குற? அப்புறம் தனக்கு தானே எதோ பேசிட்டு உள்ள போற? நீ நல்லா தான இருக்க?”

 

“ஐயையோ  அப்பா, நீ பாத்துட்டியா? ஐயையோ யாரும் இல்லைனு நினைச்சேன்? முழுசா பாத்துட்டியா?”

 

“ஹ்ம்ம், அப்படி நின்னா பாக்காம? என்ன டா ஆச்சு உனக்கு?”

 

“ப்ச் தூக்கம் வரலைன்னு குளிக்க போனேன். அப்ப தான் ஈரத்துல விழுந்துட்டேன். நீ எல்லாம் அந்த நேரத்துல வருவன்னு நான் கனவா கண்டேன்?”

 

“பன்னிரண்டு மணிக்கு குளிக்க போனியா? ஏன்டா?”

 

“ஹ்ம்ம் வேண்டுதல்”, என்று கூறி அவரை முறைத்தான்.

 

“என்ன வேண்டுதலோ? எதுக்கும் தலைல ஒரு ஸ்கேன் எடுத்து பாத்திரு. எப்பவாது அடி பட்டு கிராக் ஆகிட்டியோ என்னவோ?”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார்.

 

“நல்லதா போச்சு டிரெஸ் அவுந்து விழுந்ததை இவர் பாத்தார். வேற யாராவது பாத்திருந்தா என்ன ஆகியிருக்கும்”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 

அப்போது அங்கே வந்த விஜி “என்ன மச்சான்? அதுக்குள்ளே எந்திச்சிடீங்களா?”, என்று கேட்டாள்.

 

“நேத்து நடந்ததை இவ மறந்திருப்பா”, என்று நினைத்து கொண்டு “ஆமா விஜி, ஆமா நீ என்ன காலைலே இங்க வந்துட்ட?”, என்று கேட்டான்.

 

“எங்க அம்மா தான் அத்தைக்கு எதாவது உதவி வேணுமான்னு கேக்க சொல்லி அனுப்புனாங்க”

 

“அதெல்லாம் வேண்டாம் விஜி. நானே எல்லா வேலையும் முடிச்சிட்டேன். இந்தா நீயும் காபி குடி. இந்தா டா நீயும் எடுத்துக்கோ”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தாள் சிவகாமி.

 

“வேண்டாம் அத்தை நான் வீட்ல குடிச்சிட்டேன். நீங்க மச்சானுக்கு குடுங்க”

 

“நீயும் குடி விஜி”, என்றான் நரேன்.

 

“சரி”, என்று அவளும் ஒரு டம்ளரை எடுத்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள்.

 

“உங்க அப்பா எங்க போனாரு டா?”, என்று கேட்டு கொண்டே அவரை தேடி  காபி தட்டை கொண்டு போய் விட்டாள் சிவகாமி.

 

“ஏன் மச்சான். இன்னும் அத்தை தான் எல்லா வேலையும் செய்வாங்களா? அபர்ணா அக்கா எங்க? அவங்களை பாக்க சொல்லலாம்ல?”

 

“அவ இன்னும் அவ ரூம்ல இருந்து எந்திச்சே வரலை. பின்ன எங்க வேலை செய்ய?”, என்று சொல்லி விட்டு காபியில் மூழ்கியவன் அங்கு வந்த சிவகாமியிடம் “அம்மா என்னோட ரூம்ல பெட்ஷீட் எல்லாம் மடிக்காம வந்துட்டேன். எடுத்து வச்சிருங்களேன். அப்புறம் ஒரு சட்டை மட்டும் அயர்ன் பண்ணி தாங்க மா. மித்தது நான் பண்ணிக்கிறேன் “, என்றான்.

 

“எனக்கு வேலை கிடக்கு டா. நான் உங்க அப்பா கிட்ட எடுத்து கொடுக்குறேன். அவர் அயர்ன் பண்ணி வைப்பார்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் சிவகாமி.

 

“ரெண்டு பேரும் தனி தனி ரூம்ல தான் இருக்காங்களா? இப்படி பிடிக்காதவங்களை எதுக்கு கட்டி வச்சாங்க? அப்படினா மச்சானை கட்டிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கா?”, என்று நினைத்தாள் விஜி.

 

அப்போது தான் மாடி அறையில் இருந்து வந்தவள் அருகருகே அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தவர்களை பார்த்து அதிர்ந்து விழித்தாள்.

 

அந்த விஜியை அபர்ணாவுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. அவளை எரிப்பது போல முறைத்தாள். அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த விஜியும் அபர்ணா முறைப்பை கண்டு கொண்டாள். ஆனால்  அதை கண்டு கொள்ளாத மாதிரி நரேனிடம் திரும்பி பேச ஆரம்பித்து விட்டாள்.

 

“இவளுக்கு இருக்குற திமிரை பாரேன். எல்லாம் இந்த நரேன் பன்னியால வந்தது. என்கிட்ட மட்டும் இப்படி சிரிச்சு பேசுறானா? எருமை”, என்று மனதுக்குள்  திட்டி விட்டு சமையல் அறைக்கு செல்ல போனாள்.

 

அவளை பார்த்து “குட் மார்னிங் அப்பு”, என்று சிரித்தான் நரேன். அவளோ அவனை முறைத்தாள். “சே கொஞ்சமாவது லவ் லுக் விடுறாளா பாரு?”, என்று நினைத்தான் நரேன்.

 

அவளோ பதிலே சொல்லாமல்  கிச்சனுக்கு சென்று விட்டாள். அவள் மட்டும் தனியே சமையல் அறைக்கு சென்ற நரேனுக்கு உற்சாகம் வந்தது. அம்மா, அப்பா அறைக்கு சென்றதை பார்த்த நரேன் “அப்பு கிச்சன்ல தனியா இருக்கா. இப்ப முத்தம் கொடுத்துறலாம். ஏற்கனவே அன்னைக்கு மொட்டை மாடில வச்சு கொடுத்தப்ப, அசையாம நின்னா தான? இப்பவும் அப்படி தான் நிப்பா”, என்று நினைத்து கொண்டு எழுந்தான்.

 

“எங்க எழுந்துடீங்க மச்சான்?”, என்று கேட்டாள் விஜி. “இரு விஜி இப்ப வரேன்”, என்று எழுந்து பூனை போல் சென்றான்.

 

ஆனால் உள்ளே சென்ற அப்புவோ கீழே அமர்ந்து காய் நறுக்கி கொண்டிருந்த பாட்டியை பார்த்து சிரித்தாள். “நான் எதாவது செய்யவா பாட்டி?”

 

“வேண்டாம் அப்பு. முடிச்சிட்டேன். நீ காபி குடி”, என்றாள் பாட்டி.

 

“சரி”, என்று கூறி பாட்டி அருகில் நின்று காபியை தம்ளரில் ஊற்றி கொண்டிருந்தாள் அபர்ணா. அப்போது தான் கிச்சன் வந்தான் நரேன். அவன் கண்களுக்கு அபர்ணா தான் தெரிந்தாலே தவிர? பாட்டி கண்ணுக்கு தெரியவே இல்லை. பாட்டியை அபர்ணா மறைத்திருந்தாள்.

 

நரேன். முத்தம் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்து  பின்னாடி யாரும் வராங்களான்னு பாக்க திரும்பினான். அந்த நேரத்தில் கீழே அமர்ந்திருந்த பாட்டி எழுந்து நின்றாள்.

 

பின்னல் யாரும் வரவில்லை என்று நினைத்த நரேன், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பாட்டிக்கு முத்தத்தை கொடுத்து விட்டான்.

 

முத்தம் கொடுத்த பிறகு தான் அது யாரென்றே உணர்ந்தான் நரேன். எதுவோ அரவம் கேட்டு தலையை திருப்பி பார்த்த அபர்ணா திகைத்து நின்றாள். “ஐயையோ”, என்ற படியே விலகினான் நரேன்.

 

அபர்ணாவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “ச்சி, எருமை மாடு”, என்று கத்திய பாட்டி வாயை துடைத்து கொண்டாள்.

 

அதிர்ச்சியில் உறைந்த நரேன், பாட்டி கொடுத்த திட்டை கேட்டு அசடு வழிந்தான்.   தன்னை பார்த்து சிரித்து கொண்டிருந்த அப்புவை முறைத்தான்.

 

அவளோ “செம சீன் பாட்டி. படத்துல கூட இப்படி வராது”, என்று கிண்டல் அடித்தாள். ஆனால் உள்ளுக்குள்ளே “இப்ப என்னை தேடி தான் வந்தானா? அப்ப இது இவன் எனக்கு கொடுக்க வேண்டிய முத்தமா?”, என்று எண்ணி சந்தோசமாக நினைத்தாள்.

 

“ஏண்டா எருமை வயசு பொண்ணுக்கும் கிழவிக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாதா டா?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“அப்பு தான பாட்டி இங்க நின்னா? நீ திடிர்னு எப்படி வந்த?”, என்று கூறி அபர்ணா நினைப்பை உறுதி செய்தான் நரேன்.

 

அவனுக்கு அவமானமாக இருந்தது. “சே, இந்த கிழவி இடையில் வரும்னு யோசிக்கலையே”

 

“இங்கன தான உக்காந்திருந்தேன்? கண்ணு தெரியலை? கண்ணை எங்க வச்சிட்டு அலையுற? ஆளையும் மண்டையும் பாரு”, என்று திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

“ஹா ஹா, நரேன் செம டா. பாட்டி தான் பாவம். அவங்களுக்கு தாத்தா நியாபகம் வந்திருக்கும்”, என்று சிரித்தாள் அபர்ணா.

 

“சிரிக்காத டி. பல்லை தட்டிருவேன். நீ தான் எல்லாத்துக்கும் காரணம் என்று கூறி அவளை முறைத்தான் நரேன்.

 

“நான் என்ன டா செஞ்சேன்?”

 

“நீ தான இங்க நின்ன? உன்னை யாரு நகர சொன்னது?”

 

“இது நல்லா இருக்கே? நீ வந்ததை எவன் பாத்தான்? அப்படியே பாத்தாலும் நீ இப்படி செய்வன்னு எனக்கு எப்படி தெரியும்?”

 

“அப்ப இப்படி செஞ்சா நீ எதுவுமே சொல்ல மாட்டியா அப்பு?”

 

“காலங்காத்தால என்னை கடுப்பேத்ததா டா, இங்க இருந்து போயிரு. இப்ப என்னது மோப்பம் பிடிக்க வந்த?”

 

“ஆரம்பிச்ச காரியத்தை முடியாம போனா இந்த நரேனை வரலாறு தப்பா பேசும் பொண்டாட்டி. அப்புறம் மோப்பம் பிடிக்க வரலை. எதுக்கு வந்தேன்னு பாத்த தான?”

 

“ஹா ஹா அதான் ஆரம்பிச்ச காரியத்தை முடிச்சிட்டியே? செம கிஸ். பாட்டிக்கு தான்  அதிர்ச்சி”, என்று மறுபடியும் சிரித்தாள். அவன் பொண்டாட்டி என்று சொன்ன வார்த்தையில் அவள் உள்ளம் துள்ளியது. அதனால் சந்தோஷமாகவே அவனிடம் வம்பு செய்தாள்.

 

“கொன்னுருவேன் டி. இன்னைக்கு நீ செத்த”, என்ற படியே அவளை அடிக்க  நெருங்கினான்.

 

“கிட்ட வந்த உன்னை நான் கொன்னுருவேன். ஒழுங்கா இங்க இருந்து போ. நீ அடிச்சா வலிக்கும் டா. ப்ளீஸ்”

 

“உன்னை அடிக்க போறேன்னு எவன் சொன்னது? நான் உனக்கு முத்தம் கொடுக்க போறேன். உனக்கு கொடுக்க தான் வந்தேன். பாட்டி காரியத்தை கெடுத்துட்டு”

 

“என்னது??? அதெல்லாம் வேண்டாம் டா நரேன். இங்க இருந்து போ”

 

“முடியாது. போக மாட்டேன். நீ தான அன்னைக்கு சொன்ன? ரொம்ப நேரம் முத்தம் கொடுக்கணும் போல இருந்துச்சுன்னு”

 

“அதுக்கு?”

 

“அதனால கொடுக்க போறேன்”

 

“கிச்சன்ல நின்னுட்டு இருக்கோம். அறிவு இல்லையா உனக்கு?”

 

“அப்ப ரூம்க்கு வா”

 

“எதுக்கு மோப்பம் பிடிக்கவா?”

 

“லூசு அப்பு அதுக்கு எல்லாம் இல்லை. நான் உங்கிட்ட நிறைய விஷயம் பேசணும். நிஜமாவே நேத்து கிஸ் பண்ண தான் கிட்ட வந்தேன். பயமா இருந்துச்சா. அதனால தான் அப்படியே கன்னம், நெத்தி அப்புறம் உதடுனு ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே நீ கோப பட்டுட்ட?”, என்று தன் நேற்றைய மன நிலையை கூறினான். அவளும் “நான் தான் தப்பா நினைச்சிட்டேன் போல”, என்று எண்ணி கொண்டாள்.

 

“டேய் நரேன், நீ இப்படி எல்லாம் பேசுவியா? எனக்கு அதிச்சியா இருக்கு”

 

“ஆமா, பேசுறது என்ன? செய்யவே போறேன்.  எனக்கு உன்னை கிஸ் பண்ணனும் டி”, என்று அவன் சொன்னதை கேட்டு மகிழ்ந்து போனாள் அபர்ணா. ஆனாலும் எழுந்த வெட்கத்தை மறைத்தவள் “அதெல்லாம் வேண்டாம்  இங்க இருந்து போ. அத்தை வர போறாங்க”, என்றாள்.

 

“அப்ப  நீ வா”

 

“எங்க?”

 

“ரூம்க்கு தான்”

 

“எதுக்கு?”

 

“அப்பு. விளையாடாத. நீ வா ப்ளீஸ். உன்கிட்ட பேசணும்”

 

“பேசு”

 

“லூசு, நெருக்கமா பேசணும். வா”

 

“அதெல்லாம் வர மாட்டேன்”

 

“அப்படின்னா இங்கயே கிஸ் பண்ணுவேன்”, என்று கூறி கொண்டே அவளை நெருங்கினான்.

 

“டேய் போ டா இங்க இருந்து. அடி வாங்க போற?”

 

“அடிச்சாலும் பரவால்ல”, என்ற படியே அவளை நெருங்கினான். அவள் கால்கள் கூச்சத்துடன் பின்னே நகர்ந்தன. சமையல் மேடையில் சாய்ந்து நின்ற அபர்ணாவை இரு கரங்களால் சிறை செய்தான் நரேன்.

 

அவன் நெருக்கத்தை தாங்க முடியாமல் அவன் நெஞ்சில் சாய சொன்ன மனதை அடக்கி “நரேன் ப்ளீஸ் விடு”, கொஞ்சலுடன் சொன்னாள் அபர்ணா.

 

“அதெல்லாம் முடியாது. முத்தம் கொடுத்தே தீருவேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒன்னு சொல்லணும்”

 

“லூசு கிஸ் பண்ண வந்துட்டு, என்னத்தை சொல்ல போறான்? என்னை ஏமாற வைக்கிறதே இவனுக்கு வேலை”, என்று கடுப்பானவள் “என்னது சொல்லணும்? என்ன சோப்பு போட்டுருக்கேன்னு சொல்ல போறியா? நான் இன்னும் குளிக்கவே இல்லை”, என்றாள்.

 

“சே, அது இல்ல. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்”

 

“என்ன டா?”

 

“ஐ லவ் யு அப்பு”

 

அவன் கூறியதை கேட்டு பிரமித்து போனாள் அபர்ணா. கண்களில் சிறு சிரிப்புடன் “டேய் என்ன இப்படி பொசுக்குன்னு புரொபோஸ் பண்ணிட்ட?”, என்று கேட்டாள்.

 

“அதெல்லாம் அப்படி தான். பொறுமையா சொல்ல எல்லாம் நேரம் இல்லை”

 

“ஆமா வெட்டி முறிக்கிறான் பாரு. எதாவது சர்ப்ரைஸா கிபிட் எல்லாம் வாங்கி கொடுத்து சொல்லிருக்கலாம்ல? சரி உனக்கு எப்ப என் மேல லவ் வந்தது?”

 

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப கிஸ் பண்ணனும். பண்ணட்டுமா?”, என்று கேட்டு அவளை சிவக்க வைத்தான்.

 

“இப்படி பெர்மிஷன் கேக்குறது தான் எனக்கு பிடிக்கலை நரேன்”, என்று தலை குனிந்த படி கூறினாள் அபர்ணா.

 

அவளை பார்த்து சிரித்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

அப்போது “நீ கிச்சன்ல என்னடா பண்ற?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்தாள் சிவகாமி.

 

இருவரும் அதிர்ந்து திரும்பினார்கள். அவளிடம் இருந்து விலகி நின்றவன் “இல்லமா இன்னொரு காபி கேட்கலாம்னு வந்தேன்?”, என்றான். அவளோ காபி ஊற்றுவதை போல சிவந்த முகத்தை மறைத்து கொண்டாள். மனம் மட்டும் வானத்தில் சிறகடிப்பது போல இருந்தது.

 

“அப்புக்கு மட்டும் தான் டா  இருக்கு. அவ கிட்ட ஷேர் வாங்கி குடிச்சிக்கோ. நகரு நான் சட்னி வைக்கணும் என்று சொல்லி விட்டு தன் வேலையை ஆரம்பித்தாள் சிவகாமி.

 

“இந்த அம்மா ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு வந்திருக்கலாம”, என்று நினைத்து கொண்டு “இல்லை அவளே குடிக்கட்டும்”, என்று சொல்லி அவளை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான். அவனை பார்த்து சிரித்தாள் அபர்ணா. அவன் கண்களில் வழிந்த காதலில் இவள் முகத்தில் புன்னகை பொங்கியது. அவன் சொன்ன ஐ லவ் யு அவள் காதில் கேட்டு கொண்டே இருந்தது.

 

தொடரும்…..

 

Advertisement