எதிரிலிருப்பவளின் முகத்தை தொட ஜென்ம ஜென்மமாய் ஏங்கியிருந்தவன் போல், விழிகள் திறக்காமல் மனக்கண்ணில் அவளின் உருவம் நிறுத்தி ஒவ்வொரு அணுவும் கரையும்படி மென்மையாய் ஒரு ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டிருந்தான். அனைத்து உணர்ச்சிகளையும் கடந்திருந்தது அந்த தொடுதலில்..
“டேய்! நான் இங்கே தான்டா இருக்கேன்” என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டு விழி திறந்து பார்க்க, திருவிழாவில் தொலைத்த குழந்தையை கண்டுபிடித்து முறைக்கும் அப்பாவை போல் இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டிருந்தான் நந்து.