“நீயாவே உன்னை ரொம்ப பெருமையா நினைச்சிட்டு இருக்க!! ஆனா, அடுத்தவர் மனைவியை கவர நினைக்கும் கயவன் நீ.. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. நடக்காது இருந்தாலும் சொல்றேன். ஒரு வேளை என்னை நீ அடைய நினைச்சு ஒரு அடி எடுத்து வச்சா கூட, என் மேல ஒரு விரல்கூட படவிடமாட்டேன். அதையும் மீறி அப்படி ஒரு நிலைமை வந்தா உயிர் இல்லாத இந்த உடலை தான் உன்னால தொட முடியும். இது என் ஷ்ரவனுக்கு நான் கொடுக்குற பரிசு. அவனுக்கு மட்டும் தான் நான் சொந்தம்” என்றாள் மதி ஷ்ரவனின் முகத்தை மனக்கண்ணில் கண்டு.