Advertisement

காதல் அணுக்கள் – 15

நேற்று தான் திருமணம் முடிந்ததால் வீட்டில் இன்னும் சில உறவினர்கள் இருக்க காலை காபி முதல் டிபன் வரை வெளியே ஆர்டர் செய்திருந்தார் கிஷோர் அதனால் வீட்டில் பெண்களுக்கு பெரிதாக வேலை எதுவுமின்றி கல்யாண கலைப்பை போக்கி கொண்டிருந்தனர் .

சுபிக்கு அந்த வீடு ஏற்கனவே பழக்கமானதால் பெரிதாக தெரிந்துகொள்ள எதுவுமில்லை அவள் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் தன் கணவனை பற்றியும் இனி பொறுப்பான மருமகளாக நடப்பது பற்றியும் தான் .  அந்த வீட்டில் சின்ன வயதில் சந்தியாவும் சுபியும் நட்டுவைத்து  வளர்த்த  செண்பக மரம் ஒன்று இருக்கும். இருவருக்கும் அந்த மரம் என்றால் அவ்வளவு பிடிக்கும் . அந்த மரத்தின் கீழே ஒரு சிறிய பெஞ்ச் ஒன்று போடப்பட்டிருக்கும்  எப்பொழுதும் அங்கு தான் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருப்பர். இன்றும் அதே போல் அந்த பெஞ்சில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்தனர் .

மெதுவாக உறக்கம் கலைந்த சந்தீப் ரூமில் சுபியை காணாது அவசரமாக தயாராகி கீழே வந்தான் . வந்தவன் பார்வை தன் மனைவியை காண துடித்தது . அவன் பார்வையின் தேடலை உணர்ந்து  ஸ்ரீராம் தான் அண்ணா அண்ணி வெளியே சந்தியா கூட பேசிட்டு இருகாங்க என்றான் ஒரு நமட்டு சிரிப்புடன் .  டேய் சந்தீப் வெளிப்படையா வழியாதடா என்று அவன் மனசாட்சி எடுத்துரைக்க வெளிப்படையா வழிஞ்சாதான் புது மாப்பிள்ளைக்கு அழகு என்று அதற்கு பதில் சொல்லி அனுப்பிவைத்தான் .

வெளியே வந்தவன் பார்த்தது அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்த மனைவியை தான் . நல்ல வேலை சந்தியாக்கு இரண்டு மாசத்துல கல்யாணம் இல்லனா இவ என்னை கண்டுக்காம சந்தியாகுடவே கதையடிச்சிட்டு இருந்திருப்பா .

சுபி அண்ணன் உன்னை தேடி இங்கேயே வந்துட்டான் நான் உள்ள போறேன் இல்லனா சந்தியாங்கிற என் பேரு கரடின்னு மாறிப்போயிடும் என்று உள்ளே சென்றுவிட்டாள் .

சந்தீப் மரத்தில் சாய்ந்து கைகளை கட்டி கொண்டு சுபியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் . சுபிக்கு அவனை நேருக்கு நேர் பார்க்கவே கூச்சமாக இருந்தது . அவன் அவளை வாய்த்த கண் வாங்காமல் பார்ப்பது தெரிந்தாலும் பார்வையை வேறு புறம் பார்த்திருந்தாள் . என்ன இது இப்படியா பார்க்குறது யாராவது பார்த்த மானமே போயிடும் பேசாம உள்ள ஓடிற வேண்டியது தான் என்று நினைத்தவள் .

நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போகும் முன் அவள் கைகளை பற்றி நிறுத்தியவன் நான் காபி ஆல்ரெடி குடிச்சிட்டேன் இங்கேயே உக்காரு கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றவன் அவன் முகநூலில் நண்பர்கள் இவர்களின் புகைப்படங்களை அப்ளோடு செய்திருந்ததை அவளுக்கு காட்டலாம் என்று நினைத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டான் .

ரிசப்ஷன் மற்றும் கல்யாணதில் இவர்களுக்கே தெரியாமல் பல காண்டிட் ஷாட்டுகளை எடுத்து அழகாக போஸ்ட் செய்து அதில் சந்தீப்பையும்  டாக் செய்திருந்தனர் . பல லைக் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்திருந்தது . சில பெண்கள் இப்படி எங்க ஹெர்ட்டா பிரேக் பண்ணிட்டியே என்பது போல கண்ணடிக்கும் ஸ்மைலீஸ் போட்டிருந்தார்கள் . சிலர் சுபிக்கும் நட்புக்கரம் நீட்டியிருந்தார்கள் .

பார்த்தியா அய்யாவுக்கு எத்தனை பான்சுன்னு என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டான் . ரொம்ப பண்ணாம அடுத்த போட்டோ ஸ்லைடு பண்ணுங்க என்றவளை மேலும் கீழும் பார்த்து எல்லாம் என் நேரம்டி ஒரே நாளுலே இப்படி மிரட்டுறே என்று அடுத்த போட்டோ ஸ்லைடு செய்தான் . அது தாலிகட்டும் போட்டோ இருவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் . அதை ரசித்து பார்த்திருந்தனர் . அப்பொழுது தான் கவனித்தார்கள் அந்த போட்டோவிற்கு யாரோ கோபமான எமோட்டிகான் போட்டிருந்தார்கள் . அதை யார் என்று பார்த்த பொழுது தான் அணிலா என்று தெரிந்தது . அதில் அவள் கமெண்ட் வேறு செய்திருந்தாள் ” ஐ  டிடண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிராம் யூ ” என்று அழுவது போன்ற ஸ்மைலி போட்டிருந்தாள் . அதை பார்த்து கடுப்பான சுபி சந்தீப்பை முறைத்துவிட்டு இவளும் உங்க விசிறியாக்கும்  என்றாள் .

இல்லடா செல்லம் . இவ என்னை ஒன் சைடா லவ் பண்ணா . அதுனாலே இப்படி கமெண்ட் பண்ணிருக்கா என்று சிரித்து கொண்டு சாதாரணமாக சொல்லவும் சுபிக்கு இன்னும் சுறு சுறு என வந்தது . இப்படி சோசியல் நெட்வார்க்கில் அனைவரும் பார்க்கும் விதமாக ஒருத்தி கமெண்ட் பண்ணிருக்கா இவர் என்னடான்னா எதுவுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்ணுறாரு இன்னும் அங்கு இருந்தால் கோவத்தில் எதாவது சொல்லிவிடுவோம் என்று உள்ளே சென்று விட்டாள் .

ஆஹா கோச்சுக்கிட்டா போலயே . இப்போ இந்த போட்டோஸ காட்டிருக்கவே வேண்டாம்,உனக்கு வேணும் டா என்று அவனையே நொந்துக்கொண்டான் .

அதன் பிறகு இருவருக்கும் பேசுவதற்கு நேரமே அமையவில்லை . சுபி வீட்டிற்க்கு மறுவீட்டுக்கு அழைத்து செல்ல சித்ராவும் பாலாஜியும் வந்திருந்தனர் . இவர்கள் அனைவருக்கும் அங்கே விருந்து ஏற்பாடு செய்திருந்தனர் . எப்பொழுதும் உறவினர்கள் கூட்டம் இவர்களை சுற்றி இருந்து கொண்டே இருந்தது . சந்தீபின் பார்வை சுபியை தொடர்ந்து கொண்டே இருந்தது ஆனால் அவளோ அவனை காணும்போதெல்லாம்  முறைத்து விட்டே சென்றாள் .

சந்தீப்பின் பெரியம்மா மகள்களின் கணவன்மார்கள் கூட கேட்டேவிட்டனர் . என்ன மச்சான் தங்கச்சி உன்னை பார்த்தாலே தெறிச்சு ஓடுது அப்படி என்னத்த பண்ணி வெச்ச என்று ஓட்டி கொண்டிருந்தனர் . உங்க தங்கச்சி தெறிச்சு ஓடல என்னை மொறச்சுட்டு ஓடுற மாமா . நீ ஏடாகூடமா எதாவது பண்ணிருப்பே அது தான் முறைக்குது என்று அதற்கும் இவனையே கூறினர் .

விருந்து உபச்சாரம் எல்லாம் முடிந்து சந்தீப்பையும் சுபியையும் இங்கே இரெண்டுநாள் தங்கி வரும்படி கூறி கிஷோர் தங்கள் உறவுகளை அழைத்து சென்றார் .

சுபியின் வீட்டில் சுபியின் அம்மா வழி பாட்டி மட்டும் பாலாஜி திருமணம் முடியும் வரை சித்ராவுக்கு துணையாக இங்கே இருந்து கொண்டார் . மற்ற உறவினர்கள் எல்லாம் கிளம்பிருந்தனர் . இங்கு முதன் முறை தங்குவதால் சுபியின் அறையை நன்கு அலங்காரம் செய்து சுபியிடம் பாலை குடுத்து அவள் அறைக்கு அனுப்பினார் .

சுபியின் அறையில் அவளுக்காக காத்திருந்த சந்தீப் அந்த அறையில் இருந்த அவளது சின்ன வயது புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தான் . அதில் அவள் தந்தையுடன் இருந்த புகைப்படங்களே அதிகமாக இருந்தது . அதுவே சொன்னது அவள் தந்தையை எவ்வளவு மிஸ் செய்கிறாள் என்று . அவளுடைய முதல் பிறந்த நாள் புகைப்படத்தை பார்த்தவன் அதிலிருந்த கொலு கொலு கன்னமும் பெரிய கண்களும் இரெண்டே இரண்டு பற்களுடன் ஈ என்று சிரிக்கும் சுபியை கண்ணிமைக்காது பார்த்திருந்தான் . எங்களுக்கு பொண்ணு பொறந்தா இப்படி தான் கொலு கொழுன்னு சப்பிய கியூட்டா இருக்கும் என்று ரசித்துக்கொண்டிருந்தான் .

அறைக்குள் நுழைந்த சுபி அதிர்ந்து நின்றாள் . என்னது இன்னைக்கும் இப்படி அலங்காரம் பண்ணிருக்காங்க . சுபி நேத்து மாதிரி பேக்கா இருக்கமா கொஞ்சம் உஷாரா இரு . முக்கியமா நீ கோவமா இருக்கே அதை மைண்டைன் பண்ணு எங்கயாவது மறந்து கிரந்து தொலச்சுறாதே .

அவள் உள்ளுக்குள் வந்ததும் அதிர்ந்த அவள் முகத்தை பார்த்து சந்தீப் சத்தமாக சிரித்து விட்டான் . அதில் காண்டான சுபி இங்க அப்படி என்ன காமெடி நடந்துச்சுனு இப்படி சிரிக்கிறீங்க என்றால் முறைத்து கொண்டு. பின் அவளிடம் வந்து ” சுபி நாம சண்டை போட நிறைய நாள் இருக்கு ஆன மாமியார் வீட்லே கொண்டாடுறே பர்ஸ்ட் நைட் வாழ்க்கையில் ஒரு தடவ தான் வரும் அதை நாம வேஸ்ட் பண்ணிட்டா “

உங்க பேரன் பேத்தி எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க அது தானே என்றால் இடுப்பில் கை வைத்து கொண்டு .

வாவ் பேபி மாமா மனசுலே நினைச்சதை சொல்லிட்டே என்று அவள் அருகில் வந்தவனை நான்கு அடிவைத்தவள் கை வலிக்க அவனை பார்த்தவள் அசராமல் நின்றுகொண்டிருந்தான் .

என்ன அப்படி பாக்குறே நமக்கு கல்யாணம் பிக்ஸ் அனைத்துமே சம்சார சாகரத்தில் செர்டிபிகேஷன் எழுதி பாஸ் பண்ணிட்டேன் இதெல்லாம் எனக்கு தூசு மாதிரி என்றான் .

அவன் சொன்னதில் சிரிப்பு வர அச்சச்சோ இவன் நம்மள கோவமாவே இருக்க விடமாட்டான் போலயே இதெல்லாம் சரி படாது டிரெக்டா வாய் சண்டைக்கு போய்டவேண்டியது தான் என்று நினைத்தவள் .

யாரு அவ உங்க பேஸ் புக்ல  கோவமா கமெண்ட் போட்டவ ?

அது தான் சொன்னேனே சுபி அவ ப்ரொபோஸ் பண்ணா நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் அதுனாலே அப்படி போட்டிருக்கா . அவ இப்படி கமெண்ட் பண்ணுவான்னு நானும் நினைக்குலே .

அவ ப்ரொபோஸ் பண்ணதுக்கு அப்புறமாவது நீங்க அவளை பிளாக் பண்ணிருக்கலாம் தானே . இப்போ பாருங்க எத்தனை பேரு அந்த கமெண்டை படிச்சுருப்பாங்க.

என்ன சுபி இது ஸ்கூல் புள்ளைங்க மாதிரி இதுக்கெல்லாம் பிளாக் பண்ணமுடியுமா ? கம் ஆன் சுபி குரோ அப் என்று எரிச்சலாக வெளிவந்தது அவன் குரல் .

அந்த கமெண்டை படிச்சா நீங்க என்னமோ அவளை லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி தான் எல்லாத்துக்கும் தோணும் .  எனக்கு அதெல்லாம் பிடிக்கலே . இப்போ அவளை பிளாக் பண்ண முடியுமா முடியாதா ? என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததில் அவன் பொறுமை டாட்டா சொல்லி ஓடிவிட்டிருந்தது .

ஏய் என்னடி உனக்கு பிரிச்சனை . நானும் குழந்தைக்கு சொல்ற மாதிரி பொறுமையா சொல்லிட்டு இருக்கேன் புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க . இப்போ அவளை நான் பிளாக் பண்ணாதான் நீ சொல்ற மாதிரி எல்லாரும் நினைப்பாங்க . ஜஸ்ட் இக்னோர் ஹேர் .

அப்போ எனக்கு கஷ்டமா இருக்குறது பத்தி இவனுக்கு கவலையே இல்லை போல என்று அவளாகவே கற்பனை செய்துகொண்டு இதுக்கு மேல இதை பத்தி பேசி மொக்க வாங்காத சுபி என்று மூளை எடுத்துக்கூற பேசாமல் பால் சொம்பை மேஜை மேல் வைத்தவள் போய் மெத்தையில் படுத்து கொண்டாள் .

அதில் இன்னும் கடுப்பானவன் இதோ இந்த மாதிரி நமக்குளே சண்டை வரணும்னு தான் அவ அப்படி கமெண்ட் போட்டுருக்கா நீயும் அவ நினைச்ச மாதிரியே நடந்துக்குறே என்றான் கோவமாக .

இந்த மாதிரி பிரச்சனை குடுக்குறே பொண்ணுங்க கிட்ட பிரிஎண்ட்ஷிப் வெச்சுக்கிட்டது முதல் தப்பு அப்புறம் அதை கட் பண்ணாம இருக்குறது இரெண்டாவது தப்பு இதுலே என்னை சொல்லறீங்களா . அந்த பாலை குடிச்சுட்டு லைட் ஆப் பண்ணுங்க நான் தூங்கணும் என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துகொண்டாள் .

ஒரு பெருமூச்சுடன் வந்து மெத்தையில் படுத்தவனை அங்கிருந்த பூக்கள் எல்லாம் கேலி செய்வதை போல் தோன்றியது . நேத்து இந்நேரத்து எப்படி இருந்தோம் ஆன இன்னைக்கு காதல் மனைவி பக்கத்துலே, ரூம் முழுக்க மல்லிகை பூ வாசனை எல்லா உரிமை இருந்தும் இப்படி தள்ளி இருக்கவேண்டியதா இருக்கு . ஹே அணிலா நீ மட்டும் என் கையில் சிக்குனே அவ்ளோ தான் .  மெல்ல அவள் என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான் .

அவளோ நேற்று இருந்த அலுப்பு கல்யாண அலுப்பு எல்லாம் சேர நன்றாக உறங்கி போனாள் . வாயை சிறிது திறந்து அவள் உறங்கும் அழகை ரசித்தவன் மெல்ல அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தான். அடேய் தூங்குற புள்ளைய என்னடா பண்றே என்று சத்தம் போட்ட மனசாட்சிக்கு  செஞ்சு வெச்ச அலங்காரத்துக்கு ஒரு மரியாதையை வேணாம் அதுக்கு தான் சின்னதா ஒரு கிஸ் என்றான் . மவனே வேண்டாம் நீ இதோட அடங்க மாட்ட அப்புறம் வாய்க்காய் தகராறு கத்தி சண்டை ஆயிட போகுது என்று எச்சரிக்கவும் கண்களை மூடி உறங்க முயன்றான்.

காலையில் முதலில் கண் முழித்த சந்தீப் கண்டது அலங்கோலமாக உறங்கும் சுபியை தான் . புடவையில் உறங்கி பழக்கமில்லாததால் அவள் ஒரு புறமும் அவள் புடவை மற்றொரு புறமும் சரிந்து கிடந்தது . காலையிலே நல்ல தரிசனம் என்று நினைத்தவன் போர்வையை எடுத்து நன்றாக போற்றிவிட்டு நைட் ஒன்னும் நடக்கலைன்னு சத்தியம் செஞ்சா கூட யாரும் நம்பமாட்டாங்க என்று சிரித்து கொண்டு குளிக்க சென்றான் . அவன் குளித்து வந்த பின்னும் அசந்து உறங்கும் அவளை எழுப்ப மனம்வராமல் கீழே சென்றான் . சந்தீப் மட்டும் வருவதை பார்த்த சித்ரா அந்த கழுதை இன்னும் தூங்கிட்டு இருக்கு போல என்று கோவமாக சுபி சுபி என்று அழைத்தார் . பாலாஜியோ அம்மா அவ குளிச்சுட்டு இருப்பா வெயிட் பண்ணுங்க என்றான் .

சுபியோ தூக்க கழகத்தில் இறங்கி வந்து வழக்கம் போல சோபாவில் படுக்க போனாள். நடக்க இருப்பதை யூகித்து அவளை பிடித்து நிறுத்தினார் சித்ரா . அதில் தூக்கம் தெளிந்தவள் அவரை கட்டி கொண்டு காபி னா அது சித்ரா காபி தான் பேஷ் பேஷ் ரொம்ப நல்ல இருக்கு . நேக்கு ஒரு காபி ப்ளீஸ் என்றாள் .

ஒழுங்கா போய் மொதல்ல குளிச்சுட்டு வா அப்புறம் தான் எல்லாம் என்று அவளை விரட்டி விட்டார் . அவள் தயாராகி வருவதற்குள் டிபன் ரெடியாக இருக்க அனைவரும் உண்டு முடித்து அன்று எங்கு போகலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர் . சுபி சந்தியாவை வரச்சொல்லி அனைவரும் சினிமாவிற்கு போவதென முடிவு செய்தனர் .

Advertisement