Advertisement

காதல் அணுக்கள் -18
வீட்டிற்கு திரும்பி போகும் வழி எங்கும் மௌனமே ஆட்சி செய்தது . எவ்வளவு சந்தோசமா ஆரம்பிச்ச ஈவினிங் இப்படி ஆயிடுச்சே என்று இருவர் மனதிலும் தோன்றியது . அப்போது சித்ரா சுபிக்கு போனில் அழைத்து வரும் வழியில் ஆல்டெரேஷனுக்கு டைலரிடம் குடுத்த துணியை வாங்கி வரும்படி கூறினார் . அவளுக்கு இருந்த எரிச்சலை யாரிடம் காண்பிப்பது என்று காத்திருந்தவளிடம் வசமாக மாட்டினார் சித்ரா .
அம்மா நானே கடுப்புல இருக்கேன் இதுல நீ வேற ஏன் மா . இதெல்லாம் நீ பகலில் போய் வாங்கிக்க கூடாதா. சும்மா எனக்கு வேலை சொல்லிட்டே இருக்க . வைமா போனை என்று போனை கட் செய்தவள், சிறிது நேரம் சென்று ச்ச யார் மேலையோ இருக்குற கோவத்தை அம்மா கிட்ட காட்டிட்டோம் என்று வருந்தியவள் ,வண்டி ஓட்டி கொண்டிருந்த சந்தீப்பை பார்த்து எல்லாம் உன்னால தாண்ட என் டால்ட என்று மனதிற்குள் அவனை வருத்து எடுத்து கொண்டிருந்தாள் . சந்தீப்புக்கு புரையேறவும் அச்சச்சோ ஓவரா திட்டிடமோ என்று நல்ல பிள்ளை போல தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் . 
தண்ணி எல்லாம் வேண்டாம் நீ என்னை திட்டாம இருந்தாலே போதும் என்றான் நமட்டு சிரிப்புடன். கண்ணாடி வழியே அவள் நாக்கை கடிப்பதை பார்த்தவன் சிரித்து கொண்டான் . பின் அவனே டைலர் கடை முன் நிறுத்தி போய் வாங்கிட்டு வா என்றான் . இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றாள் .
சந்தீப்பின் அமெரிக்க நண்பன் ஒருவனுக்கு அடுத்த வாரம் பெங்களூரில் திருமணம் . இவன் மட்டும் போய் விரைவாக திரும்பிவிடலாம் என்று நினைத்திருந்தான் இப்பொழுது சுபியையும் அழைத்து கொண்டு மேலும் இரெண்டு நாள் சென்று வந்தால் என்ன என்று தோன்றியது . 
பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கமங்களூரை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்தான். இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான அழகான ஊர். அங்கு ட்ரெக்கிங் ,ரிவேர் ராஃபிட்டிங் ,ட்ரீ ஹவுஸ் என்று பல்வேறு அனுபவங்களை பெறலாம். மேலும் மற்ற சுற்றுலா தளங்களை போல கூட்டம் நிரம்பி வழியும் இடமும் கிடையாது . தாங்கள் இருவரும் இயற்கை விரும்பிகள் அதனால் அங்கு சர்ப்ரைஸாக சுபியை அழைத்து செல்ல முடிவு செய்தான் . சுபி டைலர் கடையிலிருந்து வருவதற்கு முன் அங்கு எந்த ரெசார்ட்டில் ரூம் வேகன்ஸி உள்ளது என்று எல்லாம் பார்த்து வைத்திருந்தான் . அவளுக்கு சர்பரைஸ் கொடுக்க போவதை நினைத்து அவன் மனமும் முகமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது .
சுபி வந்தவுடன் விசில் அடித்த படி வண்டியை கிளப்பி சென்றான். என்ன கொஞ்ச நேரம் முன்னாடி கூட ஆளு டல்லா இருந்தான் இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கான் . தப்பாச்சே . சுபி அலர்ட் அலெர்ட் . பயபுள்ள வேற எதுக்கோ பிளான் பண்ணுது போல என்று யோசித்து கொண்டிருந்தாள் .
வண்டியை சுபி வீட்டு முன்னால் நிறுத்தி நீ போய் அத்தையை பார்த்து குடுத்துட்டு வா நான் வீட்டுக்கு போறேன் . மத்த பாக் எல்லாம் குடு நான் வேணும்னா எடுத்துட்டு போறேன் என்று வாங்கி சென்றுவிட்டான் .
வீடு வந்து சேர்ந்தவனை அமைதியான வீடே வரவேற்றது . அதுக்குள்ள எல்லாரும் தூங்கிட்டாங்களா? அம்மா இந்நேரம் சீரியல் பாக்குறதுக்கு சந்தியா கூட ரிமோட்டுக்கு சண்டை போட்டுட்டிருப்பாங்களே என்று யோசித்தபடி  தனதறைக்கு வந்தவன் உடை மாற்றிவிட்டு அன்னையை காண சென்றான். அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டார் சாரதா. அப்பொழுதுதான் அம்மா நம்ம மேல இன்னும் கோவமா இருக்காங்க என்பதே அவனுக்கு புரிந்தது . அம்மா என்னமா இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கீங்களா ? நான் காரணமில்லாம சொல்லுவனா என்றான் தன்மையாக . அதே தான் நானும் சொல்றேன் அம்மா காரணமில்லாம சொல்லமாட்டாங்க அம்மா பேச்சை கேட்போம்னு உனக்கு தோணுதா என்றார் சற்று காரமாகவே ?
இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்தியா ” மாமா பொண்ணு கல்யாணத்துக்கு அப்பா கூட பொறந்த அக்காவை நேருல கூப்பிட சொன்னீங்க ஆன மாமா கூப்பிட்டாரா ? இல்லையே … இப்போ மட்டும் நாம எதுக்காக அவங்க சம்மந்திய நேருல கூப்பிடனும் ? நீங்க இப்போ மாமா பேச்சை கேட்டிங்கன்னா அப்பாவை விட்டு குடுத்த மாதிரி ஆகிடும் பார்த்துக்கோங்க ” என்று தன் அன்னைக்கு செக் வைத்தாள் .
மகள் கூறுவதில் இருந்த நியாயம் புரிந்தது அதை நேரடியாக ஒத்துக்கொள்ள மனம் இன்றி “என்னமோ பண்ணுங்க. நான் சொன்ன கேட்கவா போறீங்க” என்று அந்த இடத்தை காலிசெய்துவிட்டு டிவி முன் சென்றமர்ந்தார் . அவரை பற்றி புரிந்திருந்ததால் மற்ற மூவரும் சத்தமின்றி சிரித்து கொண்டனர்.
சுபியும்  தன் அன்னையையும் பாட்டியையும் பார்த்து பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் . வந்தவள் மிகவும் களைப்பாக இருக்க நேர தங்களது அறைக்கு வந்து உடை மாற்றி உறங்கிவிட்டாள் . தந்தையுடனும் தங்கையுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு வந்தவனுக்கு அழகாக உறங்கும் மனைவியே காட்சி தந்தாள் . அவள் உறக்கம் கலையாத வண்ணம் அவள் அருகில் படுத்து அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவன் தரப்போகும் சர்ப்ரைஸிற்கு எப்படி எல்லாம் எஸ்பிரேசன் கொடுப்பாள் என்று கற்பனை செய்து சிரித்து கொண்டு மெல்ல உறக்கத்திற்கு சென்றான் .
மறுநாள் காலையில் சுபி பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தாள் . மெத்தையில் படுத்தபடியே அவளை சைட் அடித்து கொண்டிருந்தான் அவள் கணவன் . அவளை சீண்டும் எண்ணம் தோன்ற மெதுவாக அவளை பின் இருந்து அனைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அடுத்து இது எங்கு போய் முடியும் என்று நன்கு அறிந்ததால் ஆபீஸ்க்கு ஏற்கனவே லேட் ஆச்சு சும்மா இருங்க என்று அவனிடம் இருந்து விடுபட முயன்று கொண்டிருந்தாள் . அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டே அவளை விடுவித்தான். பின் சுபி நாம நாளைக்கு ஊருக்கு போறோம் ஈவினிங் சீக்கிரம் வந்துரு அப்புறம் ரெண்டு நாள் லீவு சொல்லிடு என்றான்.
அதை கேட்டு மிகவும் மகிழ்ந்தால் சுபி . ஹப்பா இப்போவது ஹனிமூன்க்கு  கூட்டிட்டு போகணும்னு தோணுச்சே என்று நினைத்தவள் . என்ன திடீர்னு ஊருக்கு ? நீங்க எதுவும் சொல்லவே இல்ல.எந்த ஊருக்கு போறோம் என்றால் ஆர்வமாக .
அவள் ஆர்வத்தை பார்த்து வம்பிழுக்க தோன்றியதால் என் பிரெண்டு ஒருத்தனுக்கு திருப்பதில கல்யாணம் எல்லா பிரெண்ட்ஸும் பேமிலி ஓட வராங்க . அது தான் நாமளும் போறோம் என்றான் . இதை கேட்ட சுபிக்கு தான் சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலை . இவனை எல்லாம் வெச்சுகிட்டு ஒரு கொலை கூட பண்ணமுடியாது . திருப்பதிக்கு கூட்டிட்டு போறானமில்ல திருப்பதிக்கு . வந்த கடுப்பிற்கு அவனை போட்டு நாலு சாத்து சாத வேண்டும் போல் இருந்தது. 
இங்க நிறைய கல்யாண வேலை இருக்கு ,நான் எங்கயும் வரலை நீங்களே உங்க அம்மாவை கூட்டிட்டு திருப்பதி போயிட்டு வாங்க . அவங்களுக்கு தான் கோவில் போறதுன்னா ரொம்ப இஷ்டம் என்று எரிச்சலாக கூறிவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றாள் . மனதுக்குள் சிரித்து கொண்டவன் மெதுவாக தன் பெற்றோரிடம் தான் சுபியை அழைத்து கொண்டு பெங்களூர் செல்லும் விஷயத்தை கூறினான். 
ஏன்டா நீ பண்றது உனக்கே நியாயமா இருக்கா ? வீட்டுலே கல்யாண வேலை வெச்சுகிட்டு இப்போ அவசியம் ஊருக்கு போகணுமா ? கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஒரு வாரம் 10 நாளு போயிட்டு வா யார் வேண்டாம்னா ?
சுத்தம் .. கல்யாணம் முடிஞ்சு பாலாஜியும் சந்தியாவும் எங்களுக்கு முன்னாடி ஹனி மூன் போன என் கதை கந்தளாயிடும் என்று மனதுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க , அம்மா ஸ்ரீராம் கிட்ட பேசிட்டேன் மா அவன் நாளைக்கு காலையிலே இங்க இருப்பான் . அவன் எல்லாம் பார்த்துப்பான். கிட்ட தட்ட எல்லா வேலையும் முடிஞ்சது தானே மா என்று ஒருவாறு தாஜா செய்து அன்னையை சரிக்கட்டினான் . 
அம்மா இன்னொரு ஹெல்ப் மா.. சுபி கல்யாண வேலை இருக்குனு வரலைன்னு சொல்ற நீங்க தான் அவகிட்ட பேசணும் . நான் சொன்ன கண்டிப்பா ஒதுக்க மாட்டா நீங்க சொன்ன தான் கேட்பா ப்ளீஸ் மா என்றான் .
டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டு இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கிஷோர் திடீரென கிளீன் போல்ட் என்று சத்தமாக கூறினார் . இருவரும் கேள்வியாக அவரை பார்க்க . இங்க மேட்ச்லே அவுட் ஆயிட்டான் அதை சொன்னேன் என்று மகனை பார்த்து தம்ஸ் அப் காமித்தார். சந்தீப்போ அவரை முறைக்க முயன்று முடியாமல் சிரிக்க தொடங்கினான் .
சாரதாவிற்கும் மருமகளை நினைத்து சற்று பெருமையாக இருந்தது . பொறுப்பாக திருமணத்தை காரணம் காட்டி வரவில்லை என்றது அவருக்கு சுபியின் மேல் திருப்தியை தந்தது . சரி சரி நான் சுபி கிட்ட பேசுறேன் என்று கெத்தாக கூறி சென்றார் . அவர் அந்த பக்கம் சென்றதும் தந்தையும் மகனும் ஹய் பய் கொடுத்துக்கொண்டனர் .
சாரதா சுபியிடம் சந்தீப்புடன் ஊருக்கு போய் வருமாறு வலியுறுத்தினார் . அவருக்கு ஹனிமூன் என்று சொல்ல கூச்சமாக இருந்ததால் வெறுமென ஊருக்கு போய் வா என்று மட்டும் கூறினார் . சுபியும் வேறு வழி இல்லாமல் ஊருக்கு செல்ல முடிவு செய்தாள் . நேரமே வீட்டுக்கு வந்து பேக்கிங் செய்ய ஆரம்பித்தவளுக்கு சில தேவையான பொருட்கள் அம்மா வீட்டில் இருக்கவே அதை எடுக்க அங்கு சென்றாள். 
அவள் பாட்டி “சுபி நீ ஊருலே இருந்து வரும் போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா லட்டு வாங்கிட்டுவா. உங்க சின்ன மாமாக்கு திருப்பதி லட்டுனா ரொம்ப பிடிக்கும்” என்று மேலும் அவளை வெறுப்பேத்தி கொண்டிருந்தார்.
இந்த பாட்டி நிஜமாவே கேட்குதா இல்ல நம்மளே ஓட்டுதா . இப்படி பல்லு போன பாட்டிகிட்டெல்லாம் பல்பு வாங்கிட்டு இருக்கனே .. எல்லாம் என் புருஷனால வந்தது ..  இருடா மவனே உன்ன என்று சந்தீப்பிற்கு போன் செய்தாள் . அவன் போனை எடுத்ததும் ஹலோ என்று கூட சொல்லாமல் “நான் தான் வரலேன்னு சொன்னேன் தானே பின்ன எதுக்கு அத்தைகிட்ட சொன்னீங்க . இப்போ வேற வழியில்லாம வரவேண்டியதா இருக்கு ” என்று பொரிய தொடங்கினாள்.
என்ன சுபி நாம கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முதலா ஊருக்கு போறோம் நீ சந்தோஷபடமா சலுச்சுக்கிறியே ? சும்மா கிளம்பு பேபி அப்படியே இரெண்டு நாள் ஜாலியா தங்கிட்டு வரலாம் திருப்பதிலே.
சுபிக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது . இவனுக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம் போலிருக்கு. இவன் அதுக்கு செரிப்பட்டே வரமாட்டான் என்று நொந்துபோனாள் .
சிக்மங்களுரில் ட்ரெக்கிங் செய்யலாம் என்று எண்ணி “செல்லம் அப்படியே ஜீன்ஸ், ஷுஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ. அப்படியே எங்கேயாவது பக்கத்துலே சுத்தி பாத்துட்டு வரலாம் “
எதை சுத்தி பார்க்கணும் ? எப்படி மொட்டை அடிக்கறாங்க,எப்படி லட்டு பண்றங்கனு பார்க்கபோறோமா ?எதாவது சொல்லிட போறேன் வையா போனை என்று கட் செய்துவிட்டு உலகத்துலயே திருப்பதிக்கு ஹனிமூன் போனது நானா தான் இருப்பேன் என்று புலம்பி கொண்டிருந்தாள் .
– தொடரும்

Advertisement