Advertisement

காதல் அணுக்கள் -16
தன் தோளில் குழந்தையென தூங்கும் மனைவியை பார்க்க தானாக அவனுக்கு உதட்டில் புன்னகை மலர்ந்திருந்தது. அன்று அவளை சமாதானப்படுத்த அவன் பட்ட பாட்டை இன்று நினைத்தாலும் தலையால் தண்ணிகுடித்துவிடுவான். இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்து கொண்டு சுற்றி கொண்டிருந்தவள் இரவில் அவன் அறைக்கு வரும்முன்னே உறங்கியிருப்பாள் . அடி பாவி இன்னும் மூணு நாளுலே நான் ஒர்க் ஜாயின் பண்ணனும் இப்படி என்னை கண்டுக்காம இருக்காளே.. இவளை… என்று அவளருகே நெருங்கி படுத்து மெதுவாக அவள் இடையில் கையை போட்டான் . அவன் கையை தட்டி விட்டு மீண்டும் உறங்கி போனாள். இதுல மட்டும் தெளிவா இருக்கா என்று கடுப்பாகி திரும்பி படுத்து உறங்கி போனான் . ரூமிற்குள் தான் அவர்கள் முட்டல் மோதல் எல்லாம், அனைவர் முன்னிலும் சகச்சமாக காட்டிக்கொண்டனர்.
  மூன்றாம் நாள் இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்த சந்தீப் சுபிக்கு முன்னாள் அறையில் போய் காத்திருந்தான் . அவன் விரைவாக அறைக்கு சென்றதை பார்த்த சுபி அறைக்கு செல்லாமல் நேரத்தை கடத்திக்கொண்டிருந்தாள் ஆனால்  சாரதா சுபியை அவள் அறைக்கு போகும் படி கூறினார் அதனால் வேறு வழியின்றி அறைக்கு வந்து சேர்ந்தவளை சந்தீப்பின் பார்வை தொடர்ந்து கொண்டே இருந்தது . 
சந்தீப்பின் நல்ல நேராமோ என்னவோ அணிலா அவள் எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்காததால் அவளாகவே அன்பிரெண்ட் செய்து விலகி சென்று விட்டாள் . சந்தீப் அதை சுபியிடம் காட்டி ” நம்ம அவளை இக்னோர் பண்ணதால அவளே விலகி போயிட்டா . இனி அவ பிரெண்ட்ஸ் ரியூஸ்ட் குடுத்தாலும் நான் அக்ஸ்ப்ட் பண்ணமாட்டேன் ஓகே வா .” என்றான் .
எல்லாம் கேட்டுவிட்டு எந்த பதிலும் கூறாது திரும்பி உறங்க சென்றவளை புரியாது பார்த்தவன் . சுபி செல்லம் இரண்டு நாளா மாமனை தள்ளி வெச்சுட்ட இன்னைக்காவது என்று குழைவாக வந்த அவன் குரலில் அவன் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட சுபி அவனிடமிருந்து சற்று விலகி படுத்துக்கொண்டு “நத்திங் டூயிங் . பேசாம தூங்குங்க “.
என்னடி உனக்கு பிரச்சனை அவ தான் நீ ஆசை பட்டபடி போய்ட்டா தானே , இனி என் கிட்ட எந்த பஞ்சாயத்தும் வெச்சுக்க மாட்டா .
அதே தான் நானும் சொல்றேன் அவளா பிரச்சனை பண்ணா அவளா போயிட்டா இதுலே நீங்க எனக்காக என்ன பண்ணீங்க . உங்களுக்கு என் பீலிங்ஸ் முக்கியமே இல்ல என்று கலங்கிப்போய் வந்தது அவள் குரல். எல்லா மனைவிக்கும் இருக்கும் ஆசை தான் அது .தன் கணவன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது .
சந்தீப்பிற்கோ மறுபடியும் முதலிலிருந்தா என்று ஆசுவாசமாக இருந்தது . இவகிட்ட பேச்செல்லாம் எடுபடாது அதிரடி தான் செல்லுபடியாகும் என்று நினைத்தவன் அவளை நெருங்கி அணைத்து என் சுபி செல்லம் எனக்கு எப்பவுமே முக்கியம் தான் என்றவனிடம் தடுத்து ஏதோ சொல்ல வந்தவளின் இதழை சிறை செய்தவன் அவளை வேறு உலகிற்கு அழைத்து சென்றான் . அவளிற்கும் அந்த அணைப்பும் முத்தமும் மிகவும் தேவையாகவும் ஆறுதலாகவும் இருந்தது . அவளும் அவனுடன் ஒன்றி போனாள் . 
அடுத்தடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் பிஸியாகவே இருந்தது . இருவரும் ஆபீஸ்க்கு கிளம்புவதும் சந்தியா பாலாஜியின் கல்யாண வேலை பார்ப்பதுமாக இருந்தனர் . சந்தீப்பும் அவனது புதிய அலுவலகம் ப்ரொஜெக்ட்டில் பிஸியாக இருந்தான் . சந்தீப்பிற்கு அதிகம் நேரம் கிடைக்காததால் ஹனிமூன் பிளான் செய்யாமல் இருந்தனர் .
சுபி தான் கேள்விகேட்பவர்களை சமாளிக்க முடியாமல் திணறிப்போனாள் . கல்லூரி தோழிகள் முதல் ஆஃபிஸில் டீம்மேட்ஸ் வரை அனைவரும் ஹனிமூன்க்கு எங்கே போனீங்க என்று கேட்டுவிட்டனர் . இன்னும் பிளான் பண்ணலை ,அண்ணா கல்யாணத்துல பிஸி என்று பல பதில்கள் கூறி சமாளித்து வந்தாள் .
மது வேறு என்ன சுபி இப்படி பேக்கு மாதிரி இருக்க நான் எல்லாம் ஹனி மூன்க்கு என்னை சுவிஸ் கூட்டிட்டு போனாதான் கல்யாணத்துக்கே ஓகே சொல்வேன்னு பொண்ணு பார்க்க வரும் போதே மாப்பிள்ளை கிட்ட சொல்லிடுவேன் என்று அவள் பங்கிற்கு ஏற்றிவிட்டு கொண்டிருந்தாள் . 
சந்தியா பாலாஜியின் கல்யாண வேலை பார்ப்பதுமாக இருந்தனர் . சந்தீப்பும் அவனது புதிய அலுவலக ப்ரஜெக்ட்டில் பிஸியாக இருந்தான் . சந்தீப்பிற்கு அதிகம் நேரம் கிடைக்காததால் ஹனிமூன் பிளான் செய்யாமல் இருந்தனர் .
சுபி தான் கேள்வி கேட்பவர்களை சமாளிக்க முடியாமல் திணறிப்போனாள். கல்லூரி தோழிகள் முதல் ஆஃபிஸில் டீம்மேட்ஸ் வரை அனைவரும் ஹனிமூன்க்கு எங்கே போனீங்க என்று கேட்டுவிட்டனர் . இன்னும் பிளான் பண்ணலை ,அண்ணா கல்யாணத்துல பிஸி என்று பல பதில்கள் கூறி சமாளித்து வந்தாள் .
மது வேறு என்ன சுபி இப்படி பேக்கு மாதிரி இருக்க நான் எல்லாம் ஹனி மூன்க்கு என்னை சுவிஸ் கூட்டிட்டு போனாதான் கல்யாணத்துக்கே ஓகே சொல்வேன்னு பொண்ணு பார்க்க வரும் போதே மாப்பிள்ளை கிட்ட சொல்லிடுவேன் என்று அவள் பங்கிற்கு ஏற்றிவிட்டு கொண்டிருந்தாள் . அருகில் இருந்த திருமணமான டீம்மேட் ஒருத்தி “அதானே என் ஹஸ்பேன்ட்  என்கிட்ட மொதல் மொதலா போன்ல பேசுன விஷயமே இது தான் ” என்று வெக்கபட்டுக்கொண்டிருந்தாள் .
சுபியின் மனதிலோ ச்சை எல்லாரும் இப்படி பேசுற அளவுக்கு நம்ம நிலைமை ஆயிடுச்சு. இது வரைக்கும் ஹனி மூன பத்தி ஒரு வார்த்தை பேசிருப்பான . அட்லீஸ்ட் இப்போ போகமுடியலே அப்புறம் போலாம்னு ஒரு பேச்சுக்காவது சொல்லிருப்பானா . அவன் ஏன் பேசுறான் அது தான் அவனுக்கு நினைச்சதெல்லாம் நடக்குதே . இன்னைக்கு அம்மு செல்லம்னு கிட்டவரட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு . பின் எதையோ நினைத்து பார்த்தவள்  அவன் சாத்தியமா அடங்கமாட்டான் பேசாம அம்மா வீட்டுக்கு போயிட வீட்டுக்கு போயிட வேண்டியது தான் என்று நினைத்தவள் தன் தாய்க்கு அழைத்து அம்மா நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரேன் மா . நைட் அங்க தான் தங்க போறேன் . 
சரி நைட் என்ன டிபன் வேணும்னு சொல்லு உனக்கும் மாப்பிள்ளைக்கும் பண்றேன் .
அம்மா நான் மட்டும் தான் வரேன் உன் மாப்பிள்ளை வரமாட்டாரு என்றால் அழுத்தமாக 
சித்ராவிற்கு அவள் சொன்ன விதத்திலே எதோ சரியில்லை என்று தோன்றியது .என்னடி திடீர்னு ?  வீகெண்ட் வராம இப்போ வரியே எதாவது உன் மாமியார் சொல்ல போறாங்க .
அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க . உனக்கு தலைவலி உடம்பு முடியலைன்னு எதாவது சொல்லிக்கறேன்
அப்படி எதுவும் சொல்லிவைக்காதே . காலையில் தான் பார்த்து பேசிட்டு வரேன். அவங்களுக்கு நல்ல தெரியும் எனக்கு ஒண்ணுமில்லன்னு .
ஏதோ சொல்லிக்குறேன் விடும்மா . பொண்ணுங்க தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு .ஆம்பளைங்கள பாரு யாருக்கும் பதில் சொல்லவேண்டியதுமில்லை  பெர்மிஷன் கேக்கவேண்டியதும் இல்லை என்று பொரிந்து தள்ளினாள் .
சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு வா கொஞ்சம் கல்யாண வேலை எல்லாம் இருக்கு என்று பேச்சை திசை திருப்பினார் .
அது நன்றாக வேலை செய்ய அவளும் வேறு பேசி வைத்துவிட்டாள் .
சாயந்திரம் வீடு வந்தவளிற்காக சந்தியா காத்திருந்தாள் . சுபி சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வா பார்லர் போகணும் என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தால் . 
ஏண்டி இப்படி அநியாயம் பண்ணுரே போன வாரம் தானே போயிட்டு வந்த இப்போ எதுக்கு மறுபடியும் ?
இல்ல சுபி வாய்ட்டனிங் பாஸியல் வீக்லி ஒன்ஸ் பண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல கலர் வரும்னு சொன்னாங்க என்றால் தயங்கி தயங்கி . சந்தியாவிற்கு நன்கு தெரியும் சுபிக்கு நிறம், உயரம் , அழகு இது போன்ற பிஸிக்கல் அப்பியரன்ஸை முதன்மை படுத்தி பேசினால் அறவே பிடிக்காது என்று அதனாலேயே இந்த தயக்கம் .
எதிர்பார்த்தது போலவே சுபிக்கு கோவம் வந்தது . லூசாடி நீ இப்படி வார வாரம் பாஸியல் பண்ணா ஸ்கின் எவ்வளவு டேமேஜ் ஆகும்னு தெரியுமா . உனக்கு ஹெல்த்தி க்ளோயிங் ஸ்கின் இருக்கு அதை நீயே கெடுத்துக்க போறியா ? உன் கலருக்கு என்ன கொறச்சல்ன்னு நீ வாய்ட்டனிங் பண்ணுரே ?
சுபி நீ என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு . நான் மாநிறத்துக்கும் கம்மியா இருக்கேன் உங்க அண்ணா வெள்ளை பணியாரம் மாதிரி இருக்காரு . அவர் பக்கத்துலே நான் நிக்கும் போது எல்லாரும் என்னை குறைவா பாக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு என்றால் மனதை மறையாது .
உங்க கல்யாணத்திலே உங்க அத்தை எல்லாம் எப்படி பேசுனாங்க தெரியுமா ? உனக்கென்ன நீ கலரா இருக்கே உனக்கு என் கஷ்டம் எல்லாம் புரியாது . அட்வைஸ் பண்றது ஈசி ஆன அனுபவிக்குறவங்களுக்கு தான் அதோட வலி தெரியும் . ஏன் நீ எவ்ளோ புக்ஸ் படிக்குறே படம் பாக்குறே அதுலே எல்லாத்துலயும் ஹீரோயின் அப்படினாலே வெள்ளையா உயரமா சில்கி ஹேரோட தானே இருகாங்க அதையும் மீறி ஒண்ணு ரெண்டு கதையிலே கருப்பான ஹீரோயின் இருந்த அந்த பொண்ணை எல்லாரும் வெறுக்குற மாதிரி பரிதாபம காட்டுறாங்க எங்கயாவது கெத்தா காட்டுறாங்களா ?
சந்தியா சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை நமது தாத்தா பாட்டி காலத்தில் கூட நிறத்துக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை ஆனால் இன்று நன்கு படித்த நாம் தான் மனிதர்களின் அழகை நிறத்தை வைத்து முடிவுசெய்கிறோம் . எல்லாம் அந்த பார்னஸ் கிரீம் கம்பனிகள் செய்யும் வேலை. அவர்கள் லாபத்திற்காக மக்களிடம் இது போன்ற மூடநம்பிக்கையை வளர்க்கின்றனர் . மக்களும் அவர்களின் வலையில் விழுகின்றனர் .
சந்தியாவின் கையை ஆதரவாக பற்றியவள் எனக்கு நீ சொல்றது நல்ல புரியுது சந்தியா ஆன இன்னும் எத்தனை நாளுக்கு அடுத்தவங்க இப்படி முட்டாள் தனமா சொல்றதெல்லாம் கேட்டு நீ வருத்த பட்டுட்டு இருக்கபோறே ? நாளைக்கு உன் குழந்தைக்கு முன் உதாரணமா இருக்க வேண்டிய நீயே இப்படி கான்பிடென்ஸ் இல்லாம பேசுனா எப்படி ? நம்மளால பொறக்கும்போது எப்படி அம்மா அப்பா கூடபொறக்குறவங்க எல்லாம் சூஸ் பண்ணமுடியதோ அதே போலத்தான் இந்த ஹையிட் கலர் எல்லாமும் மத்ததை எல்லாம் நினைச்சு நீ எவ்வளவு சந்தோஷமும் பெருமையும் படுறையோ அதே போல தான் இதையும் நீ நினைக்கணும் .
அண்ணா உன்னை எப்படி பாக்குறான் எப்படி லவ் பண்ணுறான்னு உனக்கே நல்ல தெரியும் ? உனக்காக அவன் பண்ணுற வாங்குறே ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வுளவு ரசனை இருக்கும் . யு ஆர் சோ லக்கி சந்தியா என்று சொல்லும் போதே அவளின் குரலில் ஒரு ஏக்கம் தெரிந்தது . அன்று ஆஃபிஸில் இருந்து விரைவாக வந்த சந்தீப்பின் காதில் இவை அனைத்தும் விழுந்தது . தங்கை பேசியதை முதலில் வருத்தமாக கேட்டுக்கொண்டிருந்தவன் பின் மனைவி கூறிய அனைத்தும் கேட்டு அவள் மீது இன்னும் காதல் அதிகமானது.

Advertisement