Advertisement

சற்று மூச்சை நிதானத்திற்கு கொண்டு வந்தவள்.. மாமா நீங்கதானா என்னப் பார்க்க வந்தது.. ஸ்ரீ நல்லாயிருக்கானா அத்தை எப்படியிருக்காங்க.. நல்லாயிருக்காங்களா..??”
 
அஸ்வின் அங்கு சென்று கொண்டிருந்த லோகேஷை பார்த்தபடி,” இவன் .யாரு..??”
 
என்னோட பிரண்ட்.. என் கிளாஸ்மெட்டா மட்டும் இருந்தவன் சந்தியாவை மனதிற்குள் நினைத்துப் பார்த்தவள் இப்ப இன்னும் குளோஸ் ஆகிட்டான்..
 
என்ன லவ் மேட்டரா.. அதுக்குத்தான் உன்னை விரட்டுரானா..??”
 
ஐ சூப்பர் மாமா நீங்க ஒரு ஜீனியர்ஸ்.. உடனே கண்டுப்பிடிச்சிட்டிங்க..??”
 
அதான் பார்த்தாலே தெரியுதே எத்தனை நாளா நடக்குது இது..
 
எனக்கு தெரியல மாமா இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்சேன்..?”
 
இவனும் இவன்ஆளும் இவன் எப்படி பொருத்தமா இருப்பான்னு நினைக்கிற..?”
 
நானும் அததான் மாமா நினைச்சேன்.. ஆனா பாவம் ரொம்ப பிடிச்சிருக்கு போல.. இவன் பார்க்கத்தான் பீம்பாய் மாதிரி ஆனா குழந்தை மனசு.. ரொம்ப நல்லவன்.. வீட்டுக்கு ஒரே பையன் அவங்க பேரன்ட்ஸையும் நான் பார்த்திருக்கேன் ரொம்ப நல்லவங்க ஒரு பெரிய ஜவுளிக்கடை வைச்சிருக்காங்க.. இப்ப பிராஜக்ட் நாங்க எல்லாரும் சேர்ந்துதான் பண்ணினோமா அப்பத்தான் லவ் போல… எல்லாம் செட்டாயிரும் மாமா..
 
எல்லாம் நீங்களே முடிவு பண்ணிட்டா வீட்ல பெத்தவங்க எதுக்கு இருக்காங்க..
 
அதெல்லாம் அவனே பார்த்துக்குவான் அவன் கண்ணுல அவ்வளவு காதல் பார்தேன்.. லவ் நல்ல பீலிங் இல்ல…
 
அதப்பத்தி எனக்கு தெரியாது உங்க அக்காட்ட வேணா கேட்டிருக்கலாம்..??” அவன் பேச்சு திசை திரும்புவதை உணர்ந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க எள் போட்டால் வெடித்துவிடும் போல அப்படி கடுகடுவென இருந்தது.. அஸ்வினோ அவள் லோகேஷை லவ் பண்ணுவதாகவே நினைத்துவிட்டான்..
 
பாவம் மாமா இன்னும் அக்கா பண்ணினத மறக்கல.. ஸாரி மாமா அக்கா எனக்கும்தான் ஒரு லெட்டர் எழுதியிருந்தா.. அவ இப்படி ஒருத்தர லவ் பண்றது எனக்கு தெரியவே தெரியாது.. அவ பண்ணினது தப்புதான்..?”
 
அப்படியே அவளை ஆங்காரமாய் முறைத்தவன்,” தப்புன்னு எவ்வளவு ஈஸியா சொல்ற. அவளாலதான் இன்னைக்கு என் பையன் அம்மா இல்லாம இருக்கான்.. ச்சீ அது எப்படி பெத்த குழந்தையை விட்டுட்டு வேற ஆளோட ஓடத்தோனும்.. பெத்த குழந்தையை விட தன்னோட சந்தோசம் பெரிசா..
 
அதுவரைக்கும் பரவாயில்ல என் பையன தூக்கிட்டு போகல.. இல்லனா அவனும்தான் ஆக்ஸிடென்டில அடிப்பட்டிருக்கனும்.. ஆனா பாவம் அந்த உங்க அக்காவ லவ் பண்ணின அப்பாவி.. இப்படி ஒரு நிலையில்லாத புத்தி உள்ளவள போய் லவ் பண்ணியிருக்கான்..
 
ஸ்ருதியோ,” நீங்க இவ்வளவு பேசுறிங்க கல்யாணம் முடிவானதும் எங்க அக்காட்ட சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா..
 
ஓஓஓ இப்ப நான் சம்மதம் கேட்காததுதான் தப்பா போச்சா.. அவ என்ன ஊமையா.. இதோ பார் ஸ்ருதி இப்ப நான் ரொம்ப கோபத்தில இருக்கேன் இப்படி மேல மேல பேசி என்னை டென்சனாக்காத.. உங்க அக்கா ஒருத்தியால நான் தினம் தினம் எத்தனை பேர்கிட்ட என்ன மாதிரி பேச்சு வாங்குறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் நீயும் அதை பேசாத.. ஒரு ஆம்பளையா கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டுட்டு இருக்கேன்..
 
என்ன பேசக்கூடாது.. நான் அப்படித்தான் பேசுவேன் மாமா கல்யாணம்தான் அவ சம்மதம் இல்லாம பண்ணிட்டிங்க.. குழந்தையாவது சம்மதத்தோட பெத்திருக்கலாம்..
 
ஏய்……அப்ப நான் அவள கட்டாயப்படுத்தித்தான் குழந்தை பெத்துக்கிட்டேனா.. அப்படி உங்க அக்கா எழுதியிருந்தாளா..??”
 
இல்ல இல்ல உங்கள ஒருவார்த்தைக்கூட தப்பா எழுதல அவள பத்திதான் எழுதியிருந்தா.. இது என்னோட கேள்வி மாமா..
 
ச்சீ போடி … இத நான் பேசவிரும்பல ..நீயாவது யார லவ் பண்றியோ அவனையே கல்யாணம் பண்ணிக்கோ..
 
கண்டிப்பா மாமா நானெல்லாம் அக்கா மாதிரி இல்ல.. ஆனா எங்க அப்பாவும் லவ்வுக்கு எதிரி எல்லாம் இல்ல மாமா அக்கா அப்பவே ஸ்ட்ராங்கா அவரத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நின்னிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாங்க.. நாங்க ரெண்டும் பொண்ணுங்களா இருக்கிறதால கொஞ்சம் கண்டிப்பா இருப்பாங்களே தவிர ரொம்ப நல்லவங்க.. அக்காவுக்கே அவர இந்த அளவுக்கு லவ் பண்ணினது கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சாம்.. ஆனா நீங்களும் கல்யாணம் முடியவும் இப்படி அம்போன்னு விட்டுட்டு ஒரு வருசம் வெளிநாடு போயிருக்க கூடாது மாமா ஒன்னு கூட்டிட்டு போயிருக்கனும் இல்ல இங்கயே இருந்திருக்கனும்..
 
பல்லை கடித்தவன் அப்படியே அவள் கழுத்தில் கைவைத்து இறுக்கி இருந்தான்.. இப்ப என்ன சொல்ல வர்ற நீ..? கல்யாணம் பண்ணினாலும் புருசன் கூட இல்லாட்டா இப்படித்தான் ஒடிப்போவாங்களா.. அதுக்கு பேர் புருசன் பொண்டாட்டி இல்ல வேற பேர் வைக்கனும்.. நானும்கூடத்தான் ஒரு நாளைக்கு அவ்வளவு லேடிஸை பார்க்கிறேன் அப்ப உங்க அக்கா பண்ணின மாதிரி நானும் பண்ணவா..ச்சீ ச்சீ இந்த மாதிரி எண்ணங்கள் வர்றதே தப்பு..?”
 
அவன் கையை விலக்கி விட்டவள்,” ஐயோ மாமா அக்கா இப்படி லெட்டர்ல எழுதியிருந்தா அதத்தான் சொன்னேன்.. அதென்ன வாய்பேச்சு வாயில இருக்கும் போது கழுத்தை பிடிக்கிறது.. அவன் கைத்தடம் அவள் கழுத்தில் அப்படி தெரிய ஒருநிமிடம் கண்ணை மூடி தன்னை சமநிலைக்கு கொண்டு வர அவனால் முடியவில்லை.. மெல்ல அவளருகில் சென்றவன் அவள் கழுத்தில் இருந்த தன் கைதடத்தை மெதுவாக வருடிவிட்டான்.. அவர்கள் நின்றது ஒரு பெரிய மரத்தின் அருகே என்பதால் யாரும் அவர்களை கவனிக்க முடியாது..
 
சரி விடு அந்த பேச்சு இப்ப வேணாம்.. நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கிங்க.. எப்ப கல்யாணம் பண்ணிக்க போறிங்க.. படிப்பு முடியவும் பொண்ணு கேட்டு வர்றாரா இல்ல இன்னும் கொஞ்ச நாளாகுமா..??”
 
ஸ்ருதியோ குழப்பத்துடன் யாரு மாமா .. யாருக்கு கல்யாணம்..??”
 
விளையாட்டு போதும் ஸ்ருதி.. உனக்குத்தான் இந்த பையனை லவ் பண்றேன்னு இப்பத்தான சொன்ன.. அப்ப அது உண்மையில்லையா உங்க அக்கா மாதிரி இந்த பையன் வாழ்க்கையையும் கெடுக்கப் போறியா..??”
 
மாம்ஸ் உங்களுக்கு என்னாச்சு நீங்க யாரை பேசுறிங்க..? நான் யாரை லவ் பண்றேன்.. எனக்கெல்லாம் பாய் பிரண்ட் அமையிறதே கஷ்டம் இதுல லவ் எங்க மாம்ஸ் அவனவன் என்கிட்ட லவ் சொல்லிட்டு நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம துண்டைக்காணோம் துணியக்கணோம்னு ஓடுறாங்க.. அவள் சோகமாக சொல்ல,
 
அவன் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.. ஏய் என்ன சொல்ற ஏதோ லவ் பண்றான்னு சொன்ன..??”
 
ஆமா சொன்னேன் என் பிரண்ட் தியாதான் அவன லவ் பண்றா..
 
ஓஓஓஓ..!!!”
 
என்னாச்சு உங்களுக்கு..??.நீங்க எதுக்கு மாமா என்னை பார்க்க வந்திங்க..?”
 
மூச்சை இழுத்து விட்டவன்,” அதுவா நாளைக்கு உனக்கு பர்த்டேன்னு அத்த உனக்கு டிரஸ் குடுத்துவிட்டாங்க??” அந்த பார்சலை எடுத்து கொடுத்தவன் சந்தோச மனநிலையில் தன் காரை கிளப்பியிருந்தான்..
 
மறுநாள் காலை மணி எட்டிருக்கும் ஸ்ருதி உன்னை வார்டன் வரச் சொல்றாங்க..??”
 
ம்ம் என்னவாம் அந்த சங்கிமங்கிக்கு இப்ப என்ன பிரச்சனையாம் இன்னும் ஒரு வாரத்தில நாமளே ஊருக்கு போறோம்னு ஒத்துக்கிட்டமே.. என்ன இன்னும் பத்துநாள் தங்கிட்டு போகச் சொல்லுதா..??”
 
தெரியல போடி உன் டவுட்ட அங்க போய் கேளு..
 
அவள் மாடியிலிருந்து வார்டன் ரூமை நோக்கிச் சென்றவள் தத்தி தத்தி நடந்து வந்த ஒரு குழந்தையின் கொலுசொலி அவளை ஈர்க்க குழந்தையை நோக்கி நடந்தவள் அங்கு தத்தி தத்தி தன்னை நோக்கி நடந்து வந்த ஸ்ரீயை பார்க்கவும் பாய்ந்து அணைத்து தூக்கியிருந்தாள்… முகமெங்கும் முத்தமிட்டு அவனை அணைக்க அவனும் அதற்கு ஈடு கொடுத்தாற் போல அவள் தலைமுடியை பிய்க்க. முகத்தில் கடிக்க, அடிக்க, எச்சில் படுத்த என தன் பாசத்தை அவளுக்கு ஈடாக காட்டத்துவங்கினான்..
 
அவனை தூக்கியபடி யாரோடு வந்தான் என பார்ப்பதற்காக வெளியில் வர அங்கு காரில் சாய்ந்தபடி அவர்கள் இருவரையும் தான் பார்த்துக்கொண்டிருந்தான் அஸ்வின்.. அப்போதுதான் தலைகுளித்திருப்பாள் போல தலையை விரித்து விட்டிருக்க ஒரு பழைய லாங்க் ஸ்கர்ட்டும் டிசர்ட்டும் போட்டிருந்தாள்.. வேறு எந்த நகையோ அலங்காரமோ இல்லை.. முகம் பளிச்சென்றிருக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 
மாமா.. நீங்கதான் ஸ்ரீக்குட்டிய கூட்டிட்டு வந்திங்களா..??”
 
ம்ம்.. ஹாப்பி பர்த்டே ஸ்ருதி..
 
தாங்க்ஸ் மாமா நீங்க ஸ்ரீய கூட்டிட்டு வருவிங்கன்னு நினைச்சே பார்க்கல.. ரொம்ப ஹாப்பியா இருக்கு ..” வார்த்தைக்கு வார்த்தை ஸ்ரீக்கு ஒரு முத்தம் வைத்தாள்..
 
இன்னைக்கு என்ன பிளான் ஸ்ருதி..??”
 
ஒன்னுமில்ல மாமா இன்னைக்கு லீவ்தான் நைட்தான் என்னோட பிரண்ட்ஸ்க்கு டிரீட் கொடுக்கனும்..?”
 
அப்ப கிளம்பி வா அத்த உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போகச் சொன்னாங்க..
 
சூப்பர் சூப்பர் மாமா..” அவன் கையை பிடித்துக் கொண்டு தொங்கியவள் நீங்க பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் கிளம்பி வர்றேன்.. ஸ்ரீய நான் தூக்கிட்டு போறேன் மாமா..” அவனோடு உள்ளே நடந்தாள்..
 
ஒரு அரைமணி நேரமிருக்கும் ஸ்ரீயை தூக்கிக் கொண்டு அந்த பார்க்கை நோக்கி வர அவள் அழகில் அப்படியே மெய்மறந்து போய் நின்றிருந்தான்.. இருவரையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 
                                                  இனி………………..?????

Advertisement