Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                                            அத்தியாயம்  –  10
 
மாலை ஆறுமணிக்கு விழா துவங்குவதால்  அஸ்வின் மாலை நான்குமணிக்கே கிளம்பிவிட்டான்.. கறுப்புநிற கோர்ட் சூட் போட்டு ஜெல்வைத்து வாரிய தலை திருத்திவிடப்பட்ட மீசை என ஆண்அழகனாய் கம்பீரமாய் கிளம்பியிருந்தான்.. அம்மாவையும் ஸ்ருதி குடும்பத்தையும் ஆறுமணிக்கு மேல் கிளம்பி வரச் சொல்லியிருந்தான்.
 
.ஒரு பெரிய பைஸ்டார் ஓட்டலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பிஏ கணேஷ் அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்.. நேரம் ஆக ஆக அஸ்வின் நொடிக்கொருதரம் ஸ்ருதி வருகிறாளா என பார்த்துக் கொண்டிருக்க அவன் இதயம் அப்படியே ஜிவ்வென பறந்து காதல் சொல்லும் தருணத்திற்காக காத்திருந்தது..
 
அவன் மனமோ டேய் கொஞ்சம் அமைதியா இரு.. அவகிட்ட உன் லவ்வ சொல்லி சம்மதம் வாங்குறது சாதாரண விசயம் இல்ல.. ரொம்ப கஷ்டம்.. காலையில ஒரு டிரஸ உன்னால மாத்த சொல்ல முடிஞ்சுச்சா.. சரியான பிடிவாதக்காரி.. ரொம்ப பொறுமையா இரு.. அவன் ஒரு மனது சொன்னாலும் மறுமனதோ அம்மா இன்னொரு பொண்ணோட போட்டவ காட்டுறதுக்கு முன்னாடி எப்படியாவது இவளோட சம்மதத்தை வாங்கிரனும் என உத்தரவிட்டுக் கொண்டிருந்தது..
 
ஆறுமணியிருந்து அவன் கம்பெனியில் வேலைப்பார்ப்பவர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்க ஏழுமணிக்குள் முக்கால்வாசிபேர் வந்திருந்தனர்.. அவனுடைய மற்ற கம்பெனிகளுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்ததால் அவர்களும் தங்கள் குடும்பமாக வரத் துவங்கியிருக்க போட்டி கம்பெனிகாரர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.. அந்த கம்பெனி ஆட்களும் உள்ளுக்குள் விரோதம் இருந்தாலும் வெளியில் அவ்வளவு இனிமையாக பேசிக் கொண்டிருந்தனர்..
 
அஸ்வின் அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை ஹோட்டல் நுழைவாயிலேயே இருந்தது.. இதோடு தாய்க்கு பத்து தடவைக்கு மேல் போன் செய்திருந்தான்.. அவர்களும் டிராபிக் அதிகமாக இருப்பதால் மெதுவாக வந்து கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. ஒருவழியாக அனைவரும் ஹோட்டலை நெருங்கி விட்டதாக சொல்லவும்தான் ஒரு நிம்மதி..
 
அனைவரும் உள்ளே நுழையவும் ஸ்ருதியை பார்த்தவன் பார்த்தபடி அப்படியே நின்றான்..  அவ்வளவு நேரம் சந்தோசத்தில் பறந்த அவன் மனது அவளின் உடையை பார்க்கவும் காற்று போன பலூனாக சுருங்க ஸ்ருதி அவன் கொடுத்த சேலையை அணியாமல் ஒரு புல் கவுனில் வந்திருந்தாள்..
 
ஆழந்த சிவப்பு நிறத்தில் வழுவழுவென வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே நெட் டிசைனில் அவளுக்கு அவ்வளவு பாந்தமாய் பொருந்தியிருந்தது.. அவனுக்கு பொருத்தமாய் இருப்பாள் என பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்திருக்க அவள் போட்டிருந்த உடையோ அவளின் வயதை இன்னும் குறைத்துக் காட்டியது.. அவர்களை வரவேற்கச் சென்றவன் ஸ்ருதியை கண்களாலே பொசுக்க அவள் அப்போதுதான் தன் தாயிடம் ஏதோ முக்கியமானதை பேசிக் கொண்டிருந்தாள்..
 
இவர்கள் உள்ளே வரவும் அங்கு அமர்ந்திருந்த முக்கால்வாசி ஆண்கள் இவளைத்தான் பார்த்தனர்…. பியூட்டி பார்லரில் பேசியல் செய்திருப்பாள் போல முகம் தகதகவென மின்ன அவள் நிறத்திற்கு அந்த உடை அவளை இன்னும் எடுத்துக் காட்டியது .. வைர நெக்லஸ், கம்மல் பிரேஸ்லெட் சிம்பிளான மாடலில் போட்டிருக்க தலையை விரித்துவிட்டிருந்தாள்..
 
 ஏதோ ஒரு சினிமா நடிகையைத்தான் விருந்துக்கு அழைத்திருந்தார்களோ எனும் எண்ணும்வண்ணம் எல்லாரையும கவர்ந்திருந்தாள்.. ஒரு தேவதையை போல மின்னிக் கொண்டிருந்தவளை யார் என்று அறிந்து கொள்ள ஒரு இளைஞர் கூட்டமே காத்திருந்தது.. தன்னிடம் ஏதோ பேச முற்படுவனை கண்டு கொள்ளாமல் தன் தந்தையிடமே செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள்..
 
தன் குடும்பத்தை அனைவரிடமும் அறிமுகப்படுத்தி அவர்களை முன்வரிசையில் அமர வைத்தவன் ஸ்ருதியை முறைத்தபடி முன்னால் செல்ல அவளோ ஸ்ரீயை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.. இந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக வேலைப்பார்த்த ஊழியர்களுக்கு பரிசு வழங்கி அவர்களை பாராட்டவென நேரம் போய்கொண்டிருக்க அஸ்வின் ஸ்ருதி மேல் இருந்த கோபத்தில் அவளை கவனிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.. மற்றவர்களும் அஸ்வினை பாராட்டி பேசி இவ்வளவு சிறிய வயதில் அவனது திறமைகளை பேசிக் கொண்டிருக்க ஸ்ருதியோ தன் போனிற்குள் தலையை கொடுத்திருந்தாள்..
 
அனைவரும் பேசி முடித்து டின்னருக்கு செல்ல மணி ஒன்பதிற்கு மேலாகியிருக்க பப்பே முறையில் உணவு வைக்கப்பட்டிருந்தது.. ஸ்ரீக்கு விளையாட முடியாமல் ஒரே இடத்தில் இருந்ததால் தூக்கம் வந்திருக்கவும் கோகிலா தன் பேரனை தோளில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்திருந்தார்..சந்திரனுக்கு அலுவலக வேலை ஒன்று வந்திருக்க எப்படி இடையில் போவது மாப்பிள்ளை எதுவும் நினைப்பாரோ என யோசித்து கோகிலாவிடம் பேசிக் கொண்டிருக்க கற்பகமே தன் மகனை அழைத்து,
 
கண்ணா குட்டிக்கும் தூக்கம் வந்திருச்சு அண்ணனுக்கும் ஏதோ வேலை இருக்கு போல நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்.. ஸ்ருதி அஸ்வின் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் தன்னை ஒத்த சில பெண்களிடம் பேசிக் கொண்டிருக்கவும்  ஸ்ருதிய மட்டும் நீ வரும்போது கூட்டிட்டு வர்றியா..??”
 
தூங்கும் தன் மகனை அணைத்து முத்தமிட்டவன்,” ம்ம் சரிம்மா பார்த்து போங்க டிரைவரை அழைத்தவன் கார மெதுவா ஓட்டிட்டு போங்க.. ம்மா போகவும் போன் பண்ணிருங்க..?”
 
சரிப்பா..” அவர்கள் கிளம்பவும் ஸ்ருதியை பார்க்க அங்கே ஜிகே கம்பெனி சேர்மன் பையன் ஸ்ருதியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. அவன் கண் ஸ்ருதியை அங்குலம் அங்குலமாக ரசிப்பது தெரிய ஒரு நொடியில் அவர்களை நெருங்கியிருந்தான்..
 
ஹாய் ரோகித் சாப்பிடல..??”
 
இல்ல அஸ்வின் இவங்களோட பேசிட்டு இருந்தேன்..வெரி லவ்லி கேர்ள்..நல்லா பேசுறாங்க.. இங்க வர்றதுக்கு அப்பாக்கு நேரம் கிடைக்காததாலதான் நான் வந்தேன்.. நல்ல வேலை அப்படி வரலைனா இந்த ஏஞ்சல் அறிமுகம் இல்லாமலே போயிருக்கும்…
 
ஏஞ்சலா ஸ்ருதியை முறைத்தவன் நீ சாப்பிடல ஸ்ருதி..??”
 
அவளோ கையை கட்டியபடி,” இல்ல அங்கிள் இனிமேல்தான்..
 
அங்கிளா வேப்பெண்ணையை குடித்தவன் போல முகத்தை சுழிக்கவும்,
 
ஆமா அங்கிள் அங்கிளுக்கு அழுத்தத்தை கொடுத்தவள் ரோகித்திற்கு கைகொடுத்தபடி ஓகே ரோகித் நான் சாப்பிட போறேன்..” அவள் கையை பொக்கிசமாக பற்றியவன் தன் விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டி
 
 உங்களுக்கு இப்ப மூட் இல்லாட்டாலும் எப்ப ஜாப்புக்கு போற மூட் வருதோ அப்ப தயங்காம எங்க கம்பெனிக்கு வாங்க.. இதுல இருக்கிறது என்னோட பர்சனல் நம்பர் போன் பண்ணுங்க.. ??”
 
தாங்க்ஸ் ரோகித்.. நீங்க ரொம்ப சாமிங்கா இருக்கிங்க.. நைஸ் பர்சன்..
 
ஓஓ தேங்க்ஸ் தேங்க்ஸ் ஏஞ்சல் நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க நானே உங்களுக்கும் எனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்..
 
நோ நோ ரோகித் நானே போறேன்..டேய் போடா உன்னோட ஜொல்லுல ரொம்ப நேரமா என்னால நிக்க முடியல.. இவன் சாமிங்கா வெள்ளப்பண்ணி மாதிரி இருக்கான்.. மூஞ்சியும் மொகரையும் பாரு.. அப்படியே பார்க்கிற ரெண்டு கண்ணையும் நோண்டிருவேன் பார்த்துக்க..இவன்கிட்ட எப்ப நான் வேலை கேட்டேன்.. ரொம்ப பேசின கொசு மருந்து அடிச்சிருவேன் பார்த்துக்க அவனை பார்த்து ஒரு மாதிரி இளித்து வைக்க,
 
நீங்க சிரிச்சா கன்னத்தில விழுறகுழி உங்களுக்கு இன்னும் அழகை கொடுக்குது ஏஞ்சல்..
 
அவன் பேச பேச அஸ்வினுக்கு கொதித்துக் கொண்டிருந்தது.. பார்வை முழுவதும் ஸ்ருதி மேல்தான் இப்ப மாமா ஏன் இப்படி வத்திகுத்தி இல்லாமலே நெருப்பை பத்தவைக்கிறாரு…
 
பை ரோகித்.. அஸ்வினின் நெருப்பு பார்வையிலிருந்து தப்பித்து வேறுபுறமாக செல்ல,ரோகித் இவளைப்பார்த்து பெருமூச்சுவிட்டு அங்கு சிலர் பாரில் இருப்பதை பார்த்து அங்கு நடந்தான்..
 
ஸ்ருதி நடந்து கொண்டிருக்க யாரும் அறியாமல் அஸ்வின் அவள் கையை பிடித்து இழுத்தவன் கையை விடாமல் மற்றவர்களுக்கு தலையை ஆட்டியபடி கார்டனுக்கு அழைத்து செல்ல கையை உதறியவளை ,
 
ஏய் பேசாம வாடி பிசாசே..?”
 
என்ன அங்கிள் உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்..?”
 
அங்கிள் அங்கிள் இத முதல நிறுத்துடி.. கேட்டாலே இரிடேட்டா இருக்கு.. மண்டையில் ஒரு கொட்டை ஓங்கி வைத்தவன்.. ஒழுங்கா மாமான்னுதான கூப்பிட்டு இருந்த இப்ப என்ன கேடு..?”
 
வலித்த தலையை தடவிக் கொண்டவள் முகத்தை பச்சைபிள்ளை போல மாற்றி மரியாதை அங்கிள் மரியாதை நீங்கதான காலையில மரியாதையா கூப்பிட சொன்னிங்க அங்கிள்..??”
 
அவள் வாயை மூடியவன் நீ ஆணியே புடுங்க வேண்டாம் ஒழுங்கா மாமான்னே கூப்பிடு..”
 
அவன் கையை எடுத்துவிட்டவள் தன் கன்னத்தில் கைவைத்து ,”அங்கிள் நீங்க பெரிய ஸாப்ட்வேர் கம்பெனியெல்லாம் நடத்துறிங்க.. பேசுறத பார்த்தா பக்கா லோக்கலா இருக்கே..
 
உன்னோட சேர்ந்தா அப்புறம் எப்படி இருக்கும்..குட்டிக்குரங்கே இதென்னடி டிரஸ் நான் பட்டுச் சேலைதான எடுத்துக் கொடுத்தேன் அத ஏன்டி கட்டிட்டு வரலை..
 
இதுக்குத்தான் அங்கிள்.. காலையில நான் போட்ட டிரஸ மாத்த சொன்னிங்கள்ள அப்ப சொன்ன பதில்தான் இப்பவும் …நீங்க எடுத்துக் குடுத்து கட்டிட்டு வரனும்னு ஆர்டர் போட்டா அதெல்லாம் என்னால முடியுமா .. எனக்கு என்ன தோனுதோ அதத்தான் செய்வேன்…
 
 இவளப்பத்தி தெரிஞ்சும் இவளுக்கு சேலை எடுத்துக் குடுத்தேன்ல என்புத்திய செருப்பால அடிக்கனும்..இவள..!!! அவள் கையை பிடித்து தன்புறம் இழுக்க அதற்குள் அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப சில குடும்பங்கள் வரவும் அவள் கையை விட்டவன்,
 
 நீ பேசாம இங்கயே இரு உள்ள வரவேண்டாம் புரியுதா..?”
 
சரிங்க அங்கிள்,,

 மறுபடி அங்கிளா அவள் கையை நறுக்கென கிள்ளியவன் முகத்தை இயல்பாக்கி செல்ல, சற்று பொறுத்து அவளும் உள்ளே நுழைந்தாள்..சாப்பிட்டு பலபேர் சொல்லிக் கொண்டு கிளம்ப இளைஞர் இளைஞிகளோ ஆட்டம் பாட்டம் என ஆட்டம் போட துவங்கியிருந்தனர்..
 
அவர்களுக்கு மட்டும் வெளிச்சம் வர டிஜே பின்னனியில் பாட்டுக்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.. ஸ்ருதியும் சற்று நேரத்திலேயே அங்கிருந்தவர்களை தன் கலகல பேச்சால் கவர்ந்திருக்க அதுவரை அஸ்வின் உறவுக்கார பெண் என ஒதுங்கி நின்றவர்கள் இப்போது அவளோடு அரட்டையில் ஈடுபடதுவங்கினர் .. அவளையும் பலர் தங்களோடு இணைந்து ஆட அழைத்தனர்.. பேரர்கள் ஜூஸோடு மதுக்கோப்பைகளை  கொடுத்துக் கொண்டிருக்க பார்ட்டியும் களைகட்ட துவங்கியது..
 
 ஸ்ருதிக்கு இப்படிபட்ட பார்ட்டி புதுசு தந்தை எப்போதாவது யாருடைய ரிட்டேயர்மென்ட் பார்ட்டிக்கு கூட்டிச் செல்வார்.. அங்கிருக்கும் வயதானவர்கள் அவர்கள் பார்த்த வேலைகளை பெரிதாக சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதிக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் கொட்டாவி வந்துவிடும்.. மெதுவாக நகர்ந்து வெளியில் வருபவள் வீட்டிற்கு கிளம்பினால் மட்டுமே உள்ளே வருவாள்.. அதற்கு பிறகு தந்தை அழைத்தால் அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிடுவாள்..
 
இன்று இங்கே ஒரே ஆட்டம் பாட்டமுமாக இருக்க இவளுக்கு அவர்களோடு ஆடப்பிரியம்தான் .. மெதுவாக அஸ்வினை பார்க்க அவன் மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை இவள் புறம்தான்.. இவள் எண்ணம் உணர்ந்தோ என்னவோ அவன் வேண்டாம் என மண்டையை ஆட்ட,,
 
தன் அருகில் நின்றருந்த பேரரின் கையிலிருந்த கோப்பையை வாங்கி அது என்னவேன்றே பார்க்காமல் ஒரே மூச்சில் குடித்தவள் ஆட கைநீட்டியிருந்த ஒருவரின் கைமேல் கையை வைத்திருந்தாள்..
 
அது பிரவின் மற்றொரு போட்டி கம்பெனியின் சேர்மன்.. வந்ததிலிருந்து அவன் பார்வை அவள் மேல்தான் ரோகித்தோடு பேசிக் கொண்டிருந்தவள் எப்போது தன்புறம் திரும்புவாள் என பார்த்துக் கொண்டிருக்க அவள் தன்புறம் திரும்பாமல் இருக்கவும் எப்படியாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அஸ்வினிடம் சென்று அவளை பற்றிய விபரங்களை கேட்டான்..
 
எதுக்கு வினோத்..?”
 
உன் மச்சினி லுக்கிங் வெரி காட்ஜியஸ்..
 
அவன் மாமனார்  வேலைப்பார்க்கும் இடத்தை கேட்டவன்  அவர் செல் நம்பரை போனில் குறித்துக் கொண்டான்.. இவள அம்மாவோட வீட்டுக்கு அனுப்பி வைச்சிருக்கனும்.. இவள பாதுகாக்கிறதே நமக்கு பெரிய வேலையா இருக்கும் போலவே .. இவனுக பார்வை சரியில்லன்னுதான் கார்டன்ல இருன்னு விட்டுட்டு வந்தேன்.. இந்த குட்டிப்பிசாசு என்ன ஆட்டம் காட்டுது அனைவருக்கும் முன்னால் அவளை கடிந்து கொள்ள முடியாமல் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்..
 
தன் கையை பிடித்திருந்த பிரவினின் கையை விலக்கியவள் அங்கிருந்த பெண்களோடு ஆட்டத்தில் கலந்து கொண்டாள்..சற்று நேரம் அவர்களோடு ஆட்டம் போட்டாள்.. அடுத்து போட்ட பாடலுக்கு அனைவரும் ஜோடி ஜோடியாக நடனமாட வினோத் இப்போது அவள் அருகில் கையை நீட்டியிருந்தான்..இவளும் கையை நீட்டிய வேளை அவள் கையை பிடித்தது அஸ்வின்.. ஒரு கையை பிடித்து தன் தோளில் வைத்து மறு கையை அவள் இடுப்பில் வைத்தான்..
                                                    “  நீயும் நானும் அன்பே
                                                                  கண்கள் கோர்த்து கொண்டு
                                                            வாழ்வின் எல்லை சென்று
                                                                    ஒன்றாக வாழலாம்
                                                                    ஆயுள் காலம்
யாவும் அன்பே நீயே
போதும் இமைகள்
நான்கும் போர்த்தி
இதமாய் நாம்
தூங்கலாம்..”
 
அனைவரும் ஆடிக் கொண்டிருக்க அங்கு ஸ்ருதியோ அஸ்வினிடம் முரண்டு பிடித்து கொண்டிருந்தாள்..
 
டேய் எருமைமாடு விடுறா என் கைய.. எவ்வளவு திமிரு இருந்தா இடுப்ப பிடிப்பா லூசுப்பயலே..?”
 
அவளை இன்னும் நெருங்கியவன் அப்ப அவன் பிடிச்சா பரவாயில்லயா..?? ஏய் என்னடி உன்மேல ஏதோ ஸ்மெல் வருது… அப்போதுதான் கவனித்தான் அவள் நடக்க முடியாமல் தடுமாறுவதை என்னத்தடி குடிச்சு தொலைச்ச.. ??”மெதுவாக கூட்டத்தைவிட்டு தோட்டத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தவன்..
 
அவள் கன்னத்தை தட்டி ,”ஸ்ருதி இங்க பாரு ஸ்ருதி ஸ்ருதி..
 
அட யாருய்யா என் காதுக்குள்ள நொய் நொய்ன்னு கத்துறது..
 
ரொம்ப தேவைடி என்ன கர்மத்தை குடிச்ச..?”
 
நீ யாரு,,?”
 
பல்லை கடித்தவன்,” ம்ம் உன் மாமன்..
 
மேமா… மேம் மே ஐ கம்மின்.. எங்க மாமா பார்ட்டியில சூஸ்ன்னு ஏதோ ஒன்னு கொடுக்கிறாங்க.. அத குடிச்சா சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..அதுல எதுவும் போத மாத்திர கலந்திருப்பாரோ.. நாம எதுக்கும் அவர புடிச்சு ஜெயில்ல போட்டுருவமா..
 
அதப்பண்ணு முதல்ல உன்னை போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்ல .. அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..
 
இன்னும் வேணுமா வாங்க நான் வாங்கி தர்றேன்.. அவனோடு உள்ளே நடக்க அவளை எட்டி பிடித்தவன் தன் கைகளுக்குள் நெருக்கி வைத்து தன் போனை எடுத்து
 
 கணேஷ் நான் கிளம்புறேன் கொஞ்சம் அர்ஜண்ட் ஒர்க் வந்திருச்சு மத்தத நீங்க பார்த்துக்கோங்க பில்ல எனக்கு அனுப்பிருங்க..
 
ஓகே ஸார் ஓகே ஸார்..
 
 அவளை இடுப்பில் கைகொடுத்து தூக்கியவன் தன் காரை நோக்கி நடந்தான்..
 
டேய் யார்டா நீ என்னை கடத்திட்டு போறியா.. இப்ப பாரு.. மாமா மாமா.. ஸ்ருதி கத்த பிசாசு என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தனுமோ அவ்வளவு அசிங்கப்படுத்த போறாளா.. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க வேகமாக காரின் அருகில் சென்று கதவை திறந்து அவளை அமரவைத்தான்..
 
ஏய் மூச் வாய மூடுடி..?” தன் கையால் அவள் வாயை அடைக்க அதை கடித்து வைத்தாள்.. நீயென்ன நாயாடி.. கையை உதறியவன் இவ என்னத்த குடிச்சான்னு தெரியலயே ராவா அடிச்சிட்டாளா.. அத்த மாமா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க.. நம்மள நம்பித்தானே விட்டுட்டு போனாங்க..
 
அவளை நேராக அமர வைத்து சீட்பெல்ட்டை மாட்டிவிடப்போக மிக அருகில் அவள் முகம் ஸ்ருதி ஏதோ உளறிக் கொண்டிருந்தாள்.. இவள வீட்ல எப்படி வளர்த்தாங்க.. அத்தை மாமா பாவம்தான்.. அவனுக்கு ஸ்ரீயின் நினைவு வந்தது அவனும் இந்த மாதிரி சேட்டை பண்ணினா எப்படி வளர்க்க போறோம்.. தான் வளர்ந்த்தை நினைத்து பார்க்க இவளுக்கு அப்படியே நேர் எதிர்.. எந்த பேச்சுமே இருக்காது..ஒருவனாய் வளர்ந்ததால் கேட்டது கிடைத்துவிடும்.. எதற்கும் பிடிவாதமே சேட்டையோ செய்ய மாட்டான்..
 
ஸ்ருதியோடு பழகிய இத்தன நாளுல நாமளுமே நம்ம அமைதியான குணத்தை விட்டுட்டமோ.. சற்று யோசித்து பார்த்தவன்.. இவக்கிட்ட பேசினாத்தான் பேச்சு அதிகமா வருது வேற யார்கிட்டயும் இப்படி பேசலையே அவள் முகத்தின் அருகில் தன் முகத்தை வைத்து அஸ்வின் அனைத்தையும் யோசித்தபடி இருக்க ஸ்ருதி தூங்கி முன்னால் அவன் முகத்தின் மேல் சாய்ந்திருந்தாள்..
 
அவன் முகத்தின் மேல் அவள் முகம் மோதியிருக்க ஒரு நூழளவுதான் இடைவெளி அவள் கண்கள் உறக்கத்தை தழுவியிருக்க அவளை பார்த்ததிலிருந்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனதை சமன் செய்ய முடியாமல் தவித்தவன் அதற்கு மேல் முடியாமல் அவள் இதழில் தன் இதழை புதைத்திருந்தான்..!!!!
 
                                        இனி…………….?????

Advertisement