Advertisement

அவளை கீழே இறக்கி விடாமல் , அவள் காதருகே உதட்டைக் கொண்டு போனவன் , ” நான் ஒன்னும் பன்னவே ஆரம்பிக்கல … இதுல நான் பன்றது சரியில்லனு சர்டிபிகேட் தாற.. இது உனக்கே நியாயமா மை டியர் … “

அவன் உதடுகள் காதினை உரசவும்.. சிவக்க ஆரம்பித்தவள் , அவன் பேசிய பேச்சில் மேலும் முகம் சிவந்து கைகளிலிருந்து இறங்கி , மொபைலை ஓரமாக வைத்துவிட்டு தலையணையை எடுத்து வரவும் அவளிடம் அகப்படாமல் ஓடியவனை துரத்தியவள்,

“அசிங்கமா பேசுவீங்களா … இப்படிப் பேசக்கூடாதுனு சொன்னனா இல்லையா” என்று கேட்டுக் கொண்டே தலையணையால் அடித்தவளிடம் ,,

“நான் எங்க அசிங்கமா பேசினேன். நீ சொன்னதுக்கு பதில் சொன்னேன் … அது தப்பா … இப்படி துவைச்சு எடுக்கிற … இரு உனக்கு அசிங்கமா பேசுறதுனா என்னனு சொல்றேன்.

தலையணையைக் கீழே போட்டுவிட்டு அவன் பின்னந்தலையை ஒரு கையால் பற்றி , அவன் வாயை ஒரு கையாலும் மூடியவள் , ” ஏதாவது பேசுனீங்க … மூச்….அமைதியா படுக்கணும்… “

அவளை ரசித்துக் கொண்டே தலையாட்டியவன் ….” மொபைல எடுத்துட்டு வா … நான் எப்படி யூஸ் பன்றதுனு சொல்லித்தாறேன் ஸ்வீட்டி … நான் காலைலயே கொடைக்கானல் கிளம்பணும் வர ரெண்டு மூணு நாளாகலாம் … அப்ப இந்த போன்ல தான் உன் முகம் பார்க்க முடியும். ” என்றவன் அவள் முகம் பார்க்க , இவ்வளவு நேரம் புன்னகையோடு அவனோடு பேசிக் கொண்டு இருந்தவள் முகம் புன்னகையற்று இருந்தது.

“என்னாச்சு ஊர் ஞாபகம் வந்துருச்சா “

“ம்”

” இப்பவே உன்னைக் கூட்டிட்டுப் போக ஆசைதான் … ஆனா ஆனா …. நம்ம வரவேற்பு வரைப் பொறுத்துக் கோ , அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகலாம் … இப்ப நாம ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்ல முடியாதில்லயா அதான் யோசிக்கிறேன் … என்னைய மன்னிச்சிருடா … உன்னைய ரொம்ப சங்கடப்படுத்திட்டே இருக்கேன் …”

” அப்படிலாம் இல்லைங்க … நான் பிறந்ததிலிருந்து இப்படித்தான் ….. “

” உன்னைய ஆபிஸ்க்குக்கூட அதான் கூட்டிட்டுப் போகல, நாளைலருந்து ரமேஷையும் அனுவையும் இங்க ஆஃபிஸ் போகச் சொல்லனும் , திருப்பூர் ல கல்யாணம் முடிஞ்சும் , ஒரு மாசம் வரை சிவா மச்சான் பொறுப்பில விட்டுட்டு வந்துட்டேன்.”

” அண்ணன் அண்ணி சாயந்திரம் போன் பன்னிச் சொன்னாங்க … பெரிய பொறுப்பா அண்ணனுக்கு தந்திருக்கீங்கனு… ரொம்ப தேங்க்ஸ் … ” எனவும் ,

“நீயும் நானும் ஒன்னுனு நினைடா , நான் அப்படித்தான் நினைக்கிறேன்… நானே எனக்கு தேங்க்ஸ் சொல்லிக்குவேனா …ம்..” என்றவாரே இரு பெரிய பெட்டிகளை இறக்கியவன்  , அவனுக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

இயல்பாய் அவனுக்கு உதவிக் கொண்டு இருந்தவள் , ” ரெண்டு மூணு நாளைக்கு இவ்வளவு டிரஸ்ஸா … இவ்வளவு பெரிய பெட்டியா”

அவனும் டிரஸ்ஸிங் டேபிளில் இருந்தவற்றை எடுத்துக் கொண்டு இருந்தவன் , “கொடைக்கானல் போய்ட்டு இங்க வரமுடிஞ்சா வருவேன் … அப்படி இல்லனா நேரா மும்பைக்கு போகனும் … அப்படியே டெல்லி, ஜெய்ப்பூர் கொல்கத்தானு நம்ம ஆஃபிஸ் இருக்கிற இடங்கள்ல எல்லாம் பார்த்துட்டு வரணும்.  எப்படியும் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவேன்.”

அவளிடமிருந்து பதிலில்லை எனவும் கண்ணாடியில் பிரதிபலித்த அவளைப் பார்க்க , அவள் திகைத்து விழிப்பதைப் பார்த்தான்.

சடுதியில் அவள் உணர்வுகளைப் படித்தவன் கண்கள் பிரகாசமாக , “அடடா .. என் பிரிவு உன்னைப் பாதிக்குதா… இந்த ஃபீலிங்க்ஸ்க்கு பேர் என்னவாம். இரு டியர் கொஞ்ச நாள் தள்ளி இருந்து பார்க்கிறேன்”

“ஓ அப்ப ரொம்ப நாளாகுமா வர “

” என்ன ஒரு பத்து .. பனிரெண்டு நாள் … அப்புறம் கல்யாணத்த முடிச்சிட்டு திரும்ப ஃபாரின் டிரிப் வேறப் போகணும்… “

“ம்… சரி … எல்லாம் எடுத்து வச்சுட்டிங்களா … நான் தூங்கப் போறேன் ” என்றவள் கட்டிலில் சென்று ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள்.

அவளது செயலே அவனுக்கு பலவற்றை உணர்த்த, “ஸ்வீட் ஹார்ட் என்னை ஏத்துக்க ஆரம்பிச்சுட்ட .. எப்ப நீ வெளிப்படுத்துறப் பார்க்கலாம்” நினைத்துக் கொண்டவன் அவளருகில் வந்து படுத்துக் கொண்டான் .

மறுநாள் அதிகாலையிலயே விழிப்பு வந்துவிட நேற்றுப் போல் இன்றும் அவன் கைதான் தலையணையாகிருந்தது, புன்னகையோடு எழுந்தவள்   .. அனன்யா அறையைத் திறக்க , அதுவும் திறந்து கொண்டது.

உள்ளே சென்றால் அனன்யா குளித்து முடித்து பால்கனியில் அமர்ந்து இருந்தாள். ராதிகாவும் குளித்து விட்டு வந்தவள், அனன்யாவைப் பார்க்க , வரும் போது எப்படி அமர்ந்திருந்தாளோ … அப்படியே இப்பொழுதும் அமர்ந்திருக்க , அவளைத் தொட்டு திருப்பியவள் , ” அனு காலையிலயே ரெடியாகிட்ட … ஹேய் உன் கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு .. சரியா தூங்கலயா”

“இல்ல கொஞ்சம் தலைவலி .. வா அண்ணி கீழ போய் ஒரு காபி குடிக்கலாம்.” என்றவள் வேறு எதுவும் கேட்கும் முன்னே கீழே சென்று விட்டாள் .

அங்கு இவர்கள் போகும் போதே எல்லோரும் வந்து விட்டார்கள். அரவிந்த் கிளம்பி அமர்ந்திருக்க ஜானகி ராதிகாவைப் பார்த்ததும் ,

“அஞ்சு வா வா …அனுவுக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டானாம் இந்த அரவிந்த் .. அது விஷயமா அனு அப்பாகிட்ட பேசத்தான் கிளம்பியிருக்கானாம். வாயேன் அனுவுக்கு கல்யாணத்துக்கு நான் சேர்த்து வச்சத வந்துப் பாரு என்று அழைத்துச் சென்றார்.

ராதிகாவும் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அறைக்குள் செல்ல , அரவிந்தும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அரவிந்த் அருகில் அமர்ந்திருந்த அனன்யாவிடம் ,”என்னம்மா மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா … இல்லனா சொல்லு வேறப் பார்க்கிறேன்.

ரமேஷைப் பார்த்தவள் , “அது வந்து .. அது வந்து ….அண்ணா உங்க ஃபிரண்ட்க்கும் தானப் பொண்ணுப் பார்த்திருக்கு அவர் கிட்ட முதல்ல கேளுங்க … ” என்று முறைத்துக் கொண்டு அமர்ந்தவளைப் பார்த்த ரமேஷ் ,

“மச்சான் … நான் … நான் …என்னடா சொல்லப் போறேன் …. சின்ன வயசிலருந்து நீ சொன்ன எதையாவது நான் மறுத்துருக்கேனா… உன் விருப்பம் என்ன செய்யனும்னு சொல்லு நான் செய்றேன் … ” எனவும் ,

கண்கள் குளமாக ரமேஷைப் பார்த்தவள் , மெதுவான குரலில் , “அண்ணா… அவங்களே அப்படி சொல்லும் போது , நீங்க வளர்த்த நான் என்ன சொல்லுவேன் … அவங்க சொன்னத தான் நானும் சொல்வேன். நீங்க என்ன சொல்றீங்களோ அதுதான் …. “

“ஒரு நிமிஷம் … நான் அனுப்பின போட்டோவ ரெண்டு பேருமே பார்க்கலயே … என் மேல அவ்வளவு நம்பிக்கையா….” என்ற அரவிந்திடம் , இருவரும் ஒரே நேரத்தில் ,

“உன்னை நம்பலன நான் என்னையே நம்பலனு அர்த்தம் … ” என ரமேஷும்

“அண்ணா உங்க  பொண்ணுக்கு என்ன செய்யனும்னு உங்களுக்குத் தெரியாதா “

நண்பனும் தங்கையும் சொன்ன பதிலில் நெகிழ்ந்தவன் நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டவன் ,

“இதுக்கு என்ன பதில் சொல்லனு எனக்குத் தெரியலடா….”

தங்கை அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு … “உன் மனசு எனக்குத் தெரியும்மா… சரி மா நான் அம்மா கிட்டயும் தாயம்மா கிட்டயும் சொல்லிட்டு கிளம்புறேன் …நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஆபிஸ் கிளம்புங்க ” என்றவன் அம்மாவின் அறைக்குச் சென்று விடை பெற்றவன். மனைவியை கண்களாலயே அழைத்து விட்டு அறைக்குச் சென்றான்.

அவன் உள்ளே வந்ததிலிருந்து கண்களை கணவன் மீதேப் பதித்திருந்தவள் ,அவன் கண்ணசைத்ததும், அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவள் , அவன் பின்னாலயே மாடிக்குச் சென்றாள்.

அறைக்குள் வரவுமே கதவருகில் நின்றவன் , கதவை தாழிட்டு விட்டு , ராதிகா அருகில் வந்து நின்று, ” டியர்”

“ம்” என்று மட்டுமே சொன்னவள் அவன் முகம் பார்க்க முடியாது கீழே குனிந்து கொண்டாள்.

“நான் வர ரொம்ப நாளாகும் … “

இப்பொழுது அவன் கண்ணைப் பார்த்தவளிடம் ,

“ப்ளீஸ் …. ” என்று சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்தவன் , அவள் முகம் நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்தான்.

இதயம் படபடவென்று வேகமாக துடிக்க முதலில் திகைத்தவள், அது கொடுத்த மயக்கத்தில் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். மனைவியை விட்டு நகரவே மனமின்றி அவள் இதழைச் சுவைத்தவன் , உதட்டை விடுவித்து விட்டு … கரங்கள் இரண்டையும் பற்றி புறங்கையில் முத்தமிட்டவன் “ஐ மிஸ் யூ …ஐ மிஸ் யூ லாட்” என்றவன் கதவைத் திறந்து வெளியே வேகமாகச் சென்று விட்டான்.

கதவடைத்துக் கொள்ளும் சத்ததிலயே உணர்வு வரப் பெற்றவள் , வேகமாக கதவைத் திறந்துக் கொண்டு வர … அவன் அதற்குள் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்.

ஏனோ கண்களில் கண்ணீர் …ஏன் என்று தான் புரியவில்லை…

உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி

ஒட்டி கொள்ள

காலம் பூரா நீ வேணும்

உன்ன பாக்காத ஒத்த நொடி

நெஞ்சுக்குள்ள

ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்

 

 

                 காதல் அழகானது.….

 

 

 

 

 

Advertisement