Advertisement

அத்தியாயம் 19

பிடிக்கும்..ரொம்பப் பிடிக்கும். எப்போ பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தெரியாது. ஆனால் வெளியாளுங்க பொண்ணு பார்க்க வரும் போது தான் என்னால அதை உணர முடிஞ்சது. உன்னைத் தவிர வேற யாரையும் என்னால இந்த மாதிரி ஏத்துக்க முடியாதுன்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சது. 

சின்ன வயசுலையே உன்னை ரொம்ப பிடிக்கும், ஆனால் அது என் ஜெயராணி அத்தை மகன்னு தான். வளரும் போது உன்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சதுக்குக் காரணம் நீ வேலுநாச்சியோட பேரங்கிறதுக்காகத் தான், மடித்தபடி உன்னைப் பிடிக்காமயில்லை. உன்னைப் பிடிக்காதுன்னு எப்பவுமே நான் சொன்னதில்லை, வேண்டாம்னு விலகியிருந்தேன் அவ்வளவு தான்.

ஆனால் நீ பின்னாடியே வந்ததும் உன்னோட சின்ன சின்ன செய்கைகளும் ஏதோ ஒரு வகையில என்னைச் சலனப்படுத்துனது நிசம். அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச என் படிப்புல கூட கவனம் பதிக்கமுடியாதபடி பாதிக்கவும் தான் விலகி விலகிப் போனேன். அந்த பஸ்ல வந்த நாட்கள்லஉன்னை அவ்வளவு ரசிச்சேன். எந்தப் பொண்ணாவது உங்கிட்ட உரிமையா சிரிச்சிப்பேசுனா கூட என்னால தாங்கிக்க முடியாது. 

ஒருவேளைசுரேஷ் கட்டாயத்துல தாலி கட்டினா கூட அவனோட வாழ்த்திருக்க மாட்டேன். அதேநேரம், நீ என் விருப்பம் கேட்காம தாலி கட்டுன போதும், எங்கம்மா என்னைவெறுத்த போதும் உன்னைப் பிடிச்சதால தான் உன்னோட இருக்கேன். உனக்காகத் தான்இங்க இருக்கேன்.

ஏதோ பேசும் போது பழைய விஷயத்தைப் பேசுறது, பட்டுன்னுவார்தையை விட்டுறேன்னா அந்த அளவுக்கு நான் காயம் பட்டிருக்கேன்னு நீபுரிஞ்சிக்கணும். அப்போ நான் சின்னப்பிள்ளை தானே ஈஸியா எல்லாம் மனசுல, ஞாபகத்துல பதிச்சிடுச்சு நானும் என்ன செய்ய? இனிமுடிஞ்ச வரைக்கும் அப்படிப் பேசலை. அப்படியே பேசுனாலும் நீ இப்படியெல்லாம் மூஞ்சியை திருப்பிட்டுப் போகக்கூடாது என்னால தாங்க முடியலை. என்ன புரிஞ்சதா?” என மனதிலிருந்த அத்தனையும் கொட்டியவள் இறுதியில் மிரட்டலாக முடித்தாள். 

வேகமாக தலையாட்டியவன் அவளை அள்ளி அணைக்க, திமிறியவள், “என்ன புரிஞ்சது?” என விரல் நீட்டிக் கேட்டாள்.

ஹான்..உங்கிட்ட மட்டும் சூடு, சொரணை, தன்மானம் பார்க்கக்கூடாதுன்னு நல்லா புரிஞ்சதுஎன்றவன் காய, கலகலவென சிரித்தவள், “குட்..எனக் கன்னம் பற்றிக்கொஞ்சினாள். 

ஏன்டி? உனக்குத்தான் என்னை பிடிக்குமே இவ்வளவு நாளா ஏன் அதைச் சொல்லலை?” எனப் பொறுமியவன், தண்டனையாக கன்னத்தை அள்ளிக் கடிக்க, விரல்கள் இடையை கிள்ளி விளையாடியது.

இதெல்லாமா சொல்லுவாங்க? இவ்வளவு ஒட்டி உசாரிக்கிட்டு இருக்கேனே இதுல தெரியலை? ஏன்என்னோட செய்கையில நல்லாத் தெரிஞ்சிருக்குமே அது கூட புரிஞ்சிக்காத மக்கா நீஇருந்தால் நான் என்ன செய்ய?” என்றவள் அவனைக் கேலி செய்து, பொங்கிச்சிரித்தாள். 

இத்தனை நாளா தவிக்கவிட்டது மட்டுமில்லாம இப்போ சிரிக்க வேற செய்றீயா? இருடி இன்னைக்கு இருக்கு உனக்குஎன பொங்கியவன் அவளை புரட்டிப் போட்டு அவள் மீது வன்மையாக விழுந்தான். 

சிரிப்போடு சுகமாகத் தாங்கியவள், மீண்டும் தடையாக அவன் கைகளை பற்றிக்கொண்டு, “லைட் ஆப் பண்ணுங்கஎன்றாள் கொஞ்சலாக. 

அழகை ரசிக்கத்தான் கடவுள் கண்ணைக் கொடுத்திருக்கார். இதுல லைட்டை ஆப் பண்ணிட்டு உன்னை என்ன செய்ய?” என்றவன் மேலும் என்னவோ சொல்ல வர, சட்டென தன் கைக்கொண்டு அவன் வாயை மூடியவள், நெஞ்சில் முட்டிச் சிணுங்கினாள். 

பிறந்த கண்ணுக்குட்டியின் மென்மையை அவள் செயலில் உணர்ந்தவன், ஆசை முட்ட, மூச்சிழுத்து அணைத்தான். 

ஆண் பெண் வேறுபாடின்றி உடல்கள் உஷ்ணமேற, புது மயக்கம் தன்னிலையை இழக்கச் செய்தது இருவரையும். அள்ளி அணைத்து, மென் உடலெங்கும் சில்லென்ற முத்தத்தில் குளிப்பாட்டிட, மெல்லிய நடுக்கத்தில் அவன் திண்ணிய உடலோடு ஒட்டியவள் சுகமாக ஏற்றாள். 

உயிர் கூடு ஒன்றாக, நெகிழ்ந்து, நெளிந்து அவள் வழிய, பொங்கித் தணிந்து அவன் தாங்கினான்.

அவன் கொட்டிய காதல் மொத்தத்தையும் தனக்கே தனக்கென கர்வமாக வாங்கிக் கொண்டவளிடம் அடிமைப்பட்டுப் போனான். தன்னை தொலைத்து, அவனை வென்றவளுக்கு அந்த விளையாட்டின் இறுதியில் பெற்ற சுகம் புதிது. குமரனுக்கோ அது போதவில்லை. 

ஆசைகளை அவிழ்த்து, மோகத்தை வென்றனர். 

உலகின் மொத்த சந்தோஷமும் தன் கைக்குள் அடைந்து கொண்டது போல் அவளிருக்க, கொஞ்சி கொஞ்சிக் கொண்டாடினான். அவன் நெஞ்சிலே உலகம் மறந்து இளைப்பாறினாள்.

கிழக்கு வானில் புதிய விடியல் புலர்ந்து. நுகர்ந்த இன்பம் போதுமென இருவரும் கண்ணயர்ந்தனர். 

காலையில் முதலில் எழுந்து குளித்து முடித்து கீழே வந்தது குமரன் தான். 

பட்டாடையும் ஜொலிஜொலிக்கும் பொன்னாபரணத்தோடும் பகட்டாக கிளம்பியிருந்த வேலுநாச்சி, “எங்கப்பு மீனாளை காணும்?” என விசாரித்தார். 

ஒரு நொடி திருதிருவென விழித்த குமரன், “தூங்குறா அப்பத்தா..என்றான் உண்மையாக. 

இவ்வளவு நேரமாவா? வெள்ளனை எழுத்துரிச்சி கிளம்பு, திருமங்கலத்துல சின்ராசுமகனுக்கு கல்யாணம் இருக்கு போகணும்னு சொல்லியிருந்தேனேஎனக் கடுகடுத்தார். 

எப்போதும் நெருங்கிய சொந்தங்களின் விசேஷமென்றால் மீனாவை வண்ணப் பட்டால் சுற்றி, பொன்னால் பூட்டி கையோடு அழைத்துச் சென்றிருடுவார் வேலுநாச்சி. அனைவரிடமும் அழகு மீனாளை தங்கள்வீட்டின் மருமகள் என்றும் மருத்துவர் என்றும் சொல்லிப் பெருமை கொள்வார். 

நெற்றியைத் தடவிக்கொண்ட குமரன், “அவளுக்கு உடம்புக்கு முடியலை அப்பத்தாஎனக் கூசாமல் பொய்யுரைத்தான்.

என்ன முடியலை? நேத்து கூட வரேன்னு சொல்லி லீவ் போட்டாளே? இப்படி நாளு விசேஷ வீட்டுக்கு போய் வந்தால் தானே, நம்ம சொந்த பந்தத்தை அவளும் தெரிஞ்சிக்க முடியும், பழக முடியும்என்றவர் அறிவுரை கூற, “விடும்மா, உடம்புக்கு முடியலைன்னா ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும். பாவம் அங்கிட்டும் இங்கிட்டுமா எவ்வளவு வேலை பார்க்குது புள்ளைஎன்ற சுந்தரமூர்த்தியின் குரலுக்கு தலையாட்டிவிட்டுக் கிளம்பினார் வேலுநாச்சி.  

சுந்தரமூர்த்தியும் உணவுண்டுவிட்டு அலுவலகம் கிளம்பி விட, உல்லாசமாக விசில் அடுத்தபடி குமரன் மீண்டும் தங்கள் அறைக்குள் சென்றான். 

அழகுமீனாள் ஆழ்ந்த துயிலிலிருக்க, உறங்கவிட்டு அருகில் படுத்துக்கொண்டான். காலைஉணவு நேரம் தாண்டி வெகு நேரமாகியும் அவள் எழாதிருக்க, உருண்டு அருகில்சென்றான். 

சிவந்து மின்னியப் பட்டுக் கன்னத்தோடு தன் கன்னம் பதித்தவன் மீசையால் உரசினான். 

அந்தக் குறுகுறுப்பில் மெல்ல கண் விழித்தவளுக்கு சில நிமிடங்களில் சுய நினைவு வர, சட்டென எழுந்தாள். 

எழுந்த வேகத்தில் நெருக்கத்திலிருந்த குமரனின் நெற்றியில் பலமாக முட்டி விட்டாள்.அம்மா..என்ற அலறலோடு நெற்றியைப் பிடித்துக் கொண்டு நடுக்கட்டிலில் பொத்தென அமர்ந்தான். 

போர்வையைச் சுருட்டி கழுத்து வரைக்கும் மூடியவள், “என்ன பண்ற நீ?” என்றாள். 

அவள்கேள்வியில் அதிர்ந்தான் ஒருவேளை எதுவுமே நினைவில்லையோ? யோசனையில் முகம் சுருக்கியவன், “இராத்திரி எல்லாம் கோழிக்குஞ்சு மாதிரி கொஞ்சிட்டு, இப்போ என்னடி கோயில் காளை கனக்கா முட்டுற?” என்றான். 

சுற்றும் முற்றும் பார்த்தவள், “இல்லை ரொம்ப நேரமாச்சு, அப்பத்தா தேடும்என்றாள். 

அவள் பார்வை வேறு புறம் இருந்த நேரம் அவள் மீது பாய்ந்தவன், படுக்கையில் அவளை அணைத்தபடி விழுந்தான். 

அப்பத்தாவை அனுப்பி வைச்சாச்சு.. நீ வேற வசதியா லீவ் போட்டுருக்க.. அதை ஏன் வீணாக்க?” என வினவியபடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து இதழால் வலம் சென்றுக் கொண்டிருந்தான். 

அட களவாணிப்பயலே..என்றபடி உச்சிமுடியை கொத்தாக பிடித்து எழுப்ப, அவள் முகம் பார்த்தவன், “ஏன் உனக்கு மட்டும் பிடிக்கலையாக்கும்?” என்றபடி அவள் இதழில் இதழ் பதித்தான்.  தீராத தித்திப்பு பெருகியது.

இரவெல்லாம் ஒருவருக்கொருவர் இன்பம் கொடுத்து இருவரும் ரசித்ததை அறிவரே!  இந்த இதழ் முத்தம் அவளை மயக்க, இன்பமாக அவனை அணைத்துக் கொண்டு அனைத்தையும் மறந்து போனாள். 

அன்றைய நாள் அவர்களுக்கு மட்டுமானதாகி இன்பம் சேர்த்தது. 

Advertisement