Advertisement

கண்ணுக்கு முன்னாடி இப்படி லட்டுமாதிரி பொண்டாட்டிய வைச்சிக்கிட்டு யாராச்சும் ஆறு மணிக்கு வேலைக்கு போவானாடி..??” அவள் பேசும் வாயை தன் வாயால் அடைத்தவன் அவளோடு இரவு விட்டிருந்த வேலையை இப்போது தொடர்ந்தான்.. மலர் விருப்பத்துடனே அவன் மார்பில் ஒண்டினாள்..
 
ராமலிங்கம் அதிகாலையிலேயே கிளம்பியிருக்க தங்கள் ஹோட்டலை திறந்துவிட்டு மலர் வரவும் வேலையை பிரித்துக் கொண்டு மற்ற ஹோட்டலுக்கு வெற்றியும் அவரும் செல்வார்கள்.. இப்போது வெற்றியும் கார் வாங்கியிருக்க அவனே முக்கால்வாசி வேலையை பார்த்துக் கொள்வான்.. தந்தையை அலையவிடுவதில்லை..
 
இருவரும் குளித்து கிளம்பி ஹோட்டலுக்கு வரவே மணி எட்டுக்கு மேலாயிற்று.. ராமலிங்கம் தன் வேலையில் மூழ்கியிருக்க அவர் வெற்றிக்கு முழுச்சுதந்திரத்தை கொடுத்திருந்தார்..  தன் மகன் இங்கேயே இருப்பதாக சொன்னதிலேயே மகிழ்ந்தவர் அவன் போக்குக்கு விட்டுக் கொடுக்க அதை வீண் செய்யாமல் இன்று ஹோட்டல் தொழிலில் அவருக்கு முழுமூச்சாய் உதவினான்.. பத்து மணிக்கு மேல் வேலை நடக்கும் இடங்களுக்கு செல்லலாம் என முடிவு செய்து இருவரும் பேசிக் கொண்டிருக்க சக்தி போன் செய்து அப்பத்தாவோடு அங்கு வருவதாக சொல்லவும் மலருக்கு சந்தோசம் தாங்கவில்லை..
 
மதிய சாப்பாட்டிற்கு பெரியத்தானுக்கு, அம்மாச்சிக்கு , ரேணுகாம்மாவுக்கு என அவர்களுக்கு பிடித்ததை தனிதனியாக செய்ய துவங்கினாள்.. கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு வேகமாக காரை நோக்கி ஓடியவள் பாதி வழியிலேயே ஒரு மாதிரி மயக்கம் வருவது போலிருக்க நிற்பதர்குள் மயங்கி விழுந்திருந்தாள்..
 
காரை நிறுத்தியும் நிறுத்தாமலும் மூவரும் இறங்கிவர அப்பத்தாவின் சத்தத்தில் வெற்றி தன் மனைவியிடம் வேகமாக வந்தவன் பதறியபடி அவளை தூக்கி அங்கிருந்த நீள நாற்காலியில் படுக்க வைத்து,” மலர் மலர் என அவள் கன்னத்தை தட்ட, சக்தி தண்ணீரை எடுத்து மலரின் முகத்தில் தெளித்தான்.. லேசாக அசைந்தவள் கண்விழிக்க அப்பத்தா தன் மடியில் மலரை படுக்க வைத்திருந்தவர் தன் முந்தானையால் அவர் முகத்தை துடைத்தபடி,
 ஆத்தா மலரு , தங்கம் என்னாச்சுத்தா..?”
 
எழுந்து அமர்ந்தவள் அவர்களை பார்த்து சிரித்தபடி, ஒன்னுமில்ல அம்மாச்சி வேகமா ஓடிவந்தனா அதான் மயக்கம் வர்ற மாதிரி இருந்திச்சு..?”
 
வெற்றியோ அவளை தன் புறம் திருப்பியவன்,” ஏய் இப்பல்லாம் நீ ஜூஸ் குடிக்கிறியா, பழங்கள சாப்பிடுறியா இல்லையா.. தினமும் பழங்கள் வாங்கி குடுத்திட்டுத்தானே போறேன்.. நீ வேலை வேலைன்னு திரியிற..அதான் மயக்கமெல்லாம் வருது.. வா ஹாஸ்பிட்டலுக்கு போவோம்..
 
அதற்குள் ரேணுகா அப்பத்தா காதிற்குள் ஏதோ சொல்லவும்  மலரின் கையை பிடித்தவர் தனியாக அழைத்துச் செல்ல வெற்றியும் கூடவே போனான்.. டேய் கொஞ்சநேரம் இரு மலருக்கிட்ட ஒன்னு கேக்கனும் ..?”
 
என் பொண்டாட்டிக்கிட்ட என்ன கேக்குறதா இருந்தாலும் என் கண்ணு முன்னாடியே கேளுங்க.. அதென்ன தனியா கேட்கிறது..?”
 
 போடா அரட்டை .. நீ வாத்தா.. தனியாக கூட்டிச் சென்றவர் தலைக்கு ஊத்திக்கிட்டியாத்தா.. எத்தனை நாளாச்சு..
 
நாளை கணக்கிட்டவள்,” அம்பது நாளாகப்போகுது அம்மாச்சி..
 
அடியேன் ராசாத்தி.. அவளை கன்னத்தை உருவி திருஷ்டி எடுத்தவர்.. அங்கிருந்த சீனி டப்பாவில் இருந்து சீனியை எடுத்து வெற்றி , சக்தி, ராமலிங்கம், ரேணுகா என எல்லார் வாயிலும் போட்டுவிட,
 
 வெற்றியோ அப்பத்தா என கத்தியவன் என் பொண்டாட்டி மயங்கி விழுந்ததுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுறியா.. எங்க அவ.. வரச் சொல்லு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறேன்..
 
கூட்டிட்டு போ நல்ல கைராசியான பொம்பள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ.. அப்பு ராமலிங்கம் உனக்கு பேரனோ பேத்தியோ பிறக்க போகுதுடா.. எனக்கு கொள்ளுப்பேரன் வரப்போறான்.. டேய் வெற்றி நீ அப்பனாக போற.. சக்தி நீ பெரியப்பனாகப்போற மகிழ்ச்சியில் அவருக்கு தலைகால் புரியவில்லை..
 
வெற்றியோ வேகமாக தன் மனைவியை தேடிப் போக பின்புறம் அங்கு கொல்லைப்புறத்தில நின்றவளை தூக்கி சுற்றியவன் உச்சியில் தன் முத்தத்தை பதிக்க மலருக்கு வெட்கமாக இருந்தாலும் தனக்கே தனக்கென்று ஒரு குழந்தையா.. அவளுக்கு வெற்றியை இன்னும் நெருங்கி அணைக்க வேண்டும் போல , முத்தமிட வேண்டும் போல இருக்க, மெல்ல அவனை நெருங்கியவள் ,
அத்தான் வீட்டுக்கு போவமா..?”
 
அவனுமே இந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவிக்க,” ம்ம் போலாம்டா அம்மு..
 
அனைவரிடமும் சொல்லிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதாக சொல்லி கிளம்ப அனைவருக்கும் அவ்வளவு திருப்தி.. மலரை வேண்டவே வேண்டாம்.. தனக்கு வெளிநாடுதான் முக்கியம் என்றிருந்தவன் இன்று குடும்பம், மனைவி. அவனுக்கு குழந்தை என மாறியிருப்பது அவ்வளவு சந்தோசம்..
 
ராமலிங்கம் மதியம் வரை இருந்தவர் ஹோட்டலை சக்தியிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்கு கிளம்ப அப்பத்தாவும் ரேணுகாவும் அங்கேயே இருந்தனர்..
 
வெற்றியும் மலரும ஹாஸ்பிட்டலில் கன்பார்ம் செய்துவிட்டு குடும்பத்திற்கு தகவலை சொன்னவர்கள் அந்த நிமிடத்தை அனுபவிக்க வீட்டுக்கு சென்றார்கள்.. இருவருக்கும் அவ்வளவு சந்தோசம் அதை எப்படி வெளிகாட்டுவது என்று தெரியாமல் இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு முத்தமிட்டு வெளிப்படுத்த அவளை தரையிலேயே நடக்கவிடவில்லை.. டாக்டர் மலர் சற்று வீக்காக இருப்பதாக சொன்னதால் பழக்கடையையே வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான்.. வந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஜூஸோடு நிற்க மலருக்குத்தான் இவன் அன்பு தொல்லை தாங்கவில்லை..கட்டிலில் இருந்து இறங்காதே என ஆர்டர் போட,
 
அவன் தோளில் கைவைத்து தள்ளியவள்,” போங்கத்தான் நான் என்ன உடம்பு சரியில்லாமலா இருக்கேன் பெட்லயே படுத்திருக்க.. இந்த மாதிரி சமயங்கள்ல  சாதாரணமா எல்லாப் பொண்ணுகளுக்கும் இப்படித்தான் இருக்கும் இதெல்லாம பெரிசு பண்ணாதிங்க.. அவனது வழுவழு கன்னத்தை பிடித்து அதில் முத்தமிட்டவள் அவன் மார்பில் தலைவைத்திருந்தாள்.. தான் இவ்வளவு காலம் பட்ட கஷ்டங்களுக்கு கடவுள் நல்ல வழிகாட்டியதை போலிருக்க தன் மாமாவையும் அம்மாச்சியையும் நன்றியோடு நினைத்தவள் ஒன்றும பேசாமல் தன் கணவன் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்..
 
மாலை வரை சக்தி அங்கேயே இருக்க ரேணுகாவிற்குதான் மனதிற்கு பாரமாக இருந்தது.. எங்கே மருமகன் இங்கேயே இருந்துவிடுவாரோ என்று, அங்கு வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் ரமலி இதுவரை தனியாக இருந்ததில்லை..
 
இரவு ஏழுமணியிருக்கும் சக்தி இங்கேயே வேலைப்பார்த்துக் கொண்டிருக்க அப்பத்தாத்தான் பேரனிடம் வந்து,” என்னப்பு ஊருக்கு கிளம்பல.. அங்க உன் பொண்டாட்டி தனியா இருப்பாளே..
 
தன் அப்பத்தாவிடம் சென்றவன் அவர் கையை பிடித்தபடி,” ஸாரிப்பத்தா அவள கொஞ்சம் மன்னிச்சிருங்க.. என்மேல இருந்த கோபத்தில அவ என்ன பேசிறோம்னு தெரியாம பேசிட்டா.. இதுக்காகவெல்லாம் அங்க வராம இருக்காதிங்க..
 
மனைவிக்காக தன்னிடம் பேசுபவனை பார்க்கும்போது பெருமிதமே தோன்றியது.. அவன் கன்னத்தை வருடியவர்,” ஏப்பு அப்பத்தா அப்படிபட்ட ஆளா.. அவளும் எனக்கு பேத்திதான்பா.. இங்க நல்ல சேதி வர்றதுக்குத்தான் எனக்கு மலர பார்க்கனும்னு தோனுச்சு போல.. அதான் நாங்க இங்க வந்தனே தவிர உன் பொண்டாட்டி பேசினதுக்கு இல்ல.. அந்த பொண்ணுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு ஆயிரம் வேலையிருக்கலாம் என்ன பிரச்சனையோ நானும் கொஞ்சம் பேசாம இருந்திருக்கலாம்..?”
 
அவரை கட்டி அணைத்தவன், அப்படியெல்லாம் இல்லப்பத்தா நீங்க எப்பவும் போல இருக்கனும்.. எல்லாத்தையும் கேட்கனும் அதுதான் எங்க அப்பத்தாவுக்கு கெத்து..   நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்து உங்கள கூட்டிட்டு போவோம்.. அதுவரைக்கும் மலர நல்லா கவனிச்சிகோங்க.. நீங்க வராம அங்க ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் என்னைகேட்டு நச்சரிக்க போறாங்க.. இன்னும் நிறைய கதைகளை நம்மூர் அப்பத்தாக்ககிட்ட கேட்டுட்டு வாங்க.. அதோட இந்த மலர் உடம்பையும் நல்லா தேத்திவிடுங்க..இன்னும் பத்துநாளுல நம்மூர் திருவிழா வருதில்ல அப்ப நான் வர்றேன்.. அடுத்து நான் வரும்போது என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கிட்டு வர்றேன்..
 
மலர நான் கவனிக்கிறது இருக்கட்டும் உன் பொண்டாட்டியையும் அதே மாதிரி நான் கவனிக்கனும் நீயும் சீக்கிரமா அப்பாவாகிற வழியப்பாரு.. அப்ப இந்த சண்டையெல்லாம் ஓடி ஒளிஞ்சிரும்.. புரியுதா..
 
அவர் தலையை முட்டி சிரித்தவன் ,”புரியுது புரியுது வரவா.. அப்பத்தாவிடமும் அத்தையிடமும் விடைபெற்றவன்.. அந்த சொர்ணாக்கா அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியலையே.. நான் அடிச்சதுக்கு என்ன ரியாக்ஷன்னு பார்ப்போம்.. அவனுக்கு தன் மனைவியின் அடியால் சிவந்த கன்னம் நினைவுக்கு வர அடிய கொஞ்சம் பலமா வைச்சிட்டமோ.. சும்மாவே அவ கன்னம் சிவப்பாத்தான் இருக்கும் இப்ப ரொம்ப சிவந்து போய் இருந்துச்சே..
 
காரை வேகப்படுத்தியவன் அங்கு வீட்டிற்கு வர வீடே அவ்வளவு அமைதி.. எப்போதும் அப்பத்தாவும் , ரேணுகாவும் டிவியில் ஏதாவது பழைய படம் பார்த்துக் கொண்டே இருக்க சத்தம் இருந்து கொண்டே இருக்கும் .. ஹாலில் ரமலியை காணாமல் மாடியேற போனவனை வேலைக்காரப் பெண்,
 
ஐயா சாப்பாடு எடுத்து வைக்கவா..?”
 
ரமலி சாப்பிட்டாளா..?”
 
இல்லங்கையா அவங்க காலையில இருந்து கீழ இறங்கி வரவே இல்லை.. ரெண்டு தரம் போய் கேட்டேன்.. என்னை திட்டி போகச் சொல்லிட்டாங்க..
 
சரி நான் பார்த்துக்கிறேன்.. நீங்க எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு படுத்துக் கோங்க.. அவர்கள் அறைக்குள் நுழைய உள்ளறையில் அவள் படுத்திருப்பது தெரிந்தது.. உள்ளே சென்றவன் அந்த இரவு வெளிச்சத்தில் ரமலியை பார்க்க அவள் கன்னத்தில் விரல்தடம் அப்படியே இருந்தது..
 
மனது தாங்காமல் அவள் கன்னத்தை வருடியவன் அவள் கன்னத்தில் மிருதுவாக முத்தமிட இதுவரை எந்த பெண்ணையும் கைநீட்டி அடித்ததில்லை.. பெண்களை அடிப்பதை கேவலமாக நினைப்பவன் இதிலும் மனைவியை தங்கம் போல தாங்க நினைக்க.. இன்று அப்பத்தாவை இவள் இப்படி பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.. இருவருமே தனக்கு முக்கியமானவர்கள்தான் ஆனால் வயதிற்கும் உறவிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்..  இவளும் நல்லவ தானே..
 
கன்னத்தில் கண்ணீர் கோடுகள் காய்ந்தபடி இருக்க, காலையில சாப்பிட்டா தெரியும் மதியமும், இப்பவும் சாப்பிடாம பட்டினியா இருக்காளே.. ரமலி கன்னத்தில் பதித்திருந்த அவன் கையை அப்படியே இழுத்தபடி மறுபுறம் திரும்பி படுக்க அதை மெல்ல உருவ முயற்சி செய்து முடியாமல் அவள் அருகிலேயே அவளை அணைத்தபடி படுத்தான்..
                                                              
                                                          இனி…………..????

Advertisement