எத்தனை நேரம் அப்படியே நின்று இருந்தார்களோ முதலில் நிதானத்துக்கு வந்தது ஸ்ரீ தான்.
அவனது அணைப்பில் இருந்து மெல்ல விலகியவளோ வேந்தனின் முகத்தை ஏறிட்டு பார்த்து “எங்கே வேணுமின்னாலும் போங்க ஆனால் ஒரு கண்டிஷன் என்னையும் கூட கூட்டிட்டு போங்க!” என்றாள்.
“என்னடி சினிமா டயலாக் எல்லாம் அடிக்கற” என்று குறுஞ்சிறுப்புடன் கேட்டவன் “இப்படி ஒரு கொலைகாரனோட உன்னால லைஃப் லாங் ஹாப்பியா இருக்க முடியுமா?” என்றிட இத்தனை நேரம் இருந்த இதம் மறந்து ஸ்ரீயின் முகம் இறுகியது.
கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தவளோ “ப்ளீஸ் வேந்தன் அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க” என்றிட
“ஹே ரிலாக்ஸ் அம்மு! உன்னை குத்தி காட்டனும்னு சொல்லலை! இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம்னு தெரிஞ்சு கொள்ளலாமா?” என்றான்.
“உங்க பொருளை உங்கக்கிட்ட சேர்க்கறேன்னு சொன்னேன் சேர்த்துட்டேன்! இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க!” என்று முடிவாக கூறி விட்டாள்.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?”
“என் நிம்மதியான வாழ்க்கைக்காக சில விஷயங்களை மறக்கலாம்னு இருக்கேன்! சோ இனிமே பழசை பத்தி பேச வேண்டாம்!”
“இதுவரை என்ன பண்ணீங்க! எதுக்காக பண்ணீங்க என்று எதுவுமே கேட்க மாட்டேன்! இனிமே எல்லாத்தையும் விட்டு விடுங்க ” என்றிட
“ஸ்ரீ என்ன விளையாடுறியா? அசால்டாக விட்டு விடுங்க என்று சொல்லுறா? என்னால முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.
அவனது கைகளை இறுக்க பிடித்துக் கொண்டவளோ “வேந்தன் கொஞ்சம் யோசிச்சு பாருங்க! சம்மந்தமே இல்லாதவங்களுக்காக நாம ஏன் நம்ம வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கனும்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நம்ம நாமே ஏமாத்திட்டு வாழறது?” என்றிட
“லாசு போல உளறாதடி! இன்னும் எதுவும் நம்ம கையை விட்டு போகலை! கொஞ்ச நாள் பொறுத்துக்கோ” என்று அவளது தலையை வருட போக அதற்கு மறுப்பாக தலையை இழுத்துக்கொண்டஸ்ரீயோ
“உங்களோட எந்த சமாதனமும் எனக்கு தேவையில்லை வேந்தன்! முடிவாக சொல்லுறேன்! போதும் விட்டு விடுங்க!” என்று பிடித்த பிடியிலேயே நின்றாள்.
அவளது பிடிவாதத்தில் எரிச்சலுற்றவனோ ஆயாசாமாக தலையைக் கோதிக் கொண்டான்.
“ஸ்ரீ நான்” என்று ஆரம்பிக்க
“நமக்காக! நம்ம குழந்தைக்காக!ப்ளீஸ்”என்று கரெக்டாக அவனது வீக் பாயிண்டில் கையை வைக்க அது சற்று வேலையும் செய்தது.
“பாருங்க! இங்கே யாரும் நம்ம தேடி வர மாட்டாங்க! வரவும் முடியாது! இந்த பெண்ட்ரைவை தலையை சுற்றி தூக்கி எறிஞ்சிட்டு எல்லாத்தையும் புதுசா ஸ்டார்ட் பண்ணலாம்” என்று அவனை சம்மதிக்க வைத்து விடும் நோக்கத்துடன் கூறிட வேந்தனின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.
அவனது முகத்தினை கைகளில் ஏந்தியவளோ “ஓகேன்னு சொல்லுங்க! வேந்தன்” என்று கேட்க அதற்கு அரைமனதாக தலையை ஆட்டி வைத்தான்.
“தேங்க்ஸ் வேந்தன்” என்றவளோ கண்ணீருடன் அவனை அணைத்துக் கொள்ள ஒரு கையினால் ஸ்ரீயை அணைத்துக் கொண்டவனோ மற்றொரு கையால் தனது சிங்க பெண்டன்ட் இட்ட பெண்ட்ரைவை பத்திரப்படுத்திக் கொண்டான்.
கண்ணீருடன் அவனை விட்டு விலக “அது தான் நினைச்சதை சாதிச்சிட்டியேடி அப்பறமும் ஏன் அழுதிட்டு இருக்குற” என்று அவளது கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்க “எனக்காக மட்டும் நான் இதை கேட்கலை”என்றிட
“ஆனால் நான் உனக்காக தான் ஓகே சொன்னேன்”
“தெரியும்”
“இப்போ என்ன எல்லா பிரச்சனையும் முடிஞ்சது இல்லை! இப்பவாவது நான் குளிக்க போகலாமா?” என்று வியர்த்து போயிருந்த தனது உடலை கண்களால் சுட்டிக் காட்டிக் கொண்டே கேட்க
“எல்லா பிரச்சனையும் முடியலை! இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு” என்று மனதிற்குள் நினைத்து கொண்டவளோ
“இதுக்கே சலிச்சுக்கிட்ட எப்படி டாக்டரே! இன்னும் எவ்வளவோ இருக்கே?” என்று வேந்தனின் கண்ணத்தை பிடித்து ஆட்டினாள்.
“அப்போ லிஸ்ட் இன்னும் முடியலையா?” என்றிட
“அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சுக்கலாம் என்று நினைக்காதீங்க! இனிமே தான் உங்களுக்கு மெயின் டாஸ்க்கே இருக்கு! நேரம் வரும் போது சொல்லுறேன்! போங்க போய் குளிச்சிட்டு வாங்க! ” என்றிட
“அப்போ வாங்க சேர்ந்து குளிக்கலாம்” என்று ஸ்ரீயின் கையை பிடித்து இழுக்க அவனது கையில் ஒரு அடிப்போட்டவளோ “திருட்டுப்பூனை!உடனே வேலையை காட்டுற பாத்தியா போடா!” வேந்தனின் முதுகில் கைவைத்து தள்ளினாள்.
“ரொம்ப பண்ணாதடி!”என்று கொண்டே டவலை எடுத்து தோளில் போட்டவனோ குளியலறையில் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
சிறுசிரிப்புடன் அவனது முதுகினை பார்த்துக் கொண்டு இருந்தவளோ அடுத்தடுத்து என்னசெய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டாள்.
இதே சமயம் தோட்டத்தில் வெற்றியின் கேள்வியில் ஒரு கணம் திகைத்து நின்ற ராமையாவோ “உங்க கேள்வி நியாயம் தானுங்க! ஆனால் நானா அந்த இடத்தை விட்டு போகலைங்க! வேலு தம்பி தான் லோடு வேலையா தென்னந்தோப்புக்கு அனுப்பி விட்டாரு” என்றிட வெற்றியின் கண்கள் கூர்மையாகின.
“வேலுவா?” என்று யோசனையாக ஒருமுறை தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனோஅதற்கு மேல்ராமையாவிடம் எதுவுமே கேட்கவில்லை.
“ம்ம்ம் நான் பாத்துக்கிறேன்!வேற ஏதாவது சொல்லனுமா ராமையா?” என்று கேட்க
“வேற ஒன்னும் இல்லைங்கயா! பாத்து சூதானமாக இருங்க! இவனுங்களை நான் பாத்துக்கிடுதேன்! எல்லாம் நல்லதாகவே நடக்கும்”என்றிட அவரை அர்த்தமுள்ள பார்வை பார்த்தவன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“அடியே பாரு!! என்னடி பண்ணிட்டு இருக்கறவ? சீக்கிரம் வாடி” என்று அன்றைய காலை உணவுக்கான காய்கறிகளை வெட்டிக் கொண்டே சமயற்கட்டிலிருந்து குரல் கொடுத்தாள் கனகா.
“அட சும்மா இருங்கக்கா வந்திட்டு தானே இருக்கேன்! ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி கத்திட்டே இருக்கீங்க!”என்று பால் டின்னை தூக்கிக் கொண்டு வந்தாள் பார்வதி.
அது கனமான பால் டின் என்பதால் ஒரு மாதிரி தட்டுத்தடுமாறி தான் அதனை எடுத்து கொண்டு வந்தாள்.
“பெரியய்யா வந்துடுவாக! சீக்கிரம் வந்து காஃபியை போடுடி! நான் சமைச்சு முடிக்கனும்” என்றிட
“ஹான் ஹான் வரேன்” என்று நழுவ போன டின்னை பிடித்துக் கொண்டே பாரு குரல் கொடுக்க
“சத்தம் மட்டும் தான் வருது! ஆளைக் காணோம்! பாத்துடி பால் பத்திரம்” என்று வாயை மூடவில்லை டங்கென்று ஒரு சத்தம்.
“இவளை வச்சிட்டு! என்னத்த போட்டு உருட்டுறாளோ” என்றுக் கொண்டே எழுந்து நின்றவளோ புடவை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே சமையற்கட்டை விட்டு வெளியே வந்தாள்.
கனாக சமையற்கட்டு வாயிலுக்கு வரவும் டின் உருண்டு வந்து சமையற்கட்டு வாசலில் விழுவும் சரியாக இருந்தது.
”நினைச்சேன் இவளை” என்று பல்லை கடித்து கொண்டு வெளியே வந்தவள் அங்கே ஸ்ரீரங்கநாதர் போல் நடு ஹாலில் தொப்பலாக நனைந்தபடி சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கிடந்த பாருவை கண்டதும் “ஹாஹாஹா” என்று வயித்தை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்ன ஹாஹாஹா! இங்கே என்ன ஷோவா காட்டுறாங்க தூக்கி விடுங்க அக்கா!” என்று பாரு சிணுங்கிக் கொண்டே கூறினாள்.
“இந்த நக்கல் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! வாய் மட்டும் பாரு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அடிக்கற! ஒரு டின்னை தூக்க துப்பில்லை”என்று மாறி கேட்டாள்.
“இதெல்லாம் நியாயமா? ஒருத்தி விழுந்துக் கிடக்காளே! என்ன ஆச்சு என்று பார்ப்போம் என்று இல்லாம திட்டிட்டு இருக்கீங்க” என்றவள் தரையில் கையூன்றி எழப்பார்க்க
“ஹே ஈரமாக இருக்கு பாத்து பத்திரம்” என்று கூற தரையில் இருந்த பால் வழுக்கி விட தொப்பென மீண்டும் விழுந்தவளோ
“அய்யோ அம்மா இடுப்பு போச்சே!” என்று இடுப்பை பிடித்து கொண்டு அலற ஆரம்பித்து விட
அவளது அலறலில் லட்சுமி, சந்திரன் உட்பட அனைவரும் ஹாலில் ஆஜாராகி விட்டனர்.
“அடியே உன் அண்டா வாயை வச்சிட்டு சும்மா இருடி! பெரிய ஐயா வராங்க” என்று கனகா பாருவை அடக்கினாள்.
“ஏன்மா பரதேவதை உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா? நான் என்ன இங்கே ம்ம் சொல்றியா மாமா ம்ஹீம் சொல்றியா மாமான்னு பாட்டு கச்சேரியாநடத்திட்டுஇருக்கேன்! வலியில் அலறிட்டு இருக்கேன்!இப்போ போய் ஐயா கொயான்னுக்கிட்டு! வலிக்குதுடி” என்று அந்த நிலைமையிலும் வாயடித்தாள்.
நங்கென்று அவளது தலையில் கொட்டிய கனகாவோ “இந்த வாய்க்கு இது தேவை தான்டி”என்று பேசிக்கொண்டே இருக்க “என்னாச்சும்மா இந்த பொண்ணுக்கு ஏன் விழுந்துக் கெடக்கு?”என்று லெட்சுமி பதற “நீங்களாவது கேட்டீங்களேமா ரொம்ப சந்தோஷம்!”என்று நினைத்து முடிக்க வில்லை.
“அது ஒன்னும் இல்லைங்கமா! பிராக்கு பாத்திட்டே வந்து விழுந்திட்டா! இதோ இப்போ எழும்ப சொல்லிடுறேன்” என்ற கனகாவோ “ பாரு எழும்புடி” என்று தனது கையை நீட்டி எழுப்ப போக அவளது கையை தட்டி விட்டவளோ “ நான் பிராக்கு பார்த்ததை நீ பார்த்த போடி” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு கூறினாள்.
இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டு இருக்கும் போதே “என்ன சத்தம் ?யாருக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே மாடியில் இருந்து திபுதிபுவென ஓடி வந்தான் கணேசன்.
ஹாலில் அனைவரும் கூட்டமாக நிற்கவும் அனைவரையும் விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தவனோ “ ஏன்மா அனபெல் பொம்மை உனக்கு படுக்க வேற எடமே கிடைக்கலையா நடு ஹாலில் படுத்துக் கெடக்க ?” என்று கேட்க
“நானே வலியில் துடிச்சிட்டு இருக்கேன்! இந்த காது குடையற பட்ஸ் வேற வந்து கடுப்பேதுதே” என்று மனதிற்குள் நினைத்து கொண்டவளோ
“யாராவது என்னை இப்படியே பஸ் ஏத்தி விடுங்களேன்! உங்களுக்கு புண்ணியமாக போகும்! நானே ஒருநல்ல ஹாஸ்பிடலாக பார்த்து வைத்தியம் பாத்துக்கறேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட “ அண்ணே டாக்டர் சாரை கொஞ்சம் வர சொல்லுங்களேன்! பால் டின்னை தூக்கறேன்னு விழுந்து வாறி வச்சுட்டா! அனேகமாக சுலுக்கு பிடிச்சு இருக்குன்னு நினைக்கறேன்!”என்று கனகா கூறிட
“என்னம்மா தங்கச்சி இதுக்கு போய் மாப்பிள்ளையை கூப்பிட்டுக் கிட்டு நான் எதுக்கு இருக்கேன்?நான் பாத்துக்கறேன்” என்றவனோ பாருவின் பக்கம் ஃபோகஸை திருப்ப “எது இவனா” என்று அதிர்ந்தவளோ நெஞ்சில் கைவைத்து கொண்டாள்.
“கனகா ஒரு கை பிடி!ஒரேயடியாக முடிச்சு விட்ருவோம்”என்ற கூற கனகாவும் பாருவை தூக்குவதற்காகஅருகில் வந்தாள்.
“ஹே இருங்க இருங்க!” என்று அவர்களை கை நீட்டி தடுத்தவளோ “என்னை என்ன பண்ணப் போற?” என்று கணேசனிடம் கேட்க “பார்க்கத் தானே போற! ஃப்ளவர் வாசை தூக்கியா அடிக்கற இருக்குடி உனக்கு! குள்ள கத்திரிக்காய்” என்று மெல்ல பாருவுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவன் அவள் அரண்டு முழிக்கவும் அலேக்காக தனது கைகளில் தூக்கி இருந்தான்.
அவன் இப்படி குண்டுக்கட்டாக தூக்குவான் என்று எதிர் பார்க்காதவள் “ஹே கொத்தவரங்கா எறக்கி விடுடா!” என்று திமிறினாள்.
தாவி இறங்கப் போனவளை இறுக பிடித்து கொண்டவனோ
“டால்டாவா? இன்னைக்கு உன் இடுப்பை கழட்டி கைல கொடுக்கறேன்டி” என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான்.
அங்கே இருந்த சிறிய கட்டிலில் அவளை பொத்தென்றுபோட்டவனோ “பாக்கஒட்டட குச்சி மாறி இருந்துக்கிட்டு என்னா கணம் கணக்குறடி” என்றவனோ கைகளை விரித்து கொண்டு முன்னும் பின்னும் திரும்பி வார்ம் அப் செய்து விட்டு இடுப்பில் கைவைத்து கொண்டு அவளைஏறிட்டு பார்த்தான்.
கணேசன் போட்டதில்ஏற்கனவே இடுப்புவலியில்இருந்தவள் இன்னமும் சுல்லென்று வலி எடுக்க உயிரே போய்விட்டது.
“ஐயோ அக்கா என்னை காப்பாத்துங்களேன்” என்று அலற கனகாவும் அவனைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தவள்
“என்னடி ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க கரிசணையாக கேட்டாள்.
“ம்ம்ம் இல்லை குளுகுளுன்னு இருக்கு! ஏன்கா நீ வேற! முதலில் என்னை வெளியே கொண்டு போவேன்” என்றிட
“தங்கச்சி கொஞ்சம் வெந்நீரும் உலக்கையும் இருந்தா கொண்டு வாயேன்!” என்று கணேசன்கனகாவையும்வெளியே அனுப்பி விட்டான்.
பின்பு அறையைதாழிட்டவனோஅடிமேல்அடிவைத்து பாருவின்அருகில் வந்தான்.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவளோ “ இப்போ எதுக்குடா டோரை க்ளோஸ் பண்ண? மரியாதையாக ஓபன் பண்ணு” என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறியவளுக்கோ பயத்தில் வார்த்தைகள் தந்தியடித்தன.
அவளதுகேள்வியைகண்டு கொள்ளாதவன்தலைமுதல்கால்வரைநிதானமாகநோட்டமிட “லுக்கேசரியில்லையே?” என்று நினைத்துக் கொண்டவள் “ இதோ பாரு நான் சாதாரணமான பொண்ணு இல்லை! காராத்தேல ப்ளாக் பெல்ட் வாங்கினவ! எனக்கு கிக் பாக்ஸிங்கும் தெரியும்! பக்கத்தில் வந்த மூஞ்சை பேத்திடுவேன்” என்றுக் கொண்டே மெல்ல நகர்ந்து நகர்ந்து கட்டிலின் விளிம்பிற்கே சென்று விட்டாள்.
“ஆஹான் அதையும் பாக்கலாம்” என்றவனோ நாவினால் கண்ணத்தை நிரடிக் கொண்டே அவளது அருகில் சென்று அமர்ந்தான்.