அத்தியாயம் 3
கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள்.
“எப்ப வருவ… கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி வந்திடுவியா?” எனக் கேட்க,
மகேஸ்வரி கண்ணீரும் கம்பலையுமாக இருக்க… பெற்றோரின் நிலை பார்த்து வெண்ணிலாவுக்கு மிகுந்த துயரம்.
“இது சரி வராது. உன் ஆசையை விட்டுடு.” எனச் சொல்லிவிட்டு ஜெயராமன் சென்று விட…