Advertisement

வெண்பஞ்சு மேகத்தில்
வெள்ளி சலங்கை கட்டியது யாரோ
வெண்பனியா.. 
வெள்ளி நிலவா..
சுகமாய் உடலுக்கு இதம் கொடுத்த ஜெனுயூன்னி லெதர் அல்டிமேட் பெட்டில் புரண்டு படுத்தாள் ஆராதனா. அதன் மென்மை உடலுக்கு சுகமாய் இருந்தது போல இதழ்கள் லேசாக விரிந்து சுருங்கியது. அந்த பெட் சகல வசதிகளையும் தன்னகத்தே அடக்கியது. ரிமோட் கண்ட்ரோல் மசாஜ் சேர், மியூசிக்கல் சிஸ்டம், புக் செல்ப் வித் லம்ப், மினி ஸ்டோரேஜ் ஏரியா, மொபைல் சார்ஜ் ப்ளக், பாப் அப் மினி டேபிள் என்று பல வசதிகளை ஒருங்கே கொண்டது அந்த படுக்கை.
ஆராதனாவின் கண்கள் இன்னும் தூக்க கலக்கத்தில் இருக்க உடலில் லேசாக விழிப்பு தட்டியிருந்தது. நாசியில் ஏதோ வித்தியாசமான மணம் புகுந்து உடலுக்குள் ஒருவித புத்துணர்ச்சியை கிளப்பியது. மெதுவாக மூக்கு நுனியை சுருக்கி வாசம் பிடித்தாள் பெண். உள்ளுக்குள் எழுந்த ஆவல் அவளையும் அறியாமல் விழி திறக்க உந்தியது.
சோம்பல் ஒருபுறம் தாலாட்ட மறுபுறம் அந்த வாசனை இழுக்க பெண்ணவள் தன் கண்மணிகளை ஒருவாறு திறந்தாள். அங்கே தான் படுத்திருந்த படுக்கையோடு சேர்ந்திருந்த குட்டி மேஜையின் மீது வெள்ளைநிற பீங்கான் தட்டில் காய்ந்த ரோஜா பூக்கள் மற்றும் பெயர் தெரியா சில வகை பூக்களும் இலைகளும் தெரிந்தது. இப்படி மணமிக்க அலங்கார தோரணையை ‘பாட்பூரி’ என்பர். ரூம் ஸ்ப்ரே போல இயற்கையான பொருட்களை கொண்டு வாசனை பரப்ப பயன்படுத்தும் பிரபலமான முறை.
ஆராதனா மெத்தையில் படுத்தப்படியே மெதுவாக ஊர்ந்து அதன் அருகே சென்று கண்களை மூடியப்படி மூச்சினை இழுத்து சுவாசித்தாள்.
‘வுட்டி ஸ்பைசி’ வாசம் இது. மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு இவை அனைத்தும் கலந்தார் போல அதாவது மசாலா டீ போல கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அந்த மணம். காலையிலே குடிக்கும் பெட் காஃபி இல்லை இல்லை பெட் டீ போல மனதுக்கும் தேகத்துக்கும் உத்வேகத்தை பரப்பியது அந்த வாசனை. அப்படியே ஆழ்ந்து சுவாசித்தாள் பெண்.
இப்போது மெது மெதுவாக நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. பெண்ணவள் சட்டென்று இமைகளை திறந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். ‘தான் இப்போது எங்கே இருக்கிறோம்? இது யாருடைய இடமாக இருக்கும். கடைசியாக அந்த ரவியை பார்த்தது ஏதேதோ உளறி கொட்டியது அப்புறம் அவன் அணைப்பு கூடவே இதழ் ஒற்றல். பின்.. எதுவும் நியாபகம் வரவில்லை’.
அப்போது தான் கவனித்தாள் அணிந்திருந்த ஆடையை.
“அய்யோ அம்மா.. இது என்ன. என் ட்ரஸ் எங்கே போச்சி. நான் போட்ருக்குற ஷார்ட் யாருக்குள்ளது..? ச் ச.. தொள தொளன்னு லூசா வேற இருக்கு. அய்யோ. பேண்ட் எங்கே போச்சி. காணோமே”.  போர்வையை உதறி விட்டு பெட்டில் தேடிக் கொண்டிருந்தாள்.
அந்த அறையை ஒட்டினார் போல அமைந்திருந்த இன்னொரு கதவை யாரோ திறப்பது தெரிந்தது. தீடிரென கேட்ட அந்த அரவத்தில் தன் தேடுதலை நிறுத்தி சத்தம் வந்த திசையை பார்த்தாள் ஆராதனா. அந்த உருவத்தை பார்த்ததும் அவள் முட்டை கண்கள் வெளியே தெரித்துவிடும் அளவிற்கு கண்கள் விரிந்து, புருவங்கள் வியப்பில் எவெரஸ்ட் மலை முகட்டின் வடிவத்திற்கு மாறி, செவ்விதழ்கள் வட்டமாய் விரிந்து வெளிப்படையாய் அவளது ஆச்சரியத்தை காட்டியது.
அந்த கதவினை கேஸ்ஸுவலாக மூடிய படியே வந்துக் கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன். அப்போது தான் குளித்து முடித்திருப்பான் போலும் அடர்ந்த கேசத்தின் நுனியிலிருந்து வடிந்தோடிய நீர்த்திவலைகள் சாட்சி சொன்னது. புத்தம் புது மலராய் வதனம் ஜொலிக்க இளநகையுடன் அவளை பார்த்து சிரித்தான். அந்த சின்ன சிரிப்பில் அப்படியே வீழ்ந்து போனாள் மங்கை. பார்வையை லேசாக தளர்த்த அப்போது தான் கவனித்தாள் இடுப்பில் கட்டியிருந்த வெண்ணிற துண்டை. அப்படியென்றால் மேலே சட்டை எதுவும் அணியவில்லையா..?
படாரென விழி உயர்த்தி அவனை முழுவதுமாக பார்த்தாள். கட்டுமஸ்தான உடம்பில் ஆங்காங்கே தசை கோளங்கள் உருண்டு திரண்டு இருக்க இடது நெஞ்சின் ஓரம் ஒரு பறவை சிறகை விரித்துப் பறப்பது போலவும் அதனை சுற்றி நங்கூர வடிவமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இது பழநி மலை படிக்கட்டா இல்லை சீன பெருஞ்சுவரா என்று வியக்கும் வண்ணம் சிக்ஸ் பேக் அம்சமாய் காட்சியளித்தது.
அவன் அழகில் ஒட்டு மொத்தத்தில்  பெண்ணவள் வீழ்ந்தே போனாள். அவன் அவளருகே வந்து கண்ணெதிரே சொடுக்கி கூப்பிட்டான். அப்போதும் அசைந்தாள் இல்லை. அவனை முழுவதுமாக பருகி கொண்டிருந்தாள். வெகுஅருகில் நின்றதால் அவனிடம் இருந்து வந்த ‘ஜாக் ப்ளாக்’ லோஷனின் வாசமும் ஆண்மகனின் தேகச் சூடும் பெண்ணவளுக்குள் ஏதேதோ மாயத்தை செய்தது.
“ஹேய்.. ஆரு.. ஆரு..” அவன் தோள் தொட்டு உலுக்கவும் பெண்ணவள் சட்டென்று நினைவுக்கு வந்தாள். மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தவளை பார்த்து புன்னகையுடனே கேட்டான்.
“என்ன ஆச்சு மா. ஆர் யூ ஆல் ரைட்?”
“ம்ம்ம்.. ஐ ம் ஓ.கே”. வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்று விழுங்கினாள் பெண்.
“நான் வரும் பொழுது எதையோ தேடிட்டு இருந்தியே என்னது?”
அவன் கேட்டதும் தான் அவளுக்கு தான் தேடிய பொருள் நியாபகத்திற்கே வந்தது. சட்டென்று குனிந்து தொடை வரை இருந்த சட்டையை முட்டி வரை இழுத்துப் பிடித்தாள். அவன் முன் இந்த ஆடையில் இவ்வளவு நேரம் இலகுவாக இருந்ததை எண்ணி சங்கடம் மேலோங்க பெண்ணவள் உதட்டை லேசாக கடித்துக் கொண்டாள். கன்னங்கள் சிவக்க நாணத்தால் திணறிப் போனாள் அவள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இவள் இப்போது இப்படி பிகேவ் பண்ணுகிறாள்.
“ஹேய். என்ன விஷயம்” கூறியபடி தன்னை தொட வந்தவன் கைகளில் சிக்காமல் ஒரு அடி பின்னால் நகர்ந்தவள் “என்னோட ட்ரஸ் எங்கே. இந்த ட்ரஸ் ஏன் நான் போட்ருக்கேன்?” ஒருவழியாக மனதின் கலக்கத்தை மறைமுகமாக கேட்டுவிட்டாள்.
ஹைய்யோ இது தான் விஷயமா. “உன்னோட ட்ரஸ் ஈரமா ஆகிட்டு. சோ என்கிட்ட பொண்ணுங்க போடுற ட்ரஸ் இல்லாததால் என்னோட ட்ரஸ் போட்டு விட்டேன்” சொல்லிவிட்டு விஷமமாய் சிரித்தான்.
ரவிக்கிட்ட கூட்டிட்டு போன்னு சொன்னதும் இந்த கல்லு இப்படியா பாத் டப்புக்குள்ள கொண்டு வந்து போடணும். தன்னை காலபயணம் மேற்கொள்ள வைத்து உண்மையை விளக்கிய அந்த கற்களுக்கு சில பல நல்ல வார்த்தைகளால் பாராட்டியவள் தன்னெதிரே நின்றவனிடம் சுட சுட கேட்டாள்,
“அது சரி. போட்டு விட்டவர் கூடவே பேண்டையும் போட்டு விடுறதுக்கு என்ன?”
இவள் என்ன பேசுகிறாள் என்று ஒரு நொடி யோசித்தவனுக்கு அப்போது தான் அவளது கோபத்திற்கான காரணம் விளங்கியது. “ஹே.. இது தான் மேட்டர்ரா..?!  ஹா ஹா ஹா…” வாய்விட்டு சத்தமாக சிரித்தபடி பெட்டில் அமைந்திருந்த மசாஜ் சேரில் அமர்ந்தான். அந்த இயந்திரம் தேகத்திற்கு இதம் கொடுத்திட அவன் இவளிடம் எதுவும் பேசாமல் அதை அனுபவிக்க தொடங்கினான்.
பெண்ணவளுக்குள் கோபம் துளிர் விட ஆரம்பித்தது. “என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன். நீங்க இப்படி சிரிச்சிகிட்டு உங்க வேலையை பார்த்தா என்ன அர்த்தம்?”
“யூ ஆர் மை வைஃப்ன்னு அர்த்தம்”  ஒற்றை கண்ணை சிமிட்டியப்படி சொன்னான்.
“ஏய்.. ஏய்..” கைகளை அவன் கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்தவள் கோபத்தை கட்டுப்படுத்தியவள் ஏகவசனத்தில் கேட்டாள். “டேய் உன் மனசுல என்னடா நினைச்சுகிட்ட. உன்னை லவ் பண்ணுறேன்னு ஒத்துகிட்டதுனால நீ சொல்லுற எல்லாத்தையும் கேட்டுட்டு இருப்பேன்னு தப்பு கணக்கு போடாத. மவனே கொன்னுருவேன். ஒழுங்கு மரியாதையா நேத்து என்ன நடந்ததுன்னு சொல்லு. இல்லை நடக்கிறதே வேற”.
“ஓ. கே. ஓ. கே. கூல் பேபி. ஒழுங்கா இப்படி மரியாதையா கேட்டா நானே சொல்ல போறேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற பேபி. அதோ அந்த மூலையில கிடக்குது உன்னோட பேண்ட். நான் உனக்கு ஒழுங்கா தான் ட்ரஸ் போட்டுவிட்டேன். நீ தான் படுத்துகிட்டே ஸ்விம்மிங் பண்ணுறேன் கதகளி ஆடுறேன்னு காலையும் கையையும் சும்மா வச்சிக்காம..” பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு அவளை ஒரு மார்க்கமாக பார்க்கவும் பெண்ணவளுக்குள் கிலி பரவியது.
“வ..ச்..சி..க்..க..மா..” அவளுக்கு வார்த்தைகள் தடுமாறின.
“கையையும் காலையும் அங்க இங்க போட்டு உருண்டதுல லூசா இருந்ததால பேண்ட் கழந்து கீழே விழுந்துருக்கு. இது தான் விஷயம். இதுக்கு போய் ஒரு கன்னிப் பையனை சந்தேக பட்டுடியே. இது தான் பெண் குலம் பண்ணுற நீதியா”.
‘ஓ. அவ்ளோ தானா. நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்’. ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஆடையை எடுத்து அணிந்தவள் திரும்பி வந்து அவன் முன்னே நின்றாள்.
அவனோ இவளை கண்டு கொள்ளாமல் யாரிடமோ புலம்புவது போல இவளிடம் பேசினான். “நேத்து நைட் செம ஒர்க். சோ டயர்ட் பேபி. என்னை கொஞ்ச நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணாத பேபி”.
‘எல்லாம் என் நேரம். இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். இந்த ட்ரஸ் ஓட எப்படியும் வெளிய போக முடியாது. இவனாக ஏதாவது செய்தால் தான் உண்டு’. தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டவள் அந்த அறையை சல்லடை போட்டு கண்களால் துலாவினாள்.
மரத்திலான அலங்கார பொருள்கள் அதிகம் அந்த அறையில் விரவி கிடந்தது. கட்டிலின் இடதுபுறம் தொட்டில் போன்ற அமைப்பில் கயிறுகளால் கட்ட பட்டிருந்த ஊஞ்சலும், வலப்புறம் வெண்மையும் காஃபி கலரும் கலந்தார் போல வார்ட்ரோப்,  அதனை ஒட்டி உடைமாற்றும் அறையும்  இருந்தது.
பெட் ரூமோடு சேர்ந்து பால்கனியும் இருந்தது. ஆராதனாவின் பாதங்கள் அந்த திசை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது. பச்சை பசலென்ற புல்வெளியும், சிறு சிறு தொட்டிகளில் பூத்து குழுங்கிய வண்ண வண்ண மலர்களும், புத்தர் சிலையும் என பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் அமைந்திருந்தது அந்த பால்கனி தோட்டம்.
அங்கே கொஞ்சம் தள்ளி டென்ட் வடிவில் கயிறுகளால் தாங்கபட்ட கூடாரம் போன்ற ஊஞ்சலும், தூக்கனாங் குருவிகூடு போன்றிருந்த நாற்காலிகளும், ஆராதனாவின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தது. இவன் கலை ரசிகன் போலும். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிமைத்திருக்கிறான்.
இவனுக்கு வெண்மை நிறம் பிடித்த நிறம் போல எங்கு பார்த்தாலும் அதே நிறத்தில் ஏதாவது ஒரு பொருள் காணமுடிகிறதே. அதோடு இவனுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வது பிடித்தம் என்பதையும் அவளுக்கு சொல்லியது அந்த அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும்.
கண்ணாடியால் ஆன அந்த பாதுகாப்பு சுவர்களில் கைகளை படரவிட்டவள் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்கலானாள். வெளி அழகை கண்டு மெய் மறந்து போனாள். அவன் அறையையே அவ்வளவு அழகாக அமைத்திருப்பவன் சுற்றுப்புறத்தை அதைவிட அழகாக அல்லவா அமைத்திருப்பான். ஏதோ ஒரு மாய உலகத்தில் இருக்கின்ற உணர்வு பெண்ணவளுக்குள்.
அவள் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் பின்னே முதுகோடு ஒட்டினாற் போல வந்து நின்றான் ரவி. மீசை முடிகள் அவளது காது மடலில் மடல் எழுத அவன் இதழ்கள் சொன்னது “இப்போ எப்படி பீல் பண்ணுற பேபி. ரீலாக்ஸ் ஆகிட்டியா?”
‘இவனுக்கு என் உணர்வுகளை படிக்க தெரிந்திருக்கிறது. பெண்ணாக என் மனதில் எழுந்த ஐயத்தை கழையவே இவன் கண்டு கொள்ளாதது போல நடித்திருக்கிறான். கள்ளன்’.
“ம்ம்ம்..” ஏனோ வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை. காலை நேர பனி காற்றின் குளிர்ச்சியோ இல்லை ஆண்மகனின் அருகாமையின் கதகதப்போ.
“இப்படி உன் கூட அதுவும் என் வீட்ல என்னோட அறையில ஒன்றா சேர்ந்து சன் ரைஸ் பார்க்கணும்னு எவ்ளோ நாள் கனவு கண்டிருப்பேன் தெரியுமா?” அந்த சூழ்நிலையை அனுபவித்த படி கூறியவன் தொடர்ந்தான். “நீ லேட்டா வந்தாலும் செம மாடர்ன்ன்னா பாத் டப்புக்குள்ள என்ட்ரி ஆகியிருக்க. பியூச்சர்ல நினைச்சி பார்க்கும் போது செம ஜாலியா இருக்கும் போ”.
“ஹ்ம்ம்ச். உங்களுக்கு ஜாலியா இருக்கும் எனக்கு கேலியால இருக்கும்”. முகத்தை திருப்பி கொண்டாள் பெண்.
“ஹ்ம்ம். உனக்கு என்னை பற்றி இப்போ நல்லா தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் இப்படி பேசுனா எப்படி பேபி”.
“ச் ச் சு.. எதுகெடுத்தாலும் அதென்ன பேபி”.
“பின்ன நீ என்னோட பேபி இல்லையா..?!” அவளை அணைத்தவாறே முகத்தை திருப்பியவன் “யூ ஆர் மை பஃஸ்ட் பேபி ஆல்வேஸ்” என்று கண்ணோடு கண் நோக்கி சொல்லியவன் நெற்றியில் ஈர முத்தத்தை பதித்தான்.
“வா. இங்கே வந்து உட்காரு. நாம் பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. இதுக்கு மேல நமக்கு இப்படி ரகசியமா பேச நேரம் கிடைக்குமோ என்னவோ?”  எதையோ மனதில் நினைத்தபடி சொன்னவன் அவளை கைபிடித்து அழைத்து வந்து அந்த கூடு வடிவ ஊஞ்சலில் அமரவைத்தான். அவளை ஒட்டி அவனும் அமர்ந்து கொண்டான்.
அவள் இடதுக்கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவன் தான் கடந்து வந்த நிகழ்வுகளை அவளுடன் பகிரலானான்.
“எனக்கு விவரம் தெரியுறதுக்கு முன்னவே என்னோட அம்மா என்னை விட்டு போயிட்டாங்க. அப்போ என்னை கவனிச்சிக்கிறதுக்காக என்னோட பாட்டி வந்தாங்க. உண்மையிலே அவர்கள் என்னோட சொந்த பாட்டி கிடையாது”.
“என்ன சொல்றீங்க ரவி?”அதிர்ந்து விழித்தாள் ஆராதனா.

Advertisement