Advertisement

காதலித்துப் பார்..
இந்த பூமி அழகாகும்…
வானம் அழகாகும்…
பூக்கும் பூக்கள் ..
இன்னும் என்ன வேடிக்கை. 
வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்… 
இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்…!
செய்வது அறியாது பேசா மடந்தையாக விழித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
ஆழ்ந்த முத்தத்தை பரிசளித்தவன், அவள் சுவாசிக்க இடமளிக்க பெண்ணவள் நாணத்தால் நடுங்கி போனாள்.
“ம்ம்ம்ம்… இப்போ கூட உனக்கு அந்த நிழல் தேஜாவூ தான் வேணுமா..? உன் கண் முன்னே நிக்கிற நிஜம் வேண்டாமா..? ” இதயத்தை உருக்கும் குரலில் அவன் சொன்னது பெண்ணவளை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. ‘நா’ மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு பேச மறுத்தது. எதுவோ ஒன்று அவனிடம் பேச தடையிட்டது.
“அந்த நிலா சாட்சியா…
வானத்துல இருந்து கொட்டுற அந்த புனிதமான மழை போல.. என்னோட காதல் உனக்கு புரியும்… உன்னோட மூச்சு காற்று வெட்பம், இந்த கற்களுக்கு உயிர் கொடுத்தா…
இதுக்கு மேலே நான் எதையும் சொல்லி உன்னை குழப்ப விரும்பலை. நீயே ஒரு நாள் தெரிஞ்சிப்ப, நான் சொன்னது நிஜமா கட்டுகதையான்னு…
அப்போ வாடி நீ எதிர்ல… இத்தனை வருஷமா என்னை தவிக்க விட்டதற்கு எல்லாத்துக்கும் சே..ர்..த்..து ‘வச்சி’ செய்யுறேன்… ” அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.
மீசையை முறுவி விட்டுக் கொண்டவன் இதழோரம் புன்னகை மலர, அவளுக்கு வழி விட்டான். தப்பித்தால் போதும் என்று அவளும் ஓடிவிட்டாள்.
” ஐ ம் வெயிட்டிங் பேபி..” சத்தமாக இப்போது முறுவலித்துக் கொண்டான்.
அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆராதனாவிற்கு பதற்றம் சிறிதும் குறைந்த பாடில்லை. குழப்பமான மனநிலையில் பெண்ணவள் அவள் பாட்டிற்கு பேருந்தில் அமர்ந்திருந்தாள். அவளது இடம் வந்த பிறகும் இறங்கவில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்து அவன் சொன்ன விஷயங்களிலே வந்து நின்றது.
நினைவுகள் பின்னோக்கி செல்ல… அவள் அமர்ந்திருந்த பேருந்து மட்டுமே இப்போது முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆம். அவன் சொன்னது போல் மிட்டாய் காட்டி தன்னை சீரழிக்க இருந்த தருணத்தில் எவனோ ஒருவன் வந்து தன்னை பாதுகாத்து , பத்திரமாக வீடு சேர்த்ததாக அம்மா சொல்லி அவள் கேட்டதுண்டு. நினைவுகளில் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக இல்லை. ஆனால் அதன் தாக்கம் சிலசமயம் தன்னையும் அறியாமல் வெளிப்படுவதுண்டு.
யாருக்கேனும் தீங்கு நடந்தால்.. அதை தன் வாழ்வோடு ஒப்பிட்டு தனக்கு நடந்தது போல இந்த மனம் கற்பனை செய்து கொள்ளும். அவ்வாறு எங்கேயோ யாருக்கோ ஏதேனும் நடந்தால் பெண்ணவள் கதறி துடித்த சம்பவங்கள் உண்டு. அந்த சமயங்களில் தாயின் அரவணைப்பிலே கழிப்பாள். அம்மா சொன்ன உற்சாக வார்த்தைகள் தான் அவளை அந்த நிலையிலிருந்து படிப்படியாக மீட்டு இயல்புக்கு திரும்ப செய்திருந்தது.
தாயை கடவுள் என்று கவிஞர்கள் வர்ணித்து கேட்டதுண்டு. ஆனால் அதனிலும் மேலான இடம் என்று ஒன்று இருந்தால் அதை தான் நான் பரிசளிப்பேன் என் அம்மாவிற்கு என்று அவளது மனம் அடிக்கடி சொல்லும்.
அவன் சொன்ன இரண்டாவது நிகழ்வு ஓரளவிற்கு நியாபகம் இருக்கிறது. ஆனால் அப்போது தன்னை காப்பாற்றியவனின் முகம் தெளிவாக நினைவில்லை. ராம் குரல் மட்டும் தான் நியாபகம் இருந்தது. ஒருவேளை ராம் பார்த்திருக்கலாம் அவனை. அவனிடம் பேசினால் ஒருவேளை பதில் கிடைக்குமோ…?!
ஆனாலும் அந்த குலோத்துங்கன்… ம்ஹும்…அவ்ளோ பெரிய அரசர் பெயர் இவனுக்கு எதுக்கு… போடா தடியா… எப்போ பாரு என்னை குழப்பி ‘ஜாம்’மாக்கி விடுறதே இவன் வேலை… சோ இவனுக்கு வேற பெயர் தான் வைக்கணும்.
என்ன நேம் வைக்கலாம்….??!
மம்ம்ம்ம்…
யோசித்தபடியே ஜன்னல் வழி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே கண்ணில் பளிச்சிட்டது குண்டு குண்டு குலோப்ஜாம் விளம்பர பலகை…
“ஹைய்…..ஐடியா..
ஹா ஹா ஹா…
சிக்கிடிச்சு…
என்கிட்ட வந்து… வம்பு செய்து… குழப்பி… இன்பம் காணுவதால் இன்று முதல் நீ குலோப்-ஜாமூன் என்று அழைக்கப்படுவாயாக…”
ஏதோ அவன் எதிரே இருப்பது போல் கற்பனை பண்ணியபடி கை உயர்த்தி ஆசி வழங்கினாள் ஆராதனா.
“ஹா.. ஹா.. நைஸ் நேம்ல…
ஹா ஹா ஹா…”
தனக்கு தானே புகழ்ந்து கொண்டு கலகல பட்டாசாய் சிரித்துக் கொண்டாள்.
மனதிற்குள் ஒரு வித இன்பம் பரவியது. அவன் முகம் கண்முன்னே வந்து கண் சிமிட்டியது. உடலெங்கும் காதல் அணுக்கள் ஆட்டம் போட துவங்கியது. சற்று முன் அவன் தந்த முத்தத்தின் கதகதப்பின் மிச்சம் உள்ளுக்குள்ளே கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
இவனிடம் மட்டும் என் மனம் ஏன் அடங்க மறுக்கிறது…? அவன் அருகில் வந்தாலே நான் நானாக இல்லையே… என்னுள்ளே எப்படி இத்தனை மாற்றங்கள்…??! இப்பொழுது எல்லாம் அந்த தேஜாவூ நினைவு வந்தால் கூட இவன் முகம் தானே ஊஞ்சலாடுகிறது… தேஜாவூவிற்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்…??! ஒருவேளை அ….வன்… தான் தேஜாவூவாக இருக்குமோ… ஆனால் எப்படி இதை நம்ப…? ஹ்ம்மம்ம்…
குரங்கு மனம் நிலையில்லாமல் அங்கும் இங்கும் தாவியது. பெண்ணவள் மனம் குழம்பியது தான் மிச்சம். தன்னுள்ளே பதிலை வைத்துக் கொண்டு வேறேங்கோ தேடினால் எப்படி கிடைக்கும்…??!
“ஹ்ம்ம்…
அப்புறம் என்ன சொன்னான்….??!” யோசித்தபடியே இருக்கவும் பேருந்து நிற்க்கவும் சரியாக இருந்தது. அவள் இப்போது கடைசியாக மெயின் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“ஹைய்யோ கிருஷ்ணா…. இது என்ன விளையாட்டு. என்னை ஏன் இப்படி பாடாய்படுத்துற… நான் எங்க வந்து சேர்ந்திருக்கேன். வீட்டுக்கு போகாம அப்படியே இங்க வரை வந்திருக்கேன்.
ச் ச… வர வர இந்த குலோப்ஜாம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறான்…”அலுத்துக் கொண்டாலும் வேறு வழியின்றி இறங்கி, அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி போனாள்.
“டேய் குலோப்ஜாம்… என்…ன…டா… செஞ்ச… உன்னால நட்டு கழந்து போய் திரியிறேன்டா…
போடா விளங்காதவனே…”
புலம்பியபடியே நடையை தொடர்ந்தாள்.
அப்போது தட் தட் தட்… என்ற பலத்த காலடி ஓசை அருகே கேட்கவும் சட்டென திரும்பி பார்க்க, அந்த இருட்டில் எங்கிருந்து அந்த நபர்கள் வந்தார்கள் என உணரும் முன்னே அவளை சூழ்ந்து கொண்டனர்.
இது என்னடா வம்பா போச்சி.. நானே நொந்து போய் இருக்கேன் இதுல இவனுங்க வேற…
“யாருடா நீங்க…??”
திடுத்திப்புன்னு எங்கிருந்து வந்தானுங்க… ஒவ்வொருத்தனும் டன் கணக்குல திம்பானுங்க போல… சும்மா கும்…மு..ன்..னு… குண்டு குண்டு குலோப்ஜாமூன் கணக்காலா இருக்காணுங்க… அட… இது அந்த நியூ தேஜாவூ ரவிக்கு வச்ச பெயராச்சே…சோ இவனுங்களுக்கு வேற பெயர்.ர்.ர்.லா.. வைக்கணும்… யோசித்தபடியே இருந்தவளை கலைத்தது அந்த முரடனின் குரல்.
“ஹே பொண்ணு.. சத்தம் போடாமல் நீயாவே எங்க கூட வந்துரு.. இல்லன்னா பேஜராகிடுவா…”
உண்மையாவே இவனுங்க ரவுடி தானா…?
“ஏய்.. என்ன பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு.. நட…”
“டேய்.. இன்னும் என்னடா இவகிட்ட பேசிக்கிட்டு தூக்குங்கடா…”
“ஹே… ஹே… நில்லுங்கடா… யாருடா நீங்க.. என்ன எதுக்கு வர சொல்றீங்க…”
“ஹா ஹா ஹா ஹா……
வேற எதுக்கு ஓடி பிடிச்சி விளையாட தான்… போலாமா…”
“டேய் டேய்… என்னங்கடா நினைச்சிக்கிட்டிங்க…. ஓடி பிடிச்சி விளையாட இதுவாடா நேரம்… போங்கடா.. போங்க.. போய் பிள்ளை குட்டியை படிக்க வைக்க வழிய பாருங்க..” அசால்ட்டாக கூறியபடி நடையை தொடர்ந்தாள் பெண்.
“ஏய்.. எங்கடி போற…”
“நில்லுடி…”
“டேய்.. இன்னும் என்னடா அமைதியா பேசிக்கிட்டு தூக்குங்கடா…”
எல்லோரும் ஒரு சேர பாயவும் அந்த பெண் மான்குட்டி கொஞ்சம் மருண்டு தான் போனது..
இவனுங்க உண்மையாகவே என்னை கடத்த போறாங்களா…?!
அட பாவி தேஜா வூ… எங்கடா போனா…?? டேய்.. தீ வெட்டி மண்டையா… ஏய் குலோப்ஜாமூன் எங்கடா இருக்க.. பெருசா தேஜாவூக்காக காப்புரிமைல்..லா…ம் கேட்டியே…டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சடா…
அவளை அலேக்காக ஒருவன் தூக்கி கொண்டு செல்லவும் பெண்ணவள் உள்ளம் ‘ஃபியர் மோட்’டிற்கு பறந்தது.
டேய் தேஜா வூ.. இது காமெடி ஸீன் இல்லைடா.. டேஞ்சரஸ் சிட்டுயேஷன்.. சீக்கிரம் வாடா.. நாலு வயசுல காப்பத்துனேன்.. பத்து வயசுல காப்பத்துனேன்.. அப்படி இப்படின்னு பீலா வுட்டியேடா… இப்போ தான்டா நீ நிஜமாலுமே காப்பத்தனும்…. வாடா லூசு பயலே..
“டேய் டேய்… மெதுவா போடா.. கொஞ்சம் மேடு பள்ளம் பார்த்து போடா… பாடி ஷேக் ஆகுதுல… நோகமா நொங்கு தின்னு வளர்ந்த உடம்புடா….. தாங்குமா…??!” அவளை தூக்கி கொண்டு செல்லும் ரவுடிக்கு.. கூட சில பாராட்டு பாத்திரங்களை வாசித்தவள் தொடர்ந்து பேசி கொண்டிருந்தாள்.
“டேய்.. சீக்கிரம் நடடா.. இவள் போடுற சத்ததுக்கு எவனாது வந்துருற போறான்”.
“டேய் போய் சீக்கிரம் டிக்கிய திறடா…”
“ஏய்… ஏய்… என்னங்கடா நீங்க..
ஆ.. வூ… ன்னா…டிக்கில போட்டு தூக்கிட்டு போறது… தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்கடா… டிக்கில எல்லாம் என்னால இருக்க முடியாது… போடா போய் டிரைவர் சைடு டோர் ஓபன் பண்ணு… மம்ம்ம்ம்… கம் ஆன்… குயிக்..”
“டேய்..இவள் அடங்க மாட்டா போல..”
“நாங்க உன்னை கடத்திட்டு போறோம்ங்கிற ஒரு பயம் கூட இல்லமா இந்த பேச்சு பேசுற…”
“ஹாங்… அதுக்கு இப்போ என்னங்கிற… நீ என்ன தொழிலுக்கு புதுசா…?”
“ஏய்.. இவ்ளோ அசால்ட்டா சொல்லுற.. இதுக்கு முன்ன எத்தனை முறை உன்னை கடத்திருக்கிறாங்க…??!!! சொல்லுடி..”
“எனக்கு தெரிஞ்சி இதான் ஃபஸ்ட்…” கண்சிமிட்டி சிரித்தப்படி சொன்னாள்.
“என்னடா இந்த பொண்ணு… லூசு மாதிரி சிரிக்கிறா…”
“டேய் முதல பாஸுக்கு போன் பண்ணி இந்த பொண்ணு தானான்னு கன்பார்ஃம் பண்ணு. சரியான மெண்டல் கேஸ்ஸா இருக்கும் போல…”
“டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..
ஹே.. ஹே…
டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..
உன் பார்வை.. உன் தேகம்…
உன் கேசம்…. உன் வாசம்…
எல்லாம்….
டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..
ஹே.. ஹே…
டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..
மீ மாட்டி… மீ சிக்கி…
மீ முழிச்சி… மீ நொந்து…
எல்லாம்… உன்னால்….
திஸ் பாய்ஸ் ஆர்
டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..
ஹே.. ஹே…
டே….ஞ்சரஸ்….டே…ஞ்சரஸ்…..”
சன்ன குரலில் அழகாய் மைக்கில் ஜாக்சன் பாப் பாடலை உள்டாவாக்கி பாடினாள் பெண். அந்த ரவுடிகளை விமர்சித்தப்படி, தப்பிக்க வழி கிடைக்காத என்றெண்ணத்தில் ஏதேதோ செய்தாள். கிட்டத்தட்ட பையித்தியம் போல. உணர்வுகளை கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த வழி. வேறு ஏதும் வேலையில் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், உணர்வுகளை சிந்தாமல் சிதறாமல் கையாள முடியும். அதை தான் ஆருவும் செய்தாள்.
“டேய்..இந்த பொண்ணு தான்டா… பாஸ் கிட்ட கேட்டுட்டேன். சீக்கிரம் தூக்கிட்டு வர சொன்னார். தேவையில்லாம பேசாம வேலையை பாருங்கடா..”
அய்யய்யயோ…… உண்மையாவே தூக்க போறாங்களே.. டேய்… தேஜாவூ வாடா…
உச்சி முதல் பாதம் வரை பாய்ந்தோடி வந்த பயத்தை எச்சில் முழுங்கி அனுபவித்தாள் பெண். குலோப்ஜாமூனும் சரி.. தேஜாவூவும் சரி… யாரும் வரப்போவதில்லை. இனி தானே தான் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். எண்ணம் வலுப்பெற பெண்ணவள் மனதில் சில திட்டங்கள் உலா வந்தது.
“ஹ்ம்ம்… ஏறு.. சீக்கிரம் சத்தம் போடாம வண்டியில ஏறு”.
“டேய்.. எனக்கு டிரைவர் சீட் இல்லையாடா…” பாவமாய் கேட்டாள்.
அவளை சுத்தி நின்றவர்கள் முறைத்த முறைப்பில்… “ஹே.. நான் நல்லா டிரைவ் பண்ணுவேண்டா… பிலிவ் மீடா ரவுடிஸ்”.
அவள் சொன்ன தினுசில் அனைவரும் பக்கென சிரித்து விட்டனர்.
“நாங்களும் எத்தனையோ பேரை கடத்திருக்கோம். ஆனால் உன்னை மாதிரி ஒருத்தியை பார்த்ததே இல்லை. சரியான பீஸ் தான் நீ”.
“ஹீ… ஹீ.. ஹீ….”
என்னைய காமெடி பீஸ் ன்னு சொல்லுற.. இருடா மவனே… நான் மட்டும் தப்பிச்சி போகட்டும்.. உனக்கு இருக்குடா வேட்டு… மனதிற்குள் கருவி கொண்டு வெளியே ஜோக்கர் ஸ்மைல் காட்டினாள்.
“டேய் நாம தான் இத்தனை பேர் இருக்கிறோமே.. பின்ன என்னடா….டிரைவர் சீட்ல உக்கார சொல்லு. நம்மள மீறி இவளால் தப்பிக்க முடியுமா என்ன… போற வரைக்கும் கொஞ்சம் என்ட்டயிம்மா ஜாலியா இருக்கும்”.
ரணக்களத்திலும் இவனுக்கு குதூகலம் கேட்குது. அடா பாவி மனுசா.. உனக்கு அறிவே இல்லையா.. நீயெல்லாம் எப்படிடா ரவுடி ஆனா…?? ஆராதனா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“ஆமா தலைவா… நாமா இப்படி சிரிச்சி பேசியே எவ்ளோ நாள் ஆச்சு. மனசுல இருக்குற டென்ஷன் இந்த பொண்ணால அப்படியே இறங்கிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே சந்தோஷமா இருப்போமே.
“அப்டிங்கிற…” அந்த தலைவன் என அழைக்கப்பட்டவன் சிறிது யோசனைக்கு பிறகு ‘சரி’ என்றான். தன் சகாக்களை இப்படி சிரித்த முகத்துடன் பார்ப்பது அவனுக்கும் ஆனந்தமே. அதில் வேறு இந்த சின்ன பெண் சரியான சுட்டியாய் இருக்கிறாள். இவளை எதற்கு கடத்தி வர சொன்னர்களோ… ஹ்ம்ம்… இவளுடன் நட்பு வளர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமே இவளை காப்பாற்றி விட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
“ஹ்ம்ம்… இந்தா பொண்ணே.. பிடிச்சிக்கோ சாவியை ” என்று சொல்லியபடி அத்தலைவன் டிரைவர் சீட் அருகில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“தலைவா.. என்ட்ற பேரு ஆராதனாவாக்கும். பொண்ணு மண்ணுன்னுலாம் கூப்பிடாண்டாம்”.
“அப்புறம் பாய்ஸ் சொல்லுங்க உங்களை பற்றி..” இயல்பாக சொல்லியபடி வண்டியை கிளப்பினாள். அவளையே அவள் கிட்னாப் செய்துகொண்டாளோ..??!
###############
“ம்… ந ந ந ந….
காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ..
காதல் தொல்லை தாங்கவில்லையே..
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே…
யோசனை…
ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேருமோ..
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே…
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்…
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே..
நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே…
காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ…
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே…”
யுவன்ஷங்கர் இசையில் சூரஜ் சந்தோஷ் பாடிய பாடலை… இம்மியும் ஸ்ருதி மாறாமல் மனதை கவர்ந்திழுக்கும்படி பாடிய படியே… கம்பீர துள்ளலுடன்… விரலில் கார் சாவியை ஆட்டியபடியே.. துள்ளி அடங்கிய கேசத்தை மறுகையால் வாரியபடியே.. புன்னகை முகமாய்.. பாந்தவாக பொருந்தியிருந்த ரேய்மேண்ட் சூட்டில்.. ஆணழகனாய் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன்.
பார்த்த மாத்திரத்தில் நெஞ்சில் பச்சக்கென ஒட்டி கொள்ளும் முகம். எந்த பெண்ணிற்கும் ஏக்கத்தை பரிசளிக்கும் தோற்றம்… அத்தனை அழகனாய்.. அதுவும் தன் கண்ணிற்கு எதிரே நடந்து வந்துகொண்டிருக்கும் தன் ஒற்றை ஆசை பேரனை விழிகளுக்குள் நிரப்பியபடி ஜொள்ளு விட்டப்படி பார்த்து… இல்லை இல்லை.. சைட் அடித்துக் கொண்டிருந்தார் அயர்ன் லேடி.
அவன் இப்போது பாட்டியை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான். இதழ்கள் அதன் பாட்டிற்கு பாடலை ஹம் செய்தது…
“அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே…”
“என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு.. யாரடா தட்டி கேட்கணும்…”
அவன் ஒன்றும் சொல்லாமல் பாடியபடி பாட்டியின் கன்னத்தை ஆசையாய் கொஞ்சினான்.
“ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே..
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்…”
“டேய்.. இந்த கிழவிக்கு வயசாகிட்டுன்னாடா சொல்லுற..?” அங்கலாய்த்த பாட்டியை கண்டு கொள்ளாமல், அவர் எதிரில் அமர்ந்தபடி அவர் கைகளை தன் கைகளில் கோர்த்து கொண்டே தொடர்ந்தான்….
“நினைவுகளில் மொய்க்காதே.. நிமிடமுள்ளில் தைக்காதே..
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்..
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்..”
“என்னடா… பக்கத்துல தானடா இருக்கேன்.. பின்ன எதுக்குடா வீடு தாண்டி வரணும்…”
“உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்..”
“அச்சச்சோ.. ஏய் லதா.. சீக்கிரம் குடிக்க தண்ணீ கொண்டு வா.. ரவிக்கு விக்கல் எடுக்குதாம்…”
“ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்…”
“டேய்.. தினமும் என்னை பார்த்துட்டு தானடா ஆபிசுக்கே போற..”
அவன் எழுந்து கொண்டு பாட்டியையும் கை கொடுத்து எழுப்பி.. அவன்பாட்டிற்கு ஆட தொடங்கிவிட்டான்…
“ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்…”
“டேய் டேய்.. இந்த கிழவி கூட போய் ஆடுறீயேடா… கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டி கூட ஆடி பாடுறதை விட்டுப்புட்டு.. ஏன்டா.. என்ன பாடாய் படுத்துற…”
“என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே…”
“எம்மாடி நேகா.. இங்க வாமா… உன்னை தான் ரவி கூப்பிடுறான் பாரு..”
“நான் பிறந்தது மறந்திட தோணுதே…
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ.. என் தாகமே….”
பாட்டியின் கைகளை பிடித்து சுற்றி சுற்றி ஆடியவன்.. அப்படியே பாட்டியை சேரில் உட்கார வைத்துவிட்டு… பின்னே வந்து கொண்டிருந்த நேகாவுடன் அடுத்த ஆட்டத்தை தொடர்ந்தான்…
“ம்… விழிகளிலே உன் தேடல்.. செவிகளிலே உன் பாடல்..
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்.”.
விரல்களை பிடித்துக்கொண்டு இடுப்பில் மறுகை வைத்தபடி… கால்களை முன்னும் பின்னும் பாட்டிற்கு ஏற்றப்படி அசைத்து அழகாய் ஆடினர் இளையவர்கள்.
“காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை..”
இப்போது நேகாவும் கூட சேர்ந்து பாடினாள். அத்தனை நளினமாய்.. அழகாய் இருவரும் அவரவர் உலகில் கனவில் மிதந்தபடியே ஆட்டத்தை தொடர்ந்தனர்.
“யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்…
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்…
ஏன் இந்த தாமதம்…
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்..!”
நேகாவின் உடல் மொழியில் அவளது ஏக்கம் ரவிக்கு புரிந்தது… “ஹேய்.. ஆர் யூ ஸ்டில் லவ் வித் மாதேஷ்..?!”
(அதான்ங்க முதல் முறை ரவி இந்தியா வந்து அமெரிக்கா திரும்பும் போது மாலில் சந்தித்து கொண்ட ஸ்நேகிதன் ஒருவன் வந்தானே அந்த மாதேஷ் தான் நேகாவின் காதலன். இருவருக்கும் காதல் ஆனால் வெளியில் பகிர்ந்து கொள்ளாத காதல்.)
நேகா ஒன்றும் பேசவில்லை. அவள் கண்கள் மட்டும் ‘ஆம்’ என்பது போல கண்சிமிட்டி சைகை செய்தது.
“ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்..”
நேகாவின் குரலில் காதல் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் அவனும் மிச்ச ஆட்டத்தை தொடர்ந்தான்.
“இந்தப்பா ரவி தண்ணீ…”என்று வந்த லதா ஆண்டியையும் அவன் விடவில்லை. அவரையும் இழுத்து கொண்டு வந்து ஒரே ஆட்டம் தான்.
சத்தம் கேட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க வந்த ராஜசேகரையும் அவன் இழுத்து கொண்டான் தன் ஆட்டத்திற்குள். வீடே பாட்டும் ஆட்டமுமாய் களை கட்டியது.
ஆராதனா தன்னை கடத்த வந்த ரவுடிகளிடம் இலகுவாக பேசி காய் நகர்த்த… இங்கே ரவி வர்மனோ ஆடி பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறான். இத்தனை வருடம் மனதிற்குள் வைத்திருந்த காதலை தன் தேவதையிடம் கொட்டிவிட்ட திருப்தியில் மனம் இலகுவாகி மனதிற்குள் மகிழ்ச்சி மாத்தாப்பூ பிரவேசம்.
அவனது ஆட்டத்தையும் பாட்டையும் ரசித்து பார்த்து கொண்டாடி மகிழ்ந்தது அவனது குடும்பம்.
“போதும்டா பேரா…. எதுக்கு இவ்ளோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். என்ன விஷயம்டா…”
“சும்மா தான்..” கண் சிமிட்டி தோள் குலுக்கி சொன்னான் ரவி.
“ஏய் ரவி. பொய் சொல்லாத. சம்திங் ஸ்பேஷல். டெல் மீ யா”.
“ஆமா ரவி. நேகா சொல்லுறது போல ஏதோ விஷயம் இருக்கு. இத்தனை வருஷத்துல உன் முகத்துல இவ்ளோ சந்தோஷம் நாங்க யாரும் பார்த்ததே இல்லை… ஹப்ப்பா… பார்க்கவே எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா?”
பாட்டி,அப்பா, லதா ஆன்ட்டி, நேகா எல்லோரும் எவ்வளவு கேட்டும் அவன் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. பிறகு நேரம் வரும்போது சொல்கிறேன் என்று போய்விட்டான் அவனறைக்கு.
“லதா நீ ரவிக்கு புடிச்ச இடியாப்பமும் தேங்காய் பால் குர்மாவும் பண்ணுறீயா…? அவனை சந்தோஷமா பார்க்கும் போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு”.
“கண்டிப்பா பண்ணுறேன். ஆமாம்மா எனக்கும் அவனை இப்படி பார்க்கும்போது ஹாப்பியா தான் இருக்கு”.
“ஹ்ம்ம்…இளங்கோ எங்கே? இன்னும் வீட்டுக்கு வரலையா…?”
“ஃப்ரென்ட் ஒருத்தரை பார்க்க போனதா சொன்னார். லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கார்”.
“ஓ.அப்படியா.. சரி நீ போய் வேலையை பாரு”.
“ம்ம்ம்ம்….” சொல்லியபடி லதா கிச்சனுக்குள் சென்றுவிட்டார்.
ராஜசேகர் பாட்டியின் அருகில் வந்து..
“அம்மா கவனிச்சீங்களாம்மா. ஏதோ கண்டிப்பா நடந்திருக்கு. அதான் ரவி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்”.
“ஹ்ம்ம்… நானும் அப்படி தான் நினைக்கிறேன்”.
“அம்மா. நான் இன்றைக்கு கீர்த்தனா அதான் என்னோட சின்ன வயசுல நம்மளோட எதிர் வீட்ல குடியிருந்தாங்களே… அந்த கீர்த்தியை தான் பார்த்தேன். இன்னும் அப்படியே குழந்தையாட்டம் தான் என் கண்ணுக்கு தெரியுற.. ஆனால் என்னை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா…” மகிழ்ச்சியாய் சொல்ல தொடங்கி சோகத்தில் முடித்தார்.
“என்னடா சொல்லுற.. எப்படி இருக்குறா அந்த குட்டி.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானே…?”
“பொறுங்கம்மா… ஒரு நாள் குடும்பத்தோட வரதா அவளே சொல்லியிருக்கிறா…”
“அப்படியா…சரி சரி. அவளை பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சி…ஹ்ம்ம்…. ஆமா.. உன்னை எதுக்குடா லெப்ட் அண்ட் ரைட் வாங்குனா…?!”
“அதுவா… பார்கவியோட இழப்புக்கு அவள் தான் காரணம்ன்னு நான் தப்பா நினைச்சிட்டேனாம். அவள் பக்கத்துல இருந்து எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காம அவாய்ட் பண்ணேனாம். சோ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கேள்வி மேல் கேள்வி கேட்டு பிண்ணி எடுத்துட்டா…”
“அட… இது வேறயா… அப்புறம் என்ன ஆச்சி..”
“அப்புறம் என்னம்மா… அன்றைக்கு என்னோட சிட்டுயேஷன் என்னன்னு சொன்னேன். அதே மாதிரி அவளும் சொன்னா. அப்புறம் தான் அவள் கோபத்தை இறக்கி வச்சா….”என்றபடி கீர்த்தனவுடன் நடந்த வாக்குவாதத்தை விளக்கமாக கூறினார்.
“டேய்.. இப்போ நீ என்ன சொன்ன…?!!”
“என்னம்மா… என்ன ஆச்சி.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..?”
“ம்ம்ம்.. நான் கேட்டதை மட்டும் சொல்லு. பார்கவி கீர்த்தனா வீட்டுக்கு போகும் போதும் வரும் போதும் என்ன நடந்து. தெளிவா சொல்லு” குரலில் அழுத்தம் வந்திருந்தது. விஷயம் ஏதோ பெரிது என்று மட்டும் ராஜசேகருக்கு புரிந்தது. இருந்தும் அவசரப்பட்டு எதுவும் பேசாமல் அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்து கொண்டிருந்தார்.
அயர்ன் லேடியின் மனம் எஃக்கை விட உறுதியாய் மாறிக்கொண்டிருந்ததை அவர் உடல் இறுகுவதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. முகம் ரௌத்திரமாக மாறியது.
அவரது முகமாற்றத்திலிருந்தே ஏதோ ஆபத்து செய்தி என்று ஊர்ஜின படுத்திய ராஜசேகர் பதறியபடி,
“என்னம்மா… ஏன் இவ்ளோ கோபம்? யார் மேல…!?? சொல்லுங்கம்மா….”
கிழட்டு சிங்கம் பதறியதில் அந்த அயர்ன் லேடி செவிகள் கொஞ்சம் லேசானது. இத்தனை நாட்களாய் தான் தேடிக் கொண்டிருந்த விஷயத்திற்கு பதில் கிடைத்த திருப்தியில் ஏதோ பேச தொடங்கவும், மேசை மீதிருந்த தொலைபேசி அலற தொடங்கியது.
எடுத்து பேசிய அயர்ன் லேடி முகத்தில் வர்ணஜாலங்கள் தாண்டவமாடியது. ஒரு கோடி மின்னல் வெட்டியது போல முகம் பிரகாசமானது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரது மனம் செய்தியை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது.
பேசி முடித்து அலைபேசியை வைத்தவர்… நிம்மதி மூச்சை ஆழ்ந்து சுவாசித்தார். மூடிய இமைகள் வழியே இரு துளி கண்ணீர் துளிகள் வைரமாய் மின்னியது. மெதுவாக இதழ் திறந்து ராஜசேகரை பார்த்தபடியே சொன்னார்,
“பார்கவி இஸ் பேக்”.

Advertisement