Advertisement

அத்தியாயம் ஏழு..
பஞ்சாயத்துக்கூட்டம்..
பெரியாத்தா…. அடியாத்தி அந்த கூறுகெட்டபய உங்கப்பனுக்கு என்ன கேடு வந்துச்சாம்..பெத்தபுள்ளைக்கு இம்புட்டு கஷ்டத்த குடுக்க.. 
ஏன் பேரன போய் இப்புடி நிக்கவச்சுபுட்டானே வெளங்காதவன்..  
அப்பன் உழைப்புல வாழுறவனுக்கு இப்புட்டு பவ்சு.. கூடாது.. இந்த வயசுலயும் உழைச்சு சாப்புடுற எனக்கு எம்புட்டு இருக்கோனும்..
இன்னேறம் வடிவுக்கோ உனக்கோ ஏதும் அவன் பண்ணிருக்கனும் இந்த பேச்சி யாருனு பார்த்துருப்பான்..
இப்பவும் சும்ம இருக்கமாட்டேன் எல்லாத்தையும் சேர்த்து குடுப்பேன் அவனுக்கு அம்புட்டும் இன்னும் மனசுல இருக்கு ஆறாம றணமா இருக்கு..
கலை….  ஏன்டி வடிவு என்னடி நடந்துசி வாயதொறந்து சொல்லுபுள்ள ஏன் கல்லுகுத்து மாதிரி நிக்குறவ..
ப,தலைவர்… ஏம்மா வடிவு அதுதான் அம்மா கேக்குறாகள்ள. சொல்லுத்தா.
வடிவு…. அதுவந்துங்கையா..
நானும் பொன்னியும் ராசுகுட்டியும் மூனு பேரும் தோப்புக்கு மாங்கா பறிக்க போனோம்ங்கையா.
கொஞ்சம் தோப்ப சுத்தி திரிஞ்சுகிட்டே. அப்புடியே மாங்காயும் சப்பிகிட்டு பேசிகிட்டு இருந்தோம்.அப்ப மாங்கா முடிஞ்சுது திரும்ப பறிக்க கல்லால எறிஞ்சோம். அப்ப ஏதோ சத்தம் கேட்டுது என்னனு வீதில பார்த்தோம் இந்த சார் காருக்கு வெளியால நின்னு போனு பேசிகிட்டு இருந்தாருங்கய்ய.
சாரோட கார் கண்ணாடி ஒடஞ்சுட்டுபோல திட்டிகிட்டே இருந்தாறு சரி என்னனு பார்க்க நாங்க போனப்பதான் என்ன யாரு பின்னாடி இருந்து வாய பொத்தி தூக்கிட்டு போயிட்டாங்க ஐயா..
அப்புறம் என்ன கொண்டு போய் இருட்டு அறையில வாயகட்டி அடைச்சுவச்சுட்டாங்க சோறு தண்ணிகூட தரலங்கய்யா..
இரவு நேரம்தான் சார் வந்து கூட்டிட்டு வந்தாங்க. வரும் போது நல்லா மழையில மாட்டிகிட்டோம் எனக்கும் அந்த தோப்புல இருந்து வாறதுக்கு பாதை தெரியாது சார் ஊருக்கு புதுசு அதுதான் நான் சாப்புடாம ரொம்ப அசதியா இருந்தனா அதனால சார பார்த்தா நல்லவரா தெரிஞ்சது அதுதான் சுந்தரம் மாமா தோப்புல தூங்கிட்டோம்ங்க.. இதுதான் நடந்துச்சிங்க ஐயா,..   
“வடிவு வேணும்னே கார் கண்ணாடிய ஒடைக்கலயாம் பா நீங்க எல்லாரும் இத கண்டிப்பா நம்பிறனும் சரியா??.. 
பொய்ய கூட உண்மை போல சொல்ல இந்த வடிவு புள்ளையால மட்டும்தான்பா முடியும்”….
ப. தலைவர்…  ஏன்யா சுந்தரு நீ சொல்லும் நீ போகும் போது என்ன நடந்தது???..
சுந்தர்..  நானும் பொண்ணுபுள்ள வச்சிருகங்க அதனால வாய்க்கு வந்தத சொல்லகூடாது.. நான் வழமையா தோப்புக்கு போறமாதிரி இன்னைக்கு காலைலயும் போனேங்க.. 
அப்போ மோட்டர் ரூம் திறந்து இருந்துச்சீங்க. என்னடா நேத்து பூட்டினது திறந்துருக்கே. மோட்டார யாரும் களவாண்டுட்டாங்களோனு நான் பதறி உள்ளாற போனா இவுக ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில சிவத்துல சாஞ்சிகிட்டு தூங்கிட்டு இருந்தாங்க ஐயா அப்புறம் நான் தண்ணி தெளிச்சு எழுப்பி நேர உங்க வீட்டதாங்க கூட்டியாந்தேன்.. 
“இதுதான் நடந்துச்சிங்க ஐயா”
ப… தலைவர்..   ஏம்மா வடிவு நான் கேக்குறேனு தப்பா நினைக்காதத்தா விசரணைனு வந்துட்ட எல்லாம் விசாரித்து  தெரிந்து கொள்ளனும்த்தா..
தூக்கிட்டு போனவனுகள் உன்கிட்ட ஏதும் தப்பா நடந்துகிட்டாங்களா???..
வடிவு–  ஐயோ அப்புடியெல்லாம் ஏதும் இல்லங்க ஐயா. என்ன அடைச்சு வச்சிட்டு அவங்க அறைய பூட்டிட்டு வெளியால இருந்தாங்க. 
சார் வந்துதான் திறந்து என்ன வெளியால கூட்டி வந்தாருங்க ஐயா..
ப. தலைவர்— அப்போ எல்லா தரப்பும் விசாரிச்சாசு. ராஐதுரை நேத்து இரவே வடிவ காணவில்லை எல்லா இடமும் தேடிட்டேன் புள்ள கிடைக்கலங்க ஐயானு சொல்லிட்டார் என்னிடம் நான் காலையில பார்போம் வடிவுக்கு ஒன்னும் ஆகாதுனு ஆறுதல் சொல்லி அனுப்பி வச்சேன்..
இப்போ புள்ளைக்கு எந்த ஆபத்தும் இல்லாம கிடைச்சிட்டா வடிவு ஆனா நம்ம ஊரு வழக்கம்னு ஓன்னு இருக்கே. அதன் படிதான் நாம காலங்காலமா நடந்துட்டு வாரோம் இப்பயும் அப்புடிதான் நடந்துக்கனும் இல்லையா???…. 
கலெக்டர் தம்பி உங்களுக்கு இந்த ஊர் நடைமுறை புதுசா இருக்கும் நீங்க டவ்ன்ல வளர்ந்தபுள்ள சின்வயசுல வேணும்னா நீங்க இங்க இருந்துருக்கலாம் இப்ப அதெல்லாம் மறந்தும் இருப்பீங்க..தெரிஞ்சுக்கோங்க..
இந்த ஊர்ல நாங்க பொண்ணுங்கள மதிச்சு நடந்துக்குவோம் அடிக்கவோ சித்திரவதை செய்யவோ மாட்டோம். பெண் புள்ளைங்களையும் சமமாதான் நடத்துவோம்.
வேற்று ஆணோட அவசிய தேவை இல்லாம பொண்ணுங்க நின்று பேசமாட்டாங்க. அதே மாதிரி வெளி ஸ்கூலுக்கோ காலேஜ்கோ போய் படிக்குறவங்க சாயந்தரம் ஐந்து மணிக்கு முன்னமே ஊருக்குள்ள வந்துவிடனும். 
அதே மாதிரி ஆண்களும் குடி கூத்தினு இருக்காம ஒழுங்கு முறைப்படி கட்டிணபொண்டாட்டி கூடத்தான் குடும்பம் நடத்ததும்.
பொதுவா ஆணும்  பெண்ணும் சமமா ஒழுக்கத்தோட வாழணும்னு இந்த ஊர்ல எழுதபடாத சட்டம்.இருக்கு தம்பி.
ஆயிரம்தான் நீங்க பெரியாத்தா பேரன்னாலும் நீங்க வடிவுக்கு வேற்று ஆடவன் தானே வடிவு வயசுப்பொண்ணு நாளைக்கு கல்யாணம் காட்சினு வரும்போது இது ஒரு கெட்டபேரா ஆகிடக்கூடாது. வடிவுக்கு.
இந்த ஊர்ல யாரும் வம்பு பேசமாட்டாங்கதான் ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க ஆனா பக்கத்துஊர்கல்ல இருந்து மாப்பிள்ளை பார்க்க வரவிடுவாங்களோ கண்டிப்பா ஒன்ன பத்தா இட்டுக்கட்டி பேசி தடுக்கதான் செய்வாங்க.
கடைசி நீங்க உங்க பவரவச்சு அந்த பொண்ண காப்பாத்த ஏன் யோசிச்சீங்க ஒரு பொண்ணு விசயம் நாளைக்கு நான் கலெக்டர் ஏதும் தப்பா வதந்தி கிழம்ப கூடாதுனுதானே நீங்காளாவே தேடி கண்டுபிடிச்சீங்க.
இப்பவும் அதுதான் நடக்கபோகுது.
பெரியாத்தா இதுக்கு நான் என்ன தீர்ப்பு சொல்லனும்னு நீங்களே சொல்லிருங்க.
பெரியாத்தா—– ஏன்யா கந்தசாமி ஏன் பேரனபத்தி யாராவது தப்பா பேசிட்டு எங்கயும் இருந்துறுவாங்களா என்ன.??
ராஜதுரை நான் வடிவ பெத்த உன்னட்டயே நேரடியா கேக்குறேன் யார்டயும் வாய்க்கு பயப்புடுறவ இல்ல இந்த பேச்சி பேசுறவ வாய எந்த ஊரா இருந்தாலும் எனக்கு ஒன்னுமில்ல வகுந்துடுவேன்.. 
நாளபின்ன எனக்கு அப்புறமும் இந்த ஊர்ல ஏன் பேரனோட தொடரனும்னா??…   இந்த சொத்து எல்லாம் அவனுகுதான் அதெல்லாம் அவன் பார்த்துக்கனும்.
இந்த ஊரோட ஒரு பிடிப்பு இருக்கோனும். அவனுக்கு அதுமட்டும் இல்லப்பு.
ஆயி அப்பன் தம்பி தங்கசினு எல்லாரும் இருந்தும் என் கண் முன்னுக்கே அவன் தனி மரமா வேற வீடு வாங்கி வேலைய பார்த்கிட்டு வாழுறான். நான் கண்மூடமுன்னமே அவனுக்கு ஒரு நல்லது பண்ணிபார்த்துப்புடனும்னு வேண்டாத தெய்வம் இல்ல. 
வடிவு நான் பார்க்க வளர்ந்த சிதேவி கலகலப்பான குணமும் கூட அவ கைல ஏன் பேரனோட வாழ்க்கைய புடிச்சு குடுத்தா தனிமரமா நிக்குறவன பூஞ்சோலையாக்குறுவா. 
நீ என்ன நம்பி ஏன் பேரனுக்கு உன்னோட பொண்ணு வடிவ கண்ணாலம் கட்டிக்குடு ராஜதுரை ஏன் பேரனும் அவனுக்குனே கிடைச்ச சொந்தத்த நல்லபடியா வச்சு தாங்குவான். 
நீ என்ன சொல்லுற?.. 
ராஜதுரை—  கலெக்டர் தம்பிட்ட கேக்க வேண்டாமா ஆத்தா அவுக மனசுல யாரு மேலயும் என்ன நெனைப்பு ஏதும் இருக்குமோ என்னவோ????…..
பெரியாத்தா——   அட என்னப்பா நீ அதெல்லாம் தெரியாமலா வந்து பேசிக்கிட்டு இருக்குறேன். 
ஏன்யா மகேஷு இவுக எல்லாரு முன்னாடியும் நீயே சொல்லிபுடு. உன்னோட பதில..
மகேஷ்.   நீங்க நினைக்குற மாதிரி எனக்கு யாரு மேலையும் எந்த விருப்பமும் இல்ல எனக்கு எங்க பாட்டிமா தான் எல்லா சொந்தமும் அவுக எப்பவும் என்னோட நல்லதுக்குதான் சொல்லுவாக. அதனால அந்த பொண்ணுக்கும் அவுக வீட்டாளுங்கலுக்கும் என்னோட அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்ய மனபூர்வமா விருப்பம்னா எனக்கும் சம்மதம்ங்க ஐயா….  
பெரியாத்தா——  அப்புறம் என்னப்பா ஏன் பேரன்தான் விபரமா அவனோட முடிவ சொல்லிபுட்டானே இனி நீ ஏன் தயங்குற என்ன கேக்கனுமோ பொண்ண பெத்தவன் நீ தைரியமா கேளு… 
துரை—– அது வந்து வடிவு இந்த ஊருக்குள்ளயே வளர்ந்த புள்ள  கலெக்டர்  தம்பி அளவுக்கு பெரியபடிப்பு படிக்கலனாலும். ஏதோ அதுட புத்திக்கு எட்டுனளவு படிச்சிருக்கு.. 
சொந்த பந்தம் இல்லாம நாளைக்கு தம்பி வேலைக்கு போனாலும் யாரும் தெரியாத ஊர்ல அங்க போய் தனிய வடிவு எப்புடி சமாளிக்கும் ஆத்தா????….
பெரியாத்தா—– வடிவா விபரம் இல்லாத புள்ள அவளா வெளியாலுங்கள சமாளிக்க மாட்டா??… 
அதெல்லாம் நாலும் தெரிஞ்சவ சூதானமான புள்ள வடிவு சமாளிச்சுப்புடும்..
மகேஷு நீயே பதில் சொல்லுயா அவுக கேக்குறாகல்ல. சொல்லவேண்டியது நம்ம பொறுப்பு.
மகேஷ்——    அதபத்தி நீங்க எதுவும் பயப்புடாதீங்க மாமா நான் உங்க பொண்ண பத்திறமா பார்த்துகுவேன் நேற்று நடந்த மாதிரி இனி எப்பவும் என்ன சார்ந்த யாருக்குமே எந்த வாகையான தீங்கும் வர நான் விடமாட்டேன்.. 
அங்க உங்க பொண்ணு பழகுறது வரைக்கும் நானே கூட்டிட்டுபோய் எல்லாதயும் காட்டிக்குடுத்து பழக்கிவிடுவேன். மற்றது எதுவும் அவசர தேவைனா வீட்ட வேலையாளுங்க காவலாளி எல்லாரும் இருக்குறாங்க எந்த பயமும் இல்லங்க மாமா.
ப,தலைவர்—- பின்ன என்ன துரை அதுதான் தம்பி உருத்தா மாமானு கூப்புட்டு சம்மதம் சொல்லி உனக்கு விபரமும் சொல்லிப்புடுசே…. பின்ன என்ன இதுதான் யாருக்கும் பாதகம் இல்லாத சரியான முடிவு துரை. இன்னும் என்ன யோசனை உனக்கு..
“ராஐதுரை அவரது மனைவியை பார்த்தார் கலைவாணி சம்மதமாக தலை அசைக்கவும் அவரும் சம்மதம் சொண்ணார்”..
ராஜதுரை—- எங்களுக்கு மனப்பூர்வ சம்மதங்க ஆத்தா..
பெரியாத்தா—–  அப்புறம் என்ன இன்னைக்கு சனி நாளைக்கு ஞாயிறு எல்லாருக்கும் விடுமுறை நாள் நான் பஞ்சாயத்துனு சொல்லும் போதே இப்புடி ஒரு முடிவோடதான் நாளும் பார்த்துட்டு வந்தேன்.. 
நாளைக்கு நாள் நல்லா இருக்கு. இன்னையில இருந்து வேலைய ஆரம்பித்து நாளை காலை 6.30 முகூர்த்ததுல நம்ம குலசாமி கருப்பன் சன்னதில என் பேரன் மகேஷ்க்கும் ராஜதுரை மகள் வடிவழகிக்கும் கல்யாணம்.
சரியா இதுவே எல்லாருக்கும் அழைப்பா எடுத்துகொண்டு கல்யாண வேலைகளை அனைவரும் பகிர்ந்து இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தி தருமாறு நான் கேட்டுகின்றேன்..
இன்னைக்கு பகலைல இருந்து மூனு நாளைக்கு எல்லாருக்கும் நம்ம வீட்டதான் மூனு வேலையும் சாப்பாடு சரியா எல்லாரும் இப்பவே பஞ்சாயத்து முடிய என்னோடயே வீட்டுக்கு வந்துஇருங்கப்பா சரியா????
ஊரில் ஒருவர்—- நீங்க கவலபடாதீங்க பெரியாத்தா ஊரே சேர்ந்து இந்த கல்யாணத்தை சிறப்பா பண்ணிப்புடுவோம்..
என்னப்பா  நான்  சொல்லுறது சரியா????    
ஆமா ஆமா ஆமாஆமா நாங்க எல்லாரும் சேர்ந்து பண்ணிருவோம் பெரியாத்தா..
பொன்னி—- ஏன்டி வடிவு உனக்குதான் கல்யாணம் பண்ணுறதா பேசுறாங்கடி நீ என்னடி அதுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி நிக்குறீயே ஏதாவது சொல்லுடி உனக்கு விருப்பமா???…  
வடிவு— நானே இந்த பனமரம் நிஜமான கலெக்டராம் டி நீ என்ன பெரிய ஜில்லா கலெக்டரானு கேட்டுடேன் டி.
அவர்ட்ட துப்பாக்கி இருக்குமேடி. நாமெல்லாம்  பொம்ம துப்பாக்கி வச்சு பட்டாசு வெடிக்கவே பயப்புடுவமே இந்தாலு என்னடி துப்பாக்கி வச்சி இருக்காரு. பயமா இருக்குடி பொன்னி.
இருந்தாலும் இந்த வடிவ ஒன்னும் பண்ண முடியாது.
நான் பேசினா மட்டும் நிறுத்திருவாங்களா என்ன அப்போ அமைதியா ஜாலியா அனுபவிச்சுட்டு போயிரனும்டி பொன்னி.
பனமரம் தானே சமாளிச்சுக்கலாம். வா.
பெரியாத்தா—–   ராஜதுரை நீ வடிவுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு என்ன சீர் செய்யனும்னு நினைக்குறீயோ அதெல்லாம் உன்னோட மத்த ரெண்டு புள்ளைகளுக்கும் செய்துடு வடிவ மகாலட்சுமி மாதிரி என் பேரனோட சீரும் சிறப்புமா வாழ அனுப்பி வை.. பா.
துரை—- இதெல்லாம் நாம அப்புறமா பேசிக்கலாம் பெரியாத்தா.
மகேஷ்..  ஐயா நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசனும்.
ப. தலைவர்—   அப்புடி பொண்ணுகூட பேசுறது எல்லாம் இந்த ஊர் முறை இல்ல கலெக்டர் தம்பி..
மகேஷ்—-  ஓ சாரி ஐயா..
ப. தலைவர்—-   சரி பஞ்சாயத்து முடிஞ்சது எல்லாரும் இந்த கல்யாணத்த நம்ம வீட்டு கல்யாணமா நினைச்சு பண்ணிக்குடுத்துறுங்க பா கலைந்துபோவோம்..     
பொன்னி—- என்னடி வடிவு நீ இம்புட்டு அமைதியா இருக்குற???..
வடிவு—-  சும்மா வாடி நாளைக்கு கல்யாணம்னா இன்னைக்கு பலகாரம் செய்வாங்க தானே??? அப்போ அம்மா நெய் சொட்ட சொட்டா  கேசரி செய்வாங்கடி செம்மயா இருக்கும். உனக்கு தெரியும் தானே??..  
வா விரைவா வீட்டுக்கு போவோம்.
பொன்னி—  உனக்கு என்னடி வடிவு உன்ற ஆசை நிறைவேற போகுது எங்கள விட்டு வெளியூர சுத்தி பார்க்க போற நீ கலெக்டர் சாரோட சேர்ந்து.
அதுதான் உன் முகம் இம்புட்டு பிரகாசமா இருக்கு போல என்னடி??? வடிவு.
வடிவு— ஏய் சீ சும்மா வாடி பொன்னி.
ராசுகுட்டி—  பொன்னியக்கா வடிவக்க வெக்கப்படுறாளே முதன்முதலா நீயும் பாருக்கா.  
வடிவு அடிவாங்க போறீங்க ரெண்டு பேரும். சத்தம் போடாம சும்மா வாங்க நானே வீட்ட போனதும் இந்த அம்மா என்ன பண்ணபோகுதோனு தெரியாம இருக்குறேன் நீங்க வேற.. வீட்ட போறது வரை வாய திறக்ககூடாது..
************************
சென்னை சிவசங்கர் வர்மா வீடு.
சங்கர்—–  ஏய்  சுவேதா எங்கடி இருக்குற???.. 
வெளிய வாடி.
ஏன் வாயதொறந்து என்னனு கேட்டா முத்து கொட்டிடுமோ???… 
வா ரூம் உள்ள பேசனும்.
சுவேதா… அமைதியாக உள் வந்து நீ என்னவும் சொல்லிக்கொள் என்று சிவற்றீல் கதை கேட்க்கும் பாவனையில் சாய்ந்து நின்றார்..
சங்கர்— என்ன நம்பிக்கைல நீ இவ்வளவு தெனாவட்டா நிக்குற???
மகன் வளர்ந்துட்டான் படிச்சுட்டான். நீ எதுனாலும் பார்த்துகுவான்னு தெனாவட்டா??..   டி
பழசு எதையும்  மறந்துருக்கமாட்டனு நினைக்குறேன்.
எனக்கு உதவாத எதையும் நான் விட்டுவைக்க மாட்டேன் புரிஞ்சுதா???.. 
அது உன் மகனா இருந்தாலும் சரி.
நீ போய் அவன்ட்ட உங்க அப்பாக்கு உதவியா இருக்கனும் அவர எதிர்த்து வாழ முடியாதுனு சொல்லுற அந்த திமிர் புடிச்ச கலெக்டர் மகன்ட்ட.
என்ன சொல்லுவியா??? சொல்லனும் அதமட்டும் தான் சொல்லலும் நீ  
இதுதான் சந்தர்ப்ம்னு வாய் தொறந்த உன் மகனுக்கு சின்ன வயசுல நடந்தத மறந்து இருக்க மாட்டனு நினைக்குறேன். எதுக்கும் நினைவு படுத்திக்கோ..
வாய் திறந்து எனக்கு சார்பா பேசனும் நீ நான் அத கேக்கனும். என்ன புரிஞ்சதா???…
என்று சுவேதாவின் தாடையை அழுத்தி புடித்து அவருக்கு வலியை உண்டு பண்ணிவிட்டு சென்றார்   சிவசங்கர்வர்மா….. 
சுவேதா வாய் திறப்பாரா??? அவரது கலெக்டர் மகனிடம்..
தொடரும்……

Advertisement