Advertisement
அத்தியாயம் முன்று.
சென்னையில் விரல் விட்டு என்னும் பணம் படைத்த அதிகார வர்க்கத்தினரில் ஒருவர்தான் சிவசங்கர் வர்மா.
[அதாவது அவர எல்லோரும் சிவா என்று தான் கூப்புடனுமாம் பண இருக்குறதனால அவர் நினைச்சா ஒருவரை வாழவைக்கவும் முடியும் அழிக்கவும் முடியுமாம். லோட் சிவானு மனசுல நினைப்பு இந்தாளுக்கு.]
இவரோட மனைவி சுவேதா [அமைதின்னா அமைதி அப்புடி ஒரு அமைதி திமிர்புடிச்ச புள்ளைகள் இரண்டுக்கும் நல்லது சொன்னா புடிக்காது எங்க தான் ஏதும் கதைக்கப்போய் வீட்ல பிரச்சினை வந்துருமோனு பயம் இவருக்கு. இவர்ட பிள்ளைகளுக்கே இவருக்கு வாய் பேச வருமானு சந்தேகம் இருக்குன்னா பாருங்க. ஆனா நல்ல கவனிச்சு புள்ளைகள பார்த்துபார் அன்பான அன்னை ஆனா அத மனதளவில தான். அத அவங்கட்ட நேரடியா காட்டமுடியாது. அவங்க கூட பேசவும் மாட்டார்.]
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்
-
நம்ம கதையின் நாயகன் மகேஷ்வர்மா. அழுத்தம்னா அழுத்தம் அப்புடி ஒரு அழுத்தமான காளையவன்.
-
சிரிப்புனு ஒன்னு இருக்கா?.. னு கேள்வி கேட்டும் கட்டுமஸ்த்தான 29வயது ஆண் மகன்.
-
வேலை னு வந்தா நீதி நாய தர்மப்படிதான் வேல நடக்கனும். ப்ராடு பண்ணி யாரும் மாட்டினாங்க வாழ்கைல மறக்கமுடியாத தண்டனை குடுப்பான்.