Advertisement

“ஸ்கூல் முடியிற நேரமாச்சு..நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்..நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க..”

என்று கூறி உள்ளே செல்ல தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை,

“யவ்வனா..”
என்று ஆழ்ந்து அழைக்கப்பெற்ற குரலில் சிலிர்த்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அதே அசரவைக்கும் புன்னகையோடு நின்றிருந்தான் தமிழ்.

‘அய்யோ…இப்ப யாரு இவன புன்னகை மன்னனா வந்து நிக்க சொன்னா.. மானங்கெட்ட மனசு மறுபடியும் சாய பார்க்குதே…’

என்று உள்ளுக்குள் புலம்பியவள் வெளியே மிக சாதாரணமாக பார்த்து,

“எப்படி இருக்கீங்க சர்..”
என்க அவனோ தொடர்ந்து,

“இன்னைக்கு தேவியார் தரிசனம் கிடைச்சிருக்குல சேமமா இருக்கேன்…நான் கூட தேவி மறுபடியும் திருச்சிக்கே போயிட்டீங்களோனு நினைச்சேன்..ஊருல இருந்துட்டே தான் கண்ல படலையோ..”
என்று கேட்க,

“அய்யோ… சித்தப்பா..அக்கா பேரு யவ்வனா..தேவி இல்ல…”
என்றான் கவின் அங்கே தானும் இருப்பதை உணர்த்துவது போல..

அவனுக்கு என்ன சொல்வது என்று விழித்தவன் பின் பேச்சை மாற்றும் பொருட்டு,

“ஆமா..இவங்க உனக்கு அக்காவா..இது உனக்கே ஓவரா இல்ல..”
என்றான்.

“ஏன் சித்தப்பா..”
என்று கவின் புரியாமல் கேட்க,

“உங்க அம்மா மாதிரி இருக்காங்க…அபாரமா அக்கானு கூப்பிட்டு சின்ன பொண்ணாக்க பார்க்குறீயே…நியாயமாடா இது..நீங்களாவது சொல்ல மாட்டீங்க..”
என்று அவனிடம் தொடங்கி அவளிடம் முடிக்க,

“ஏங்க.அவன் எப்படியோ கூப்பிடுறான்…உங்களுக்கு ஏன் நோவுது..”
என்றாள் கடுப்பாக..

கவினோ அதுக்குள்
“அப்போ ஆன்ட்டினு கூப்பிடவா..”
என்று இடைப்புக,

“தங்கமே..இதை தான் நான் எதிர்பார்த்தேன்..”என்று ஹைஃபை கொடுத்தான்.

‘ஏது..ஆன்ட்டியா…அடேய்…”
என்று அதிர்ந்தவள்,

“கவி..இந்த ஆன்ட்டி..ஆண்டானா எல்லாம் கூப்பிட கூட்டிட்டு போய் உன் மிஸ்ஸுக்கிட்ட கோத்து விட்ருவேன்..”
என்று அவனை மிரட்டி,

“உங்களுக்கு ஏன் சர் இந்த வேலை..”
என்று தமிழை கேட்க,

“எரிச்சலாகுதுல..அதே மாதிரி தான் நீங்க ‘சர்..’ போடும் போது எனக்கும் இருக்கு..நான் என்ன உங்க டீச்சரா..இல்ல பாஸ்ஸா..சும்மா..சர் சர் னு “
என்றான்.

“உஃப்..இதுக்கு தான் இந்த பில்டப்-ஆ..யப்பா மொக்க மோகன் உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன்..இப்படி சீலிப்பர் செல்ஸ்ஸெல்லாம் கிளப்பி விடாதீங்க..”
என்று அவள் கூற அதற்கு கவின் ஏதோ சொல்ல வரவும்,

“உடனே நீ..சித்தப்பா பேரு தமிழ்.. மோகன் இல்லேனு ஆரம்பிக்காத..”
என்று அவசரமாய் கூற தமிழ் வாய்விட்டு சிரித்தான்.

அதே சமயம் வித்யாவும் தன் இளைய மகள் மதுவுடன் வந்தாள்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா தமிழ்”
என்று அவள் கேட்க,

“இல்லண்ணி..இப்போ தான் வந்தேன்”
என்று வித்யாவிடம் கூறியவன்

“மது பாப்பா”
என்றபடி அவளை தூக்கி கொஞ்ச உடனே மூக்கு வேர்த்துவிட்டது கவினிற்கு..

“அவள மட்டும் தூக்குறீங்க…நானும் இங்க தானே இருந்தேன்..என்னை தூக்குனீங்களா..”
என்று சிணுங்களாய் கோவித்துக் கொள்ள,

“டேய்..மது சின்ன பொண்ணு..நீ பெரியவன் தானே..சரி வா உன்னையும் தூக்குறேன்..”
என்க மதுவும் அவனை சீண்டுவது போல் நாக்கை துருத்தினாள்.

“வேணாம் போங்க…”
என்று அவன் கோபமாய் முன்னால் போக,

“சரிதான் வாடா..வாலு..”
என்று மறுக்கையில் அவனையும் தூக்கிக்கொண்டவன் கார் அருகில் வந்ததும் தான் விட்டான்.

காரில் அவனுக்கு அருகில் சண்டையிட்டு போட்டி போட்டுக்கொண்டு மதுவும் கவினும் ஏறிக்கொள்ள இது ரெண்டையும் வச்சிக்கிட்டு..
என்று தலையில் அடித்துக் கொண்டு பின்னால் வித்யா ஏற அவளை தொடர்ந்து யவ்வனாவும் ஏறினாள்.

அதன்பின் கவினையும் மதுவையும் வம்பிழுத்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டுமே அவர்கள் பயணம் தொடர,

“இவன் என்ன..எனக்குமேல பேசுவான் போலவே’

என்று எண்ணினாலும் அவனை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.அவனையே பார்த்துக் கொண்டும் அவன் பேசுவதை சிரித்து இரசித்துக் கொண்டும் வந்தவளுக்கு இப்பயணம் இப்படியே தொடராதா என்றிருந்தது.

நன்றாக பேசிக்கொண்டு வந்தவன் திடீரென ஓரிடத்தில் வண்டியை ஸ்லோ செய்து விண்டோவை இறக்கி வெளியே தலையை நீட்ட அவளும் வெளியே பார்த்தாள்.

அங்கே ஒரு பெண்ணை மூன்று பேர் வழிமறித்து நிற்பது தெரிந்தது.

தமிழ் அவர்களை பார்த்தபடி ஹாரன் அடித்து அவர்கள் கவனத்தை தன்புறம் திருப்ப தமிழைக் கண்டதும் அப்பெண்ணின் முகத்தில் நிம்மதியும் மற்றவர் முகத்தில் கலவரமும் இன்ஸ்டெண்டாய் அப்பிக் கொண்டது.

அந்த பசங்களை ஒரு பார்வை பார்த்தவன் அப்பெண்ணை நோக்கி,

“நீ..சேகர் அண்ண மவ தானே..இன்னேரத்துல இங்க என்ன பண்ணுற..வீட்டுக்கு கிளம்பு”
என்று அதட்டலாய் கூற அவளும் வேகமாய் தலையை ஆட்டிவிட்டு நகர முற்பட்டாள்.

அந்த பசங்களும் அப்படியே கலண்டுக் கொள்ள எத்தனிக்க ஒருவன் மட்டும் திமிராய்,

“நா இங்க பேசிட்டு இருக்கேன்..என்ன நீ பாட்டு போற..”
என்று அவன் கூறியது இவர்களுக்கும் கேட்டது.

‘செத்தான்’ என்று வித்யா முணுமுணுக்க கதவை திறந்துக்கொண்டு தமிழ் இறங்கினான்.

அவன் வரவும் மற்ற இருவரும்,

“டேய் வேணாம்டா வாடா போயிருலாம்..”
என்று இழுக்க இவனோ அசையாமல் நின்றான்.

அருகில் சென்றதும் அப்பெண்ணை பார்த்து போ என்பதுப்போல் தலையசைக்க அவளும் உடனே நகர்ந்துவிட்டாள்.

அவளை தடுக்க கைநீட்டியவனின் கன்னத்தில் பளீரென்று ஒரு அரைவிட திடுக்கிட்டு யவ்வனா ஏதோ தனக்கே விழுந்தது போல கன்னத்தை பிடித்துக்கொண்டாள்.

என்ன பேசினான் என்றுக் கேட்கவில்லை எனினும் அவன் முகத்தில் அத்தனை கடுமை.பேசிக்கொண்டே மூவரையும் இன்னும் நாலு சாத்து சாத்தினான்.

“என்ன மேடம்..இவங்க பாட்டுபோய் இப்படி அடிக்கிறாங்க..”
என்று அதிர்ச்சியாய் வித்யாவை கேட்க அவளோ,

“தமிழ் அப்படி தான்..”
என்றாள் சாதாரணமாய்..

“அப்படி தான்னா புரியல்ல..”

“ம்ம்ம்..தமிழுக்கு வாய் பேசுதோ இல்லையோ கை ரொம்ப நல்லா பேசும்..யாரு என்னானு லாம் யோசிக்காது..தப்பா ரைட்டானு தான் பாக்கும்..”

“யாரும் இவரை கேக்க மாட்டாங்களா..”

“ஆளை பார்த்தா அடுத்தவங்க பேச்சுக்கு அடங்குறவர் மாதிரியா இருக்கு..இங்க யாரும் தமிழ எதிர்த்து பேசமாட்டாங்க..அப்படிங்குறதவிட அவர் அழுத்தமா ஒரு பார்வை பார்த்தாலே வாய மூடிறுவாங்க..”

என்னும் போது அவன் முதல் முறை தன்னை பார்த்த பார்வையில் தான் பயந்தது நினைவு வந்தது.

“அதுவும்..”
என்று ஏதோ சொல்ல வந்தவள் அவன் கார் அருகில் வந்ததும் அப்படியே நிறுத்தினாள்.

உள்ளே ஏறியதும் அதுவரை இருந்த கடுமையெல்லாம் மறைந்து மீண்டும் அதே குறும்புன்னகை ஒட்டிக்கொண்டது.

“அந்நியனாடா நீயு..”
என்று வாயை பிளந்தது யவ்வனாவின் மனம்..

மீதி பயணத்திலும் அவனையே தான் பார்த்திருந்தால் ஆனால் ஒருவிதயோசனையோடு..

வீடு வந்ததும் அவர்களை இறக்கிவிட்டு வண்டியை திருப்பவும்,

“காஃபி குடிச்சிட்டு போலாம்..வா தமிழ்”
என்று வித்யா அவனை அழைக்க,

“இல்லண்ணி அப்புறம் வரேன்..அம்மா வேற கால் பண்ணிட்டே இருந்தாங்க..”

என்றவன் கவினிடமும் மதுவிடமும் டாட்டா காட்ட அவர்கள் முன்னால் சென்றதும் கடைசியாய் அவர்களை தொடர்ந்த யவ்வனா அவனை கடக்கும் நேரம்,

“அப்படி பார்த்தா என்னங்க அர்த்தம்”
என்று கேட்க ஜெர்காகி நின்றாள்.இதயம் படபடவென அடித்துக்கொள்ள முயன்று,

“என்ன சொல்றீங்க..புரியலையே..”
என்றாள் விளங்காதது போல்..

அவனோ,

“புரியல..ஹம்ம்ம்….ஆனா எனக்கு புரிஞ்சிது..”
என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

‘மடச்சி..பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்குறது மாதிரி பார்த்து வச்சா..அவன் கவனிக்காம இருப்பானா..ஹைய்யோ போச்சு..என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்..இருக்குற சிக்கல்ல ம்ச்..’

என்று ஒருபுறம் தன்னை எண்ணிக் கடுப்பானாலும் மனதின் ஒரு மூலையில் 

‘புரிஞ்சிது’ என்னும் போது அவன் இதழின் ஓரம் தெறித்தப் புன்னகை வெட்கம் கொள்ள வைத்தது.

காரை மில்லில் நிறுத்திவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு தமிழ் கிளம்ப மீண்டும் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘என்ன இன்னிக்கி அம்மா ஓயாம அடிக்கிது..’
என்றெண்ணியவன் அழைப்பை ஏற்க,

“சொல்லும்மோய்..”
என்று கூறவும்

“உன்னை வீட்டுக்கு வரச்சொன்னேன்..இன்னும் எங்கடா சுத்துற..”
என்று கடித்து குதறாத குறையாய் வசுமதி சத்தமிட,

“என்னம்மாச்சு..வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன்..”
என்று சொல்ல ஒரு பதிலும் இன்றி மறுமுனையில் அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது.

“என்னாச்சு..”
என்று குழம்பினாலும் வீட்டிற்கு விரைந்தான்.

கதவு திறந்தே கிடக்க கூடத்தில் அன்னையை காணாது,

“அம்மா..”

என்று அழைத்தபடி உள்ளே வந்தவன் பின் ஏதோ தோன்ற தன் அறைக்குள் செல்ல அங்கே தரையில் கால்களை மடக்கி அதில் தலைசாய்த்து வசுமதி அமர்ந்திருக்க அவர் அருகில் ஒரு ட்ரவல் பேக் நிறைய பணத்தோடு திறந்து கிடந்தது.

இருங்க….!இருங்க….!இது நமக்கு நல்லா பரீச்சயம் ஆன பேக்போல் இருக்கே..ஆஹா..ஆம்..அதே தான்..யவ்வனாயை இத்தனை சிக்கலுக்கு உள்ளாக்கிய அந்த விநாயகம் கடையில் மனோ புகைப்படத்துடன் இருந்த அதே பேக் தான்.

Advertisement