Advertisement

சுமதி சமைத்த பாத்திரங்களை ஹாலில் எடுத்து வைக்க அவன் உடைந்த பாட்டில் துண்டுகளை பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினான்…
 
தீனா குளித்து வரும்போதே தேவியை அழைத்துபடி வர அருணும் தேவியும் மாமனிடம் ஓடி வந்திருந்தார்கள்.. தேவியை தூக்கி முத்தமிட்டவன், இப்போ சொல்லுங்க செல்லக்குட்டி மாமா தலைமுடி நல்லாயிருக்கா..??”
 
அவன் ஈர கூந்தலை கோதிவிட்டவள் மூன்று விரல்களை மட்டும் நீட்டி சூப்பர் மாமா செம.. செம …!!”
 
அப்போ வாங்க சாப்பிடுவோம்…பாட்டியும் பாப்பாவும் காணாமே எங்க போனாங்க..??”
 
பாட்டி பாப்பாவ தூக்கிட்டு போயிட்டாங்க..
 
ஓஓஓஓஓ…சரி சரி வாங்க நாம சாப்பிடலாம் … குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட சுமதி அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாற துவங்கினாள்..
 
டேய் பழனி வேண்டியத வாங்கிக்கடா…??”
 
சரிண்ணே..!!” அவனுக்கு குற்றவுணர்ச்சி தாங்கவில்லை… நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அண்ணன் கையாலதான் சாப்பிட்டோம்.. அவருக்குன்னு ஒரு குடும்பம் அமையும் போது அதை போய் கெடுக்க பார்த்தோமே…!!
 
கைகழுவி வந்தவன் தீனாவின் காலடியிலேயே மீண்டும் விழுந்திருக்க டேய்ய்ய்ய் என்னாச்சு …??”
 
அண்ணே என்ன மன்னிச்சிருங்க..?? நான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது..?? அண்ணி நீங்களும் மன்னிச்சிருங்க..!!”
 
சரி விடுங்க எவ்வளவுதரம் தான் மன்னிப்பு கேட்பிங்க..??”
 
டேய் விடு.. நான் ரெண்டு நாள்ல போன் பண்றேன்.. ஒன்னு யோசிச்சிருக்கேன்.. சரிவருமா பார்ப்போம்..!!”
 
……………………………………………..
 
அன்று இரவு அனைவரும் உறங்கியிருக்க கணவனும் மனைவியும் மட்டும் மாடியில்.. மனைவியோடு இருக்கும் இந்த நிமிடம் தான்அனாதை இல்லை.. தனக்கென்று ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணம் வேரூன்றுவதை அவனால் உணர முடிந்தது.. சுமதிக்கும் கணவன் மேல் அன்புதான்.. இருவருக்கும் இந்த நேரம் அவ்வளவு பிடிக்கும்..
 
என்ன புள்ள நானும் முடிவெட்டிட்டு வந்ததுல இருந்து பார்க்கிறேன்.. ஓவராத்தான் என்னை சைட் அடிக்கிற..?? என்ன விசயம்..??”
 
நானா நான் எங்க உங்கள பார்த்தேன்..!!”
 
ஆமா நீ சைடு கண்ணுல பார்த்தா யாரை பார்க்கிறன்னு தெரியாதாக்கும்.. நானெல்லாம் உன்னை போல இல்ல… பார்க்கனும் நினைச்சா நேராவே பார்ப்பேனாக்கும்..!!” மனைவியையே குறுகுறுவென பார்க்க அந்த இருட்டில் அவன் முகம் தெளிவாக தெரியாவிட்டாலும் நிலா ஒளியில் லேசாக தெரிய அவன் கண்கள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்துதான் இருந்தாள்..
 
இன்னும் இன்னும் அவனை நெருங்கியவள் முடிவெட்டி தாடிதான் எடுத்திருக்கிங்க.. ஆனா ஆளே மாறிடிங்க..!!”
 
அப்படியா சொல்ற..??” எப்போதும் போல தாடியை நீவ கையை கொண்டு சென்றவன் அது இல்லாமல் வெற்று கன்னத்தை தடவ சுமதியின் கையும் கணவனின் கன்னத்தில்தான்.. தான் தடவும் போது இல்லாத சுகம் மனைவி தன்னை தொட்டவுடன் உடலெங்கும் பரவுவதை உணர்ந்து மெல்ல மெல்ல அவளின் இதழில் தன் இதழைப் பொறுத்த விருப்பமாகவே அவனுள் புதைந்து கொண்ட அவள் உதடுகள் தன் தேனூட்டும் வேலையை ஆரம்பித்தது..
 
எவ்வளவு நேரம் மனைவியோடு இருந்தாலும் தீனாவுக்கு சலிக்கவில்லை.. இரவு முழுவதும் தன் கையணைப்பிலேயே வைத்து அவளோடு கதைபேச விரும்ப தேனுவுக்காக இருவரும் விலகுவதுதான்..  பகலிலும் கொஞ்சம் அக்கம் பக்கம் ஆட்கள் இல்லாவிட்டால் சுமதி பாடு திண்டாட்டம்தான்.. ராசாத்தி அம்மாள் என்ன உணர்ந்தாரோ பகல் பொழுதுகளில் பிள்ளைகளை வெளியில் கூட்டி சென்றுவிடுவார்.. இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் கழித்தே வர… தீனாவின் காட்டில் அடைமழைதான்..
 
எவ்வளவு கெஞ்சினாலும் அவனிடம் ஜம்பம் செல்லாது.. அதைவிட சுமதியும் கணவனின் ஆசைக்கு இணங்கியே போவாள்.. இன்றும் அதே போல பகல் பொழுதில் கிளம்ப எங்கம்மா தினமும் சாப்பிடவும் பிள்ளைகளை கூட்டிட்டு போயிடுறிங்க.. எங்கதான் போறிங்க..!!”
 
பக்கத்து ஏரியாவுல திருவிழா நடக்கிறதால நிறைய கடையெல்லாம் வந்திருக்கு.. ராட்டினம் பஞ்சுமிட்டாய்ன்னு நிறைய இருக்கு.. புள்ளைகளுக்கு  அப்படியே சுத்தி காட்டிட்டு அங்க என் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் படுத்து  எந்திரிச்சு வர்றோம்.. எம்புட்டு நேரம்தான் இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.. சரி நாங்க அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுறோம் நீயும் கிளம்பியிரு.. அந்த கோவில்ல ஒரு அர்ச்சனையை பண்ணி சாமி கும்பிட்டுட்டு வந்திடலாம்… குணாவும் வந்திரட்டும்..
 
சுமதி தலையை மட்டும் ஆட்ட நான்கு வீடுகள் கூட தாண்டியிருக்க மாட்டார்கள் கதவடைத்தவன் மனைவியை கைகளில் ஏந்தியிருந்தான்..
 
என்னங்க தினமும் இதே வேலையா வைச்சிருக்கிங்க..??”
 
ஏன் புள்ள உன் புருசன்தானே தூக்கினேன்.. எவனோ தூக்கினா போல சொல்ற… பேசாம இருக்கியா என்ன…??”
 
அச்சோ சாயங்காலம் கோவிலுக்கு போனும்னு சொல்லிட்டுதானே போறாங்க அம்மா.. அப்புறம் என்ன..?? எல்லாம் ராத்திரிக்கு பார்த்துக்கலாம் இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க..??”
 
ப்ச் என்ன புள்ள இப்போ.??”. கடுப்படித்தவன் அவளை இழுத்து கட்டிலில் அமரவைத்து அவள் மடியில் தலைவைத்திருந்தான்..
 
உச்சி முடியை பிடித்து ஆட்டியவள் பெரிய சண்டியர்ன்னு நினைப்பு மனசுக்குள்ள..??”
 
ஹோய்ய்ய்ய் மனசுக்குள்ள இல்லடி வெளியிலயும் நான் சண்டியர்தான்.. தெரியும்ல என்ன பத்தி..?? கேட்டுப்பாரு ஊருக்குள்ள…!!” தன் மீசையை நீவிவிட…
 
அடடா ரொம்பத்தான்..!! அதவிடுங்க நேத்து உங்க கூட்டாளிக கிட்ட சொன்னது உண்மையா..??”
 
நிறைய சொன்னேன் அதுல எதக்கேட்கிற..??”
 
அதாங்க இந்த வேலையை விடுறத பத்தி…!!”
 
ஓஓஓஓ….. அதுவா..?? நெசந்தான் நீதான் நெதம் கொடச்சல் கொடுத்தியே இந்த வேலையை விடுங்க விடுங்கன்னு அதான் விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. உங்க அண்ணன் பேக்டரியிலேயே எனக்கும் பழனிக்கும் வேலை இருக்காம் திங்கட்கிழமையில இருந்து போக வேண்டியதுதான்..!!”
 
அதுவரை கணவனை விட்டு தள்ளி அமர்ந்திருந்தவள் அவனை இன்னும் நெருங்கி…நெஜமா…?? எனக்காகவா..?? எனக்காகத்தானே…!!” அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் கணவன் இந்த வேலையை விடப் போறானா..
 
ஏம்புள்ள தெரிஞ்சுக்கிட்டே கேட்டா நான் என்ன பண்ண…?? இது முன்னயே நானும் உன் அண்ணனும் எடுத்த முடிவுதான் … நான்தான் தள்ளிப்போட்டுட்டே வந்தேன்.. நேத்து அதுவா என் வாய்ல வந்திருச்சு….
 
பரவாயில்லங்க எங்க என் அண்ணேகிட்ட பேசக்கூட மாட்டிங்களோன்னு நினைச்சேன் ஆனா அது சொல்றத கேட்கிற அளவுக்கு வந்திருக்கிங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. சின்னப்புள்ளையில இருந்து அது சொல்லிக்கிட்டே இருக்கும் நமக்குன்னு நெருங்கின சொந்தபந்தம் யாருமில்ல அடுத்து உருத்தா வர்ற உறவுன்னா அது உன் புருசன் உறவு மட்டும்தான்னு .. உங்கள அண்ணனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..  அதுவும் ராத்திரி உங்கள இப்படி பார்த்துட்டு என்கிட்ட வாயாந்து போச்சு… நல்லா ராசா மாதிரி இருக்காரு பின்னே ஏன்தா ரவுடி பயலுக மாதிரி முடியும் தாடியும்னு…!!”
 
அப்போ நான் இல்லாத நேரம் நீயும் உன் அண்ணனும் என்னையப் பத்தி பேசியிருக்கிங்க..??”
 
கோபமாக பேசுகிறானோ முகத்தை பார்க்க முகத்தில் அப்படி ஏதும் தெரியவில்லை.. ஆமா அப்படித்தான் பேசுவோம் இப்ப என்னாங்குறிங்க..??” வேண்டுமென்றே அவன் மடியில் அமர்ந்து அவன் கன்னத்தை கடிக்க…
 
ஸ்ஸ்ஸ் கண்மூடி அந்த சுகத்தை அனுபவித்தவன் இதோ பாருபுள்ள நான் சும்மாதான் இருக்கேன் உசுப்பேத்துற மாதிரி ஏதாவது பண்ணாத சொல்லிட்டேன்..??”
 
ஓஓஓஓ… அப்போ கண்டிப்பா பண்ணனுமே..??” மறுகன்னத்தையும் கடிக்க.. தன் காதில் ரகசியமாய் ஏதோ கேட்டவனுக்கு விடுங்க மறுபடி குளிச்சா போச்சு..??”
 
வாயில் கைவைத்தவன் இந்த பொம்பளைங்க இருக்காங்களே நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுறிங்கடி..?? அவங்க சரின்னு சொன்னா நாமளும் சரின்னு சொல்லனும்…?? அவங்க வேணா சொன்னா அப்போவும் நாம சரின்னு சொல்லனும்..?? இதனாலதான் ரொம்ப பேர் சாமியாரா பேறாங்க போல..!!”
 
சரி இப்ப என்ன கெட்டுப்போச்சு நீங்களும் சாமியாரா போங்க ..??”சுமதி முறுக்கி கொள்ள…
 
அச்சோ நான் இன்னையில இருந்து மௌனவிரதம்…!!” வாயை மூடி மனைவியை தன் புறம் இழுத்திருக்க அவனின் முரட்டு குணங்களுக்குள் சாதாரண காதல் கணவனும் அவள் கண்களுக்கு தெரிய அவனை விடாமல் பிடித்துக் கொண்டாள்…விரும்பியே இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கத் துவங்கினர்
 
……………………………
 
மாலை ஆறுமணி இருக்கும் அனைவரும் கோவிலுக்கு கிளம்பியிருந்தனர்.. ஜீன்ஸ் போட போனவனை தடுத்து வெள்ளை வேட்டி சட்டை கொடுத்தவளிடம்..  புள்ள இதெல்லாம் போட்டா எனக்கே ஏதோ போல இருக்கும் … பேன்ட் சர்ட்லயே வர்றேனே..!!”
 
ம்ம் அதுக்காக்கும் அவசரமா அண்ணே கிட்ட போன்பண்ணி இந்த டிரஸ வாங்கிட்டு வரச்சொன்னேன்..?? ஒழுங்கா கட்டிக்கிட்டு வாங்க.. போங்க..” அவன் முதுகு புறம் கைவைத்து தள்ளியவள் எப்போதும் போல இப்போதும் அவன் சூட்டு தழும்புகளுக்கு முத்தங்கள் வைத்தே அனுப்பியிருந்தாள்..
 
ஏனோ தழும்புகளை எப்போது பார்த்தாலும் அவளால் தாங்க முடியாது.. கண்ணீர் தன்னறியாமல் வந்துவிடும்… தீனா கிளம்பிவர குடும்பமே தயாராய் இருந்தது.. தேனுவிற்கும் தேவிக்கும் சுமதி ஒரே மாதிரி பச்சை நிறத்தில் கரை வைத்த பாவாடை சட்டை ஏற்கனவே தைத்து வைத்திருந்தாள்.. தேனுவிற்கு முடி கொஞ்சம் வளர்ந்து உச்சியில் பிளிப் போட்டு பூவைத்து விட்டிருக்க தேவிக்கும் தலைபின்னி பூ வைத்திருந்தாள்..
 
நல்ல ரோஜாவண்ண நிறத்தில் சில்க் காட்டன்.. சிறிய நெக்லஸ்.. செயின் தாலிக்கயிறு.. கைநிறைய கண்ணாடி வளையல்கள்.. தளர பின்னி பூவைத்து வெளியில் வர எப்போதும் விட இப்போது இன்னும் தன் மனைவி அழகியாய் அவன் கண்களுக்கு தெரிந்தாள்.. பக்கத்து தெருதானே நடந்தே செல்லலாம் முடிவெடுத்து சுமதி தேனுவை தூக்கிக் கொள்ள தேவி தீனாவிடம் .. ராசாத்தி அம்மாள், குணா, அருண் என அனைவரும் கதவை பூட்டி வெளியில் வர அந்த தெருவே அவர்களை வேடிக்கை பார்த்தது..
 
அங்கிருந்த ஆண்களுக்கு தீனாவை பார்த்து பொறாமை … ரௌடி பய.. முரட்டுப்பயலுக்கு வந்த வாழ்வை பாரேன்…!! தேவதை கணக்கா பொண்டாட்டி அமைஞ்சிருக்கு… நமக்கும் வந்து வாய்ச்சிருக்குகளே அம்புட்டும் ராட்சசி கணக்கா…!! ம்ம்ம்.. நாமெல்லாம் வாயே திறக்கிறது இல்லை.. அப்படியிருந்தும் பொண்டாட்டிக எல்லாம் ஊமக்குத்தா வாயிலேயே குத்துறாளுக… ம்ம்ம் எல்லாம் நம்ம நேரம் போல..!!
 
பெண்களோ இவன் ரௌடி பயலா இருந்தாலும் கெத்தா இருக்கான்… வெள்ளை வேட்டி சட்டை போட்டாலும் ஹீரோ மாதிரி நல்லாத்தான் இருக்கான்.. நமக்கு வாய்ச்சது எல்லாம் கஞ்சிக்கு செத்த பயலுக… இம்புட்டு நாளும் பக்கத்துலதான் இருந்தோம்… அப்போலாம் இவன் நம்ம கண்ணுக்கு தெரியல.. எவளோ ஒருத்தி அழகா அவன முந்தானையில முடிஞ்சிட்டாளே… அவர்கள் விட்ட பெருமூச்சு அந்த இடத்தையே சூடாக்கியது..
 
இவர்கள் குடும்பம் கோவிலுக்குள் நுழைய கோவிலின் மறுபக்க வாசலில் கமலாம்மாளும் ,வள்ளியும் சுதாவோடு கோவிலுக்குள் நுழைந்தார்கள்…!!!
 
                                                              இனி…………..??????

Advertisement