Hi mam
செவ்வந்தி பாத்திரப்படைப்பு கண்டிப்பாக மெச்சியாகவேண்டிய படைப்பு,என்வொரு திடமான நிதானமான தைரியமான சூழ்நிலையை புரிந்துகொண்டு கையாளத்தெரிந்த ஒரு சுட்டிப்பெண், ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் இப்படி தன்னியல்புடன் இருப்பதுதான்,ஆனால் திருமணம் செய்து போகும் வீட்டில் புதிய உறவுகள் இதனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்தான்,செவ்வந்திக்கு இவையெல்லாம் தானாகவே புரிந்து ,அங்கு எப்படி நடக்கணுமோ அப்படி நடந்து ,உறவுகளைப்புரிந்துகொள்கின்றார்,தன்வீட்டில் அடாங்கப்பிடாரியாக பாட்டியை எடுத்தெறிந்து பேசும்பெண்ணாக இப்படி விளையாட்டுப்பெண்ணாக இருந்த பெண் திருமணத்தின்பின் தன்மாமியாரின் மேலுள்ள பிடித்தம் அல்லது பாசத்தினால் அந்தக்குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி செயற்படும் அழகே தனிதான்,வீரா பாசமுள்ள ஆண்மகன்தான் ,ஒருஉயிர் போக தான் காரணமாகிவிட்டோம் என்று நினைத்து மறுகுவதிலேயே தெரிகின்றது அவரின் குணவியல்பு,அவரால் யாரையும் காயப்படுத்தமுடியாது என்று,பெண்டட்டி பெயர் செவ்வந்தி என்பதற்காக செவ்வந்திதோட்டம் வைத்து அழகு பார்த்தார் பாருங்கள் அங்கு நிற்கின்றது வீராவின் காதல்,தாயிற்கும் மனோரஞ்சிதம் வைத்தார்தான் ஆனால் தோட்டம் வைக்கவில்லையே,இப்படி சுற்றியுள்ள உறவுகளை நேர்மறை பாத்திரமாக அமைத்து அழகாகவும் சுவாரசியம்குன்றாமலும் விறுவிறுப்புடனும் எங்களுக்கு அழகிய நாவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றி
தட்சாயணி