காலையில் எழுந்ததும்....துளசிக்கு குழந்தை பிறந்த
செய்தியை என் உறவுகளுக்கு சொல்ல வேண்டும்
என்ற உணர்வை ஏற்படுத்திய,கதையோட
ஒன்ற வைத்த பதிவு......
கண் முன்னால் காட்சிகள் விரிந்தது....
துளசியின் இயல்பை போலவே
அமைதியான முறையில் அவள் குழந்தையின் வரவு....
புதுவரவை கையில் ஏந்தும் போது...
மீனுவின் பிறப்பை தவற விட்ட திருவின் ஏக்கம்...
காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருப்பதில்லை...
தவற விட்ட நொடிகள் திரும்புவதில்லை
என்பதை உணர்த்துகிறது....
மனைவியை தூங்க வைக்கிறான்.....
மகளையும் தூங்க வைக்கிறான்.....
இப்ப மகனும் வந்தாச்சு....
நன்றாக தூங்கணும் என்ற உன் தீர்மானம்
என்ன ஆச்சு திருநீர்வண்ணா....?
“ பூவிலே மேடைக் கட்டி....”..
இத்தனை வேலை பளுவின் இடையில்....
முத்து முத்தா மனதை வருடும் பாடல்களைத் தேடி,தேடி .....
பொருத்தமாக கொடுக்க உன்னால் மட்டுமே முடியும்.....
உன்னால் எனக்கு அருமையான பாடல்களின் அறிமுகமும் கூட...
நன்றி மல்லி......
மனதிற்கு நிறைவை தந்த பதிவு......