Ramya Rajan's Pani Sinthum Sooriyan 23

Advertisement

chitra ganesan

Well-Known Member
அபர்ணா பாவம் தான். ஆனால் ஸ்வர்ணா மகனின் விருப்பத்தை பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயம் அபர்ணாவை ஏற்று கொள்வார்.நீலிமா போலி தனத்தை எப்போது பிரகாஷ் புரிந்து கொள்வார்.
 

Itsmeappu

Member
முதலில் இந்த யூடிக்கு நன்றி மேம்.. ஆச்சு பூனை குட்டி வெளிய வந்தாச்சு.. இது தான் நடக்கும் என்று யூகித்திருந்தாலும் ஒருவேளை நாம் விரும்பியது நடந்திராதா என்ற ஒரு நப்பாசை எல்லாருக்கும் உண்டு அதில் ,ராமும் அபர்ணாவும் விதிவிலக்கா ?, இல்லை நாங்கள் தான் விதிவிலக்கா? .. ஆயிற்று ராமா இன்றாவது உருப்புடியா வளவளாகுளகுளான்னு பேசாம ஒரு முடிவுக்கு வந்திருக்க.. பரவாயில்லையே உன் மனசாட்சிலாம் பேசுது..இருகொள்ளி எறும்பு ராம் நீ.. பாவமா இருக்கு..

ப்ரவீணா நல்ல பண்றீங்க ம்மா.. சிறப்பா செஞ்சுட்டீங்க..

ஸ்வர்ணா அகிலாண்டேஸ்வரி மாதிரி இருக்க மாட்டாங்கன்னு தோணுது.. தாய் அறியாத சூல் உண்டா? அதுவும் அவர் கணவனின் தவறை உணர்ந்து விடாமல் செய்வது அவர் கணவர் வீட்டின் பெண்கள் என்ற மகனின் குற்றச்சாட்டை அவர் மனதை அசைத்திருக்காதா என்ன?? ப்ரவீணாவின் வழியே அவருக்கு பாடம் புகட்டுவாரோ?

பாட்டி புள்ளைய பெத்தெடுக்க சொன்னா தொல்லையை பெத்து வச்சிருக்கீங்க...பாருங்க அந்த மனிதரால் அலைப்புருதலுக்கும் ஆட்கொள்ள பட்டிருக்கும் உங்க பேரனை... அன்னிக்கு அத்தை மாதிரி ன்னு அபர்ணாவை பேசினீங்க.. இப்போ உங்க பொண்ணு தான் அந்த அத்தைக்கு உளவாளி..இப்போ என்ன பண்ண போறீங்க..

அபர்ணா, என்ன சொல்லறுதுனே தெரியல... காதலும் கேன்ஸரும் ஒண்ணு..பரவபரவ பிரச்சனை கூடி கொண்டே போகும்.. இதை தாங்குவியா.. மனதை பிசைகிறது,...

நாம நம்ம கஷ்டத்துக்கு n timesவிடை கண்டுபிடிக்க முற்பட்டு தோற்றால் கடவுள் n+1th solution தந்து காப்பாற்றுவாராம்... ரம்யா மேம் கொஞ்சம் பார்த்து செய்யுங்க(ப்ரவீணா மாதிரி செஞ்சிராதீங்க)
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அருமையா போகுது கதை .....அபர்ணா தன்னோட அத்தை கதை தெரிந்த போதே இப்படி தான் நடக்கும்னு தெரிந்து இருக்கும் .....ரேம் சொதப்பிட்டதா இருந்தாலும் இது தான் நிதர்சனம் ....அம்மாக்கு மனவருத்தம் கொடுக்கும் எதையும் அவனால செய்ய முடியாது ....

ஆனா அகில் பாட்டி அப்புறம் ஸ்வர்ணா மேல நம்பிக்கை இருக்கு ...ஒரு அம்மாவா தனக்கு இத்தனை பார்க்கும் பையன் அவன் விரும்பியதை தான் கொடுக்க நினைப்பாங்க .....விருப்பம் இல்லாத கட்டாய கல்யாணம் விளைவுகள் பாட்டி அம்மா இரண்டு பேரும் பார்த்தவங்க தானே ....

ப்ரவீனா அண்ட் பிரகாஷ் இரண்டு பேருக்கும் நல்ல படிப்பினை வேணும்.....அவங்க அவங்க பெண்ணாலே கிடைக்கும்னு நம்புறேன் .....ஸ்வர்ணா அம்மாவோட பற்றற்ற தன்மையை விட்டு வெளி கொண்டு வரபோறது யாரோ ???.....
Waiting to see....Nice episode....
Thanks Ramya:):)
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அபர்ணா நிலமை கஷ்டம்
ராம் அவசரப்பட்டு பேசி விட்டான்
 

MythiliManivannan

Well-Known Member
ராம் தனது தாய்க்காக பார்ப்பது போல ஸ்வர்ணாவும் ராமிற்காக பார்ப்பாரா.......???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top