ஜதி சொல்றதுக்கு மருது மட்டுமில்லை அவங்க வீடும் அந்த ஏரியாவும் தலையாட்டும் போலவே.. அப்புறம் அதிகாரம் தூள் பறக்காம எப்படி.. அதிலும் பாசத்திற்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாளே அங்கு தான் ஜதி ஜெயிக்கிறாள் அனைவரின் மனதிலும்...
விமலா உன் மாமா ன்னு உரிமையா பேசி ஆசிர்வாதம் வாங்கிட்டு அப்புறம் ஏன் மத்ததை பேசற... அவன் உன் மாமா அதை கொண்டு எதையும் செய்வான்..
மருதுவின் மனதில் இருக்கும் பயம் நியாயமானது தானே... பெண்ணிற்கு பிரசவம் மறுஜென்மம் தானே... எல்லாம் நல்லவிதமாய் நடந்திட வேண்டும். தன் ஜதி தன்னிடம் திரும்பிட வேண்டும் என்பது அவனின் பிறப்பை நியாபகப்படுத்தி மனதில் பெரும் போராட்டத்தையும் புயலையும் கிளப்பி விட்டிருக்கிறது.. நீ வணங்கும் தெய்வம் துணை நிற்கும் மருது... நீ உன் ஆசை படி மூன்று பெற்று கொள்ள வேண்டாமா.. முதலுக்கே இப்படி என்றால் இன்னமும் இரண்டுக்கு......