நண்பர்களே ஒரு நெகிழ்ச்சி:-பொதுவாக என் மனைவி,மகள் ஊருக்கு போனால் என் அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவேன். அல்லது என் அம்மா இங்கு வந்துவிடுவார். என் அம்மா சில மாதங்களுக்கு முன் மறைந்தார். அதன்பின் முதல் முறையாக என் மனைவி மகள் லீவுக்கு ஊருக்கு சென்றுள்ளார்கள்.தம்பிகள் போன் செய்து சாப்பிடகூப்பிடார்கள். நான்கூச்சபட்டுக்கொண்டு வேண்டாம் என்றேன்.இரண்டு நாட்களாக என் வீட்டின் வலதுபுறம் இருந்து ஒரு கேரியர், இடது புறம் இருந்து ஒரு கேரியர் தம்பிகள் கொடுத்தர்கள் என்று வருகிறது. நான் பொன் செய்து சத்தம் போட்டால், எனக்கு மேல் சத்தம் வருகிறது என் தம்பிகள் மனைவிகளிடம் இருந்து. கடைசியாக சமாதனஉடன்பாடிக்கையாக மூன்று வேளை இருவரும் பிரித்து தருகிறோம் என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. நான் மிகவும் கொடுத்துவைத்தவன். என் அம்மா தாங்கினார்,பின் என் மனைவி,மகள் தாங்குகிறர்கள். இன்று என் தம்பி மனைவிகள் தாங்குகிறார்கள். உறவில் அவர்களுக்கு நான் பெரிய அத்தான். உண்மையில் பெரிய அண்ணன். {நானும் கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளேன் போல் இருக்கிறது}