டியர் மீனு mam, தங்கள் தமிழ் பற்றுக்கு முதல் வணக்கம்.Meenu,
முதலில் கதையை தொடர்ந்து தருவதற்கு நன்றி. உங்கள் தமிழ் பற்று எப்பொழுதும் போல் இக்கதையிலும் பொங்கி வழிகிறது. எப்படித்தான் hi-tech வார்த்தைகளுக்கு கூட தமிழ் வார்த்தை கண்டுபிடிக்கிறீர்களோ.
இக்கதையில் முதலில் ஈர்த்தது அமுதன் யாழிசை பெயர்கள் தான். அமுதனை விட அவன் அம்மாவை ரொம்ப பிடித்துவிட்டது. அவன் வாழ்க்கை முறை , அவன் சேவை மனப்பான்மை , அவளை கண்ணியத்தோடு நடத்திய விதம், காதலை வெளிப்படத்திய விதம் அத்தனையும் அவனை அழகான ஆண்மகனாக காட்டுகிறது. இப்போது அவன் கோபமான உதாசீனம் கூட கம்பீரமாக உள்ளது.
அவளை இம்முறை திட்டியது தரக்குறைவாக இருந்திட கூடாதே என்று எதிர்பார்ப்பை கொடுக்கிறது.
அவனுடைய அம்மாவுடன் அவள் பழகப்போகும் நாட்களை எதர்நோக்கி காத்திருக்கிறேன். அதுவாகினும் அவளை தன் வேலியை விட்டு வரவைக்குமா?