அருமையான update.
பாவம் அண்ணன்காரன். தங்கை மேல வெச்ச பாசத்துலையும் அக்கறையாலையும் படாத பாடு படறான் தேவசேனாகிட்டயும் சேஷாகிட்டயும்.
நல்லா வந்துச்சு ஞானோதயம் இவனுக்கு நாலு வருஷம் கழிச்சு, இவனோட பழிவாங்கு படலம் முடிஞ்ச பின்ன. எதுக்கும் உங்கம்மாவை துணைக்கு கூப்பிட்டுக்கோ தம்பி . உன்னைவிட தெம்பா sentiment-ஆ உனக்காக தேவாகிட்ட பேசுவாங்க.
தேவா சேஷாவிடம் கேட்ட ஒவ்வொரு விஷயமும் நியாயமானது. இவனை கல்யாணம் செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏன் வந்ததுன்னு சொல்லிட்டா.
ஒன்னே ஒன்னு வேணா சொல்லலாம். ரெண்டு பேருமே மத்தவங்களோட சாத்தான் அவதாரம் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சு வெச்சுருக்கறதால, அவங்க இணைந்து வாழ ஆசைப்பட்டா பெருசா புதுசா எதுவும் பிரச்சனை வராது.