பாவம் தேவசேனா. இந்த epi படிச்சதுக்கு அப்புறம் இப்படி தான் தோணுது.
அமிர்த்தா ரொம்ப ரொம்ப நல்லவளாகவே இருக்கட்டும். அதனால தேவசேனாவுக்கு எப்படி இப்படி ஒரு அநியாயம் செய்யலாம்? எல்லாம் பிரகா பாட்டியால் வந்தது.
இந்த epi படிச்சதுல உணர்ந்த இன்னொரு விஷயம், தேவா சொன்னது போல இந்த ஒழுக்கசீலனைப் பெத்த கலைஅரசி அவர்களின் நிமிர்வு, தேவா சொன்னதைப்போல too too much தான்.
சேஷாக்கு நாய்க்குட்டி மாதிரி இவனை சுத்தி சுத்தி வரும் அமிர்தாவைப்போல் இல்லாமல் தனக்கான நிமிர்வுடனும் தனித்தன்மையுடனும் இருக்கும் தேவாவை பிடிக்காது தான். இவன் என்று இல்லை. இவனை மாதிரி இருக்கும் எந்த ஆணுக்குமே அது பொருந்தும்.
இப்பதான் தேவா behaviour இன்னும் ரசிப்புக்குறியதா தோணுது.