ஒருவழியா 15வது அத்தியாயத்துல கதையோட தலைப்பை கொண்டு வந்துட்டேன். கதை எப்படி போய் கிட்டு இருக்கு? ஈஸ்வர இன்னமும் வச்சி செய்யணுமா? இல்ல அடுத்த கட்டத்துக்கு போகலாமா?
யதுநாத்தோடு யாழினியும் வந்து சேர ஈஸ்வரமூர்த்தி கூறும் முன்பாகவே சஞ்ஜீவ் யாழினி தன்னோடுதான் வேலை பார்க்க வேண்டும் என்று கூறினான்.
"ஒரு விசயத்த முதல்ல புரிஞ்சிக்கணும் பிரதர். உறவு, வீட்டு பிரச்சினை எல்லாம் வீட்டோட வச்சுக்கணும், பாக்டரிக்கு வந்தா வேலைய மட்டும்தான் பார்க்கணும்" என்றான் யதுநாத்.
"யாரு எத சொல்லுறது என்ற விவஸ்த்தையே இல்ல" யாழினி முணுமுணுக்க, அது யதுநாத்தின் காதில் தெளிவாக விழுந்து மெல்லிய புன்னகையை முகத்தில் தோற்றுவித்திருந்தாலும் சிரமப்பட்டு அடக்கியவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டதோடு அவள் புறம் திரும்பவேயில்லை.
"அது எனக்குத் தெரியாதா? யாழினி விசயத்துல நீ" என்று சஞ்ஜீவ் ஆரம்பிக்கும் பொழுதே
"அதான் அவனே சொல்லிட்டானே. இதுக்கு மேல என்ன இருக்கு?" என்ற ஈஸ்வரமூர்த்தி வெளியேறினார்.
சஞ்ஜீவும் யாழினியும் திருமணமானதாக நாடகமாடுவது தெரியும். யாழினி யதுநாத்தோடு இருந்தால் அவள் மனம் அவன் புறம் சாயும், அவனும் அவளை விடமாட்டான் என்று திட்டம் போட்ட ஈஸ்வர், தான் அங்கிருந்தால் சஞ்ஜீவ் பேசியே யாழினியை அவனோடு தங்க வைத்துக் கொள்வான் என்று புரியக் கிளம்பி விட்டார்.
"நான் பார்த்துக்கிறேண்ணா... உன் கூட தானே வேலைக்கு வரப்போறேன். உன் கூடத்தான் வீட்டுக்கு போகப்போறேன். மதியம் உன் கூடத்தான் சாப்பிடப் போறேன். நீ ப்ரீயாகிறப்போ வந்து என்ன பாத்துக்க" என்ற யாழினி யதுநாத்தை பார்த்தவாறே கூற,
அவள் சஞ்ஜீவை "அண்ணா" என்றா அழைத்தாள். தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? அல்லது தனக்கு அவ்வாறு கேட்டதா? ஒரு நொடி குழம்பியவனை இவர்கள் சிந்திக்க விட்டால் தானே
"சரி போ..." என்று சஞ்ஜீவ் சொன்னதும் "வாங்க பாஸ்" என்று யதுநாத்தை அழைத்தாள் யாழினி.
******************************************************
தான் போட்ட திட்டம் எதுவுமே நடக்கவில்லை. யாழினியை எதற்காக கல்பனாவிடம் கொடுத்தேன்? யதுநாத் அவளை காதலித்தும் தான் நினனைத்தது நடக்கவில்லையே என்று ஈஸ்வரமூர்த்தி கோபத்தில் குதித்துக் கொண்டிருக்க, அவரின் அலைபேசி அலறியது.
"என்ன மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணமாமே. நான் சொல்லுறது பையனுக்கு வேற பொண்ணோட இல்ல உங்க சொந்த பொண்ணோட கல்யாணமாமே. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு நிக்குறேன். வரேன். ஆதாரத்தோடு வந்து சஞ்ஜீவும், யாழினியும் உங்க பொண்ணு, ரேணுகா உங்க மனைவி என்று சொல்லுறேன். எனக்காக காத்துக் கொண்டு நில்லுங்க" என்றது அந்தக் குரல்.
யார் அழைத்தார்கள்? என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள் ஈஸ்வரமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணுக்கு தெரியாத எதிரியை விட, கண்முன்னால் நிற்கும் ஆதாரத்தை அழித்து விடுவதுதான் புத்திசாலித்தனம் என்று ஈஸ்வரரின் குறுக்குப்புத்தி அவருக்கு யோசனை கூற யாழினியை கொலை செய்ய முடிவு செய்தார்.
அவர் வேலைக் கொடுத்தால் சந்தேகப்படுவாள் அல்லது உஷாராகி விடுவாளென்று தர்மராஜை அழைத்து யாழினியை குடோனுக்கு அனுப்பி வைத்தவர் அவள் உள்ளே சென்றதும் கதவை வெளியே பூட்டி குடோனுக்கே தீ வைத்திருந்தார்.
தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் யதுநாத்தான் யாழினியை கொல்ல முயன்றதாக போலீஸ் அவனை கைது செய்திருந்தது.
யதுநாத்தோடு யாழினியும் வந்து சேர ஈஸ்வரமூர்த்தி கூறும் முன்பாகவே சஞ்ஜீவ் யாழினி தன்னோடுதான் வேலை பார்க்க வேண்டும் என்று கூறினான்.
"ஒரு விசயத்த முதல்ல புரிஞ்சிக்கணும் பிரதர். உறவு, வீட்டு பிரச்சினை எல்லாம் வீட்டோட வச்சுக்கணும், பாக்டரிக்கு வந்தா வேலைய மட்டும்தான் பார்க்கணும்" என்றான் யதுநாத்.
"யாரு எத சொல்லுறது என்ற விவஸ்த்தையே இல்ல" யாழினி முணுமுணுக்க, அது யதுநாத்தின் காதில் தெளிவாக விழுந்து மெல்லிய புன்னகையை முகத்தில் தோற்றுவித்திருந்தாலும் சிரமப்பட்டு அடக்கியவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டதோடு அவள் புறம் திரும்பவேயில்லை.
"அது எனக்குத் தெரியாதா? யாழினி விசயத்துல நீ" என்று சஞ்ஜீவ் ஆரம்பிக்கும் பொழுதே
"அதான் அவனே சொல்லிட்டானே. இதுக்கு மேல என்ன இருக்கு?" என்ற ஈஸ்வரமூர்த்தி வெளியேறினார்.
சஞ்ஜீவும் யாழினியும் திருமணமானதாக நாடகமாடுவது தெரியும். யாழினி யதுநாத்தோடு இருந்தால் அவள் மனம் அவன் புறம் சாயும், அவனும் அவளை விடமாட்டான் என்று திட்டம் போட்ட ஈஸ்வர், தான் அங்கிருந்தால் சஞ்ஜீவ் பேசியே யாழினியை அவனோடு தங்க வைத்துக் கொள்வான் என்று புரியக் கிளம்பி விட்டார்.
"நான் பார்த்துக்கிறேண்ணா... உன் கூட தானே வேலைக்கு வரப்போறேன். உன் கூடத்தான் வீட்டுக்கு போகப்போறேன். மதியம் உன் கூடத்தான் சாப்பிடப் போறேன். நீ ப்ரீயாகிறப்போ வந்து என்ன பாத்துக்க" என்ற யாழினி யதுநாத்தை பார்த்தவாறே கூற,
அவள் சஞ்ஜீவை "அண்ணா" என்றா அழைத்தாள். தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? அல்லது தனக்கு அவ்வாறு கேட்டதா? ஒரு நொடி குழம்பியவனை இவர்கள் சிந்திக்க விட்டால் தானே
"சரி போ..." என்று சஞ்ஜீவ் சொன்னதும் "வாங்க பாஸ்" என்று யதுநாத்தை அழைத்தாள் யாழினி.
******************************************************
தான் போட்ட திட்டம் எதுவுமே நடக்கவில்லை. யாழினியை எதற்காக கல்பனாவிடம் கொடுத்தேன்? யதுநாத் அவளை காதலித்தும் தான் நினனைத்தது நடக்கவில்லையே என்று ஈஸ்வரமூர்த்தி கோபத்தில் குதித்துக் கொண்டிருக்க, அவரின் அலைபேசி அலறியது.
"என்ன மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணமாமே. நான் சொல்லுறது பையனுக்கு வேற பொண்ணோட இல்ல உங்க சொந்த பொண்ணோட கல்யாணமாமே. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு நிக்குறேன். வரேன். ஆதாரத்தோடு வந்து சஞ்ஜீவும், யாழினியும் உங்க பொண்ணு, ரேணுகா உங்க மனைவி என்று சொல்லுறேன். எனக்காக காத்துக் கொண்டு நில்லுங்க" என்றது அந்தக் குரல்.
யார் அழைத்தார்கள்? என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள் ஈஸ்வரமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணுக்கு தெரியாத எதிரியை விட, கண்முன்னால் நிற்கும் ஆதாரத்தை அழித்து விடுவதுதான் புத்திசாலித்தனம் என்று ஈஸ்வரரின் குறுக்குப்புத்தி அவருக்கு யோசனை கூற யாழினியை கொலை செய்ய முடிவு செய்தார்.
அவர் வேலைக் கொடுத்தால் சந்தேகப்படுவாள் அல்லது உஷாராகி விடுவாளென்று தர்மராஜை அழைத்து யாழினியை குடோனுக்கு அனுப்பி வைத்தவர் அவள் உள்ளே சென்றதும் கதவை வெளியே பூட்டி குடோனுக்கே தீ வைத்திருந்தார்.
தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் யதுநாத்தான் யாழினியை கொல்ல முயன்றதாக போலீஸ் அவனை கைது செய்திருந்தது.