ஆண் பெண் என்று வேறுபாடின்றி தோழமையாக பழகியவனுக்கு காதல் என்ற சொல் கொஞ்சம் விசித்தரமானதாகத்தான் இருந்தது. அவனிடம் எந்த பெண்ணும் காதல் என்று வந்து நின்றதில்லை. சதா பெண்களோடு சுற்றுபவனிடம் பிற பெண்கள் எவ்வாறு காதலை சொல்வார்கள்? தினமும் ஒரு பெண்ணோடு பைக்கில் காண்பவனை பிளே பாய் என்றே கருதினர்.
இந்தப் பெண்ணாவது நாணிக் கோணி காதலை சொல்லி இருந்தால் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தேடி இருப்பான்.
காதல் என்றாலே தனக்கு பிடித்த பெண்ணின் சம்மதம் கிடைத்தால் முத்தமிடுவது. அவள் சம்மதத்தோடு எந்த எல்லைக்கும் போவது என்றுதான் எண்ணி இருந்தான். அவன் நண்பர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.
அவனுக்கு பிடித்த பெண்களிடம் தன் விருப்பத்தை கூறி இருக்கின்றான். சிலர் நிராகரித்தால், சிலர் ஏற்றுக் கொண்டும் இருக்கின்றனர்.
ஏற்றுக்கொண்டு காதலர்களாக சுற்றிய பெண்கள் தோழிகளோடு பேசக் கூடாது பைக்கில் போகக் கூடாது என்று அவன் சுதந்திரத்தில் கைவைக்க தனக்கே ரூல்ஸ் போடும் இந்த இழவெடுத்த காதல் வேண்டாம் என்று இவன் சில பெண்களை துரத்தியடித்தான்.
"ஏன்டா இப்படியே போனா உனக்கு எந்த பொண்ணுமே கிடைக்க மாட்டா. அவளுங்க சொல்வாளுங்க சரி சரியென்று சமாளிக்கனும்டா" நண்பர்களின் புத்திமதியில் தெளிந்தவன் ஆறுமாதமாக ஒரு பெண்ணோடு சுற்றினான்.
அவளும் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று இவனை படுத்தத்தான் செய்தாள். சமாளித்தவன் அவளிடம் மாட்டிக் கொண்டு கன்னத்தில் அறைவாங்கி பிரேக்கப் ஆனான்.
அவனின் வாழ்க்கைக்குள் யாழினி சொல்லாமல்கொள்ளாமல் சட்டென்று வந்து நின்றாள். தன் மானம் கெட்ட மனம் அடங்கவே மாட்டேங்குது. பிரேக்கப் ஆன சோகத்தை போக்க நண்பர்கள் சினிமாவுக்கு அழைத்து வந்தால் அங்கே ஒரு பெண்ணை பார்த்து அலையுது. தன்னையே திட்டிக் கொண்டவன் யாழினியை தேடி ஓடி இருந்தான்.
இந்தப் பெண்ணாவது நாணிக் கோணி காதலை சொல்லி இருந்தால் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தேடி இருப்பான்.
காதல் என்றாலே தனக்கு பிடித்த பெண்ணின் சம்மதம் கிடைத்தால் முத்தமிடுவது. அவள் சம்மதத்தோடு எந்த எல்லைக்கும் போவது என்றுதான் எண்ணி இருந்தான். அவன் நண்பர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.
அவனுக்கு பிடித்த பெண்களிடம் தன் விருப்பத்தை கூறி இருக்கின்றான். சிலர் நிராகரித்தால், சிலர் ஏற்றுக் கொண்டும் இருக்கின்றனர்.
ஏற்றுக்கொண்டு காதலர்களாக சுற்றிய பெண்கள் தோழிகளோடு பேசக் கூடாது பைக்கில் போகக் கூடாது என்று அவன் சுதந்திரத்தில் கைவைக்க தனக்கே ரூல்ஸ் போடும் இந்த இழவெடுத்த காதல் வேண்டாம் என்று இவன் சில பெண்களை துரத்தியடித்தான்.
"ஏன்டா இப்படியே போனா உனக்கு எந்த பொண்ணுமே கிடைக்க மாட்டா. அவளுங்க சொல்வாளுங்க சரி சரியென்று சமாளிக்கனும்டா" நண்பர்களின் புத்திமதியில் தெளிந்தவன் ஆறுமாதமாக ஒரு பெண்ணோடு சுற்றினான்.
அவளும் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று இவனை படுத்தத்தான் செய்தாள். சமாளித்தவன் அவளிடம் மாட்டிக் கொண்டு கன்னத்தில் அறைவாங்கி பிரேக்கப் ஆனான்.
அவனின் வாழ்க்கைக்குள் யாழினி சொல்லாமல்கொள்ளாமல் சட்டென்று வந்து நின்றாள். தன் மானம் கெட்ட மனம் அடங்கவே மாட்டேங்குது. பிரேக்கப் ஆன சோகத்தை போக்க நண்பர்கள் சினிமாவுக்கு அழைத்து வந்தால் அங்கே ஒரு பெண்ணை பார்த்து அலையுது. தன்னையே திட்டிக் கொண்டவன் யாழினியை தேடி ஓடி இருந்தான்.
Last edited: