Priyamehan
Well-Known Member
பாதி சாப்பாட்டில் எழுந்து போனவளை...
"ஏய் அருவி... அரும்மா, அரு.... அருவி சாப்பிட்டு போ" என்ற சொற்கள் அருவியை பின்தொடந்துக் கொண்டே தான் இருந்தது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதத்துடன் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
"இப்போ உன்னைய யாருடி இதைப் பத்தி சொல்ல சொன்னா?" என்று வேந்தனை திட்ட முடியாததால் அமுதா ரித்துவை பிடித்துக்கொள்ள..
"அம்மா இப்போ எதுக்கு பாப்பாவை திட்டறீங்க...? ஹாஸ்டல 200 பேர் இருக்காங்க அவங்களும் இதை தான் சாப்பிடாறாங்க... அவங்களுக்கெல்லாம் நல்லா இருக்கும் போது இவளுக்கு மட்டும் என்ன வந்தது...?போற இடமெல்லாம் வடை பாயசத்தோட எதிர்ப்பார்த்தா ரொம்ப கஷ்டம்... இருக்கற இடத்தோட ஒத்துப் போக பழகணும் , கிடைக்கறை தின்னு பழகனும்" என்றவன் முழுதாக சாப்பிட்டு விட்டே எழுந்தான்.
அருவி சாப்பிடவில்லை என்றது அவனை பெரிதாக பாதிக்கவில்லை.. அதைக்காட்டிலும் "சாப்பாட்டுல இருந்து பாதில எழுந்துப் போறா... என்ன பழக்கமோ இதை செய்ய காலையில இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டாங்க" என்று தான் தோன்றியது வேந்தனுக்கு..
வீட்டிற்குச் சென்ற அருவி... தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு காது கிழியும் அளவிற்கு பாட்டை போட்டு ஆட ஆரம்பித்தாள்.
அருவியை யாரும் எளிதில் கோவப்படுத்த முடியாது... முகத்தில் கோவம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையான கோவம் அவளை அவ்வளவு எளிதில் நெருங்காது..
ஆனால் அவள் மனதைக் கஷ்டப்படுத்தி கோவப்படுத்திவிட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் பேச வைக்க முடியாது அது யாராக இருந்தாலும்.
அனைவருக்கும் முன் வீட்டிற்கு வந்த வேந்தனுக்கு முதலில் கேட்டது காது கிழிவது போல் வந்த பாட்டு சத்தம் தான்.
வேகமாக அருவியின் அறைக்குச் சென்று கதவை திறக்க.. அருவி வெறிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
"ஏய் நிறுத்திடி..." என்று வேந்தன் காட்டு கத்து கத்தினாலும் அது அருவியின் காதில் சென்று அடைய முடியாமல் பாடலில் சத்தம் தடுக்க.. வேகமாக சென்று அதை அணைத்தான்.
"எவன்டா அது..." என்றவாரே அருவி திரும்ப அங்கு மதுரைவீரன் கணக்காக நின்றிருந்தான் வேந்தன்.
"மாமா...." என்றவளின் குரல் தொண்டையை விட்டு நகர முடியாமல் தவித்தது.
"எதுக்குடி இப்படி பஜாரி மாதிரி ஆடிட்டு இருக்க.. பொண்ணு மாதிரி அடக்கமா இருக்கவே தெரியாதா உனக்கு?" என்று கோவமாக கத்தியவன்... தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"இல்ல மாமா சும்மாதான் பாட்டு..." என்று இழுக்க..
"நாளைக்கு என்னோட தோட்டம் வந்து வேலை செய்யற" என்று முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
"ச்சை இவனோட ஒரே இம்சையா இருக்கு.. இனி லீவ்க்கு இங்க வரவே மாட்டேன்" என்று காலை உதைக்க... அதையும் அறையின் வெளியே இருந்து வேந்தன் பார்த்து விட்டான்..
"ஓ என்னோட ஒரே இம்சையா இருக்கா.... எங்க திரும்பவும் சொல்லு" என்று அவளை நெருங்கி ஒவ்வொரு அடியாக வைக்க அருவியின் மனதில் மத்தளம் கொட்டியது.
"மா.... மா.."
"என்ன மாமா.. சும்மா அவன் இவன் நாயே, பேயே, தண்டம் முண்டம்னு சொல்லு.." என்றவன்.. "நாளைக்கு தோட்டத்துக்கு போ அங்க நான் இருக்க மாட்டேன்... மாறன்கிட்ட சொல்லி வைக்கிறேன், அவன் பார்த்துப்பான்" என்றான்.
"எனக்கு புரியல.."
"நீ வேலை செஞ்சிதான் ஆகணும்... ஆனால் அதை கைட் பண்ண நான் அங்க இருக்க மாட்டேன்... தேவாவும் ஷர்மிளா அத்தையும் நாளைக்கு ஊர்ல இருந்து வராங்க... நான் அவங்களை கூப்பிட கோயம்பத்தூர் போய்டுவேன் உனக்கு இம்சையா இருக்காது" என்றான்.
தேவா என்றதும் அவன் கண்கள் ஜொலித்ததோ என்று தோன்றியது அருவிக்கு..
ம்ம் என்று தலையை ஆட்டவும் அங்கிருந்து சென்று விட்டான்.
மற்ற அனைவரும் பண்ணையில் இருந்து வந்துவிட "அருவி வா சாப்பிட, ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல இதுல சண்டைப் போட்டுட்டு வயிறை வேற காயப் போடற" என்று அதட்டினார் மாலதி..
"எனக்கு வேண்டா அத்தை...பசிக்கல..."
"என்ன பசிக்கல... ஆசையா சாப்பிட்டு இருந்த இந்த தாத்தா கேள்வி கேக்கப் போய் தான் இவ்வளவு பிரச்சனையும் வா அரு வந்து சாப்பிடு" என்று அழைத்தது வேற யாருமில்லை கார்த்திக் தான் அவனுக்கும் அருவியை எப்போதும் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஆசை தான்... அதற்காக அவள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு சந்தோசப்படுபவன் அல்ல...
"அம்மா நீங்க போங்க நாங்கப் பார்த்துக்கறோம்" என்று இனியன் மாலதியை அனுப்பி வைத்துவிட...
"நீங்க என்ன பார்த்துப்பிங்க... ஒன்னும் தேவையில்ல எல்லோரும் கிளம்புங்க" என்று விட்டாள்.
"நாங்க கிளம்ப தான் போறோம் வெளியப் போய் சாப்பிடலாம்னு பிளான் பண்ணனோம் நீ வரியா இல்லையா?"
"இப்போதானேடா வகையும் தொகையுமா கொட்டிட்டு வந்திங்க.."
"அதுலாம் செரிச்சி போய்டுச்சி நீ வா.. நம்ப ரோட்டு கடை அத்தோ சாப்பிடலாம் செம டெஸ்ட்டா இருக்கும்"என்றான் கார்த்திக்.
"இல்ல காக்கா... உங்க நொண்ணனுக்கு தெரிஞ்சா ரோட்டு கடை சாப்பாடு ஹெல்த்தி இல்லைனு ஆரம்பிச்சிடுவார்"
"அவரை கூட்டிட்டு போனா தானே... நம்ப மட்டும் போலாம்" என்றான் இனியன்
"அப்போ டபுள் ட்ரிப்பில் ஓகே... போலாம்" என்றாள் சந்தோசமாக..
"டேய் நானும் தானே என்னைய டீல்ல விட்டுட்டீங்க" என்று ரித்துக் கேக்க... அருவி அமைதியாக இருந்தாள்.
"நீதான் அங்கையே கொட்டிகிட்டையில.. இங்கையே இரு நாங்க மட்டும் போறோம்" என்று கார்த்திக் அருவின் அமைதியில் விஷயம் புரிந்து சொல்ல
"அரு நான் இல்லாம வரமாட்டா" என்றவள் "சாரி அரு.. நீ ஹாஸ்டல சாப்பிடாம அடம் பிடிச்சியா அதான் நேரம் கிடைக்கும் போதே சொல்லிடலாம்னு சொல்லிட்டேன்ஆனால் இவ்வளவு பெரிய இஸ்யூ ஆகும்னு நினைக்கல..." என்றாள்.
அப்போதும் அருவி அமைதியாக இருக்க.. ரித்து அருவியை பின் புறமாக அணைத்து கன்னதில் முத்தம் கொடுத்தாள்.
"ச்சீ இப்போ எதுக்கு கன்னத்தை எச்சில் படுத்தற எரும... சரி வந்து தொலை" என்றாள்.
நால்வரும் சேர்ந்து வெளியே கிளம்பினர்
இவர்களைப் பார்த்துவிட்டு,
"நகர்வலம் எதுவரைக்கும்?" என்றான் வேந்தன் கிண்டலாக
"பார்த்துட்டானா இனி போன மாதிரி தான் ...." என்று அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்து விட்டாள் அருவி.
அவள் அருகில் அமுதா வந்து அமர..
"அண்ணா சிட்டி வரைக்கும் போய்ட்டு வந்துடறோம்.." என்றான் இனியன்
"ம்ம்" என்றவன் டிவியில் மூழ்க..
"வாடிப் போலாம்" என்று கைப் பிடித்து இழுத்தாள் ரித்து..
"இரு வரேன், அத்தை நாளைக்கு தேவா வராளா....?"
"அப்படி தானு நினைக்கறேன் அரும்மா.. எங்ககிட்ட யாரும் சொல்லல... வேந்தன் தான் போற போக்குல சொல்லிட்டு போனான்."
"ஓ எனக்கும் கூட சொல்லல அத்தை, சரி நாங்க கிளம்பறோம் அம்மாகிட்ட சொல்லிடுங்க" என்று சென்று விட்டாள்.
காரில் போகும் போது.."என்னடி அம்மாகிட்ட கேட்ட? " என்று ரித்து கேக்க
"நாளைக்கு தேவா வராளா"
"அப்டியா ஐயோஓஓ ஜாலி ஜாலி... செமையா இருக்கும் அவ வந்து ரெண்டு வருஷம் இருக்கும்ல"
"ம்ம்" .என்ற அருவியின் குரல் உள்ளேப் போனது.
"ஏண்டி என்னாச்சி?" அமைதியாகிட்ட...
"நாளைக்கு உங்க அண்ணன் அவங்களை பிக் பண்ணப் போறாரா... அவர் சொல்லி தான் எனக்கே தெரியும்... அவளும் நம்பக்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தியா...?"
"எங்களுக்குமே தெரியாது அரு..." என்று கார்த்திக் சொல்ல
"தினமும் போன் பேசறா ஆனா சொல்லல... வரட்டும்" என்றாள்.
அதன்பின் நால்வரும் சேர்ந்து சிட்டியையே ஒரு கலக்கு கலக்கி விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அடுத்த நாள் அதிகாலை விடியும் போதே ரித்விகாவால் எழுப்பப்பட்டாள் அருவி..
"என்னடி"
"எழுந்துக்கோ அரு... அண்ணா வாக்கிங் போக ரெடியா இருக்கார்...நம்மளும் போகணும்"
"அவன் போனா எனக்கு என்னடி"
"நம்மளும் போகணும்னு சொல்றேன்ல அது காதுல விழலையா, நேத்தே சொன்னாங்கள நேத்து தான் வந்ததுனால அண்ணா சும்மா விட்டுட்டாரு, இன்னைக்கு அப்படிலாம் விடமாட்டார், போய் மூஞ்சி கழுவி பல்லு விளக்கிட்டு வா நேரமாயிடுச்சி" என்றாள் பதட்டமாக..
"போடி உனக்கும் உங்க நொண்ணனுக்கு வேற வேலையே இல்லை..."
"அரு சொன்னாக் கேளு..."
"போடினு சொன்னேன் உன்னை" என்றவள் போர்வையை இழுத்து மூடினாள்.
ரித்விகா திரும்பி பார்த்தவாரே வெளியே போனாள்.
"என்ன ரித்து அரு வரலையா?" என்று ரகசியமாக கேட்டான் கார்த்திக்.
"இல்லடா அவ இழுத்து போர்த்திட்டு தூங்கரா" என்று சொல்லி முடிக்கும் முன்னே "நாங்க ரெடியா இருக்கோம் போலாமா?" என்று பெரியவர்கள் அனைவரும் கிளம்ப...
"யாரோ மிஸ்ஸிங்..." என்று வேந்தன் பார்வையை சுழலல விட்டவன்... "எங்க ரித்து அவ?" என்று கேட்டான்.
"அண்ணா அவ ...."
"என்ன?"
"அவ தூங்கறா.."
"போய் கூட்டிட்டு வா"
"எழுப்பி பார்த்துட்டேன் எந்திரிக்கல..."
"இன்னைக்கு மட்டும் வாக்கிங் வரல,அப்புறம் காலையில இருந்து எல்லா வேலையும் அவ தான் செய்யணும் இதை நான் மிரட்ட சொல்லலனு சொல்லிட்டு வா.. அதுக்கு மேலையும் வரலைனா நான் பார்த்துக்கறேன்" என்றான்.
"சரிண்ணா" என்றவள் வேந்தன் சொன்னதை வார்த்தை மாறாமல் அப்படியே அருவியிடம் ஒப்பித்தாள்.
"பரவால்ல போடி... எங்க அத்தைங்க என்னைய காப்பாத்துவாங்க ..." என்று தூக்கத்திலும் திமிறாக சொல்லியவள் மீண்டும் உறங்க போக..
"இதை அண்ணாகிட்ட சொல்லிடட்டுமா அரு.."
தூக்கத்தில் என்ன சொன்னோம் என்பதெல்லாம் நினைவில் இல்லாததால்... "போயி சொல்லு போடி.. முதல இங்க இருந்து போ சும்மா நை நைனு மனுஷனை நிம்மதியா தூங்கக் கூட விடாம" என்றவள் மீண்டும் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
ரித்து அருவி சொன்னதை சொல்லவும்..
"ஓ மேடம் அந்த அளவுக்கு வந்துட்டாங்களா சரி நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க" என்றவன் அவர்களுக்கு பின்னாடியே சென்றான்.
இரவு முழுவதும் தூங்கினாலும் அதிகாலையில் வரும் தூக்கம் தான் அலாதியாக இருக்கும்...
அதை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அருவி.
நடைப்பயிற்சி சென்ற வேந்தன் அனைவருக்கும் முன்பாகவே வீடு திரும்பினான். கேட்டதற்கு தேவாவை அழைத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தவன் வந்த வேகத்தில் அருவியின் அறைக்குச் சென்று அவள் தலையில் ஒரு வாலி நீரை ஊற்றினான்.
"ஏய் அருவி... அரும்மா, அரு.... அருவி சாப்பிட்டு போ" என்ற சொற்கள் அருவியை பின்தொடந்துக் கொண்டே தான் இருந்தது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதத்துடன் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
"இப்போ உன்னைய யாருடி இதைப் பத்தி சொல்ல சொன்னா?" என்று வேந்தனை திட்ட முடியாததால் அமுதா ரித்துவை பிடித்துக்கொள்ள..
"அம்மா இப்போ எதுக்கு பாப்பாவை திட்டறீங்க...? ஹாஸ்டல 200 பேர் இருக்காங்க அவங்களும் இதை தான் சாப்பிடாறாங்க... அவங்களுக்கெல்லாம் நல்லா இருக்கும் போது இவளுக்கு மட்டும் என்ன வந்தது...?போற இடமெல்லாம் வடை பாயசத்தோட எதிர்ப்பார்த்தா ரொம்ப கஷ்டம்... இருக்கற இடத்தோட ஒத்துப் போக பழகணும் , கிடைக்கறை தின்னு பழகனும்" என்றவன் முழுதாக சாப்பிட்டு விட்டே எழுந்தான்.
அருவி சாப்பிடவில்லை என்றது அவனை பெரிதாக பாதிக்கவில்லை.. அதைக்காட்டிலும் "சாப்பாட்டுல இருந்து பாதில எழுந்துப் போறா... என்ன பழக்கமோ இதை செய்ய காலையில இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டாங்க" என்று தான் தோன்றியது வேந்தனுக்கு..
வீட்டிற்குச் சென்ற அருவி... தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு காது கிழியும் அளவிற்கு பாட்டை போட்டு ஆட ஆரம்பித்தாள்.
அருவியை யாரும் எளிதில் கோவப்படுத்த முடியாது... முகத்தில் கோவம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையான கோவம் அவளை அவ்வளவு எளிதில் நெருங்காது..
ஆனால் அவள் மனதைக் கஷ்டப்படுத்தி கோவப்படுத்திவிட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் பேச வைக்க முடியாது அது யாராக இருந்தாலும்.
அனைவருக்கும் முன் வீட்டிற்கு வந்த வேந்தனுக்கு முதலில் கேட்டது காது கிழிவது போல் வந்த பாட்டு சத்தம் தான்.
வேகமாக அருவியின் அறைக்குச் சென்று கதவை திறக்க.. அருவி வெறிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
"ஏய் நிறுத்திடி..." என்று வேந்தன் காட்டு கத்து கத்தினாலும் அது அருவியின் காதில் சென்று அடைய முடியாமல் பாடலில் சத்தம் தடுக்க.. வேகமாக சென்று அதை அணைத்தான்.
"எவன்டா அது..." என்றவாரே அருவி திரும்ப அங்கு மதுரைவீரன் கணக்காக நின்றிருந்தான் வேந்தன்.
"மாமா...." என்றவளின் குரல் தொண்டையை விட்டு நகர முடியாமல் தவித்தது.
"எதுக்குடி இப்படி பஜாரி மாதிரி ஆடிட்டு இருக்க.. பொண்ணு மாதிரி அடக்கமா இருக்கவே தெரியாதா உனக்கு?" என்று கோவமாக கத்தியவன்... தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"இல்ல மாமா சும்மாதான் பாட்டு..." என்று இழுக்க..
"நாளைக்கு என்னோட தோட்டம் வந்து வேலை செய்யற" என்று முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
"ச்சை இவனோட ஒரே இம்சையா இருக்கு.. இனி லீவ்க்கு இங்க வரவே மாட்டேன்" என்று காலை உதைக்க... அதையும் அறையின் வெளியே இருந்து வேந்தன் பார்த்து விட்டான்..
"ஓ என்னோட ஒரே இம்சையா இருக்கா.... எங்க திரும்பவும் சொல்லு" என்று அவளை நெருங்கி ஒவ்வொரு அடியாக வைக்க அருவியின் மனதில் மத்தளம் கொட்டியது.
"மா.... மா.."
"என்ன மாமா.. சும்மா அவன் இவன் நாயே, பேயே, தண்டம் முண்டம்னு சொல்லு.." என்றவன்.. "நாளைக்கு தோட்டத்துக்கு போ அங்க நான் இருக்க மாட்டேன்... மாறன்கிட்ட சொல்லி வைக்கிறேன், அவன் பார்த்துப்பான்" என்றான்.
"எனக்கு புரியல.."
"நீ வேலை செஞ்சிதான் ஆகணும்... ஆனால் அதை கைட் பண்ண நான் அங்க இருக்க மாட்டேன்... தேவாவும் ஷர்மிளா அத்தையும் நாளைக்கு ஊர்ல இருந்து வராங்க... நான் அவங்களை கூப்பிட கோயம்பத்தூர் போய்டுவேன் உனக்கு இம்சையா இருக்காது" என்றான்.
தேவா என்றதும் அவன் கண்கள் ஜொலித்ததோ என்று தோன்றியது அருவிக்கு..
ம்ம் என்று தலையை ஆட்டவும் அங்கிருந்து சென்று விட்டான்.
மற்ற அனைவரும் பண்ணையில் இருந்து வந்துவிட "அருவி வா சாப்பிட, ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல இதுல சண்டைப் போட்டுட்டு வயிறை வேற காயப் போடற" என்று அதட்டினார் மாலதி..
"எனக்கு வேண்டா அத்தை...பசிக்கல..."
"என்ன பசிக்கல... ஆசையா சாப்பிட்டு இருந்த இந்த தாத்தா கேள்வி கேக்கப் போய் தான் இவ்வளவு பிரச்சனையும் வா அரு வந்து சாப்பிடு" என்று அழைத்தது வேற யாருமில்லை கார்த்திக் தான் அவனுக்கும் அருவியை எப்போதும் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஆசை தான்... அதற்காக அவள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு சந்தோசப்படுபவன் அல்ல...
"அம்மா நீங்க போங்க நாங்கப் பார்த்துக்கறோம்" என்று இனியன் மாலதியை அனுப்பி வைத்துவிட...
"நீங்க என்ன பார்த்துப்பிங்க... ஒன்னும் தேவையில்ல எல்லோரும் கிளம்புங்க" என்று விட்டாள்.
"நாங்க கிளம்ப தான் போறோம் வெளியப் போய் சாப்பிடலாம்னு பிளான் பண்ணனோம் நீ வரியா இல்லையா?"
"இப்போதானேடா வகையும் தொகையுமா கொட்டிட்டு வந்திங்க.."
"அதுலாம் செரிச்சி போய்டுச்சி நீ வா.. நம்ப ரோட்டு கடை அத்தோ சாப்பிடலாம் செம டெஸ்ட்டா இருக்கும்"என்றான் கார்த்திக்.
"இல்ல காக்கா... உங்க நொண்ணனுக்கு தெரிஞ்சா ரோட்டு கடை சாப்பாடு ஹெல்த்தி இல்லைனு ஆரம்பிச்சிடுவார்"
"அவரை கூட்டிட்டு போனா தானே... நம்ப மட்டும் போலாம்" என்றான் இனியன்
"அப்போ டபுள் ட்ரிப்பில் ஓகே... போலாம்" என்றாள் சந்தோசமாக..
"டேய் நானும் தானே என்னைய டீல்ல விட்டுட்டீங்க" என்று ரித்துக் கேக்க... அருவி அமைதியாக இருந்தாள்.
"நீதான் அங்கையே கொட்டிகிட்டையில.. இங்கையே இரு நாங்க மட்டும் போறோம்" என்று கார்த்திக் அருவின் அமைதியில் விஷயம் புரிந்து சொல்ல
"அரு நான் இல்லாம வரமாட்டா" என்றவள் "சாரி அரு.. நீ ஹாஸ்டல சாப்பிடாம அடம் பிடிச்சியா அதான் நேரம் கிடைக்கும் போதே சொல்லிடலாம்னு சொல்லிட்டேன்ஆனால் இவ்வளவு பெரிய இஸ்யூ ஆகும்னு நினைக்கல..." என்றாள்.
அப்போதும் அருவி அமைதியாக இருக்க.. ரித்து அருவியை பின் புறமாக அணைத்து கன்னதில் முத்தம் கொடுத்தாள்.
"ச்சீ இப்போ எதுக்கு கன்னத்தை எச்சில் படுத்தற எரும... சரி வந்து தொலை" என்றாள்.
நால்வரும் சேர்ந்து வெளியே கிளம்பினர்
இவர்களைப் பார்த்துவிட்டு,
"நகர்வலம் எதுவரைக்கும்?" என்றான் வேந்தன் கிண்டலாக
"பார்த்துட்டானா இனி போன மாதிரி தான் ...." என்று அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்து விட்டாள் அருவி.
அவள் அருகில் அமுதா வந்து அமர..
"அண்ணா சிட்டி வரைக்கும் போய்ட்டு வந்துடறோம்.." என்றான் இனியன்
"ம்ம்" என்றவன் டிவியில் மூழ்க..
"வாடிப் போலாம்" என்று கைப் பிடித்து இழுத்தாள் ரித்து..
"இரு வரேன், அத்தை நாளைக்கு தேவா வராளா....?"
"அப்படி தானு நினைக்கறேன் அரும்மா.. எங்ககிட்ட யாரும் சொல்லல... வேந்தன் தான் போற போக்குல சொல்லிட்டு போனான்."
"ஓ எனக்கும் கூட சொல்லல அத்தை, சரி நாங்க கிளம்பறோம் அம்மாகிட்ட சொல்லிடுங்க" என்று சென்று விட்டாள்.
காரில் போகும் போது.."என்னடி அம்மாகிட்ட கேட்ட? " என்று ரித்து கேக்க
"நாளைக்கு தேவா வராளா"
"அப்டியா ஐயோஓஓ ஜாலி ஜாலி... செமையா இருக்கும் அவ வந்து ரெண்டு வருஷம் இருக்கும்ல"
"ம்ம்" .என்ற அருவியின் குரல் உள்ளேப் போனது.
"ஏண்டி என்னாச்சி?" அமைதியாகிட்ட...
"நாளைக்கு உங்க அண்ணன் அவங்களை பிக் பண்ணப் போறாரா... அவர் சொல்லி தான் எனக்கே தெரியும்... அவளும் நம்பக்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தியா...?"
"எங்களுக்குமே தெரியாது அரு..." என்று கார்த்திக் சொல்ல
"தினமும் போன் பேசறா ஆனா சொல்லல... வரட்டும்" என்றாள்.
அதன்பின் நால்வரும் சேர்ந்து சிட்டியையே ஒரு கலக்கு கலக்கி விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அடுத்த நாள் அதிகாலை விடியும் போதே ரித்விகாவால் எழுப்பப்பட்டாள் அருவி..
"என்னடி"
"எழுந்துக்கோ அரு... அண்ணா வாக்கிங் போக ரெடியா இருக்கார்...நம்மளும் போகணும்"
"அவன் போனா எனக்கு என்னடி"
"நம்மளும் போகணும்னு சொல்றேன்ல அது காதுல விழலையா, நேத்தே சொன்னாங்கள நேத்து தான் வந்ததுனால அண்ணா சும்மா விட்டுட்டாரு, இன்னைக்கு அப்படிலாம் விடமாட்டார், போய் மூஞ்சி கழுவி பல்லு விளக்கிட்டு வா நேரமாயிடுச்சி" என்றாள் பதட்டமாக..
"போடி உனக்கும் உங்க நொண்ணனுக்கு வேற வேலையே இல்லை..."
"அரு சொன்னாக் கேளு..."
"போடினு சொன்னேன் உன்னை" என்றவள் போர்வையை இழுத்து மூடினாள்.
ரித்விகா திரும்பி பார்த்தவாரே வெளியே போனாள்.
"என்ன ரித்து அரு வரலையா?" என்று ரகசியமாக கேட்டான் கார்த்திக்.
"இல்லடா அவ இழுத்து போர்த்திட்டு தூங்கரா" என்று சொல்லி முடிக்கும் முன்னே "நாங்க ரெடியா இருக்கோம் போலாமா?" என்று பெரியவர்கள் அனைவரும் கிளம்ப...
"யாரோ மிஸ்ஸிங்..." என்று வேந்தன் பார்வையை சுழலல விட்டவன்... "எங்க ரித்து அவ?" என்று கேட்டான்.
"அண்ணா அவ ...."
"என்ன?"
"அவ தூங்கறா.."
"போய் கூட்டிட்டு வா"
"எழுப்பி பார்த்துட்டேன் எந்திரிக்கல..."
"இன்னைக்கு மட்டும் வாக்கிங் வரல,அப்புறம் காலையில இருந்து எல்லா வேலையும் அவ தான் செய்யணும் இதை நான் மிரட்ட சொல்லலனு சொல்லிட்டு வா.. அதுக்கு மேலையும் வரலைனா நான் பார்த்துக்கறேன்" என்றான்.
"சரிண்ணா" என்றவள் வேந்தன் சொன்னதை வார்த்தை மாறாமல் அப்படியே அருவியிடம் ஒப்பித்தாள்.
"பரவால்ல போடி... எங்க அத்தைங்க என்னைய காப்பாத்துவாங்க ..." என்று தூக்கத்திலும் திமிறாக சொல்லியவள் மீண்டும் உறங்க போக..
"இதை அண்ணாகிட்ட சொல்லிடட்டுமா அரு.."
தூக்கத்தில் என்ன சொன்னோம் என்பதெல்லாம் நினைவில் இல்லாததால்... "போயி சொல்லு போடி.. முதல இங்க இருந்து போ சும்மா நை நைனு மனுஷனை நிம்மதியா தூங்கக் கூட விடாம" என்றவள் மீண்டும் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
ரித்து அருவி சொன்னதை சொல்லவும்..
"ஓ மேடம் அந்த அளவுக்கு வந்துட்டாங்களா சரி நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க" என்றவன் அவர்களுக்கு பின்னாடியே சென்றான்.
இரவு முழுவதும் தூங்கினாலும் அதிகாலையில் வரும் தூக்கம் தான் அலாதியாக இருக்கும்...
அதை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அருவி.
நடைப்பயிற்சி சென்ற வேந்தன் அனைவருக்கும் முன்பாகவே வீடு திரும்பினான். கேட்டதற்கு தேவாவை அழைத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தவன் வந்த வேகத்தில் அருவியின் அறைக்குச் சென்று அவள் தலையில் ஒரு வாலி நீரை ஊற்றினான்.