Bhuvana
Well-Known Member
மரவள்ளிக்கிழங்கு அடை :
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/4 கப்
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரிசி, பருப்பு வகைகளை தனி தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஊறிய அரிசி, பருப்பை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும், மிளகாய் மற்றும் மரவள்ளிக்கிழங்கும் சேர்த்து நன்றாக அடை தோசை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தவா சூடானதும் மொறு மொறுவென்ற அடைகளை சுட்டு சக்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 4 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/4 கப்
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரிசி, பருப்பு வகைகளை தனி தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஊறிய அரிசி, பருப்பை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும், மிளகாய் மற்றும் மரவள்ளிக்கிழங்கும் சேர்த்து நன்றாக அடை தோசை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தவா சூடானதும் மொறு மொறுவென்ற அடைகளை சுட்டு சக்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.