மனதை தொட்ட பதிவு*

Advertisement

Eswari kasi

Well-Known Member
*மனதை தொட்ட பதிவு*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*

*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....*

*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*

*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....*

*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*

*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,*

*இல்லையேப்பா..,*
*நல்லா தானே இருக்கு" என்பார்.*

*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க..
*"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!*

*"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*
*சொல்லி டிராமா போடறீங்க"*

உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,

*"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!*

ஆனாலும்...,
*"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!*

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
*" தினம்*
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!*

*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,*

அந்த பாட்டியிடம்,

*"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!*

*"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?*

உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,

*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,*

*"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!*

*இது எனக்கு தெரியாது என்று*
*நினைக்கிறான்...!!*

*"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!*

மாறாக...
*" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...*
என்றார் அன்போடு....,

*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*
*ஜீவன் இன்னும் இருக்கு.....!!*

*"அன்பை விதையுங்கள்"....!!*

*"அதையே அறுவடை செய்வீர்கள்".......!!*
°°°°°°°°°°°°°°
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top