சக்க போடு போடு ராஜா
சிவாஜி: டே டே என்னடா
பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட
TMS: நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சிவாஜி: ஆமா மழை பெய்யுது
நீ வந்து குடைபிடி..ஏண்டா..ங்க்
TMS: சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லிகைப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேன்டா..
சக்க போடு போடு ராஜா.............
நல்ல சமயம் இதை விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே
என்ன என்ன?
என்னடா நல்ல சமயம்
வெள்ளி நிலா காயுது
வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளி கையிரண்டில்
ஏந்திக் கொள்ளடா
சக்க போடு போடு ராஜா...........
ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே
ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள் உண்டான
தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டோடுமோ
ஆமாண்டா இப்படி பழமொழி
பேசியே பொழுத கழிச்சிட்டிரு
போடா போ பழம் பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி
பொண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறேன்னடா....
சக்க போடு போடு ராஜா............
தானா கனியுற கனிய ஏன்டா
தடியால அடிச்சி கனிய வைக்கணும்
டேய் என்னை ...நீ ரேய்க்காதே
போராட்டம் இள நெஞ்சத்திலே
உண்டான இந்த நேரத்திலே
உன்னால நான் போட்ட
தொல்லைகள் போதாதா
எட்டி போனால் என்ன
என்னையாடா எட்டி போகச்
சொல்ற
உன்னோடு நான் உண்டானவன்
உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீயில்லை
நீ இன்றி நானில்லை
பிரிக்க முடியாதடா
போதும் போடா நீயும் வாடா
வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே
அடக்க நினைக்காதே
அடிப்பேன்டா நடக்காது
உதைப்பேன்டா .முடியாது
ஏன்டா முடியாது?
கட்டி புடிப்பேன்டா
கழுத்த நெறிப்பேன்டா..