பிரிவு : பொருட்பால், இயல் : அரணியல், அதிகாரம் : 74. நாடு, குறள் எண்: 736&738.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 736:- கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.

பொருள் :- பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 738:- பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து.

பொருள் :- நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
 

Sasideera

Well-Known Member
எல்லா நாடுமே வசிக்கத்தகுந்தது என்றாலும் வளமான நாடே மக்களால் விரும்பப்படுவது. வளமான நாடு எது என்பது இவ்வதிகாரத்தில் விளக்கப்படுகிறது. இயற்கை வளமும் மக்கள் வளமும் சேர்ந்து அமைவது ஒரு வளமான நாடாகும் எனச் சொல்லப்படுகிறது. நாடென்ப நாடா வளத்தன என்று இவ்வதிகாரப் பாடல் ஒன்று குறு விளக்கம் செய்கிறது. இது ஒரு நாடு என்பது தன்னிறைவு பெற்றதாக விளங்கவேண்டும் என்ற கருத்தை நல்குவது; தம் நாட்டில் இல்லாதவற்றைப் பிற நாடுகளிலிருந்து எளிதே பெறக்கூடிய நிலையில் இருப்பதையும் இது குறிக்கும்.
 

fathima.ar

Well-Known Member
குறள் 736:- கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.

பொருள் :- பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.

பகைவரால் கெட்டதை விட..

நமக்கு நாமே சூனியம் வைக்கிற தலைவர்கள் இருக்கிற இப்ப தான்..நிறைய
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top