பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 71. குறிப்பறிதல், குறள் எண்: 701 & 706.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 701:- கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

பொருள் :- ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.
 

Sasideera

Well-Known Member
குறள் 706:- அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

பொருள் :- தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல். ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

குறிப்பறிதல் என்பது பிறர் உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே அதாவது அவருடைய மனக் குறிப்பை அறிந்து நடக்கக்கூடிய திறமையாம். ஆட்சித் திறத்தில் தலைவனைச் சேர்ந்தொழுகுவார்க்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுவதால், அமைச்சர் தலைவன் குறிப்பறிந்து செயல்படவேண்டும் என்றும் தலைவனும் அமைச்சர், குடிகள் குறிப்பு உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் சொல்வதாக அமைகிறது இவ்வதிகாரம். குறிப்பறி கருவிகளாக முகமும் கண்ணும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இவற்றை நோக்கியே ஒருவரது அகக்குறிப்பை அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது. .
 

malar02

Well-Known Member
அப்படி எல்லோருக்கும் காண்பித்தால் குற்றம் இவ்வளவு பொங்கி பெருகி இருக்காதே
நன்றி
குறள் 701:- கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

பொருள் :- ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top