பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 32. இன்னாசெய்யாமை, குறள் எண்: 312 & 318.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 312:- கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

பொருள் :- ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
 

Sasideera

Well-Known Member
குறள் 318:- தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்?

பொருள் :- தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

பிற உயிர்கட்குத் துன்பம் உண்டாக்காமல் இருப்பது என்பது இன்னாசெய்யாமை ஆகும்.
அறஞ்சாரா நிலையில் பொருளை ஈட்டுவதும் பயன்படுத்துவதும் இன்பம் காண்பதும் ஆகாததுபோல், விலக்கத்தக்கனவற்றையும் செய்தல்கூடாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். அவற்றுள் இன்னாசெய்யாமை என்ற அதிகாரம் ஒன்று. இவ்வதிகாரத்துடன் ஓரளவு தொடர்புடையது தீவினையச்சம் என்ற அதிகாரம். 'தீவினையச்சம்' தீச்செயல்களை அதாவது பாவச் செயல்களைச் செய்ய அஞ்சவேண்டும் எனக் கூறும்; 'இன்னாசெய்யாமை' பிற உயிர்கட்குத் தீங்கு செய்யாமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும் பிறர்க்குத் தீமை செய்தவர் தீமையையே அடைவர் என்னும் கருத்தைக் கூறுகின்றன.
 

malar02

Well-Known Member
பின்னாடி வரும் குறளை கைக்கொண்டால் முன்னாடி வரும் குறளுக்கு வேளை வராது அநேகமாய்
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top