Rudraprarthana
Well-Known Member
அகனலர் - 50.1
அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்த நாதன் வளர்மதியையும் எழுப்பி மகளுடன் வாக்கிங் செல்லும்போது குடிக்க என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டு அனைத்தையும் ஒரு கூடையில் அடுக்கி எடுத்துகொண்டு வெளியில் வர அங்கே அகனெழிலன் அவருக்கு முன்பாக தயாராக இருந்தவன் வாக்கிங் செல்ல ஏதுவாக அலர்விழியை நாற்காலியில் அமர வைத்து அவளுக்கு ஷூவை மாட்டிக்கொண்டிருந்தான்.
இதை கண்ட நாதன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு வளரை பார்க்க.., அவருக்குமே என்ன சொல்லி நாதனை சமாதன படுத்துவது என்று புரியாமல் மகளையும் மருமகனையும் பார்த்துகொண்டு நிற்க.., அதற்குள் எழிலும் அலரும் வாசலை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
"என்னடி நெனச்சிட்டு இருக்கான்" என்று தன் மகளுடன் செலவிட கூடிய நிமிடங்களை களவாடி கொண்டிருப்பவனை கண்டு ஆற்றாமையில் நாதன் வெதும்ப..,
வளருக்கும் அவரின் ஏமாற்றம் வருத்தம் அளித்தாலும் அவரை தேற்றும் விதமாக, 'சரி விடுங்க இன்னும் ரெண்டு ஒரு நாளல்ல தம்பி கிளம்பிடுவாங்க அப்புறம் நீங்களே அமுலுவை கூட்டிட்டு போவீங்க" என்று கூறிய வளர்மதிக்குமே தெரியவில்லை இன்னும் மூன்று மாதத்திற்கு எழிலின் வாசம் இங்கே தான் என்பது..!!
வளர்மதி கூறியது அவரை சென்று சேர்ந்தாலும் மனமே இல்லாமல் அறைக்கு திரும்பி இருந்தார் நாதன். ஆனால் அறையினுள் சென்று படுத்தவருக்கு உறக்கம் தூர போயிருக்க மகள் பட்டியலிட்டவைகளை மனதினுள் அசைபோட உடனே சமயலறைக்கு சென்று வளரிடம் மகளுக்கு பிடித்தவைகளை கூறி வளர்மதியின் மறுப்பையும் மீறி அவருடன் இணைத்து சமையலில் எடுபட தொடங்கினார். அவ்வப்போது வாசலில் பார்வை பதித்திருந்தவர் அலர் வீட்டினுள் நுழையவுமே அவளுக்காக தயாராக வைத்திருந்த டேட்ஸ் மற்றும் பாலுடன் அவளை நெருங்கியவர் அகனெழிலனின் கரத்துடன் பிணைந்திருந்த மகளின் கரத்தை பார்த்தவாறே 'அமுலு வா' என்று அழைக்க..,
அவளும் மறுக்க முடியாது நாதனுடன் செல்ல மகளை தன்னருகே அமர்த்தியவர் தோளில் கிடந்த துண்டை கொண்டு வியர்த்திருந்த அவள் முகத்தை துடைத்து பாலை அருந்த செய்ய.., எழில் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே அறையினுள் நுழைந்திருந்தான்.
அடுத்து காலை உணவின் போதும் மகளை தன்னருகே இருக்கும் படி பார்த்துகொண்டவர் தானே அவளுக்கு காலை உணவையும் ஊட்ட.., அப்போதும் எழிலின் பார்வை அவர்கள் விட்டு அகலவில்லை.
**
அகனெழிலன் மடியில் அமர்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தவள் "போதும் மாமா" என்று சோர்வாக மறுக்க..,
"உனக்கு போதும் ஆனா என் பையனுக்கு போதாதே..!!! எப்பவும் சாப்பிடுற அளவு தானேடி செஞ்சிட்டு வந்தேன் இப்போ என்ன வேண்டாம் சொல்ற..., இன்னும் கொஞ்சம் தான் 'ஆ' சொல்லுடி என் பட்டு, என் தங்கம், என் செல்லம் தானே.." என்று அவள் முன் மீண்டும் கஞ்சியை நீட்ட,
'உப்ப்ப்' என்று மூச்சை இழுத்து விட்டவள் "இல்ல மாமா முடியலை ப்ளீஸ்..!! இப்போ எல்லாம் சாப்பிட்டது இங்கயே நின்னுட்டு இருக்க மாதிரி இருக்கு என்று நெஞ்சை சுட்டி காட்டியவள், சீக்கிரம் டைஜெஸ்ட் ஆக மாட்டேங்குது என்னால முன்ன மாதிரி சாப்பிட முடியலை" என்று கலக்கத்துடன் கூற,
"எப்படிடி ஆகும்..!!! அதான் எப்போ சாப்பிட்டாலும் கொஞ்சமும் நடக்காம உடனே படுத்துக்குற, எதோ நைட்ல நான் கூட இருக்கிறதால அப்ப மட்டும் ஒழுங்கா நடக்குற மத்த நேரம் எல்லாம் நீலம்மாவையும் மாமியையும் ஏமாத்திடுற அப்புறம் எப்படி டைஜெஸ்ட் ஆகும்" என்று அவள் கன்னத்தை மென்மையாக கடித்து வைக்க..,
அதை கூட தாங்க முடியாத அலர், "ஸ்ஆஅ மாமா கடிக்காதீங்க, வலிக்குது " என்று கன்னத்தை தேய்த்துகொண்டே அவன் கரத்தை விலக்கி மெல்ல அவன் மீதிருந்து இறங்க பார்க்க..,
"ஏய் என்னடி பண்ற அமைதியா உட்காரு" என்று அவன் அதட்ட..,
"மாமா கதவு தட்டுற சத்தம் கேட்கலையா..??"
'இல்லையே'
'அமுலு' என்று அழைத்தவாறே நாதன் கதவை தட்டுவது கேட்க..,
"ஐயோ மாமா..!! அப்பா "என்று அவள் மீண்டும் அவசரமாக இறங்க பார்க்க,
"ஏய் அடங்குடி" என்று அவளை அழுத்தமாய் பற்றியவன் "சொன்னது மறந்துடுச்சா..!! உங்கப்பா வந்தா ஒரு ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண மாட்டாரா அப்படியே குதிச்சிட்டு ஒடுவ போல..." என்று அவளை மெல்லமாக தன் மீதிருந்து இறக்கி கட்டிலில் அமர்த்தியவன் அவளுக்கு சாய்வாக தலையணையை வைத்து விட்டு, 'இங்க இருந்து அசைய கூடாது புரியுதா..??' என்று எச்சரித்து விட்டே சென்று கதவை திறக்க..,
'அமுலு' என்று மீண்டும் கதவை தட்டும் முன் அது திறக்க பட அங்கு எழிலை கண்டவர் ஒரு நொடி திகைத்து போனார். ஆம் நேற்று இரவு வந்தவன் இன்று வேலைக்கு சென்றிருப்பான் என்று அவர் நினைத்திருக்க அவனோ இங்கேயே தங்கி விடுவான் என்று அவர் எண்ணவில்லை.
எழிலோ கதவை திறந்து அவர் வருவதற்காக வழி விட்டு நிற்க, அவனை முறைத்து கொண்டே உள்ளே நுழைந்தவர் மகள் அருகே சென்று, கட்டிலில் அமர்ந்து, "அமுலு நேத்தே இந்நேரத்துக்கு கஞ்சி குடிப்பேன்னு நீ சொன்னப்பவே அம்மா கிட்ட சொல்லிட்டேன்டா ஆனா அவ கோவிலுக்கு போயிட்டு வர லேட் ஆகிடுச்சு அதான் நானே அவளை கூட்டிட்டு வந்து உடனே செஞ்சி கொடுக்க சொல்லி எடுத்துட்டு வந்துட்டேன்" என்று மகளுக்காக கடையை விட்டுவிட்டு ஓடி வந்திருந்த தந்தையை பார்க்க அவரோ புன்னகை முகமாக வாஞ்சையுடன் மகளுக்கு கஞ்சியை புகட்ட முயல..,
"ரொம்ப சீக்கிரம் வந்துடீங்க ஆனா அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சது" என்றவாறே அலரின் அருகே வந்தமர்ந்த எழில் கூறவும்..,
அருகே இருந்த மேஜையில் காஞ்சி பாத்திரத்தை கண்ட நாதனின் முகம் சுருங்கி போக சில நொடிகள் அதையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தார்.
இருக்காதா பின்னே..!! மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவளை எப்படி எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் பிரசவத்தை சிறப்பாக முடித்து அனுப்ப வேண்டும் என்று அவர் பல கனவுகளுடன் இருக்க அனைத்தையும் இடையிட்டு எழில் முறியடித்து கொண்டிருக்கிறானே..!!
அதிலும் முதல் நாளே மகளுக்கு பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்பது அவரை மேலும் காயபடுத்தி இருக்க..,
"ஆமாப்பா அம்மா வீட்ல இல்லைன்னதும் மாமா அப்போவே செஞ்சி கொண்டு வந்துட்டாங்க" என்றிட..,
மனம் கனக்க அமர்ந்திருந்தவர், 'ஓஓ' என்றவாறே எழிலை பார்த்து கொண்டே 'சரிம்மா' என்று எழ முயல..,
தந்தையின் முகத்தை காண சகியாதவள் அவர் கரத்தை பற்றி நாதனிடம்," ஆனா அது கொஞ்சமா தான் இருந்தது எனக்கு இன்னும் பசிக்குது நீங்க கொடுங்கப்பா" என்று கூற..,
அவள் அருகே அமர்ந்து நீரை குடித்து கொண்டிருந்த எழிலுக்கு புரைக்கேற இருமிக்கொண்டே அவளை பார்க்க..,
"அலரோ ப்ளீஸ் மாமா, அப்பா பாவம்" என்று வாயசைக்க..,
"இல்லை முடியவே முடியாது" என்பதாக தலை அசைத்த எழில் அவளிடம் மெல்லிய குரலில்,
'இதுக்கு மேல எடுத்துகிட்டன்னா கண்டிப்பா வாமிட் பண்ணுவ வேண்டாம்' என்று கண்டிக்க..,
இதை கண்ட நாதனுக்கு ரத்த அழுத்தம் கூடியது தன் மகளுக்கு தான் கொடுப்பதற்கு கூட எழிலின் அனுமதி தேவைபடுவதை எண்ணி..,
'அமுலு' என்று அவர் அழுத்தமாக அழைக்க,
'ப்ளீஸ்' என்றவாறே எழிலிடம் இருந்து பார்வை திருப்பியவள் நாதன் கொடுத்த கஞ்சியையும் எடுத்துகொள்ள எழில் அவளை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
நாதன் நான்கு முறை ஊட்டவுமே 'போதும், இதுக்கு மேல வேண்டாம்' என்று நாதனை தடுக்க.., அலரோ கண்களால் எழிலிடம் கெஞ்சியவாறே 'பரவாயில்லைப்பா ஊட்டுங்க' என்று கூறவும்.., எழிலுக்கு தன்னை கட்டுபடுத்துவது மிகவும் கடினமாகி போனது, "முட்டாள் தனத்திற்கு அளவில்லையா..??" என்று எண்ணியவாறே இருவரையும் தீயாய் தகித்த விழிகளுடன் வெறித்து கொண்டிருந்தான்.
கொண்டு வந்ததை மிச்சம் இன்றி மகளுக்கு ஊட்டி விட்டவர் இறுதியாக அவள் வாயை துடைத்து விட்டு, "மதியத்துக்கு உனக்கு என்னடா வேணும் சொல்லு" என்று கேட்க..,
அவளோ கழுத்து வரை கஞ்சியை நிறைத்து வைத்திருக்க இப்போது அவளை விட்டாலே போதும் என்ற நிலையில் இருந்தவள், நாதனிடம் 'எதுவா இருந்தாலும் பரவால்லாப்பா..' என்று கூற அவரோ விடாமல்,
"என்ன வேணும் சொல்லு" என்று அங்கேயே நிற்க..,
அவளோ, இரு கரங்களாலும் இடுப்பை பிடித்துக்கொண்டே மூச்சை இழுத்து விட்டவாறே "மாமா கிட்ட கேட்டுக்கோங்கபா அவருக்கு தெரியும்..." என்று கூறியவாறே நிமிர்ந்து அமர..,
இதை கேட்ட நாதனுக்கு மேலும் சினம் துளிர்க்க, 'ஒன்னும் தேவை இல்ல நானே பார்த்துக்குறேன்' என்றவாறு கிளம்ப..,
எழிலோ அவள் அவஸ்த்தை படுவதை கண்டு அவளை மெல்லமாக கீழே இறக்கியவன் அவளை பாத்ரூமிற்கு அழைத்து செல்ல மறுநொடியே ஓங்கரித்து கொண்டு குடித்த மொத்த கஞ்சியையும் வாந்தி எடுத்திருந்தாள் அலர்.
அதுவரை அவள் தலையை பிடித்து கொண்டு நின்றவன் தண்ணீர் கொடுத்து அவள் வாயை கொப்பளித்து முடிக்கவும் கையோடு கொண்டு வந்திருந்த துவாலையால் அவள் முகத்தை துடைத்துவிட்டு அழைத்து வந்து அவளை அறையில் அமர்த்தியவன் மீண்டும் பாத்ரூமிற்கு சென்று அங்கு சுத்த படுத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவள் அருகே வந்து அமர அடுத்த நொடியே அவன் மடியில் தலை வைத்து அலர்விழி படுத்துக்கொண்டாள்.
"மொதல்ல எந்திரிடி", என்று எழுப்பி அமர்த்தி அவளை முறைக்க அவளோ சோர்வுடன் அவன் தோள் சாய்ந்து,
'சாரி மாமா, அப்பா முகம் எப்படி வாடி போயிடுச்சு தெரியுமா..?? பாவம் அவர் எனக்காக கடையை விட்டுட்டு வந்து சமைக்க சொல்லி எடுத்துட்டு வந்தார் அதை எப்படி வேண்டாம் சொல்றது அதான்' என்று கலங்கிய விழிகளுடன் கூற,
"அறிவுகெட்டவளே அதுக்கு உன்னை கஷ்டபடுத்திப்பியாடி..., இப்போ இல்லாட்டி என்ன நாளைக்கு சீக்கிரம் எடுத்துட்டு வந்து கொடுக்க சொல்லி குடிக்க வேண்டியதுதானே யார் வேண்டாம் சொன்னா...?? ஏற்கனவே முடியலை இதுல தேவை இல்லாம இழுத்து விட்டுக்குற..!! ஏன்டி உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லை..!! நீ தான் இப்படி இருக்கன்னா உங்கப்பா உனக்கு மேல என்று கடிந்தவன், இப்படியே பண்ணிட்டு இருந்தேன்னா இங்க விட மாட்டேன் கண்டிப்பா சென்னை கூட்டிட்டு போயிடுவேன் பார்த்துக்க" என்று உறுதியான குரலில் கூறவும்,
அவன் குரலின் உறுதியில் பதறி போனவள், "நோ நோ மாமா ப்ளீஸ், இனி இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்" என்று அவன் கரத்தை பிடித்துகொண்டே, "தொண்டை ரொம்ப எரியுது மாமா... எல்லாமே இங்கயே நின்னுட்டு இருக்கு" என்று கழுத்தை நீவியவள் மூச்சை இழுத்து விட்டவாறே "இன்னும் வாமிட் வர மாதிரியே இருக்கு" என்று சோர்வுடன் கூற..,
"சரி வா கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம் பெட்டரா இருக்கும் அப்புறம் ஜூஸ் குடிப்ப.. எரிச்சல் கொஞ்சம் அடங்கும்" என்றவாறே அறையில் இருந்து அவளை கூடத்திற்கு அழைத்து வந்தவன் அவள் கரத்தை பிடித்துக்கொண்டே மெல்லமாக அவளை நடக்க வைக்க இருபது நிமிடம் கழித்து
அவளே, "போதும் மாமா முடியல" என்றிட அவள் முகம் பார்த்தவன் அதில் வியர்வை துளிகள் அரும்பி முகம் களைப்பில் தோய்ந்திருப்பதை கண்டு அவளை அங்கே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்த்தி கைக்குட்டையால் வியர்வையை துடைத்தவன் அவள் பாதங்களை பற்றி மடியில் வைத்து பிடித்து விடவும் சில நிமிடங்களிலேயே நாதன் அவளுக்கான மாதுளைசாறுடன் அவர்களை நெருங்கி இருந்தார்.
அவரை கண்ட எழிலோ அமைதியாக விலகி சென்று மற்றொரு இருக்கையில் அமர்ந்து மீண்டும் இருவரையும் பார்க்க துவங்கினான்.
நாதனோ அவன் பார்வையை அலட்சியம் செய்தவர் அலரிடம், "அமுலு இது நீ ஜூஸ் குடிக்கிற டைம் சரியா..?" என்று கேட்டவாறே மிதப்பாக எழிலை பார்த்தவர் "ஒருமுறை நேரம் தவறலாம் அதற்காக என் மகளை நான் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்திட மாட்டேன்" என்பதாக அவர் பார்வை அமைய..., எழிலோ அவர்களை கண்டுகொள்ளாமல் தொலைகாட்சியை உயிர்பித்து பார்க்க தொடங்கிவிட்டான்.
அலரோ எழிலை பார்த்தவாறே மாதுளைசாறை குடித்து முடிக்க.. "வா அமுலு இப்போ நீ சஷ்டி கவசம் கேட்கிற டைம் தானே..!!" என்றவாறே அவளை அழைத்து சென்று அறையில் அமர்த்தி சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டவர் அவள் அருகேயே அமர்ந்து விட்டார். அலர்விழியோ என்றும் இல்லாத திருநாளாய் தந்தை கடைக்கு செல்லாமல் இருப்பதை கண்டு
"என்னப்பா கடைக்கு போகலையா..??" என்று கேட்க..,
அப்போது அறை வாயிலில் நிழலாடுவதை கண்டவர் அலரிடம், "உன்னை விட எனக்கு கடை முக்கியம் இல்லடா என்று அவள் தலையை வருடியவர் என் பொண்ணோட ஒவ்வொரு நிமிஷமும் நானும் அனுபவிக்கனும். அதனால சுபாஷ்கிட்ட கடையை பார்த்துக்க சொல்லிட்டேன் நீ தூங்குற நேரம் போய் பார்த்துப்பேன் ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கூறியவருக்கு மட்டுமே தெரியும் இரண்டாம் வாய்ப்பாக மீண்டும் தன் மகள் கை சேர்ந்திருக்கும் நிலையில் அவளை எந்த நேரத்திலும் விட்டு கொடுத்திட கூடாது அதேசமயம் எழிலிடம் எப்போதுமே தோற்றுவிட கூடாது என்பதர்க்காகவே இங்கு அமர்ந்திருக்கிறார் என்பது..!!
*
மேலும் ஒரு வாரம் கழிந்த நிலையில் ஆரணியில் புகழ்பெற்ற அந்த மருத்துவமனையின் வளாகத்தினுள் மனைவியுடன் நுழைந்த எழில் இரண்டாம் தளத்தில் மருத்துவரை பார்த்து விட்டு ஊடுகதிர் சோதனை செய்ய வேண்டி முதல் தளத்தில் காத்திருக்க..,
"ஹல்லோ மிஸ்டர் அகனெழிலன்" என்று அவன் முன் தன் கரத்தை நீட்டி இருந்தார் காவல் துறை ஆய்வாளர் சஞ்சீவ் அருகே நிறை மாத நிலவான அவர் மனைவியுடன்.., அலருடன் பேசிக்கொண்டிருந்தவன் சஞ்சீவின் குரலில் நிமிர்ந்து "ஹாய் மிஸ்டர் சஞ்சீவ்" என்று அவருடன் கை குலுக்கியவன் அவருடன் பேச வேண்டி எழுந்து செல்ல...,
அவர்களை பார்த்தவாறே அலர் அருகே அமர்ந்த சஞ்சீவின் மனைவி மைதிலி "எப்போ டேட் குடுத்திருக்காங்க அலர்" என்று கேட்கவும்..,
அலர் தன்னுடைய பிரசவ தேதியை கூறவும்.., "வாவ் எனக்கு ரெண்டு நாள் முன்னாடி சொல்லி இருக்காங்க நீங்க எப்போ வந்து அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க" என்றவாறு அவர்களின் பேச்சு நீள, அதற்குள் அலரை செவிலியர் அழைக்க, அதை கண்ட எழில் சஞ்சீவிடம் இருந்து விடைபெற்று அலருடன் அறைக்குள் நுழைந்தான்.
ஸ்கேன் செய்து முடித்த மருத்துவர் குழந்தையின் பொசிஷன் நார்மலாக இருப்பதாகவும் எப்படியும் இன்னும் இருவாரத்தில் குழந்தையின் தலை திரும்பிவிடும் என்று கூறி இன்னும் பத்து நாட்கள் கழித்து வருமாறு கூற மீண்டும் இரண்டாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கு மருத்துவர் சுசீலாவிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டை அளிக்க,
"என்ன அலர் பையன் என்ன சொல்றான் சமத்தா இருக்கானா..?? இல்லை உன்னை மாதிரியே சேட்டையா.???" என்று கேட்க..,
அலரோ, "இல்லை ஆன்ட்டி, ரொம்ப கஷ்டமா இருக்கு சரியா சாப்பிட முடியலை..., ரொம்ப நேரம் வாக் பண்ண முடியலை, டீப் ஸ்லீப் எல்லாம் ரொம்ப நாளாச்சு" என்று கூறவும்..,
"இதெல்லாம் தேர்ட் ட்ரைமெஸ்ட்டர்ல வரகூடியது தான். இன்னும் கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும் நைட் ஸ்லீப் இல்லாட்டி மார்னிங் எப்போ முடியுதோ அப்போ தூங்கி எந்திரி பெட்டரா இருக்கும்" என்றவாறே ரிப்போர்ட்டை பார்த்து கொண்டிருந்த சுசீலா நிமிர்ந்து எழிலிடம்,
"எவரிதிங் இஸ் பைன் நோ நீட் டூ வொரி.., டெலிவரி டேட்க்கு ஒரு நாள் முன்னமே கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணிடுங்க எழில் டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும், இன்கேஸ் அதுக்கு முன்ன பெயின் இருந்தா நீங்க டிரெக்ட்டா லேபர் வார்ட் போயிடுங்க டிலே பண்ண வேண்டாம்" என்று கூற..,
சரி என்ற எழிலை இடையிட்ட அலர் மருத்துவரிடம், "ஆன்ட்டி நான் சொன்னது உங்களுக்கு ஓகே தானே..!!" என்று கேட்கவும்
சில நொடிகள் யோசித்தவர் 'எதுக்கும் நீங்க வீட்ல பேசிட்டு வந்து கன்பார்ம் பண்ணுங்க' என்று கூற..,
'சரி ஆன்ட்டி' என்று விடைபெற்று கிளம்பி சென்றனர்.
அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்த நாதன் வளர்மதியையும் எழுப்பி மகளுடன் வாக்கிங் செல்லும்போது குடிக்க என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டு அனைத்தையும் ஒரு கூடையில் அடுக்கி எடுத்துகொண்டு வெளியில் வர அங்கே அகனெழிலன் அவருக்கு முன்பாக தயாராக இருந்தவன் வாக்கிங் செல்ல ஏதுவாக அலர்விழியை நாற்காலியில் அமர வைத்து அவளுக்கு ஷூவை மாட்டிக்கொண்டிருந்தான்.
இதை கண்ட நாதன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு வளரை பார்க்க.., அவருக்குமே என்ன சொல்லி நாதனை சமாதன படுத்துவது என்று புரியாமல் மகளையும் மருமகனையும் பார்த்துகொண்டு நிற்க.., அதற்குள் எழிலும் அலரும் வாசலை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
"என்னடி நெனச்சிட்டு இருக்கான்" என்று தன் மகளுடன் செலவிட கூடிய நிமிடங்களை களவாடி கொண்டிருப்பவனை கண்டு ஆற்றாமையில் நாதன் வெதும்ப..,
வளருக்கும் அவரின் ஏமாற்றம் வருத்தம் அளித்தாலும் அவரை தேற்றும் விதமாக, 'சரி விடுங்க இன்னும் ரெண்டு ஒரு நாளல்ல தம்பி கிளம்பிடுவாங்க அப்புறம் நீங்களே அமுலுவை கூட்டிட்டு போவீங்க" என்று கூறிய வளர்மதிக்குமே தெரியவில்லை இன்னும் மூன்று மாதத்திற்கு எழிலின் வாசம் இங்கே தான் என்பது..!!
வளர்மதி கூறியது அவரை சென்று சேர்ந்தாலும் மனமே இல்லாமல் அறைக்கு திரும்பி இருந்தார் நாதன். ஆனால் அறையினுள் சென்று படுத்தவருக்கு உறக்கம் தூர போயிருக்க மகள் பட்டியலிட்டவைகளை மனதினுள் அசைபோட உடனே சமயலறைக்கு சென்று வளரிடம் மகளுக்கு பிடித்தவைகளை கூறி வளர்மதியின் மறுப்பையும் மீறி அவருடன் இணைத்து சமையலில் எடுபட தொடங்கினார். அவ்வப்போது வாசலில் பார்வை பதித்திருந்தவர் அலர் வீட்டினுள் நுழையவுமே அவளுக்காக தயாராக வைத்திருந்த டேட்ஸ் மற்றும் பாலுடன் அவளை நெருங்கியவர் அகனெழிலனின் கரத்துடன் பிணைந்திருந்த மகளின் கரத்தை பார்த்தவாறே 'அமுலு வா' என்று அழைக்க..,
அவளும் மறுக்க முடியாது நாதனுடன் செல்ல மகளை தன்னருகே அமர்த்தியவர் தோளில் கிடந்த துண்டை கொண்டு வியர்த்திருந்த அவள் முகத்தை துடைத்து பாலை அருந்த செய்ய.., எழில் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே அறையினுள் நுழைந்திருந்தான்.
அடுத்து காலை உணவின் போதும் மகளை தன்னருகே இருக்கும் படி பார்த்துகொண்டவர் தானே அவளுக்கு காலை உணவையும் ஊட்ட.., அப்போதும் எழிலின் பார்வை அவர்கள் விட்டு அகலவில்லை.
**
அகனெழிலன் மடியில் அமர்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தவள் "போதும் மாமா" என்று சோர்வாக மறுக்க..,
"உனக்கு போதும் ஆனா என் பையனுக்கு போதாதே..!!! எப்பவும் சாப்பிடுற அளவு தானேடி செஞ்சிட்டு வந்தேன் இப்போ என்ன வேண்டாம் சொல்ற..., இன்னும் கொஞ்சம் தான் 'ஆ' சொல்லுடி என் பட்டு, என் தங்கம், என் செல்லம் தானே.." என்று அவள் முன் மீண்டும் கஞ்சியை நீட்ட,
'உப்ப்ப்' என்று மூச்சை இழுத்து விட்டவள் "இல்ல மாமா முடியலை ப்ளீஸ்..!! இப்போ எல்லாம் சாப்பிட்டது இங்கயே நின்னுட்டு இருக்க மாதிரி இருக்கு என்று நெஞ்சை சுட்டி காட்டியவள், சீக்கிரம் டைஜெஸ்ட் ஆக மாட்டேங்குது என்னால முன்ன மாதிரி சாப்பிட முடியலை" என்று கலக்கத்துடன் கூற,
"எப்படிடி ஆகும்..!!! அதான் எப்போ சாப்பிட்டாலும் கொஞ்சமும் நடக்காம உடனே படுத்துக்குற, எதோ நைட்ல நான் கூட இருக்கிறதால அப்ப மட்டும் ஒழுங்கா நடக்குற மத்த நேரம் எல்லாம் நீலம்மாவையும் மாமியையும் ஏமாத்திடுற அப்புறம் எப்படி டைஜெஸ்ட் ஆகும்" என்று அவள் கன்னத்தை மென்மையாக கடித்து வைக்க..,
அதை கூட தாங்க முடியாத அலர், "ஸ்ஆஅ மாமா கடிக்காதீங்க, வலிக்குது " என்று கன்னத்தை தேய்த்துகொண்டே அவன் கரத்தை விலக்கி மெல்ல அவன் மீதிருந்து இறங்க பார்க்க..,
"ஏய் என்னடி பண்ற அமைதியா உட்காரு" என்று அவன் அதட்ட..,
"மாமா கதவு தட்டுற சத்தம் கேட்கலையா..??"
'இல்லையே'
'அமுலு' என்று அழைத்தவாறே நாதன் கதவை தட்டுவது கேட்க..,
"ஐயோ மாமா..!! அப்பா "என்று அவள் மீண்டும் அவசரமாக இறங்க பார்க்க,
"ஏய் அடங்குடி" என்று அவளை அழுத்தமாய் பற்றியவன் "சொன்னது மறந்துடுச்சா..!! உங்கப்பா வந்தா ஒரு ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண மாட்டாரா அப்படியே குதிச்சிட்டு ஒடுவ போல..." என்று அவளை மெல்லமாக தன் மீதிருந்து இறக்கி கட்டிலில் அமர்த்தியவன் அவளுக்கு சாய்வாக தலையணையை வைத்து விட்டு, 'இங்க இருந்து அசைய கூடாது புரியுதா..??' என்று எச்சரித்து விட்டே சென்று கதவை திறக்க..,
'அமுலு' என்று மீண்டும் கதவை தட்டும் முன் அது திறக்க பட அங்கு எழிலை கண்டவர் ஒரு நொடி திகைத்து போனார். ஆம் நேற்று இரவு வந்தவன் இன்று வேலைக்கு சென்றிருப்பான் என்று அவர் நினைத்திருக்க அவனோ இங்கேயே தங்கி விடுவான் என்று அவர் எண்ணவில்லை.
எழிலோ கதவை திறந்து அவர் வருவதற்காக வழி விட்டு நிற்க, அவனை முறைத்து கொண்டே உள்ளே நுழைந்தவர் மகள் அருகே சென்று, கட்டிலில் அமர்ந்து, "அமுலு நேத்தே இந்நேரத்துக்கு கஞ்சி குடிப்பேன்னு நீ சொன்னப்பவே அம்மா கிட்ட சொல்லிட்டேன்டா ஆனா அவ கோவிலுக்கு போயிட்டு வர லேட் ஆகிடுச்சு அதான் நானே அவளை கூட்டிட்டு வந்து உடனே செஞ்சி கொடுக்க சொல்லி எடுத்துட்டு வந்துட்டேன்" என்று மகளுக்காக கடையை விட்டுவிட்டு ஓடி வந்திருந்த தந்தையை பார்க்க அவரோ புன்னகை முகமாக வாஞ்சையுடன் மகளுக்கு கஞ்சியை புகட்ட முயல..,
"ரொம்ப சீக்கிரம் வந்துடீங்க ஆனா அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சது" என்றவாறே அலரின் அருகே வந்தமர்ந்த எழில் கூறவும்..,
அருகே இருந்த மேஜையில் காஞ்சி பாத்திரத்தை கண்ட நாதனின் முகம் சுருங்கி போக சில நொடிகள் அதையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தார்.
இருக்காதா பின்னே..!! மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவளை எப்படி எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் பிரசவத்தை சிறப்பாக முடித்து அனுப்ப வேண்டும் என்று அவர் பல கனவுகளுடன் இருக்க அனைத்தையும் இடையிட்டு எழில் முறியடித்து கொண்டிருக்கிறானே..!!
அதிலும் முதல் நாளே மகளுக்கு பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்பது அவரை மேலும் காயபடுத்தி இருக்க..,
"ஆமாப்பா அம்மா வீட்ல இல்லைன்னதும் மாமா அப்போவே செஞ்சி கொண்டு வந்துட்டாங்க" என்றிட..,
மனம் கனக்க அமர்ந்திருந்தவர், 'ஓஓ' என்றவாறே எழிலை பார்த்து கொண்டே 'சரிம்மா' என்று எழ முயல..,
தந்தையின் முகத்தை காண சகியாதவள் அவர் கரத்தை பற்றி நாதனிடம்," ஆனா அது கொஞ்சமா தான் இருந்தது எனக்கு இன்னும் பசிக்குது நீங்க கொடுங்கப்பா" என்று கூற..,
அவள் அருகே அமர்ந்து நீரை குடித்து கொண்டிருந்த எழிலுக்கு புரைக்கேற இருமிக்கொண்டே அவளை பார்க்க..,
"அலரோ ப்ளீஸ் மாமா, அப்பா பாவம்" என்று வாயசைக்க..,
"இல்லை முடியவே முடியாது" என்பதாக தலை அசைத்த எழில் அவளிடம் மெல்லிய குரலில்,
'இதுக்கு மேல எடுத்துகிட்டன்னா கண்டிப்பா வாமிட் பண்ணுவ வேண்டாம்' என்று கண்டிக்க..,
இதை கண்ட நாதனுக்கு ரத்த அழுத்தம் கூடியது தன் மகளுக்கு தான் கொடுப்பதற்கு கூட எழிலின் அனுமதி தேவைபடுவதை எண்ணி..,
'அமுலு' என்று அவர் அழுத்தமாக அழைக்க,
'ப்ளீஸ்' என்றவாறே எழிலிடம் இருந்து பார்வை திருப்பியவள் நாதன் கொடுத்த கஞ்சியையும் எடுத்துகொள்ள எழில் அவளை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
நாதன் நான்கு முறை ஊட்டவுமே 'போதும், இதுக்கு மேல வேண்டாம்' என்று நாதனை தடுக்க.., அலரோ கண்களால் எழிலிடம் கெஞ்சியவாறே 'பரவாயில்லைப்பா ஊட்டுங்க' என்று கூறவும்.., எழிலுக்கு தன்னை கட்டுபடுத்துவது மிகவும் கடினமாகி போனது, "முட்டாள் தனத்திற்கு அளவில்லையா..??" என்று எண்ணியவாறே இருவரையும் தீயாய் தகித்த விழிகளுடன் வெறித்து கொண்டிருந்தான்.
கொண்டு வந்ததை மிச்சம் இன்றி மகளுக்கு ஊட்டி விட்டவர் இறுதியாக அவள் வாயை துடைத்து விட்டு, "மதியத்துக்கு உனக்கு என்னடா வேணும் சொல்லு" என்று கேட்க..,
அவளோ கழுத்து வரை கஞ்சியை நிறைத்து வைத்திருக்க இப்போது அவளை விட்டாலே போதும் என்ற நிலையில் இருந்தவள், நாதனிடம் 'எதுவா இருந்தாலும் பரவால்லாப்பா..' என்று கூற அவரோ விடாமல்,
"என்ன வேணும் சொல்லு" என்று அங்கேயே நிற்க..,
அவளோ, இரு கரங்களாலும் இடுப்பை பிடித்துக்கொண்டே மூச்சை இழுத்து விட்டவாறே "மாமா கிட்ட கேட்டுக்கோங்கபா அவருக்கு தெரியும்..." என்று கூறியவாறே நிமிர்ந்து அமர..,
இதை கேட்ட நாதனுக்கு மேலும் சினம் துளிர்க்க, 'ஒன்னும் தேவை இல்ல நானே பார்த்துக்குறேன்' என்றவாறு கிளம்ப..,
எழிலோ அவள் அவஸ்த்தை படுவதை கண்டு அவளை மெல்லமாக கீழே இறக்கியவன் அவளை பாத்ரூமிற்கு அழைத்து செல்ல மறுநொடியே ஓங்கரித்து கொண்டு குடித்த மொத்த கஞ்சியையும் வாந்தி எடுத்திருந்தாள் அலர்.
அதுவரை அவள் தலையை பிடித்து கொண்டு நின்றவன் தண்ணீர் கொடுத்து அவள் வாயை கொப்பளித்து முடிக்கவும் கையோடு கொண்டு வந்திருந்த துவாலையால் அவள் முகத்தை துடைத்துவிட்டு அழைத்து வந்து அவளை அறையில் அமர்த்தியவன் மீண்டும் பாத்ரூமிற்கு சென்று அங்கு சுத்த படுத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவள் அருகே வந்து அமர அடுத்த நொடியே அவன் மடியில் தலை வைத்து அலர்விழி படுத்துக்கொண்டாள்.
"மொதல்ல எந்திரிடி", என்று எழுப்பி அமர்த்தி அவளை முறைக்க அவளோ சோர்வுடன் அவன் தோள் சாய்ந்து,
'சாரி மாமா, அப்பா முகம் எப்படி வாடி போயிடுச்சு தெரியுமா..?? பாவம் அவர் எனக்காக கடையை விட்டுட்டு வந்து சமைக்க சொல்லி எடுத்துட்டு வந்தார் அதை எப்படி வேண்டாம் சொல்றது அதான்' என்று கலங்கிய விழிகளுடன் கூற,
"அறிவுகெட்டவளே அதுக்கு உன்னை கஷ்டபடுத்திப்பியாடி..., இப்போ இல்லாட்டி என்ன நாளைக்கு சீக்கிரம் எடுத்துட்டு வந்து கொடுக்க சொல்லி குடிக்க வேண்டியதுதானே யார் வேண்டாம் சொன்னா...?? ஏற்கனவே முடியலை இதுல தேவை இல்லாம இழுத்து விட்டுக்குற..!! ஏன்டி உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லை..!! நீ தான் இப்படி இருக்கன்னா உங்கப்பா உனக்கு மேல என்று கடிந்தவன், இப்படியே பண்ணிட்டு இருந்தேன்னா இங்க விட மாட்டேன் கண்டிப்பா சென்னை கூட்டிட்டு போயிடுவேன் பார்த்துக்க" என்று உறுதியான குரலில் கூறவும்,
அவன் குரலின் உறுதியில் பதறி போனவள், "நோ நோ மாமா ப்ளீஸ், இனி இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்" என்று அவன் கரத்தை பிடித்துகொண்டே, "தொண்டை ரொம்ப எரியுது மாமா... எல்லாமே இங்கயே நின்னுட்டு இருக்கு" என்று கழுத்தை நீவியவள் மூச்சை இழுத்து விட்டவாறே "இன்னும் வாமிட் வர மாதிரியே இருக்கு" என்று சோர்வுடன் கூற..,
"சரி வா கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம் பெட்டரா இருக்கும் அப்புறம் ஜூஸ் குடிப்ப.. எரிச்சல் கொஞ்சம் அடங்கும்" என்றவாறே அறையில் இருந்து அவளை கூடத்திற்கு அழைத்து வந்தவன் அவள் கரத்தை பிடித்துக்கொண்டே மெல்லமாக அவளை நடக்க வைக்க இருபது நிமிடம் கழித்து
அவளே, "போதும் மாமா முடியல" என்றிட அவள் முகம் பார்த்தவன் அதில் வியர்வை துளிகள் அரும்பி முகம் களைப்பில் தோய்ந்திருப்பதை கண்டு அவளை அங்கே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்த்தி கைக்குட்டையால் வியர்வையை துடைத்தவன் அவள் பாதங்களை பற்றி மடியில் வைத்து பிடித்து விடவும் சில நிமிடங்களிலேயே நாதன் அவளுக்கான மாதுளைசாறுடன் அவர்களை நெருங்கி இருந்தார்.
அவரை கண்ட எழிலோ அமைதியாக விலகி சென்று மற்றொரு இருக்கையில் அமர்ந்து மீண்டும் இருவரையும் பார்க்க துவங்கினான்.
நாதனோ அவன் பார்வையை அலட்சியம் செய்தவர் அலரிடம், "அமுலு இது நீ ஜூஸ் குடிக்கிற டைம் சரியா..?" என்று கேட்டவாறே மிதப்பாக எழிலை பார்த்தவர் "ஒருமுறை நேரம் தவறலாம் அதற்காக என் மகளை நான் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்திட மாட்டேன்" என்பதாக அவர் பார்வை அமைய..., எழிலோ அவர்களை கண்டுகொள்ளாமல் தொலைகாட்சியை உயிர்பித்து பார்க்க தொடங்கிவிட்டான்.
அலரோ எழிலை பார்த்தவாறே மாதுளைசாறை குடித்து முடிக்க.. "வா அமுலு இப்போ நீ சஷ்டி கவசம் கேட்கிற டைம் தானே..!!" என்றவாறே அவளை அழைத்து சென்று அறையில் அமர்த்தி சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டவர் அவள் அருகேயே அமர்ந்து விட்டார். அலர்விழியோ என்றும் இல்லாத திருநாளாய் தந்தை கடைக்கு செல்லாமல் இருப்பதை கண்டு
"என்னப்பா கடைக்கு போகலையா..??" என்று கேட்க..,
அப்போது அறை வாயிலில் நிழலாடுவதை கண்டவர் அலரிடம், "உன்னை விட எனக்கு கடை முக்கியம் இல்லடா என்று அவள் தலையை வருடியவர் என் பொண்ணோட ஒவ்வொரு நிமிஷமும் நானும் அனுபவிக்கனும். அதனால சுபாஷ்கிட்ட கடையை பார்த்துக்க சொல்லிட்டேன் நீ தூங்குற நேரம் போய் பார்த்துப்பேன் ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கூறியவருக்கு மட்டுமே தெரியும் இரண்டாம் வாய்ப்பாக மீண்டும் தன் மகள் கை சேர்ந்திருக்கும் நிலையில் அவளை எந்த நேரத்திலும் விட்டு கொடுத்திட கூடாது அதேசமயம் எழிலிடம் எப்போதுமே தோற்றுவிட கூடாது என்பதர்க்காகவே இங்கு அமர்ந்திருக்கிறார் என்பது..!!
*
மேலும் ஒரு வாரம் கழிந்த நிலையில் ஆரணியில் புகழ்பெற்ற அந்த மருத்துவமனையின் வளாகத்தினுள் மனைவியுடன் நுழைந்த எழில் இரண்டாம் தளத்தில் மருத்துவரை பார்த்து விட்டு ஊடுகதிர் சோதனை செய்ய வேண்டி முதல் தளத்தில் காத்திருக்க..,
"ஹல்லோ மிஸ்டர் அகனெழிலன்" என்று அவன் முன் தன் கரத்தை நீட்டி இருந்தார் காவல் துறை ஆய்வாளர் சஞ்சீவ் அருகே நிறை மாத நிலவான அவர் மனைவியுடன்.., அலருடன் பேசிக்கொண்டிருந்தவன் சஞ்சீவின் குரலில் நிமிர்ந்து "ஹாய் மிஸ்டர் சஞ்சீவ்" என்று அவருடன் கை குலுக்கியவன் அவருடன் பேச வேண்டி எழுந்து செல்ல...,
அவர்களை பார்த்தவாறே அலர் அருகே அமர்ந்த சஞ்சீவின் மனைவி மைதிலி "எப்போ டேட் குடுத்திருக்காங்க அலர்" என்று கேட்கவும்..,
அலர் தன்னுடைய பிரசவ தேதியை கூறவும்.., "வாவ் எனக்கு ரெண்டு நாள் முன்னாடி சொல்லி இருக்காங்க நீங்க எப்போ வந்து அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க" என்றவாறு அவர்களின் பேச்சு நீள, அதற்குள் அலரை செவிலியர் அழைக்க, அதை கண்ட எழில் சஞ்சீவிடம் இருந்து விடைபெற்று அலருடன் அறைக்குள் நுழைந்தான்.
ஸ்கேன் செய்து முடித்த மருத்துவர் குழந்தையின் பொசிஷன் நார்மலாக இருப்பதாகவும் எப்படியும் இன்னும் இருவாரத்தில் குழந்தையின் தலை திரும்பிவிடும் என்று கூறி இன்னும் பத்து நாட்கள் கழித்து வருமாறு கூற மீண்டும் இரண்டாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கு மருத்துவர் சுசீலாவிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டை அளிக்க,
"என்ன அலர் பையன் என்ன சொல்றான் சமத்தா இருக்கானா..?? இல்லை உன்னை மாதிரியே சேட்டையா.???" என்று கேட்க..,
அலரோ, "இல்லை ஆன்ட்டி, ரொம்ப கஷ்டமா இருக்கு சரியா சாப்பிட முடியலை..., ரொம்ப நேரம் வாக் பண்ண முடியலை, டீப் ஸ்லீப் எல்லாம் ரொம்ப நாளாச்சு" என்று கூறவும்..,
"இதெல்லாம் தேர்ட் ட்ரைமெஸ்ட்டர்ல வரகூடியது தான். இன்னும் கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும் நைட் ஸ்லீப் இல்லாட்டி மார்னிங் எப்போ முடியுதோ அப்போ தூங்கி எந்திரி பெட்டரா இருக்கும்" என்றவாறே ரிப்போர்ட்டை பார்த்து கொண்டிருந்த சுசீலா நிமிர்ந்து எழிலிடம்,
"எவரிதிங் இஸ் பைன் நோ நீட் டூ வொரி.., டெலிவரி டேட்க்கு ஒரு நாள் முன்னமே கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணிடுங்க எழில் டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும், இன்கேஸ் அதுக்கு முன்ன பெயின் இருந்தா நீங்க டிரெக்ட்டா லேபர் வார்ட் போயிடுங்க டிலே பண்ண வேண்டாம்" என்று கூற..,
சரி என்ற எழிலை இடையிட்ட அலர் மருத்துவரிடம், "ஆன்ட்டி நான் சொன்னது உங்களுக்கு ஓகே தானே..!!" என்று கேட்கவும்
சில நொடிகள் யோசித்தவர் 'எதுக்கும் நீங்க வீட்ல பேசிட்டு வந்து கன்பார்ம் பண்ணுங்க' என்று கூற..,
'சரி ஆன்ட்டி' என்று விடைபெற்று கிளம்பி சென்றனர்.
Last edited: