ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப
"என்ன மதி குழப்புற?" அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல் அதிர்ச்சி அடைந்தாள் என்றால் அஜய் புன்னைகைத்துக் கொண்டிருந்தான்.
"என்ன அஜய் மாமா உங்களுக்கு அந்த சந்தேகம் இல்ல போல. போன்ல என்னெல்லாம் பேசினீங்கன்னு அதுக்குள்ள பேசிட்டிங்களா? இந்தம்மா எதுக்கு இப்படி அதிர்ச்சியாகுறாங்க?" என்று காஜலை கிண்டல் செய்தாள் மதி.
"அலைபேசியில் பேசியவற்றை மீண்டும் பேசி அது காஜல் தானா என்று காண்போம் பண்ணிக்கொண்டாயா?" என்று மதி சூட்சமமாக கேட்டாளா? கிண்டலாக கேட்டாளா? காஜல் மதியை முறைக்க அக்ஷையும் சேர்ந்து முறைத்தான்.
"இவ கிண்டல் செய்கிறாளோ? சீரியஸா பேசுகிறாளா? என்றே புரிய மாட்டேங்குது. போலீஸ்காரிக்கு கிண்டல், நக்க, நையாண்டி, குத்தல், குசும்பு எல்லாம் வருது டோய்" என்று கூறியவாறே அக்ஷய் அண்ணனின் தோளில் கை வைத்திருக்க, அக்ஷையின் இந்த பேச்சை ரசிக்கலானான் அஜய்.
அக்ஷையோடு இவ்வாறு நெருங்கி நின்று பேசவும்,தோளில் கை போட்டு கிண்டல் செய்வதும் அஜய்யின் கனவு என்றே சொல்லலாம் அது இன்று நிறைவேறியதில் ஆசையாக தம்பியை பாத்திருந்தான்.
"அப்போ நான் பொய் கூறுகிறேனா? நாடகமாடி அஜய்யை கல்யாணம் செய்துகொள்ள போகிறேனா?" மதியின் கிண்டலை புரிந்துகொள்ளாமல் காஜல் கோபமாக பேச
"பின்ன இவங்க முகத்தை கூட காட்டாம லவ் பண்ணுவாங்கலாம். லவ் பண்ணாத சொல்லமையே நிச்சயம் பண்ணுவாங்கலாம். அவரு ஏன் சம்மதிச்சாருனு கூட கேக்க மாட்டங்களாம். அந்த மனுஷனோட மன வேதனையை பற்றி சிந்திக்க வேணாமா?" கூலாகவே பதில் சொன்னாள் மதி.
"அவ என் கிட்ட பேச பல தடவ முயற்சி செஞ்சா நான் தான் அவளை சந்திக்காம தவிர்த்தேன்" காஜலுக்காக பரிந்து பேசினான் அஜய்.
அறையில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று மதிக்கு தெரியாது. தாஜ்மகாலை பார்த்ததும் தன்னோடு பேசியது காஜல் தானா? என்ற சந்தேகம் அஜய்க்கு வராமல் இல்லை. சிம்ரன் கொடுத்த தாஜ்மகாலில் ஹார்ட் பதக்கம் பொருத்தி இருந்தான் அஜய். அது அந்த தாஜ்மகாலில் இருந்தது மட்டுமல்லாது. அதை காஜல் பத்திரமாக வைத்திருந்த விதமே அவளின் காதலின் அளவை அவனுக்கு நன்றாகவே பறைசாற்றியது.
மதி கூறியது போல் ரெஸ்டூரண்ட்டுக்கு வந்த காஜல் அஜய்யை விரும்பியதால் தாஜ்மகாலை எடுத்து சென்றிந்தால் அஜய்யை காதலித்த பெண் என்ன ஆனாள்?
ஆனால் அந்த சந்தேகம் எல்லாம் அனாவசியம் என்பதற்கு எதுவாக காலேஜில் விசாரித்த தகவல் பப்லிதான் காஜல் என்று உறுதியாக நம்பும்படியாக ஆதாரம் மதி, அக்ஷையிடம் இருந்தது என்றால் அஜய்யின் ஆழ் மனம் தன் காதலியை கண்டு கொண்டது.
"அட.. இங்க பேசினா இங்க இருந்து பதில் வருதே" அதற்கும் கிண்டல் செய்தாள் மதி.
"அக்ஷய் இவ வாய் ரொம்ப நீளுது கொஞ்சம் அடக்கி வைங்க" காஜல் அக்ஷையிடம் முறையிட
"அடக்கிடலாமே" மதியின் உதடுகளை பார்த்தவாறே கூறி அக்ஷய் கண்சிமிட்ட அழகாக வெட்கப்பட்டாள் மதி.
Last edited: