அப்போவும் தாமரை சந்தோசம் தான் முக்கியம்னு அவங்க காதலை சேர்த்து வைக்க போராடுவாளா இருக்கும்... இவளை நம்ப முடியாது...தில்லை ரொம்ப பாவம் குடும்பத்தையும் கவனிச்சு கிட்டு தன்னையும் தானே கவனிச்சுக்க வேண்டிய இருக்கு
ஏம்மா தாமரை அந்த புள்ளை காலேஜ்ல இருந்து மதியமே வரேன் சொல்றா அப்போவாது என்ன ஆச்சு உடம்பு முடியலையான்னு ஒரு வார்த்தை கூட கேட்காமல் விஜய் நினைச்சு பீல் பண்ற
ஏன் ஒருநாள் அவனை பார்க்காமல் இருக்க முடியாதா தில்லைக்காகவும் கொஞ்சம் யோசிக்கலாம்.....
இப்பவும் அவள் அவ்வளவு சோர்வாக இருக்கா அதை பத்தி யோசிக்காமல் விஜயை தேடும் அப்படியே கண்ணாலே காதல் பேசுறீங்க....
அன்னைக்கு தேவா கூட தாமரைக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து தாமரையோட படிப்பு தான் முக்கியம்ன்னு அவ கல்யாணம் பண்ணிகிட்டு வந்தா தாமரைக்கு அம்மா சமையல் தான் சாப்பிடுவான்னு வேலைகாரம்மா சொன்னதும் தில்லையே காலங்காத்தாலே எழுந்து அவ அம்மா கிட்ட கேட்டு அவளுக்காக சமைச்சுட்டு பல மணி நேரம் பஸ்ல அலைஞ்சுட்டு வந்து ராத்திரிக்கும் அவளுக்கு சமைச்சு தன்னோட படிப்பையும் கவனிக்கிறாள்
இந்த தாமரை ஒருநாளாவது சமையல்ல உதவி செய்யவோ இல்லை பஸ்ல ரொம்ப தூரம் போயிட்டு வருவது கஷ்டமா இருக்கான்னு அனுசரணையாக பேசுறாளா ம்கூம் ஒன்னுமே இல்லை...
படிக்கணும் பஸ்ல போகும் போதும் வரும் போதும் விஜய் கூட ரொமான்ஸ் ன்னு அவளை பத்தி மட்டும் யோசிக்கிறாள். விஜயோட பார்வைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுது ஆனால் தில்லையை பார்க்கும் போது அவ எப்படி இருக்கிறாள் னு தெரியலையா
தில்லை நீ ஸ்கூல் தான் முடிச்சுருக்க சின்ன பொண்ணு நீ தனியாக ஹாஸ்பிட்டல் வந்து கர்ப்பமாக இருக்கியான்னு செக் பண்ணா சந்தேகம் தான் படுவாங்க உன்னோட அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கணும் சும்மா இந்த தாமரையோட சந்தோஷத்துக்காக ரொம்ப விட்டு கொடுக்கிற ஆனால் அவ அதுக்கு தகுதியான ஆள் இல்லை...
தாமரை விஜயை காதலிக்கிறது தெரிய வந்தால் தில்லை என்ன செய்வாள்.