கற்பூர முல்லை Episode 25

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 25

இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தமிழ் புதிய பிரான்ச் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள். அவள் சென்னை வந்ததும் இந்த பிசினஸை ஏற்று நடத்தியதும் கம்பெனி இன்னும் ஒரு படி வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாகவே இங்கு இன்னொரு பிரான்ச் வேண்டும் என்று அவள் விரும்பினாள் ...அதை சுந்தரிடம் சொல்லவும் அவனும் ஒப்புக் கொண்டான்.
புதிய பிரான்ச் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழின் விருப்பம் மட்டுமே... தமிழ் இங்கு வந்ததுக்கப்புறம் கம்பெனியின் வளர்ச்சி நன்றாக இருக்கவே, தமிழும் புதிய பிரான்ச் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று சொல்லவே சுந்தரும் இதற்கு ஒப்புக்கொண்டான். அவனுக்கு இதில் மிக்க மகிழ்ச்சி. தான் தகுதியுடைய ஆளை தான் இதற்கு நியமித்திருக்கிறோம். என்று பெருமிதமும் கொண்டான்.

இதற்கிடையில் சுந்தர் கால் செய்து கோயம்புத்தூரில் புதிய பிரான்ச் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று கூறினான். நீங்கள் அங்கே அந்த புதிய பிரான்ச் ஆரம்பிக்கும் பணியை சற்று முடித்துவிட்டு கொஞ்சம் இந்த பக்கம் வந்தால் இங்கேயும் இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்கலாம் என்று கூறினான். தமிழுக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சரி இந்த வேலையை கொஞ்சம் முடித்துவிட்டு அங்கு வருகிறேன் என்று கூறினாள்..

உடனே அகிலனுக்கு கால் செய்தாள். ஈவினிங் ஃப்ரீயா என்று கேட்டாள்... மேடம் சொன்னால் ஃப்ரீ தான் என்று கூறினான்..
அவள் ஏதோ சொல்வதற்கு தான் கேட்கிறாள் என்று தெரிந்ததும் சரி ஈவினிங் நானே வருகிறேன் என்று கூறினான்....

அவன் வந்ததும் இவள் வேலையெல்லாம் முடித்துவிட்டு இருவரும் வெளியில் கிளம்பினார்கள்... வழக்கம்போல் பீச்சுக்கு வண்டியை விட்டான்.

அங்கு சென்று அமர்ந்ததும், சுந்தர் இவளுக்கு கால் செய்து பேசியதும் இவள் சுந்தரிடம் பேசியதும் சொன்னாள். ஓ ஓ.... அப்போ மேடம் மறுபடியும் கோயம்புத்தூருக்கு செல்ல போகிறீர்களா...? என்று சோகமாய் கேட்டான்.

நான் வேலையாக தான் செல்கிறேன். நிரந்தரமாக அங்கே தங்குவதற்காகவா செல்கிறேன்.....? என்றான். இருந்தாலும் உன்னை பார்க்காமல் எப்படி இருப்பது என்றான்.

ச்சே.... இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாவம் பார்க்காமல் தவிக்க விட்டு சென்று விடுவார்கள் என்று கூறினான்...

ஏய்.... என்று அவள் கூறவும் சரி சரி... கோவிச்சிக்காத... எப்போது போக வேண்டும் என்று கேட்டான்.

இன்னும் முடிவு செய்யவில்லை
இங்கே கொஞ்சம் வேலை பெண்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டு தான் அங்கு செல்ல வேண்டும் என்று கூறினாள்.

சரி நானும் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறினான். என்ன என்பது போல் பார்த்தாள் அவள்.

அம்மா அப்பா இந்த வாரம் உன்னை பார்ப்பதற்காக இங்கே வருகிறார்கள்... என்றான்.

வாவ் சூப்பர் என்றாள் அவள்...

சரி அவங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் நான் கோயம்புத்தூர் போகிறேன் என்று கூறினாள்..
******

அந்த வாரம் முழுவதும் இருவரும் அவரவர் தொழிலில் பிஸியாக இருந்தனர்... அதற்கு அடுத்த வாரத்தில் அவனிடம் அம்மாவும் அப்பாவும் வருவதாக சொன்னார்கள் . சொன்னது மாதிரியே ஒரு நாள் வந்தார்கள் அகிலனும் மாலையில் தமிழை கூட்டி வருவதாக சொல்லி சென்றிருந்தான்.

சொன்னது போலவே அன்று ஈவினிங் தமிழில் ஆபீஸ்க்கு சென்று அவளைக் கூட்டி சென்றான். தமிழும் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தன்னை அதீத அழகுபடுத்திக் கொள்ளாமல் அளவான வேலைப்பாட்டுடன் அமைந்த சேலையில் அதற்கு தகுந்த அணிகலன்களை போட்டு எப்போதும் இருப்பது போலவே சென்றாள்.

நாங்க சென்று அகிலன் அப்பா அம்மாவை பார்த்ததும் அவர்களுக்கும் இவளை மிகவும் பிடித்து போனது.
அகிலன் அப்பா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.

எங்களுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை அம்மா.... அகிலனுக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. நாங்களே அவனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருந்தோம். அதற்குள் அவனே ஒரு நல்ல பெண்ணாக பார்த்து விட்டான்.
கண்டிப்பாக அகிலன் செலக்ட் செய்த ஒரு விஷயம் இன்று வரை தவறானதே இல்லை. அதில் எங்களுக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

அவளும் சிரித்தவாறு அதற்கு எதுவும் பதில் பேசாமல் இருந்தாள்.

அகிலனுக்கும் வயதாகிக்கொண்டே போவதால் முதலில் அகிலன் திருமணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன் நீ என்னமா நினைக்கிறாய் என்று தமிழிடம் கேட்டார். இல்லை மாமா முதலில் திவ்யாவிற்கு செய்வது தான் முறை அதனால் முதல் திவ்யாவிற்கு ஒரு நல்ல வரனாக பார்த்து திருமணத்தை முடிக்கலாம் என்று கூறினாள். அவரு அகிலன் அப்பாவை மாமா என்று அழைத்த விதமும்,அவள் பதில் கூறிய விதமும், அவள் கூறிய பதிலும் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இதற்கிடையில் திவ்யா எனக்கு முதலில் கல்யாணமா....வேண்டவே வேண்டாம் அப்பா....முதலில் அண்ணாவுக்கு முடித்து விடலாம் என்று கூறினாள்.

ஆனால் அவள் வயதில் சிறியவள் என்பதால் சபையில் அவள் பேச்சு எடுபடவில்லை.
சரி வீட்டிற்கு வர போகும் மருமகளே சொல்லிவிட்டாள் .அதனால் இனி திவ்யாவிற்கு வரன் தேட வேண்டியதுதான். அவளுக்கும் படிப்பு முடிந்து விட்டதல்லவா.... என்று அகிலனின் அம்மா கூறினார் அனைவருக்கும் அது சரி என்றே பட்டது.

உடனே தமிழும் அகிலனும் அவர்கள் அப்பா அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் அவர்கள் அன்றே கிளம்புவதாக இருந்தது. ஏனென்றால் அங்கே இவர்கள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது அதனால் அவர்கள் இப்பொழுது ட்ரெயினுக்கு கிளம்பினர்.

செல்வதற்கு முன்னர் அதுல நம்ம தமிழைக் கூப்பிட்டு என் மகன் நல்ல மருமகளை தான் பிடித்திருக்கிறான். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி சென்றார்.

அகிலன் அவர்கள் இருவருக்கும் கேப் புக் செய்து தானே சென்று ட்ரெயினில் ஏற்றி விட்டான்.

அவன் டிரெயின் ஏற்றிவிட்டு வரும்பொழுது தமிழ் ராசாத்தி அக்காவிடமும் மாமாவிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

சரி அக்கா நேரம் ஆகிவிட்டது நானா அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியவாறு அவர் கிளம்பி அகிலனின் போர்ஷனுக்கு சென்றாள்...

அவர் அங்கு சென்றதும் வேண்டுமென்றே கார்த்திகேயன் திவ்யாவையும் ராசாத்தி அக்கா கீழே அழைத்தார்.

அகிலனை பார்க்க உள்ளே சென்றவளை சற்றும் எதிர்பாராமல் இழுத்து அணைத்துக் கொண்டான் அகிலன்.
விடுங்க யாராவது வந்து விடப் போகிறார்கள் என்று தன்னை விடுவிக்க முயன்றாள். கண்டிப்பாக யாரும் வரமாட்டார்கள். நான் உன்னை இங்கே அழைக்க போய் தான் அக்கா கீழே அவர்கள் இருவரையும் கூப்பிட்டார்கள். அதனால் நோ ப்ராப்ளம் என்றான்.
பரவாயில்லை பார்த்த மாத்திரத்திலேயே என் அப்பா அம்மாவை மயக்கி விட்டாய் என்று கூறினான்...
நான் ஒன்றும் மயக்கவில்லை உண்மையைத்தான் கூறினேன் என்றாள் தமிழ்.

எது எப்படியோ.... என் அப்பா அம்மாவிற்கு உன்னை பிடித்து விட்டது இப்போது சந்தோஷம் தானே.... என்றான்.
ரொம்ப சந்தோஷம் என்றாள் தமிழ்.

அப்படி மிகவும் சந்தோஷமாக இருந்தால் ஏதாவது கொடுக்கலாம் தானே என்று கேட்டான். அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்ததும் அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். ச்சீ...போங்க... என்று அவனை விடுத்து வந்தாள்...

ஆனாலும் அவன் அவளை விடாமல் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அவள் வெட்கத்தில் முகம்
சிவந்து நின்றாள். அந்த நிமிடம் அகிலன் தன்னையே மறந்தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top