ஒரு காவ(த)லனின் கதை 2

Advertisement

Suguna Thangavel

Well-Known Member
#ஒரு_காவ(த)லனின்_கதை_2
#episode_2

"எக்ஸ்கியூஸ் மி சார்"

" உள்ள வாங்க... வெல்டன் மை பாய்ஸ். ஐ அம் ரியலி பிரவுட் அஸ் ஆல்வேஸ்" என்றபடி இருவரையும் வாழ்த்திய ரமணன் "நேஹா சென்ட்ரல் மினிஸ்டருடைய பொண்ணுன்னு பயங்கர பிரஷர். சொன்னமாதிரியே காணாமல் போன ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்துள்ளீர்கள். எலக்ஷன் டைம் என்பதால் அனைவரும் எதிர்க்கட்சியினர் மீது சந்தேக பார்வையை வீசிக் கொண்டிருக்க எப்போதும்போல சாமர்த்தியமாக சரியான அணுகுமுறையை பயன்படுத்தி காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். எல் . கே ஜுவல்லர்ஸ் பையன் இதை செய்திருக்கிறான் என்று மத்திய அமைச்சராலே நம்ப முடியவில்லை. உங்களுக்கு அவர் நன்றியை தெரிவிக்கும்படி சொன்னவர் நாளை நேரில் சந்திப்பதாகவும் கூறினார். எல் . கே ஜுவல்லர்ஸ் பிரச்சனை பண்ணுவார்கள். அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் சந்தேகம் அவன்மீது எப்படி திரும்பியது" என்ற கேள்வியோடு நிறுத்தினார்.

"இந்த கேஸ்..." என்று ஆரம்பித்த ராகுலை நான் சொல்கிறேன் என்ற கையசைவில் தடுத்து "அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தோம் சார். மிகவும் நல்ல மாதிரி என்றும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருப்பதாகவும் கிடைத்த தகவலின்படி மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. விஷ்வாவை ஏற்கனவே இரண்டு சமயங்களில் கண்டுள்ளோம். அவனது குணத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் இருந்ததால் அவனை பின் தொடர்ந்தோம். போனை ஹேக் செய்ததில் சந்தேகம் வலுப்பெற்றது. இன்று காலையில் நேஹாவிற்கு விஷ்வா பற்றி தெரிந்ததால் அவனை எச்சரித்துவிட்டு வீட்டில் சொல்லி திருமணத்தை உடனே நிறுத்த போவதாக சண்டையிட்டு இருக்கிறாள். அதற்கு விஷ்வா இந்த கெட்ட பழக்கம் தன் வீட்டில் தெரியாது என்றும் வேறு வகையில் இந்த திருமணத்தை தானே நிறுத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு இப்படி செய்திருக்கிறான் சார்" என்று விளக்கினான் அத்விக்.

"இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது " ஆதங்கத்தை வெளியிட்டவாறு "நாளை சந்திப்போம்" என்று விடைபெற்றார் ரமணன்.

"அது ஏன்டா என்னைப் பார்த்து அப்படி சொன்னாரு?" என்றான் ராகுல்

"எப்படி சொன்னாரு?"

"அதான் கடைசியா சொன்னாருல நம்பமுடியவில்லை என்று. இந்த பால் வடியும் முகத்தைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை எப்படி சொல்ல முடிந்தது? உன்னை பார்த்து சொன்னாலாவது ஒரு நியாயம் இருக்கு. அம்மாவிடம் அமெரிக்காவில் வேலை செய்வதாக கப்ஸா அடித்துக்கொண்டு இங்கே மும்பையில் என்னுடன் குப்பை கொட்டி கொண்டிருக்கிறாய். சரிதானே டா?" நண்பனின் முறைப்பை கண்டு தன் பேச்சை நிறுத்திய ராகுல் பின் விடாமல் "என்ன மச்சி ரொம்ப கூலா இருப்பாய் போல ஒரு சாய் சொல்லட்டுமா?" என்று வெறுப்பேற்றினான்.

"உன்னை!" அத்விக் ராகுலை அடிக்க கை ஓங்கவும் அவனது மொபைல் சத்தம் போடவும் சரியாக இருந்தது .

"ஆண்டவன் இருக்கான்டா" என்று சிரித்துக்கொண்டே படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியவன் கேமராக்களின் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ளலானான். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கையில் அத்விக்கும் இணைந்து கொண்டான்.

விடைபெறும் சமயத்தில் "ஓகே கைஸ் தென் அஸ் எ ரெக்வஸ்ட் எங்க போட்டோவ யூஸ் பண்ண வேண்டாம்" என்றான் வாடிக்கையாக.

" ஏன் சார் உங்களுக்கு பப்ளிசிட்டி பிடிக்காதா?" என்ற கேள்விக்கு தன் சிரிப்பையும் "சார் லாஸ்ட் வீக் உங்களை சிட்டி வாக் இல் பார்த்தேன். அன்றே உங்களை தெரிந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருப்பேன். ஸோ இப்போது யோசித்துப் பார்த்தால் உங்கள் ஃபேன் கிளப்பிற்கு பயந்துதான் உங்கள் அடையாளத்தை மறைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது அப்படித்தானா அத்விக் சார்?" மற்றொரு இளம்பெண்ணின் வினாவிற்கு சிரிப்போடு சேர்த்து "உங்கள் யூகத்தில் ஒரு சிறு பிழை விசிறிகளுக்கு பயந்து என்பதற்கு பதில் திருடர்களுக்கு பயந்து என்று மாற்றி விட்டால் சரியாக பொருந்தும்" என்றான்.

"திருடர்களுக்கு பயந்தா!!! நோ சான்ஸ்... டு பி ஃபிராங்க் இப்போது மும்பை மக்கள் பயப்படாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஆல்சோ திருடர்கள் தான் முகமறியாத உங்களை காணமுடியாமல் இன்னும் பயந்து உள்ளார்கள். ஹேட்ஸ் ஆப் சார்" என்று தன் முத்துப் பற்கள் தெரிய வாழ்த்தினாள் அப்பத்திரிகையாளினி .

பேட்டி முடிந்து அனைவரும் சென்ற பிறகும் ஏதோ யோசனையில் இருந்த ராகுலை உலுக்கினான் "ஏன்டா பாதியிலேயே சைலன்ட் ஆகிவிட்டாய்" என்றதற்கு தன் தலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு "நத்திங் வா போகலாம்" என்று சென்றான் ராகுல்.

"யுவர் நத்திங் சேஸ் சம்திங் மேன்" என்று மட்டும் கூறிவிட்டு ராகுலை பின்தொடர்ந்தான் அத்விக்.
எந்த ஒரு விஷயத்தையும் வற்புறுத்தி கேட்கக் கூடாது என்பது இரு நண்பர்கள் இடையும் எழுதப்படாத கொள்கை அதன்பொருட்டு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.

எல்கே ஜுவல்லர்ஸ் உரிமையாளர் தனபால் விஷயம் அறிந்து கடும் கோபத்தில் "என் பையன் மேல் கையை வைத்தவனின் கையை எடுக்காமல் விடமாட்டேன். எவ்வளவு தைரியம்! அந்த போலீஸ்காரனுடைய ஃபுல் டீடைல்ஸ் இப்போது எனக்கு வந்தாக வேண்டும்" தன் ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.

" ஐயா நம்ம தம்பிய காலையில் வெளியே எடுத்திடலாம். இப்போது எந்த பிரச்சனை செய்தாலும் அவர்களுக்கு சாதகமாக தான் முடியும். கொஞ்சம் ஆற போடுவோம் . அந்த போலீசுக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்" என்றான் அவருடைய அல்லக்கை என்றழைக்கப்படும் சுப்புராஜ்.

அது சரியாக பட அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். ஆயினும் அந்த போலீஸ்காரனை சாதாரணமாக ஒரு மிரட்டலாவது விடாவிட்டால் அவர் தனபால் இல்லையே. இந்தியாவின் பிக் ஷாட். மதிக்கத்தக்க ஒரு பிசினஸ்மேன் ஆனதற்கு அவர் கடந்து வந்த பாதையில் ரத்த கம்பளியை போற்றலாம். 17 வயதில் பிக்பாக்கெட் ஆக இருந்தவன் இன்று இந்தியாவில் மொத்தம் 103 நகை கடைகளுக்கு சொந்தக்காரர். தான் கடந்த வெட்டு குத்து நினைவுகளின் வாடை கூட தன் மகன் அறியாதவாறு பார்த்துக்கொண்டார். ஒரே மகன் அவனது உயிராகி போனான். அவன் பிறந்த பிறகுதான் இந்த உச்சம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு பெண்ணை கடத்துவது அவரைப் பொருத்தவரை ஒரு சாதாரண செயலாக இருந்தாலும் தன் மகன் இதை செய்தான் என்றறிந்தும் ஒரு தந்தையாக தோற்றுப் போனார் .

அடுத்த நாள் தன் மகனை நேரில் கண்டதும் "அப்பா என்னை அரெஸ்ட் பண்ணியவனை சும்மா விடக்கூடாது . அப்புறம் அந்த நேஹா அவளால் தான் எல்லாம்" என்று புலம்பிய மகனின் கன்னத்தை அவரது கரம் பதம் பார்த்தது. பிறந்ததிலிருந்து அடித்திராத அப்பா ஏன் என்ன கேட்டாலும் மறுத்திறாத அப்பாவின் இன்றைய அணுகுமுறையில் ஸ்தம்பித்து அப்படியே உறைந்து நின்றான் விஷ்வா.

"செய்வதையும் செய்துவிட்டு பேச்சை பார். என் வாழ்வில் முதன்முறையாக நான் தப்பானவன் தான். என் வளர்ப்பு தப்பானது என்று நிரூபித்ததற்கு நன்றி" என்று மொழிந்து விட்டு வெளியேறினார். காரினுள் ஏறியவருக்கு மகனின் கோலம் வெகுவாக பாதித்தது. என் மகனை என் கையால் அடிக்க வைத்து விட்டாய் அல்லவா உன்னை!!! என்று ஒட்டு மொத்த கோபமும் அத்விக்கிடம் சென்றிருந்தது. "எனக்கு அவன பார்த்தே ஆகணும்" என்று பிடிவாதமாக தன் அல்லக்கையின் வற்புறுத்தலையும் மீறி அத்விக்கை காணச் சென்றார்.

காவல் நிலையத்திலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காக புறப்பட ஆயத்தமானவனை எல் கே ஜுவல்லர்ஸின் ஹம்மர் வழிமறித்தது.
"வணக்கம் அத்விக் சார். நம்ம பையன்னு தெரிஞ்சும் இப்படி செய்திருக்கக் கூடாது என்னிடம் சொல்லியிருந்தால் அவனுக்கு கூறும் விதத்தில் எடுத்துச் சொல்லி இருப்பேன். இருந்தும் உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.பலே.. இதற்கு கைமாறாக ஏதாவது செய்ய வேண்டுமே... அதான் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இதை மறக்க கூடாது சார் மறுக்கவும் முடியாது" என்று பேச்சில் வன்மத்தை கலந்து இதழ்களில் சிரிப்பை சுமந்து கூறினான்.

சற்றும் அசராதவனாக "ஐ அம் வெயிட்டிங்" என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே விடைபெற்றான் அத்விக்.

அடுத்த கால் மணி நேரத்தில் அசுரவேகத்தையும் மிஞ்சி ஜுஹா பீச்சிற்கு வந்து நின்றது ஒரு ராயல் என்ஃபீல்ட்.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#ஒரு_காவ(த)லனின்_கதை_2
#episode_2

"எக்ஸ்கியூஸ் மி சார்"

" உள்ள வாங்க... வெல்டன் மை பாய்ஸ். ஐ அம் ரியலி பிரவுட் அஸ் ஆல்வேஸ்" என்றபடி இருவரையும் வாழ்த்திய ரமணன் "நேஹா சென்ட்ரல் மினிஸ்டருடைய பொண்ணுன்னு பயங்கர பிரஷர். சொன்னமாதிரியே காணாமல் போன ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்துள்ளீர்கள். எலக்ஷன் டைம் என்பதால் அனைவரும் எதிர்க்கட்சியினர் மீது சந்தேக பார்வையை வீசிக் கொண்டிருக்க எப்போதும்போல சாமர்த்தியமாக சரியான அணுகுமுறையை பயன்படுத்தி காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். எல் . கே ஜுவல்லர்ஸ் பையன் இதை செய்திருக்கிறான் என்று மத்திய அமைச்சராலே நம்ப முடியவில்லை. உங்களுக்கு அவர் நன்றியை தெரிவிக்கும்படி சொன்னவர் நாளை நேரில் சந்திப்பதாகவும் கூறினார். எல் . கே ஜுவல்லர்ஸ் பிரச்சனை பண்ணுவார்கள். அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் சந்தேகம் அவன்மீது எப்படி திரும்பியது" என்ற கேள்வியோடு நிறுத்தினார்.

"இந்த கேஸ்..." என்று ஆரம்பித்த ராகுலை நான் சொல்கிறேன் என்ற கையசைவில் தடுத்து "அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தோம் சார். மிகவும் நல்ல மாதிரி என்றும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருப்பதாகவும் கிடைத்த தகவலின்படி மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. விஷ்வாவை ஏற்கனவே இரண்டு சமயங்களில் கண்டுள்ளோம். அவனது குணத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் இருந்ததால் அவனை பின் தொடர்ந்தோம். போனை ஹேக் செய்ததில் சந்தேகம் வலுப்பெற்றது. இன்று காலையில் நேஹாவிற்கு விஷ்வா பற்றி தெரிந்ததால் அவனை எச்சரித்துவிட்டு வீட்டில் சொல்லி திருமணத்தை உடனே நிறுத்த போவதாக சண்டையிட்டு இருக்கிறாள். அதற்கு விஷ்வா இந்த கெட்ட பழக்கம் தன் வீட்டில் தெரியாது என்றும் வேறு வகையில் இந்த திருமணத்தை தானே நிறுத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு இப்படி செய்திருக்கிறான் சார்" என்று விளக்கினான் அத்விக்.

"இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது " ஆதங்கத்தை வெளியிட்டவாறு "நாளை சந்திப்போம்" என்று விடைபெற்றார் ரமணன்.

"அது ஏன்டா என்னைப் பார்த்து அப்படி சொன்னாரு?" என்றான் ராகுல்

"எப்படி சொன்னாரு?"

"அதான் கடைசியா சொன்னாருல நம்பமுடியவில்லை என்று. இந்த பால் வடியும் முகத்தைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை எப்படி சொல்ல முடிந்தது? உன்னை பார்த்து சொன்னாலாவது ஒரு நியாயம் இருக்கு. அம்மாவிடம் அமெரிக்காவில் வேலை செய்வதாக கப்ஸா அடித்துக்கொண்டு இங்கே மும்பையில் என்னுடன் குப்பை கொட்டி கொண்டிருக்கிறாய். சரிதானே டா?" நண்பனின் முறைப்பை கண்டு தன் பேச்சை நிறுத்திய ராகுல் பின் விடாமல் "என்ன மச்சி ரொம்ப கூலா இருப்பாய் போல ஒரு சாய் சொல்லட்டுமா?" என்று வெறுப்பேற்றினான்.

"உன்னை!" அத்விக் ராகுலை அடிக்க கை ஓங்கவும் அவனது மொபைல் சத்தம் போடவும் சரியாக இருந்தது .

"ஆண்டவன் இருக்கான்டா" என்று சிரித்துக்கொண்டே படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியவன் கேமராக்களின் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ளலானான். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கையில் அத்விக்கும் இணைந்து கொண்டான்.

விடைபெறும் சமயத்தில் "ஓகே கைஸ் தென் அஸ் எ ரெக்வஸ்ட் எங்க போட்டோவ யூஸ் பண்ண வேண்டாம்" என்றான் வாடிக்கையாக.

" ஏன் சார் உங்களுக்கு பப்ளிசிட்டி பிடிக்காதா?" என்ற கேள்விக்கு தன் சிரிப்பையும் "சார் லாஸ்ட் வீக் உங்களை சிட்டி வாக் இல் பார்த்தேன். அன்றே உங்களை தெரிந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருப்பேன். ஸோ இப்போது யோசித்துப் பார்த்தால் உங்கள் ஃபேன் கிளப்பிற்கு பயந்துதான் உங்கள் அடையாளத்தை மறைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது அப்படித்தானா அத்விக் சார்?" மற்றொரு இளம்பெண்ணின் வினாவிற்கு சிரிப்போடு சேர்த்து "உங்கள் யூகத்தில் ஒரு சிறு பிழை விசிறிகளுக்கு பயந்து என்பதற்கு பதில் திருடர்களுக்கு பயந்து என்று மாற்றி விட்டால் சரியாக பொருந்தும்" என்றான்.

"திருடர்களுக்கு பயந்தா!!! நோ சான்ஸ்... டு பி ஃபிராங்க் இப்போது மும்பை மக்கள் பயப்படாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஆல்சோ திருடர்கள் தான் முகமறியாத உங்களை காணமுடியாமல் இன்னும் பயந்து உள்ளார்கள். ஹேட்ஸ் ஆப் சார்" என்று தன் முத்துப் பற்கள் தெரிய வாழ்த்தினாள் அப்பத்திரிகையாளினி .

பேட்டி முடிந்து அனைவரும் சென்ற பிறகும் ஏதோ யோசனையில் இருந்த ராகுலை உலுக்கினான் "ஏன்டா பாதியிலேயே சைலன்ட் ஆகிவிட்டாய்" என்றதற்கு தன் தலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு "நத்திங் வா போகலாம்" என்று சென்றான் ராகுல்.

"யுவர் நத்திங் சேஸ் சம்திங் மேன்" என்று மட்டும் கூறிவிட்டு ராகுலை பின்தொடர்ந்தான் அத்விக்.
எந்த ஒரு விஷயத்தையும் வற்புறுத்தி கேட்கக் கூடாது என்பது இரு நண்பர்கள் இடையும் எழுதப்படாத கொள்கை அதன்பொருட்டு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.

எல்கே ஜுவல்லர்ஸ் உரிமையாளர் தனபால் விஷயம் அறிந்து கடும் கோபத்தில் "என் பையன் மேல் கையை வைத்தவனின் கையை எடுக்காமல் விடமாட்டேன். எவ்வளவு தைரியம்! அந்த போலீஸ்காரனுடைய ஃபுல் டீடைல்ஸ் இப்போது எனக்கு வந்தாக வேண்டும்" தன் ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.

" ஐயா நம்ம தம்பிய காலையில் வெளியே எடுத்திடலாம். இப்போது எந்த பிரச்சனை செய்தாலும் அவர்களுக்கு சாதகமாக தான் முடியும். கொஞ்சம் ஆற போடுவோம் . அந்த போலீசுக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்" என்றான் அவருடைய அல்லக்கை என்றழைக்கப்படும் சுப்புராஜ்.

அது சரியாக பட அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். ஆயினும் அந்த போலீஸ்காரனை சாதாரணமாக ஒரு மிரட்டலாவது விடாவிட்டால் அவர் தனபால் இல்லையே. இந்தியாவின் பிக் ஷாட். மதிக்கத்தக்க ஒரு பிசினஸ்மேன் ஆனதற்கு அவர் கடந்து வந்த பாதையில் ரத்த கம்பளியை போற்றலாம். 17 வயதில் பிக்பாக்கெட் ஆக இருந்தவன் இன்று இந்தியாவில் மொத்தம் 103 நகை கடைகளுக்கு சொந்தக்காரர். தான் கடந்த வெட்டு குத்து நினைவுகளின் வாடை கூட தன் மகன் அறியாதவாறு பார்த்துக்கொண்டார். ஒரே மகன் அவனது உயிராகி போனான். அவன் பிறந்த பிறகுதான் இந்த உச்சம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு பெண்ணை கடத்துவது அவரைப் பொருத்தவரை ஒரு சாதாரண செயலாக இருந்தாலும் தன் மகன் இதை செய்தான் என்றறிந்தும் ஒரு தந்தையாக தோற்றுப் போனார் .

அடுத்த நாள் தன் மகனை நேரில் கண்டதும் "அப்பா என்னை அரெஸ்ட் பண்ணியவனை சும்மா விடக்கூடாது . அப்புறம் அந்த நேஹா அவளால் தான் எல்லாம்" என்று புலம்பிய மகனின் கன்னத்தை அவரது கரம் பதம் பார்த்தது. பிறந்ததிலிருந்து அடித்திராத அப்பா ஏன் என்ன கேட்டாலும் மறுத்திறாத அப்பாவின் இன்றைய அணுகுமுறையில் ஸ்தம்பித்து அப்படியே உறைந்து நின்றான் விஷ்வா.

"செய்வதையும் செய்துவிட்டு பேச்சை பார். என் வாழ்வில் முதன்முறையாக நான் தப்பானவன் தான். என் வளர்ப்பு தப்பானது என்று நிரூபித்ததற்கு நன்றி" என்று மொழிந்து விட்டு வெளியேறினார். காரினுள் ஏறியவருக்கு மகனின் கோலம் வெகுவாக பாதித்தது. என் மகனை என் கையால் அடிக்க வைத்து விட்டாய் அல்லவா உன்னை!!! என்று ஒட்டு மொத்த கோபமும் அத்விக்கிடம் சென்றிருந்தது. "எனக்கு அவன பார்த்தே ஆகணும்" என்று பிடிவாதமாக தன் அல்லக்கையின் வற்புறுத்தலையும் மீறி அத்விக்கை காணச் சென்றார்.

காவல் நிலையத்திலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காக புறப்பட ஆயத்தமானவனை எல் கே ஜுவல்லர்ஸின் ஹம்மர் வழிமறித்தது.
"வணக்கம் அத்விக் சார். நம்ம பையன்னு தெரிஞ்சும் இப்படி செய்திருக்கக் கூடாது என்னிடம் சொல்லியிருந்தால் அவனுக்கு கூறும் விதத்தில் எடுத்துச் சொல்லி இருப்பேன். இருந்தும் உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.பலே.. இதற்கு கைமாறாக ஏதாவது செய்ய வேண்டுமே... அதான் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இதை மறக்க கூடாது சார் மறுக்கவும் முடியாது" என்று பேச்சில் வன்மத்தை கலந்து இதழ்களில் சிரிப்பை சுமந்து கூறினான்.

சற்றும் அசராதவனாக "ஐ அம் வெயிட்டிங்" என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே விடைபெற்றான் அத்விக்.

அடுத்த கால் மணி நேரத்தில் அசுரவேகத்தையும் மிஞ்சி ஜுஹா பீச்சிற்கு வந்து நின்றது ஒரு ராயல் என்ஃபீல்ட்.
சூப்பர் எப்பி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top