ஏம்மா கீர்த்தி நீ செஞ்சது எந்த விதத்தில் நியாயம் உனக்கும் உன் தம்பிக்கும் பெத்தவங்க முன்னை நின்று ஆசிர்வாதம் செஞ்சு நடந்துது கல்யாணம் மிருணாவுக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம் நீ ஒரு அக்காவா பிரவா கிட்ட என் தங்கை கல்யாணத்தை முடிவு பண்ற அதிகாரம் இருக்கு என்று சொல்லி இருக்கணும். அதோடு உங்க அம்மாவிடமும் அவங்க மகளோட கல்யாணத்தை நடத்தி வைக்கிற கடமை அவங்களுக்கு புரிய வச்சிருக்கணும் .
மிருணா அவளே தேடி கிட்ட வாழ்க்கை இல்லை இவங்க தான் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை என்று சொன்னதால் தான் அவ ஆசை பட்டா அப்போ ஒரு அம்மாவா என் மகளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறேன் உனக்கு விருப்பம் இருந்தால் வா இல்லன்னா ஒதுங்கி நில்லுன்னு அரசி சொல்லி இருக்கணும்.
இந்த கல்யாணத்தில் கீர்த்தி மிருணாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இதுல பாதிக்க படுறது மலரோட வாழ்க்கை தான். மலர் விரும்பி அமைச்சுக்கிட்ட வாழ்க்கை என்றால் பரவாயில்லை அவளையே மிரட்டி தான் கல்யாணம் செஞ்சான் இருந்தாலும் அந்த வாழ்க்கைய சரி பண்ண அவளால் முடிஞ்ச அளவுக்கு போராடுறா . அதையும் கெடுக்கிற மாதிரி அக்கா தங்கை செஞ்சுட்டாங்க .
மலர் வீட்டில் வச்சு செஞ்சால் அது அவளுக்கு எவ்வளவு பிரச்சினை ஆகும் என்று அறிவு கொஞ்சம் கூடவா மூன்று பேருக்கும் இல்லை. இந்த எபில விஷ்ணு மிருணா இரண்டு பேரையும் சுத்தமா பிடிக்கல இவங்க சுயநலத்துல மலரோட நிம்மதி போயிடுச்சு.
பிரவா நல்லவனா இருந்து விஷ்ணுவ அவனுக்கு பிடிக்கல அதுதான் பிரச்சினை என்றால் இப்படி கல்யாணம் செஞ்சா தப்பில்லை. ஆனால் பிரவா எவ்வளவு மோசமானவன் என்று தெரிஞ்சும் மலரை பத்தி யோசிக்காமல் இப்படி முடிவு எடுத்துருக்காங்க .
கீர்த்தி அவ வாழ்க்கையை பார்த்துக்குவா. மிருணா அவ வாழ்க்கையை பார்த்துக்குவா. மலர் தான் இவன் கூட போராடணும்.இவங்க மலர் கிட்ட சொல்லி இருந்தால் நிச்சயம் நல்ல விதமா ஏதாவது செஞ்சிருப்பா.
மலர் நீ பிரவா கூட போயிருக்கலாம். நீ பக்கத்தில் இருந்தால் அவன் கொஞ்சம் நிதானமா இருந்து இருப்பான் .
பிரவாகனை திருத்துறேன் என்று சொல்லி அவனோட கெட்ட புத்தியையும் ஈகோவையும் தூண்டி விட்டு மலரை கொடுமை படுத்துறாங்க.