hai savee ka,
After a very long gap i have read your "Vaer Theendum Ilai"...... Am soooooooo happiiiieeeeeeeeeeeee savee ka...... I have read My favourite author n sweet sissy's novel almost after 2 years, that makes me feel like flyinggg...
Few words about d story....
Oviya paavai - Sivaruban semma pair..... சிவாவ எப்படி இவ்வளவு பொறுமையா படைச்சிங்க.. ஹப்ப்ப்பா செம்ம பொறுமை அவனுக்கு. பாவை அவனை அவ்ளோ insult பண்ணியும் அவன் அம்மா சொன்ன வார்த்தைக்காக எதுவும் செய்யாம விலகி போறது, அம்மா பேசாம போனதும் இருந்த எல்லா arrear clear பண்றது.... செம்ம sissyyyyy.....
பாவை சிவா பண்ண தப்ப நினைச்சு அவனை பார்க்கும் பொது எல்லாம் திட்டுவது, அவன் செய்யாத தவறுக்கு அவனை அடிப்பது , ப்ரின்சிபாலிடம் புகார் கொடுப்பது என அவனை பிடிக்காமல் இருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் திட்டினாலும் திருமணத்திற்கு பிறகு அவளின் மாற்றம் அருமை..
வருடங்கள் 6 கழிந்து இருவரும் சங்கவி பெண் பார்க்கும் படலத்தில் மீட் செய்வது இருவருக்கும் செம்ம ஷாக்.. சிவாவிற்காய் சங்கவியை வேண்டாம் என்று நினைப்பதும் பின் தன் அண்ணனுக்காக ஒத்துக்கொள்வதும், அன்னைக்காக அவனை திருமணம் செய்ய ஒத்துக்கொள்வது என அவளின் மாற்றம் சுபெர்ப்... திருமணத்துக்கு பின் சிவாவின் குணங்களை புரிந்து அவனை ஏற்று என கதை நடை அருமையா இருந்தது... சிவா ஓவியின் தாய்க்காக அவளை அவளின் அம்மா கூட இருக்க சொல்வது, நகை பிரச்சினை வரும் போது ஒருவருக்காக மற்றவர் யோசிப்பது என நான் மிகவும் ரசித்து வாசித்த கதை..
சந்திரன்-சங்கீதா பற்றி நான் பேச விரும்பவில்லை... சுயநலத்தின் மொத்த உருவம் சங்கீதா என்றால், சந்திரன் மனைவியின் கைப்பாவை போல் இருப்பது அதுவும் தந்தைக்கு இரத்தம் கொடுப்பதற்கு கூட வாயை திறக்காத அவன் அவரின் சொத்து வேண்டும் என்று கேட்பது சுயநல பிசாசுகள்..
சதாசிவம் சந்திரனை நல்லவனாகவும் சிவாவை தான்தோன்றியாகவும் நினைத்து சிவாவை எப்பொழுதும் திட்டுவது, விபத்திற்கு பிறகு தன மகன்களை புரிந்து குறிப்பாக சிவாவை புரிந்து கொண்டு வீடுவிஷயத்தில் சிவாவின் முடிவையே அவரும் சொல்வது, சிவாவை தன மகன் என பெருமை கொள்வது அருமை..
மாலினி - எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் உலகினில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே இதற்கு நல்ல எடுத்துக்காட்டு மாலினி. சிவாவை நாள் வழி படுத்துவது, அதற்காக அவனுடன் பேசாமல் இருப்பது திருமணத்திற்கு முன் பேசுவது என நல்ல கதாபாத்திரம் ..
வேர் தீண்டும் இலை என்னுடைய favourite லிஸ்ட்ல சேர்ந்துடுச்சு..... Thank you so much sissy for such a nice story...