நைட் ஒன்பது மணிக்கு எழுத ஆரம்பிச்சு எழுதி முடிச்ச உடனே! UD போட்டதுக்கு உங்க cmnt நிறைவா இருக்கு.கனமான பதிவு மிலா.ஆத்தாளும்,மகனும் என்னமா நடிக்கறாங்க.நல்லவேளை
வக்கீல் லதா இந்த கேசை பத்தி விசாரிச்சதால மஞ்சரி ஜெயிலுக்கு போகாம தப்பிச்சா.
திருமணத்தின் போது உள்ள புகைபடத்தையும்,மஞ்சரியின் இப்போதைய தோற்றத்தையும் பார்த்து, அந்த பொண்ணா இந்த பொண்ணுன்னு நீதிபதிக்கே சந்தேகம் வந்திடுச்சு.
பூஞ்சோலைக்கு,வைஜெயந்திக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்பதே அதிர்ச்சி,இதில் கருத்தடை மாத்திரை கொடுத்ததை தெரிந்தும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
தாத்தா கிட்டேயே மாத்திரை வாங்கி வர சொல்லி பேத்திக்கு கொடுத்திருக்காளே ராட்சஷி. அதிர்ச்சி தாங்க முடியாமல் பூஞ்சோலை தற்கொலை செய்துகிட்டாளே.
குற்றம் நிரூபிக்கபட்ட வைஜெயந்தி பத்து ஆண்டுகள் சிறை தண்டனை.பாண்டி,மஞ்சரி மேல் கொண்ட அதீத காதலால் பைத்தியமானதா நடிச்சு ஆறு மாசத்துலேயே வெளியே வந்துட்டானே......
பாண்டி தன் நடிப்பால் மஞ்சரி மனதையே குழப்பிட்டான்.அடப்பாவிங்களா,கல்யாணம் அன்னைக்கே குடும்பத்தோட சோத்துல விஷம் வைக்கனும்னு வைஜெயந்தி சொன்னாளா
அக்ஷரா,பாண்டி செய்த தவறை மஞ்சரியிடம் தெளிவாக எடுத்து சொல்லி அவள் செய்ய இருந்த தப்பை எடுத்து சொல்வதும், குடும்பத்தார் முன் பாண்டியின் சுயரூபம் வெளிவர போடும் திட்டமும் அருமை.