ThangaMalar
Well-Known Member
நான் அனைவரும் இடையினம்...இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..
உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரம்மித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..
கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..
மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..
அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..
இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று ஆவலுடன் இடையில் நின்று பார்ப்பதால்...
என்ன சொல்ல உன் கவிதை பற்றி....
நீ கொஞ்சம் பரவாயில்லாமல் எழுதேன்..
எனக்கும் ஒரு வரி மட்டும் பாராட்ட வசதியாக இருக்கும்...
இதற்கு எல்லாம் பக்கம் பக்கமாக பாராட்ட வேண்டும்...