ஆஹா..என்னங்கடா நடக்குது இங்க!!
நம்ம வீராதிவீரன் குருவுக்கு கூட முதன்முதலாக பதட்டம் வருது..
நம்ம ஜான்சி ராணி சம்மு க்கு வெட்கம் வருது..
எல்லாம் நல்லா போய்ட்டு இருக்குன்னு ரசித்து படிச்சிட்டு இருக்கும் போது, முக்கியமான கேஸ் பேப்பர்ஸ்ஸை கிழித்து இந்த பொண்ணு ஏழரையைக் கூட்டிட்டா..
பாவம் குரு ...அனாதை என்கிற ஒரு வார்த்தை அவன் அடி மனது வரைச்சென்று அவனை நிலை குலைய வைத்து விட்டதே!!...
ஆனா கீத்து,ஒருவழியாக இரண்டு பேரும் தன்னையறியாமலே ஒருத்தரை ஒருத்தர் நினைத்து பார்க்க தொடங்கிட்டாங்க..
அடுத்து நடப்பதெல்லாம் அவங்களுக்கு நல்லதே நடக்கட்டும் என்று என் மனமும் வேண்ட ஆரம்பித்து விட்டது பா...
நீங்களும் இதே போல அடுத்த epi யோட சீக்கிரம் வந்துடுங்க செல்லம்